Monthly Archives: மார்ச் 2005

சுபாஷ் சந்திர போஸ்

RAAGA – Bose – The Forgotten Hero – Hindi Movie Songs | Audio

இசை மனதைக் கிள்ளுகிறது. ஹிந்திப் படங்களின் இசையில் படத்துக்கும் பிண்ணணிக்கும் முக்கியத்துவம் கொடுக்க ஆரம்பித்துவிட்டார்கள். துர்கா பூஜை, ஹிட்லர் தீம், நேதாஜியின் இறுதி ஆகியவை படா ஜோர்.

விரிவான விமர்சனங்கள்: Joginder Tuteja — IndiaFM | Music India Online

விகடன் கேள்வி

ஹாய் மதன்:

பி.ஜெயப்பிரகாஷ், சர்க்கார்பதி.

எது சாமர்த்தியம்? எது புத்திசாலித்தனம்? எது சாணக்கியத்தனம்?

எல்லா அரசியல் தலைவர்களுக்கும் இருப்பது சாமர்த்தியம். சாமர்த்தியமான தலைவரோடு கூட்டுச் சேருவது புத்திசாலித்தனம். பிறகு, அந்தத் தலைவரைக் கவிழ்த்துவிட்டுத் தானே தலைவராவது சாணக்கியத்தனம்!

my cents: Normal question; Tongue twisted answer


டி.ஜெய்சிங், கோயம்புத்தூர்.

ஜெமினி கணேசன், கிளிண்டன், சார்லஸ் — உண்மையான காதல் மன்னன் யார்?

‘காதல் மன்னன் யார்’ என்று எந்த அர்த்தத்தில் கேட்கிறீர்கள்? நிறைய பேரைக் காதலிப்பவரா? அல்லது, ஒரே ஒருத்தியைத் தீவிரமாகக் காதலித்து, அவளுக்காக எந்தத் தியாகத்தையும் செய்யத் தயாராக இருப்பவரா?

கிளிண்டன் அபரிமிதமான செக்ஸ் உணர்வு கொண்டவர். அவ்வளவே! ஜெமினி கணேசன் நெகிழ்ச்சியான இதயம் படைத்தவர். சில திருமணங்களும் செய்து கொண்டவர். ஆனால், காதலுக்காக எந்தத் தியாகமும் பண்ணத் தயாராக இருப்பாரா?

சார்லஸ், டயானாவை ராஜ காரியம் கருதித் திருமணம் செய்து கொண்டாலும், 35 வருஷங்களாக ஒரே பெண்ணை, அதுவும் ஐம்பது வயதைக் கடந்தவரை விடாமல் காதலிக்கிறார். நிஜமாகவே அவர் மன்னரும்கூட!

my cents: silly question; senseless answer.

மஸ்தானா… யெஸ்தானா?

மோடியின் விசா நிராகரிப்பை சமாளிக்க பத்து வழிகள்

1. அமெரிக்க ஜெயில்களில் சிறைவாசம் இருக்கும் எவரையாவது மணமுடித்து கே-3 விசாவிற்கு விண்ணப்பிக்கலாம்.

2. ப்ரூனே, ஸ்லேவேனியா போன்ற நாடுகளின் குடியுரிமையைப் பெற்று விசா கைகழுவுதல் திட்டத்தின் மூலம் அமெரிக்காவுக்குள் நுழையலாம்.

3. வலைப்பதிவு ஆரம்பித்து கனடாவின் ப்ளாக்கர் படுத்தப்பட்டது போல் தன்னுடைய சோகங்களையும் பகிரலாம். (உதவி: Nerve Endings Firing Away)

4. வாஷிங்டன் போஸ்ட் முதல் வாஷ் செய்யாத வலைப்பதிவு வரை இடம்பிடிக்கத்தான் விசா கிடைக்காததாக மழுப்பலாம்.

5. விழியம் மூலம் சந்திப்பு நடத்துவதை பிரபலப்படுத்துவதற்கு வாய்ப்பாக சொல்லலாம்.

6. 9/11-ற்கு பிறகு பின் லாடென் உறவினர்களை பறக்க அனுமதித்தது போல், அமெரிக்காவை விட்டு வெளியேறுவதற்கு மட்டும்தான் ஜார்ஜ் புஷ் அவசர அவசரமாக உதவுவார். அமெரிக்காவினுள் நுழைவதற்கு மதச் சுதந்திர சட்டம் கொண்டு தடுப்பதாக புலம்பலாம்.

7. சிறைக்குள்ளிருந்தே குற்றங்கள் அரங்கேறும் நவீன உலகத்தில், தனக்கு விசா மறுக்கப்பட்டதை முரண்நகையாகக் கருதலாம்.

8. ஏப்ரல் ஒன்றாம் தேதி நினைவாஞ்சலிக்கு பத்து நாள் இருக்கும்போதே சொற்பாழிவாற்ற அழைக்கப்பட்டதால் நிராகரிக்கப்பட்டதாக நினைக்கலாம்.

9. சிபிஐ-யை மிரட்ட முடிந்தது போல் தூதரகத்திடம் உதார் செல்லுபடியாக அமெரிக்காவின் கன்ஸலேட் ஜெனரலை மாற்றப் போராடலாம். (உதவி: Jivha – the Tongue)

10. மீசை தாடியில் மண் ஒட்டாமல் சுவதேஷி கோஷத்தை தூசி தட்டலாம்.

Bloggers Meet @ Chennai

26th March 2005

Ferrari n Ferrari : அன்புடையீர்,
வரும் பங்குனி மாதம் பதின்மூன்றாம் தேதி, சனிக்கிழமை மாலை ஆறு மணி முப்பது நிமிடத்தில், இணையத்தளத்தில் இருந்து தபால் செய்பவர்கள் சந்திப்பதாய் பெரியோர்களால் முடிவு செய்யப்பட்டு உள்ளது. சென்னை பெசண்ட் நகர் கடற்கரையில் சந்திப்பது முடிவு செய்யப்பட்டு உள்ளது. ஆகவே, தாங்கள் தங்கள் இஷ்டமித்ர பந்துக்களுடன் வந்து ஆற அமர உலாவி, சிற்றுண்டியை உண்டு செல்லுமாறு பணிவன்புடன் கேட்டு கொள்கிறோம்.

மேலும் மெட்ராஸ் மொழி, ஆங்கில வரவேற்புகளையும் விபரங்களையும் காண: Ferrari n Ferrari

காலச்சுவடு – மார்ச் 2005

கோகுலக்கண்ணன் கவிதைகள்

மதிப்புரை: ஷோபா சக்தியின் ‘ம்’ : ஷோபா சக்தியின் இந்நாவல் வாசகனை வெறுமனே மெüனத்தில் ஆழ்த்திவிடாமல், வரலாற்றின் முன் அவன் தன்னையே ஒரு கேலிச் சித்திரமாக உணரவைக்கிறது. இதன் காரணமாகவே தீவிர வாசிப்புக்கும் நுட்பமான ஆய்வுக்கும் உட்படுத்தப்பட வேண்டிய மிக முக்கியமான நாவல்களில் ஒன்றாக விளங்குகிறது ‘ம்’.

அவுஷ்விட்ஸின் அறுபது ஆண்டுகள் – திவாகர் ரங்கநாதன் : இனவெறியையும் அதிகாரத்தையும் குறித்த ஒரு பயங்கர எச்சரிக்கையாக வரலாற்றில் ஒரு பெரும் பரப்பைப் பிடித்துக்கொண்டிருக்கிறது அவுஷ்விட்ஸ் முகாமில் நடந்த யூத இன அழிப்பு.

சிறுகதை: வெளிப்பாடு – அரவிந்தன் : காத்திருந்து காத்திருந்து, தவமிருந்து, திட்டமிட்டு, உடல் தேடி, உடல் அடைந்து, இருள் கூட்டி, உடலின் சுருதி கூட்டி, இசையின் லயமும் நடனத்தின் அசைவொழுங்கும் கூடிய இயக்கத்தின் மத்தியில் பேரிடியாய் ஊடுருவி இயக்கத்தின் ஆதார மையத்தைப் பொசுக்கி வீழ்த்திவிடும் ஓசைகள்.

விவாதம்: சிங்கப்பூர்: மறுபக்கம் : பல்வேறு புறக்காரணிகள் வாழ்க்கையை இறுக்கிக்கொண்டிருக்கிற சிங்கப்பூர்ச் சூழலில், இலக்கியம் உயிர்ப்புடன் இருக்கிறதா அல்லது மெல்ல மெல்ல இறக்கிறதா என்பதே முக்கியமான கேள்வியாக உள்ளது.

விவாதம்: தலையைத் திருகி : சாமி சிலையைத் தலையைத் திருகியெடுத்துப் புதையல் எடுக்க முயன்று புத்தர் சிலையை உடைத்த வரலாறுதான் நாம் காணும் தலை உடைந்த புத்தர் சிலைகள்.

உ.வே.சா.வை நினைவுகூரல் : உ.வே.சாவிற்கு யோக ஜாதகமில்லை போலும். தமிழ்த் தாத்தாவிற்கு ஒரு நினைவு அஞ்சல் தலை வெளியிட வேண்டும் என்று ஆறு ஏழு ஆண்டுகளாக மத்தியில் ஆண்ட காங்கிரஸ் – பா.ஜ.க. – காங்கிரஸ் என எல்லா அரசுகளுக்கும் எழுதி எழுதி ஓய்ந்துபோயாகிவிட்டது.

விவாதம்: பாசிச அறிக்கை : 13.11.2004 அன்று மதுரையில் தலித் இதழியல் வரலாற்று அரங்கில் வெளியிடப்பட்ட தலித் எழுத்தாளர்களின் கூட்டறிக்கை நவீனத் தீண்டாமைக்கு எதிராக என்னும் தலைப்பில் காலச்சுவடு டிச. 2004 இதழில் வந்திருந்தது. அவ்வறிக்கை இரண்டு தளங்களைத் தனது தாக்குதலுக்கு எடுத்துக்கொண்டுள்ளது…

விவாதம்: பசுமைப் புரட்சியின் உண்மையான முகம் : 1950-60 காலப்பகுதியில் ஓர் ஏக்கரில் இரசாயன உரங்கள் ஏதும் பயன்படுத்தாமல் 1400-1500 கிலோ நெல் மகசூல் எடுத்தவர்கள் இன்னும் சிலர் உயிரோடு இருக்கிறார்கள்.

உரைநடை உ.வே.சா.: உதிராத மலர்கள் – ஆ.இரா. வேங்கடாசலபதி : இரயிலறியாத காலம் முதல் விமானத் தாக்குதல் சாதாரணப் போர் நடவடிக்கையாக மாறிவிட்ட காலம் வரை ஒரு நெடுங்காலத்தை உ.வே.சா. நேராகப் பார்த்தறிந்தார். பத்தொன்பது, இருபது என இரண்டு நூற்றாண்டுகளின் செம்பாகமும் அவருடைய வாழ்வோடு ஒட்டி அமைந்திருந்தது.

தலையங்கம்: தமிழ்க் காதல் : பெரியாரியம் பேசும், மத அடிப்படைவாதத்தை எதிர்க்கும் பாட்டாளி மக்கள் கட்சி, தமிழ்த் திரைப்படங்களுக்கு ஆங்கிலத் தலைப்பு வைப்பதை எதிர்த்துப் போராடிவரும் இந்தக் கட்சி, இப்போது காதலர் தினத்தைக் குறிவைத்திருக்கிறது.

புரட்சி உருவாகிறது : பெண்களின் முக்கியமான எழுத்துகள் வெளிவரத் தொடங்கும்போதெல்லாம் ஏதோ ஒரு விதமான புரட்சி ஏற்படத் தொடங்குகிறது. இந்தத் தருணத்தில் தமிழில் இதைத் தெளிவாகப் பார்க்க முடிகிறது.

கேரள சாகித்திய அக்காதெமி விருது :: அங்கீகாரத்தின் தொலைவு – சுகுமாரன் : சாகித்திய அக்காதெமி விருது அறிவிப்பிற்குப் பின்னர் எல்லா மொழிகளிலும் போல மலையாளத்திலும் சர்ச்சையை எழுப்புவது வழக்கம். ஒவ்வொரு வருடமும் அறிக்கைகள் மூலம் சிறிது காலத்துக்கு ஒரு விவாதப்படலம் அலைந்துகொண்டிருக்கும்…

ஊசியைத் தேடுங்கள் : இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் பிரெஞ்சு எழுத்துச் சூழலில் முக்கியமான தாக்கத்தை ஏற்படுத்திய சிந்தனையாளர்களில் ஒருவர் ஆலேன் (1868-1951). அதிகாரச் சக்திகளை மறுத்து, ஏற்கனவே நிலவிவந்த கோட்பாடுகளுக்கு அடிமையாகாமல் தனித்துச் சிந்திப்பதில் சிறந்து விளங்கினார் இந்தப் பேராசிரியர்.

உ.வே.சா.வும் நாட்டார் வழக்காறுகளும் : சங்க இலக்கியங்கள், காப்பியங்கள், பக்தி இலக்கியங்கள் எனப் பல தரப்பட்ட செவ்விலக்கியங்களைப் பதிப்பித்தவர் உ.வே.சா. தாம் பதிப்பிக்கும் நூல்களில் இடம்பெறும் அரிய சொற்களின் பொருளை அறிந்துகொள்ள மிகுந்த முயற்சி எடுத்துக்கொண்டவர்.

சிபிச்செல்வன் கவிதைகள்

உ.வே.சா: ஒரு சனாதனியின் நவீனத்துவம் : சைவத் தமிழ் நூல்களைத் தவிர வேறு தமிழ் நூல்களை உயர்வான நூல்களாகக் கருதாத சைவப் பற்றுக் கொண்ட ஆசிரியர், சைவ மட ஆதீனகர்த்தர் ஆகியோரோடு நெருங்கிப் பழகிய உ.வே.சா.வுக்கு இத்தகைய ஆய்வுச் சிந்தனை இருந்தது என்பதே பிற்காலத்தில் அவர் தமிழ்த் தாத்தா ஆக்கப்பட்டதற்கான காரணம்.

உ.வே.சா.வும் பதிப்பு நெறிகளும் : 1887ஆம் ஆண்டு வெளியான சீவக சிந்தாமணி ஐந்நூறு பிரதிகள் அச்சிடப்பட்டன. அவற்றுள் நூறு பிரதிகள் அச்சகத்தாரின் கவனக் குறைவால் வீணாகிவிட்டன. மீதம் நானூறு பிரதிகள் மட்டும் விநியோகிக்கப்பட்டன. மிகப் பெரும் பதிப்பு நிகழ்வு நானூறு பிரதிகளாகத்தான் தமிழகத்தில் உலவியிருக்கிறது.

அசோகமித்திரன் – 50: வாழ்விலே முதல் முறை : ‘கடவு’ இலக்கிய அமைப்பும் ‘கிழக்கு’ பதிப்பகமும் இணைந்து நடத்திய ‘அசோகமித்திரன் – 50’ என்னும் நிகழ்ச்சி குறித்த பதிவுகள்.

முகுந்த் நாகராஜன்: நிராசையின் வலி : அகி என்னும் முதல் தொகுப்பின் மூலம் கவிதை வாசகர்களின் கவனத்தைக் கவர்ந்த இளம்கவிஞர் முகுந்த் நாகராஜன். வாழ்க்கைத் தளத்தில் தினம்தினமும் காணவும் உணரவும் நேரும் சின்னச்சின்ன சித்திரங்களை இயற்கையான நிறங்களுடன் தீட்டிக் காட்டுகின்றன இக்கவிதைகள்.

தாமோதரம் பிள்ளையும் சாமிநாதையரும் – எம்.ஏ. நுஃமான் : தன் இறுதிக் காலத்தில் சாமிநாதையர் எழுதிய சுயசரிதையில் தாமோதரம் பிள்ளையின் பதிப்பு முயற்சிகள் பற்றிய சில தகவல்களைக் குறிப்பிட்டுள்ளாரே அன்றி, அவரது பதிப்புத் துறை மேன்மை, அதன் முக்கியத்துவம் என்பன பற்றி சாதகமாக எதுவுமே குறிப்பிடவில்லை.

உ.வே. சாமிநாதையர்: பன்முக ஆளுமையின் பேருருவம் : நூலுக்கு நல்ல ஆராய்ச்சி, முன்னுரை, ஆசிரியர் கால ஆராய்ச்சி, நூல் பேசும் பொருள் பற்றிய ஆராய்ச்சி போன்றவை இடம்பெற வேண்டும். பாடல் மேற்கோள் அகராதி, அருஞ்சொற்பொருள் அகராதி என்று பலவும் அமைய வேண்டும். இந்த நுட்பங்களை ஆங்கிலம் கற்காமல் தாமாகவே உணர்ந்து உருவாக்கியவர் உ.வே.சா.

முகுந்த் நாகராஜன் கவிதைகள்

இயற்கையியலாளர் மா. கிருஷ்ணன் கடிதங்கள் : என் துப்பறியும் நவீனத்தை நுட்பமாக மனத்துள் ஆராய்ந்து உருவாக்கிவிட்டேன். 110 பக்கங்கள் (இதுபோன்ற கையெழுத்துப் பக்கங்கள்) எழுதியாய்விட்டது. இன்னும் 20 பக்கங்களுள், 25க்குள் முடிந்துவிடும். அச்சில் சுமார் 75 பக்கங்கள்தானிருக்கும்.

நீரோட்டம் : தமிழ் வாசிப்பு எதிர்காலத்திலும் தொடர வேண்டும் என்றால், இன்றே குழந்தைகளைத் தமிழ் வாசிக்கச் செய்ய வேண்டும். இன்றைய குழந்தைகளும் இளையர்களும் விரும்பி வாசிக்கத்தக்க நூல்களை எழுத வேண்டும், பதிப்பிக்க வேண்டும்.

பின்கட்டிலிருந்த சொற்கள் : இதற்கு முன் தமிழில் பெண்கள் எழுதியிருந்தாலும் அநேகமாக அவை பொதுமன வெளிப்பாடே. பொதுமன வெளிப்பாடாக இருந்ததால்தான் “பர்த்தாவுக்கேற்ற பதிவிரதை உண்டாயின் எத்தாலும் கூடியிருக்கலாம், சற்றேனும் ஏறுமாறாயிருப்பின் கூறாமல் சந்நியாசம் கொள்” என்று பெண்ணே எழுதியது.

கோணங்கள்: புலம்பலுக்கு முடிவு கட்டுவோம் – கண்ணன் : கன்னட நாவலான ‘பர்வா’வை மொழிபெயர்த்தமைக்காக பாவண்ணனுக்கு சாகித்திய அகாதெமி விருது வழங்கப்பட்டிருக்கிறது. இப்பரிசு பெறப் பாவண்ணன் தகுதியானவர் என்பதால் சாகித்திய அகாதெமியின் இம்முடிவை திறந்த மனத்துடன் வரவேற்கலாம்.

உயிர்மை – மார்ச் 2005

சுதந்திரம் பிளவுபடாதது : சங்கராச்சாரியார் விவகாரத்தில் ஜெயலலிதா அரசு காட்டிவரும் தீவிரம் இது ஒரு குற்ற வழக்கு மட்டுமல்ல என்ற சந்தேகத்தை ஒவ்வொரு நாளும் தீவிரமடையச் செய்து வருகிறது. அண்மையில் ஆடிட்டர் குருமூர்த்திமீது சங்கராச்சாரியார் விவகாரம் தொடர்பாக எழுதிய கட்டுரைகளுக்காக வழக்குப்பதிவு செய்யப்பட்டிருக்கிறது

சரவணன்1978 கவிதைகள் : வகுப்பறையில் அவள் விட்டுச் சென்ற கையடக்கக்குடை காலையில் அவள் மேல்விழ இருந்த மழைத்துளிகளால் நனைந்து ஈரப்பதத்துடன் கட்டவிழ்ந்து கறுப்பு பூச்செண்டு போல உள்ளது

விவாதம்: பூனைக்கு யார் மணி கட்டுவது? : “இதுவா தமிழைப் பாதுகாக்கும் வழி?” உயிர்மை பிப்ரவரி “05 இரண்டாவது தலையங்கம் பார்த்தேன். ஒரு மேம்போக்கான பார்வையில் தங்கள் கருத்துச் சரியானதே. அரசியல் சட்டம் நமக்கு கொடுத்த கருத்துச் சுதந்திரம் ஓரளவேனும் பேணப்பட வேண்டும் என்ற வகையில் தங்கள் எண்ணம் சரியானதே. ஆனால் அது மட்டும்தானா? தமிழ் மனங்களில், தமிழர் வாழ்வில், தமிழ்க் கலாச்சாரத்தில் வலிய ஆங்கிலத்தைப் புகுத்துவது எவ்விதத்தில் நியாயம்

பாவண்ணனுக்கு விருது : பாவண்ணன் எஸ். எல். பைரப்பாவின் “பருவம்” நாவலை கன்னடத்திலிருந்து தமிழில் மொழிபெயர்த்ததற்காக இந்த ஆண்டின் மொழிபெயர்ப்புக்கான சாகித்ய அகாதெமி விருதைப் பெறுகிறார்

உள்வட்டம் வெளிவட்டம் – சி. அண்ணாமலை : நாடகம் தொடர்பான தமிழர்களின் அக்கறைகள் கீழாக இருப்பதால், அது தொடர்பாக என்ன நடந்தாலும் பெரிதாகத் தெரிவதில்லை. இது நாடகத்திற்கு மட்டும் நேர்கிற ஒன்றாகக் கூற முடியாது. சினிமா இறைச்சலில், உடல்களின் ஆட்டங்களில் அரசியல் கூத்துகளில் தங்களைப் புதைத்துக்கொண்ட ஊடகம் தவறவிடும் ஒரு பெரும் பட்டியல் உண்டு.

பல்லி வேட்டை – மயூரா ரத்தினசாமி : பல்லிகளைக் கொல்வது பாவம் என்று அவன் வளர்க்கப்பட்டிருந்தான். அவை மனிதனுக்குச் சகுனம் சொல்பவை. பலன் சொல்பவை. அதற்கான பலன்கள் பஞ்சாங்கத்தின் கடைசி அட்டையின் உள்பக்கத்தில் இருப்பதை, அவன் அம்மா காட்டியிருக்கிறாள். மனித உடம்பின் மேல் அவை விழும் இடங்களைப் பொருத்த பலன்களும் அதில் அச்சிடப்பட்டிருந்தன.

அறைகள் – ஜெயமோகன் : அண்ணாச்சிக்கு நெல்லைப் பக்கமாக ஊர். மளிகைக்கடைகளுக்குப் போய் வசூல்செய்து தொகையை சிவகாசி முதலாளிக்கு அனுப்பிவைப்பது தொழில். மணமாகாதவர். குடி, சிகரெட், வெற்றிலைப்பாக்கு எந்த பழக்கமும் இல்லை. சீட்டாடும் கும்பலை அவர்கள் இருப்பதை அறியாதவர்போல நடப்பார். எவரிடமும் அதிகமாகப் பேசமாட்டார். கடன் கேட்பதற்காக எவரிடமும் நட்பு பாராட்டும் “உதவி இயக்குநர்” கும்பல்கூட, அவரை நெருங்குவது இல்லை.

அலைவரிசை 12 — ஜே. ஜி. பல்லார்ட் :: மொழிபெயர்ப்பு – எம். எஸ் : “மீண்டும் யோசித்துப் பார்” என்றான் ஷெரிங்காம். மாக்ஸ்டெட் தலையில் அணியும் ஒலிவாங்கியை இயக்கிவிட்டு காதுகளில் பொருத்திக்கொண்டான். ஒலித்தட்டு சுழலத் தொடங்கியதும் அதில் ஏதாவது புரிகிறதா என்று அறிய முயன்றான்.

மதிப்புரை: கடக்க முடியாத விதியின் நிழல் : தமிழில் சிறுகதைகளும் கவிதைகளும் பெரும் மனஎழுச்சிகளை உருவாக்க முடியாத ஒரு கால கட்டத்தில் சமீபத்தில் எழுதப்பட்ட சில நாவல்கள் தமிழில் படைப்பு மொழியினையும் களத்தினையும் மிகத் தீவிரமாக விரிவுபடுத்திக் கொண்டிருக்கின்றன.

வசுமித்ர கவிதைகள் : குளியலறை விதானத்தில் தொங்கும் தூக்குக் கயிறும் சிறுமி நேயாவின் நெடுநல் வாடையும்

சுகுமாரன் கவிதைகள் : கரைந்துகொண்டேவந்த காகம் வீட்டைக் கடக்கும்வரை சிறகடிக்காமலேயே பறந்தது ஒவ்வொரு வாசலாக முகர்ந்தபடி விசாரித்துவந்த தெருநாய் மெளனத்தால் வெருண்டு தாவியது.

கோகுலக்கண்ணன் கவிதைகள் : தூக்கத்தில் சிரிக்கும் குழந்தைகள் கனவில் விரியும் பூக்களின் இதழ்களை மெல்லத் தின்று உடலெங்கும் படர்ந்து அகலும். தாளாத குளிரில் படுக்கையை சட்டென்று நனைக்கும் குழந்தைகள் ஒரே சமயத்தில் அழும் சிலீரென்று

பதிவுகள்: சிறுகதைகளின் நாடகமாக்கம் — வெளி ரெங்கராஜன் : சில சிறப்பான சிறுகதைகளை நாடக வடிவில் நிகழ்த்திப் பார்க்கும் ஒரு முயற்சியாக கூத்துப் பட்டறை அண்மையில் பிரேம்சந்த், புதுமைப்பித்தன் மற்றும் சுந்தர ராமசாமியின் தேர்ந்தெடுத்த ஐந்து சிறுகதைகளை நாடகவடிவில் வழங்கியது. ஒரு புதினம் நாடக வடிவம் பெறும்போது, படிக்கும்போது கிடைக்கப்பெறும் மன உணர்வுகளுக்கு இணையான வேறொரு தளத்தில் கூடுதலான மனச் சலனங்களையும், புதினத்தின் சாரமான ஒரு உணர்வு அதிகபட்ச நிரூபணம் பெறும் சாத்தியங்களையும் கொண்டிருக்கிறது

பதிவுகள்: அசோகமித்திரன் 50 : அசோகமித்திரனின் 50 ஆண்டுகால எழுத்துலகப் பயணத்தை கொண்டாடும் விதமாக கடவு இலக்கிய அமைப்பும், கிழக்கு பதிப்பகமும் இணைந்து பிப்ரவரி 12 அன்று பிலிம்சேம்பரில் ஒரு நிகழ்வினை ஏற்பாடு செய்திருந்தன

நூலகம் : மனிதர்கள் நாடுகள் உலகங்கள், ஆசிரியர்கள் : ஜா. மாதவராஜ், சு. வெங்கடேசன் வெளியீடு : பாரதி புத்தகாலயம், 2, குயவர் வீதி, ஜோன்ஸ் சாலை, சைதாப்பேட்டை, சென்னை – 15 பக்கம் : 48 விலை : ரூ 10

ஏகாதிபத்தியம், பாசிசம், உலகமயமாதல் என மூன்றாம் உலக நாடுகளின் வாழ்வையும் வளத்தையும் சூறையாடிவரும் கொடுங்கரங்களின் சரித்திரத்தை இந்நூல் சுருக்கமாகவும் செறிவாகவும் சித்தரிக்கிறது.

கடிதங்கள்: எம். யுவனின் கவிதைகள் மீண்டும் சிக்கனமான மொழியின் வசீகரத்தை அணிந்துள்ளது. “மிச்சம்” கவிதையும் அதற்கடுத்த கவிதைகளும் உலக வரைபடத்தையும் அக மனதையும் பொருத்திப்பார்க்க விழைகிறது. ஆதவன் தீட்சண்யா, முகுந்த் நாகராஜன் கவிதைகளும் சிறப்பானது.

ஏடுகளில் படிந்த இருண்ட காலம் – பிரேம்::ரமேஷ் : நூல்களை அழித்தல் ஒரு வரலாற்று நிகழ்வு. மேற்குலகின் கிறித்துவத் திருச்சபை தனது மேலதிகாரத்தை நிறுவி பிற கிறித்துவப் பிரிவுகளையும், மாற்றுச் சிந்தனை மரபுகளையும் அழித் தொழிப்பதைக் கடமைகளில் ஒன்றாகக்கொண்ட அக்கால கட்டத்தில் நூல்களை எரித்தல் தின நிகழ்வாக மாறியிருந்தது.

அடிவானத்திற்கு அப்பால் : ஹினா-மட்சுரி — ஜெயந்தி சங்கர் : நம் நாட்டில் கொண்டாடப்படுவதைப்போலவே ஜப்பானிலும் கொலு கொண்டாடப்படுகிறது. ஆனால், மார்ச் 3 ஆம் தேதிதான் “ஹினா – நோ – செக்கு” அல்லது “ஹினா – மட்சுரி” எனப்படும் ஜப்பானிய “கொலு” கொண்டாடப்படுகிறது. ஹினா என்றால் பொம்மை, மட்சுரி என்றால் விழா. இதை “சிறுமிகள் விழா” என்றும் கூடச் சொல்கிறார் கள்.

இலங்கை – கேள்விக்குறியாகும் போர் ஓய்வு :: இளைய அப்துல்லாஹ : என்ன பாடுபட்டும் யுத்தத்தையும் இலங்கையையும் பிரிக்க முடியாது போலிருக்கிறது. 2002 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 22 ஆம் திகதி விடுதலைப்புலிகளும் இலங்கை அரசும் போர் ஓய்வு ஒப்பந்தமொன்றில் கைச்சாத்திட்டதன் பின்பு இராணுவத்துக்கும் விடுதலைப்புலிகளுக்கும் இடையில் சின்னச் சின்ன உரசல்கள் இருந்தன

பின்குறிப்பு — லால் சலாம் :: சுகுமாரன் : பல பெருமைகளும் பலப்பல விமர்சனங்களும் இ. எம். எஸ்ஸைப் பற்றியுண்டு. அவற்றுக்கான நியாயங்களும் உண்டு. எளிமை என்பது ஓர் உயர்ந்த இயல்பு என்று அவரைச் சந்தித்த சந்தர்ப்பத்தில் தான் எனக்குத் தோன்றியது.

மூங்கில் இலை மேலே – வேழமுடைத்த தமிழ்நாடு :: தியடோர் பாஸ்கரன் : இவ்வுலகின் மிகப் பழைய காட்டுயிர்களில் யானையும் ஒன்று. இன்று இருக்கும் இரு வகையான யானைகளில் – ஆப்ரிக்க யானை மற்றும் ஆசிய யானை – ஆசிய வகை அழிவின் விளிம்பில் ஊசலாடிக் கொண்டிருகின்றது. இருப்பது மொத்தமே 50, 000 ஆசிய யானைகளே.

Roast of Jeff Foxworthy

காமெடி செண்ட்ரல்: நண்பர்களுக்குள் சதாய்த்துக் கொள்வோம். மேடையில் தோன்றி மகிழ்விக்கும் நகைச்சுவையாளர்களும் சுய எள்ளலோ அல்லது பார்வையாளர்களின் குணங்களை நக்கலடித்தோ சிரிக்க வைப்பார்கள்.

பல புகழ்பெற்ற காமெடிக் கலைஞர்கள் ஒன்று சேர்ந்து ஒருவருக்கொருவர் கிண்டலும் கேலியும் செய்து கொண்டாலும் — பல்லைக் கடித்து புன்னகையோடு வெட்கப்பட்டுக் கொண்டு, நம்மை மட்டும் ஜாலியாக இருக்கவைக்கிறார்கள். அடுத்த முறை ‘டா’ போட்டு பேசும் நண்பர்களைக் கண்டால், சதாய்க்க பல விஷயங்களும் தேறுகிறது.

நல்லா இருக்குங்க… ஒளிபரப்பப்படும் நேரம், ஓசி வீடியோ போன்ற மேலும் விபரங்களுக்கு: COMEDY CENTRAL : TV Shows : Roast

கோடை விருப்பம்

Wall Street Journal:

குளிர் பானத்தில் தங்களுக்கு முக்கியமான அம்சம் எது?

* சுவை — 480 வாக்குகள் (42%)
* கலொரி (Calories) — 325 வாக்குகள் (29%)
* கஃபீன் (Caffeine) — 68 வாக்குகள் (6%)
* குளிர்பானங்கள் பருகுவதில்லை — 263 வாக்குகள் (23%)

என்னுடைய வோட்டு: குளிர்பானங்கள் பருகுவதில்லை

Barbershop

Barbershop Official Movie Site : PG-13

கறுப்பர்களின் ஒரு நாள் வாழ்க்கையை மசாலா மிக்ஸ் செய்திருக்கிறார்கள்.

நாம் கீழே விழுந்திருக்கும் சமயத்தில் கூறப்படும் ஓரிரு ஆறுதல் வார்த்தைகள் எவ்வளவு முக்கியமானவை என்பதற்கு ஒரு சீன். கறும்புள்ளி ஒரு முறை வைக்கப்பட்டுவிட்டால், வாழ்நாள் முழுவதும் சந்தேகக் கண் விழும் என்பதற்கு ஒரு சீன். ஆப்பிரிக்க-அமெரிக்கர்கள் ஒளிவு மறைவில்லாமல் உரையாடும் ஓரிரு காட்சிகள். குழுவிற்கு வெளியில் இருந்து வரும் வெள்ளையன், மாற்றுக் குழுவான கறுப்பர்களுடன் ஒட்டிக் கொள்ளப் போராட சில காட்சிகள். படித்தவனின் அறிவு செருக்கை எடுத்துக்காட்ட ஒரிரு மேன்மை உணர்வு உரையாடல்கள்.

அருமையான படமாக இல்லாவிட்டாலும், ஆப்பிரிக்க-அமெரிக்கர்களை கிரகிக்க உதவுகிறது. தமிழக சூழ்நிலையில் பலவற்றோடு இணைத்துப் பார்ப்பதை தவிர்க்க முடியவில்லை. தமிழ்ப்படத்தின் இறுதியில் ‘சுபம்’ போடுவது போல் படத்தின் முடிவில் பிரச்சினைகள் அனைத்தும் மாயம் ஆகிப் போகிறது. தலித்துகள் பெரியாரைத் தாக்குவது போல் பார்பர்-ஷாப்பில் ரோஸா பார்க்ஸையும் ரோட்னி கிங்கையும் போட்டுத் தள்ளுகிறார்கள். திடீரென்று ‘காதல் எஃப்.எம்’ போன்ற கழிவிறக்கக் காதல் ஒன்றும் எட்டிப் பார்க்கிறது.

ஹீரோவைத் தவிர ‘ஆண்களில் ராமன் கிடையாது’ என்பதாக நேர்மையாக சைட் அடிக்கிறார்கள். ‘செய்யும் தொழிலே ஜீசஸ்’ என்று அட்வைஸும் கொடுக்கிறார்கள். பல நாள் திருடனாக இல்லாவிட்டாலும் ஒரு நாள் அகப்படுவான் என்று சிதறலாக பலதையும் தொட்டுச் செல்கிறார்கள்.

அந்தக்கால திண்ணைப் பேச்சு போல கலந்துகட்டியாக சில சமயம் அச்சப்பட வைக்கிறது; சில சமயம் வெறிக்க வைக்கிறது; சில சமயம் சிந்திக்க; சில சமயம் சிரிக்க வைக்கிறது; மொத்தமாக கிராமத்தைப் புரிந்து கொள்ள ‘பரட்டை கும்பலோடு’ ஒன்றரை மணி நேரம் செலவழித்தால் தலைமுடியைப் பிய்த்துக் கொள்ளாமல் ஆப்பிரிக்க அமெரிக்கர்களை மேலோட்டமாக தெரிந்து கொள்ள முடிகிறது.

Junior Vikadan

சாந்தினி முன்னாபடுக்கையை பகிர்ந்து கொண்டால் சினிமா சான்ஸ்! :: ”என்னுடன் படுக்கையைப் பகிர்ந்து கொண்டால், கதாநாயகி ஆகலாம். இப்படி இந்தி சினிமா உலகில் கதாநாயகி ஆனவர்கள் லிஸ்ட்டில் ஐஸ்வர்யா ராய், ராணி முகர்ஜி, ப்ரீத்தி ஜிந்தா என எத்தனையோ பேர் இருக்கிறார்கள்.” – இந்தி நடிகரான சக்தி கபூர்

‘தோஃபா’ என்ற இந்திப் படத்தின் மூலம் வில்லனாகப் பிரபலமான சக்தி கபூர், பெண்கள் விஷயத்தில் கொஞ்சம் ‘வீக்’ என்பதை எப்படியோ தெரிந்துகொண்டு விட்ட ‘இண்டியா டி.வி’-க்காரர்கள் அவரை மடக்க வலையை விரித்திருக்கிறார்கள். அதற்காக, தங்கள் டி.வி-யின் பெண் நிருபர் ஒருவரை தயார்படுத்தி, சக்தி கபூரிடம் சினிமா சான்ஸ் கேட்க அனுப்பி இருக்கிறார்கள். கிட்டத்தட்ட ஆறு மாதங்கள் அந்த நிருபர் அலைந்திருக்கிறார். மொபைலில் பேசியும், எஸ்.எம்.எஸ். கொடுத்தும் பாலிவுட்டில் சான்ஸ் கேட்டு அந்தப் பெண் நிருபர் நச்சரித்துக் கொண்டே இருந்திருக்கிறார். ஒருவழியாக, மும்பையின் பிரபல ஸ்டார் ஓட்டல் ஒன்றின் அறையில் சக்தி கபூரைச் சந்தித்திருக்கிறார் நிருபர். அங்கு மது அருந்தியபடி படு குஜாலாக இருந்த சக்தி கபூர், ‘நான் டயர்டாகி விட்டால், நீ எனக்கு மசாஜ் பண்ணி விடு. நீ டயர்டாகி விட்டால், நான் உனக்கு மசாஜ் செய்கிறேன்’ என்று ஆரம்பித்து, கிளுகிளு வசனங்கள் நிறைந்த ஒரு நீண்ட பேச்சை படரவிட்டிருக்கிறார். இவை அத்தனையும் பெண் நிருபரின் ரகசியக் கேமராவில் பதிவாகி விட்டது.

சக்தி கபூர் அந்தப் பேச்சோடு நின்றிருந்தால் பரவாயில்லை. தனது பேச்சில் ப்ரீத்தி ஜிந்தா, ஐஸ்வர்யா ராய், ராணி முகர்ஜி என்று முன்னணிக் கதாநாயகிகளையும், முன்னணித் தயாரிப்பாளர்களான சுபாஷ் கய், சோப்ரா, எஸ்.ஜோஹர் ஆகியோரையும் வம்பிக்கிழுக்க… அவர்கள் எல்லோருமே இப்போது சக்தி கபூருக்கு எதிராக அனல் கக்கிக்கொண்டிருக்கிறார்கள்.

நடிகை ப்ரீத்தி ஜிந்தா தனது கண்டன அறிக்கையில், ‘சக்தி கபூர் மிகவும் கேவலமான ஆசையில் எல்லை மீறிப் பேசியிருக்கிறார். எவர் மீதும் அவருக்கு மதிப்பு, மரியாதை இல்லை என்பதையே அவரது பேச்சு காட்டுகிறது. சினிமாவில் வில்லனாக நடித்தவர், நிஜத்திலும் வில்லனாகவே இருக்கிறார். பாலிவுட் படங்களில் நடிக்க இவருக்கு உடனே தடை விதிக்க வேண்டும்’ என்று குமுறியிருக்கிறார். டி.வி. மற்றும் சினிமா படத் தயாரிப்பாளர் சங்கத்தினரும் சக்தி கபூரைக் காய்ச்சி எடுத்திருப்பதோடு, ”அவரை இனி எந்தத் தயாரிப்பாளரும் ‘புக்’ செய்யக் கூடாது” என்றும் கறாராகச் சொல்லி விட்டார்கள்.

‘’நடந்த விஷயத்துக்காக நான் மிகவும் வெட்கப்படுகிறேன். ஹார்ட் அட்டாக்கில் சிக்கிய நோயாளி போல் வேதனைப் படுகிறேன். உயிரையே விட்டுவிடலாம் போல் இருக்கிறது. என்னுடைய நல்ல நண்பர்களான ப்ரீத்தி ஜிந்தா, ராணி முகர்ஜி, ஐஸ்வர்யா ராய் ஆகியோரிடம் என் இருகரம் கூப்பி மனமார்ந்த மன்னிப்பைக் கேட்டுக்கொள்கிறேன். நான் மிகவும் மதிப்பு வைத்திருக்கும் சுபாஷ் கய்ஜி, சோப்ராஜி, ஜோஹர்ஜி ஆகியோரிடம் எனது நண்பர்கள் மூலமாகவும் எஸ்.எம்.எஸ். மூலமாகவும் மன்னிப்பு கேட்டிருக்கிறேன். அவர்களை நான் இன்னும் நேரில் சந்திக்கவில்லை. இருகரம் கூப்பி இன்னும் எத்தனை முறை வேண்டுமானாலும் அவர்களிடம் மன்னிப்புக் கேட்கத் தயாராக இருக்கிறேன்” என்றவரின் குரலில் அழுகை தோய்ந்திருப்பதை உணர முடிந்தது.

‘’அந்தப் பெண் நிருபரின் அழைப்பை ஏற்று நீங்கள் ஏன் போனீர்கள்? அவரை உங்கள் வலையில் வீழ்த்தலாம் என்கிற ஆசையில்தானே?” என்ற கேள்விக்கு,

‘‘ஒட்டலில்தான் அந்தப் பெண் நிருபரை முதன்முதலாக நேரில் பார்த்தேன். போனில் அவருடன் அடிக்கடிப் பேசியிருக்கிறேன். அவர் அழைத்ததுமே நான் ஓட்டலுக்குப் போகவில்லை. கண்டிப்பாக மறுத்த என்னிடம், ‘ப்ளீஸ் சார்… நீங்கள் வரவில்லை என்றால் நான் தற்கொலை செய்துகொள்வேன்’ என்று மிரட்டியதால்தான் வேறு வழியின்றி போனேன். மற்றபடி, வேறு எந்த ஆசையுடனும் போகவில்லை.

சினிமாவில் கதாநாயகிகள் அனைவரும் தங்களது கடின உழைப்பால்தான் முன்னுக்கு வருகிறார்களே தவிர, படுக்கையைப் பகிர்ந்துகொண்டு அல்ல. அதுபோல் செய்பவர்களுக்கு சினிமாவில் வாய்ப்பு கிடைத்துவிடும் என்பதெல்லாம் உண்மையல்ல” என்றவர் புது விளக்கம் ஒன்றையும் எடுத்துவிட்டார்.

‘‘பாழாய்ப்போன அரசியல்தான் இப்போதைய சிக்கலுக்குக் காரணம். கடந்த எம்.பி. தேர்தலில் காங்கிரஸுக்காக நான் பிரசாரம் செய்தேன். அதை மனதில் வைத்துக்கொண்டு எனது எதிரிகள் பழிவாங்கி விட்டனர். அந்த ‘இண்டியா டி.வி’-யை நான் சும்மாவிடப் போவதில்லை. மானநஷ்ட வழக்குப் போட்டு கோர்ட்டுக்கு இழுப்பேன். டெல்லியில் எனது அரசியல் நண்பர்களிடம் பேசினேன். இதுபோன்ற ‘டர்ட்டி ஜர்னலிச’த்தை ஒழிக்கும் வகையில் சட்டம் கொண்டுவர மத்திய அரசை வலியுறுத்துவதாக அவர்கள் சொல்லி இருக்கிறார்கள்.

ஒட்டுமொத்த மும்பை படவுலகமே இந்த விவகாரத்தில் எனக்கு எதிராகத் திரும்பிவிட்டது போல் செய்திகள் பரப்பப்படுகின்றன. அதில் உண்மை இல்லை. சஞ்சய் தத், கோவிந்தா போன்றோர் போன் செய்து எனக்கு ஆதரவாகவே பேசினார்கள். தமிழ் ரசிகர்களும், தமிழ்ப்பட உலகமும் இந்த விஷயத்தில் என்னை வில்லனாகக் கருதிவிடக் கூடாது என இந்தத் தருணத்தில் வேண்டுகோள் வைக்கிறேன்” என்று சொல்லி முடித்தார் சக்தி கபூர்.

மும்பை செய்தியாளர்களிடம் இது பற்றிக் கேட்டால், ‘’சக்தி கபூர் குறிப்பிட்டுப் பேசிய நட்சத்திரங்களும், தயாரிப்பாளர்களும் மிகவும் பிரபலமானவர்கள். அதனால் சக்தி கபூரின் மன்னிப்பு இப்போதைக்கு ஏற்கப்பட வாய்ப்பில்லை. தவறாகப் பேசியதன் பலனை அவர் குறைந்தபட்சம் ஐந்து ஆண்டுகளாவது அனுபவிக்க வேண்டியிருக்கும்” என்கிறார்கள்.


‘இண்டியா டி.வி.’ காங்கிரஸுக்கு எதிராக இருக்கிறது என்று சக்தி கபூர் குற்றம்சாட்ட ஒரு காரணம் இருக்கிறது. இந்த டி.வி-யின் பங்குதாரர்களில் பலரும் பி.ஜே.பி-யைச் சேர்ந்தவர்கள் என்று கூறப்படுகிறது. முக்கியமாக, மேனகா காந்தியும் ஒரு பங்குதாரராம். ‘ஸ்டார் நியூஸ்’ சேனலில் நியூஸ் வாசிப்பவராக இருந்த ரஜத் சர்மாதான் இந்த டி.வி-யின் தலைவர்.

‘சக்தி கபூர் விஷயம் மிகவும் பர்சனலான ஒன்று. இதை வெளிப்படுத்தியது ஜர்னலிஸத்தை கேவலப்படுத்துவது போல் இருக்கிறது’ என்று சொல்லி, இந்த டி.வி-யை மூட வைக்கும் முயற்சிகளில் காங்கிரஸ் இறங்கியிருக்கிறதாம்.

இந்த விவகாரம் பற்றி ‘தெஹல்கா’ ஆசிரியரான தருண் தேஜ்பாலிடம் கேட்டபோது, ”பொதுமக்களின் பணம் எங்கெல்லாம் விரயமாக்கப்படுகிறதோ… கொள்ளையடிக்கப்படுகிறதோ… அங்கெல்லாம் ரகசிய கேமராக்களை வைத்து அம்பலப்படுத்துவதுதான் புலனாய்வு ஜர்னலிஸத்தின் வேலையாக இருக்க வேண்டும். ஆனால், சக்தி கபூர் விஷயம் முழுக்க முழுக்க தனிமனிதனைப் பற்றியது. இதில் எல்லாம் இந்த அளவுக்கு முயற்சி எடுத்து செய்தி வெளியிடுவது உள்நோக்கத்துடன் செய்ததாகத்தான் எடுத்துக் கொள்ளப்படும்” என்று கருத்துச் சொல்லியிருக்கிறார்.


காங்கிரஸுக்காக தேர்தல் பிரசாரம் செய்தவர்கள் என்கிற வகையில் நடிகை நக்மா, வில்லன் நடிகர் சக்தி கபூர் இருவர் மீதும் மும்பை பி.ஜே.பி-யினர் காட்டமாக இருக்கிறார்கள். தாவூத்துடன் நக்மாவுக்கு தொடர்பு இருப்பதாக பரவிய செய்தி மற்றும் சக்தி கபூர் விவகாரம் இரண்டையும் கையிலெடுத்து காங்கிரஸுக்கு எதிராகப் போராட்டங்களைத் தொடங்கியிருக்கிறது பி.ஜே.பி. இதற்கு அகில இந்திய காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான அனந்த் சர்மா, ”காங்கிரஸுக்காகப் பிரசாரம் செய்தவர்கள் எல்லாம் காங்கிரஸ் தலைவர்கள் அல்ல. பி.ஜே.பி. குற்றம்சாட்டும் இருவரும் காங்கிரஸில் சாதாரண உறுப்பினர்களாகக் கூட இல்லை” என்று பதிலடி கொடுத்திருக்கிறார்.


சமீபத்தில் ‘ஆஜ்தக்’ என்கிற செய்திச் சேனல், டெல்லியின் விற்பனை வரி அலுவலகத்தில் அதன் அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்து, அதைக் கையும் களவுமாக கேமராவில் படம் பிடித்துவிட்டது. இது ஒளிபரப்பாகி, பெரும் பரபரப்பை ஏற்படுத்தி விட்டது. செய்தி வெளியான அன்றில் தொடங்கி இது வரை உயர் அதிகாரிகள் உள்பட 83 பேர் சஸ்பென்ட் செய்யப்பட்டுள்ளனர்.