சுகிர்தாராணி


நான் திகைக்க நினைக்கையில்

அந்தரங்கம் அச்சிடப்பட்ட

புத்தகத்தையே படித்து முடித்திருந்தேன்

என் கண்களின் ஒளிக்கற்றைகள்

முன்னறையில் உறங்குபவனின்

ஆடை நெகிழ்வுகளில் பதிந்திருந்தன

கோப்பை நிறைய வழியும் மதுவோடு

என் உடல் மூழ்கி மிதந்தது

கூசும் வார்த்தைப் பிரயோகங்களை

சன்னமாய்ச் சொல்லியவாறு

சுயபுணர்ச்சியில் ஆழ்ந்திருந்த வேளை

பறவைகளின் சிறகோசை கேட்டதும்

என்னை… என்னிடத்தில் போட்டுவிட்டு

ஓடிவிட்டது இரவு மிருகம்

One response to “சுகிர்தாராணி

  1. சுகிர்தராணியின் இந்தக் கவிதையை முன்பே படித்துள்ளேன் எனினும், இப்போதும் படித்ததும் ஆனந்தமாயிருக்கிறது. சில நல்ல கவிதைகளை எழுதியிருக்கிறார் அவர்.

பின்னூட்டமொன்றை இடுக

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.