சர்வதேச அறிவியல் புனைகதைப் போட்டி – கடைசி தேதி ஜனவரி 15 , 2005
Pathivukal : பதிவுகள் நந்தா பதிப்பகத்தின் ‘தமிழர் மத்தியில் ஆதரவுடன் நடாத்தும் சிறுகதைப் போட்டியின் முடிவு திகதி மேலும் ஒரு மாதத்துக்கு அதாவது ஜனவரி 23, 2005வரை நீடிக்கப்பட்டுள்ளது.
சர்வதேச அறிவியல் புனைகதைப் போட்டி – கடைசி தேதி ஜனவரி 15 , 2005
Pathivukal : பதிவுகள் நந்தா பதிப்பகத்தின் ‘தமிழர் மத்தியில் ஆதரவுடன் நடாத்தும் சிறுகதைப் போட்டியின் முடிவு திகதி மேலும் ஒரு மாதத்துக்கு அதாவது ஜனவரி 23, 2005வரை நீடிக்கப்பட்டுள்ளது.
Posted in Uncategorized
‘நல்ல தம்பி’யை சிறு குறிப்பிட்டவர் ஸ்பஷ்டமாக தமிழ் பேசுகிறார். இந்தக் காலத்தில் பழைய படங்களை பேசுபவர்கள் அரிது. அவர்கள் தமிழர்களாக இருப்பது அதனினும் அரிது. அவர்கள் இளைஞியாக இருப்பது அதனினும் அரிது. அவர்கள் சன் டிவியில் வருவது மிக மிக அரிது. அவர்கள் தெள்ளு தமிழில் உரையாடல் எல்லாவற்றையும் விட அரிதுதானே? (படம் : உதவி)
Jax’s Book Shelf-ஐ பார்த்தால் பொறாமையாக இருக்கிறது. சென்ற வருடத்தில் இவ்வளவு புத்தகங்களைப் படித்து, அவற்றிற்கு குட்டி குட்டி குறிப்பும் கொடுத்திருக்கிறார். ஆங்கில புத்தகம் தேர்ந்தெடுக்க விரும்புபவர்கள் ஒரு நடை போய் வரலாம்.
‘நான் பொறுக்கி இல்ல… பழம்‘ என்று டயலாக் விடாமல் விஷுவல் காட்டியிருக்கிறார். தொடர்ந்து வரும் பொன்மொழியை மணமுடிக்கப் போகும் மேள்-கைண்டுக்கு அர்ப்பணிக்கலாம்.
‘காதல் திருமணத்துக்கும் வீட்டில் பார்த்து மணமுடிப்பதற்கும் என்ன வித்தியாசம்?
தற்கொலைக்கும் கொலைக்கும் உள்ள வித்தியாசம்தான்…’
Privoxy, Tor: An anonymous Internet communication system என்று இரண்டு புதிய நிரலிகளை இன்றுதான் பார்த்தேன். கொந்தி போடுபவர்களுக்கு மட்டுமல்லாமல், எனக்கும் ‘ப்ரைவாக்ஸி‘ பயனுள்ளதாக இருக்கும் என்று தோன்றுகிறது. மூகமூடிகளுக்கு (மட்டும்) ‘டோர்‘ உபயோகப்படலாம். இனிமேல்தான் விளையாடிப் பார்க்க வேண்டும்.
BugMeNot.com – Bypass Compulsory Web Registration மிகவும் முக்கியமான அமைப்பு. விகடன் ஆரம்பித்து மியாமி ஹெரால்ட் வரை எங்கு பார்த்தாலும் உன் மின்மடலைச் சொல், செல்லப்பிராணி பெயரை சொல், வயசுக்கு வந்துட்டியா, எத்தனை வீடு இருக்கிறது என்று நொரநாட்டியம் செய்வதை பை-பாஸ் செய்ய வழி கொடுக்கிறார்கள். (மார்க்கம்: TriNetre – The Third Eye)
Posted in Uncategorized
தோள் வலித்தாலும் தொழிலைச் சுமக்க வேண்டியது காலத்தின் நிர்ப்பந்தம். மிகச் சாதாரணமென்று இலையில் பதிந்த மழைத்துளியை விலக்கிவிடாத மரம்போல, இலக்கிய வேர்களில் இவர்களைப் பதிவு செய்தல் என் விருப்பம்.
இந்த மாயக் காவடி நம் எல்லோருக்குமானது. ஆளுக்கு ஒரு கை பிடித்தல் அவசியம். அன்புடன் தொடர வேண்டுகிறேன்.
ரோடு ரோலர் டிரைவர்
முன்னும் பின்னுமாக
இவன் கடந்த தூரம்
மிக மிக சொற்பம் அல்லது
கணக்கில் வராதவை
ரோலர் ஓட்டுபவரின்
இதயம் போல
இயங்கவேண்டும்
அரசாங்கம்
முன்னதில் தெளிவும்
பின்னதில் பதிவும்
எல்லா சாலையும்
ரோமை அடையுமா?
தெரியாது
ரோலரை அடைந்தே தீரும்
ஆலையிட்ட கரும்பென
ஆக்கிய உவமையை, இனி
ரோலரிட்ட எறும்பென
கூறுதல் நவீனம்
ரோலர் ஓட்டுபவன்
கடந்த காலத்தின் மனசாட்சி
சேவைகளும் தியாகங்களும்
தெரியாமல் போவதனால்
விரைவு வாகனங்கள்
விபத்துகளின் குறியீடு
எங்கேயும் நிறுத்தலாம்
ரோலரை
எந்த பயமுமில்லாது
நெடுஞ்சாலையெங்கிலும்
கேட்கும்
ரோலர் ஓட்டுபவனின்
நீண்ட நெடிய சங்கீதம்
பிறருக்கான பாதைகளை
போட்டுத்தரவே
பிறப்பெடுத்தவன் போல
என்றாலும்
வந்த பாதையை மறந்துவிடாத
இவனே விரும்பினாலும்
போக முடிவதில்லை வேகமாக
நன்றி: விகடன்.காம்
Posted in Uncategorized