Monthly Archives: ஓகஸ்ட் 2004

Kalakka Povathu Yaaru – 3 (Vasool Raja MBBS) 

Kalakka Povathu Yaaru – 3 (Vasool Raja MBBS) Posted by Hello

Sakala Kala Doctor Song – 1 (Vassool Raja MBBS) 

Sakala Kala Doctor Song – 1 (Vassool Raja MBBS) Posted by Hello

Sakala Kala Doc – 2 (Vassool Raaja MBBS) 

Sakala Kala Doc – 2 (Vassool Raaja MBBS) Posted by Hello

Sakala Kalaa Doctor – 3 (Vasool Raaja MBBS) 

Sakala Kalaa Doctor – 3 (Vasool Raaja MBBS) Posted by Hello

Vairamuthu, Saran, Kamal Hassan 

Vairamuthu, Saran, Kamal Hassan Posted by Hello

வசூல்ராஜா MBBS – ஆழ்வார்பேட்டை ஆளுடா

K:

ஆல்வார்பேட்டை ஆளுடா

அறிவுரையே கேளுடா

ஒரே காதல் ஊரில் இல்லையடா

காதல் போயின் சாதலா

இன்னோர் காதல் இல்லையா

தாவணி போனால் சல்வார் உள்ளதடா

G:

லவ் பண்ணுடா மவனே, லவ் பண்ணுடா மவனே

மவனே, லவ் பண்ணுடா மவனே, லவ் பண்ணுடா மவனே

K:

ஒரு டாக்டர் பொண்ணு நோ சொன்னா

நர்ஸு பொண்ணை காதலி

கட்சி தாவல் இங்கே தர்மமடா ஹோய் ஹோய்

G:

ஆல்வார்பேட்டை, ஆல்வார்பேட்டை

ஆல்வார்பேட்டை ஆண்டவா

வேட்டிய போட்டு தாண்டவா

ஒரே காதல் ஊரில் இல்லையடா

K:

பன்னனு வயசில் பட்டாம்பூச்சி பறக்குமே

G:

லவ் இல்லே, அதன் பேர் லவ் இல்லே

K:

கண்ணை பார்த்து பேச சொல்ல

கழுத்துக்கு கீழ் பார்க்குமே

G:

லவ் இல்லே, அதன் பேர் லவ் இல்லே

K:

கிழிஞ்ச பாயில் கவுந்து படுக்கும் போது

உன் கனவிலே கிளியோபட்ரா வந்தா லவ் இல்லே

ஜவுளி கடை பொம்மையை பார்க்கும் போது

உன் புத்திக்குள்ள கவுலி கத்தும் அதுவும் லவ் இல்லே

இதுக்கு ஏன் உசுர குடுக்கணும்

எதனையும் புரிஞ்சு நடக்கணும்

காதல் ஒண்ணும் கடவுள் இல்லையடா

இந்த எளவு எல்லாம் ஹார்மோன் செய்யும் கலகம் தானடா

GROUP CHORUS:

ஆல்வார்பேட்டை, ஆல்வார்பேட்டை

ஆல்வார்பேட்டை ஆண்டவா

வேட்டிய போட்டு தாண்டவா

ஒரே காதல் ஊரில் இல்லையடா

ஒரே காதல் ஊரில் இல்லையடா

காதல் போயின் சாதலா

இன்னோர் காதல் இல்லையா

தாவணி போனால் சல்வார் உள்ளதடா

…போடு

….வா நர்சம்மா

…ஐய்யோ

K:

பார்க்கபோனா மனுஷனுக்கு first தோல்வி காதல்தான்

G:

நல்லது அனுபவம் உள்ளது

K:

காதலுக்கு பெருமையெல்லாம் first காணும் தோல்விதான்

G:

சொன்னது கவிஞர்கள் சொன்னது

K:

டாவு கட்டி தோத்து போனவன் எல்லாம்

கண் மூடிட்டா ஓட்டு போட ஆளே இல்லையடா

ஒன்னு ரெண்டு escape ஆன பின்னே

உன் லவ்வுதான் மூணாம் சுத்தில் முழுமை காணுமடா

ஐய்யயோ இதுக்கா அழுவுரே

lifeஇலே ஏன்டா நழுவுரே

காதல் ஒரு கடலு மாறிடா

அதை மறந்துட்டு டம்ளருக்குள் நீச்சல் ஏனடா

டேய் டேய்

GROUP CHORUS

K:

ஒரு டாக்டர் பொண்ணு நோ சொன்னா

நர்ஸு பொண்ணை காதலி

கட்சி தாவல் இங்கே தர்மமடா ஹோய் ஹோய்

GROUP CHORUS

நன்றி: vaali

விகடன் (சுவடுகள்)

பாஸ்கி

”என்னன்னே தெரியலே… எந்தப் பொண்ணைப் பார்த்தாலும் உன்னை பார்க்கறா மாதிரியேதான் இருக்கு!”

”சரிதான். இதையே சாக்கா வெச்சுக்கிட்டு பல பேரோட சுத்தறதை முதல்ல நிறுத்துங்க!”



கற்றதும் பெற்றதும் – சுஜாதா

வழக்கம்போல் ஹைக்கூ கொடுத்து உங்களைப்படுத்தாமல், பெர்சிவல் பாதிரியார் 1874-ல் வெளியிட்ட தமிழ்ப் பழமொழிகள் என்னும் நூலில் சில வழக்கொழிந்த பழமொழிகள் தருகிறேன். ஹைக்கூவைவிட உண்மையாக இருக்கின்றன.

காசுக்கு ஒரு புடவை

விற்றாலும் நாயின்

‘…’ அம்மணம்

கொக்கு இளங்குஞ்சும்

கோணாத தெங்கும்

கண்டதில்லை

தென்காசி ஆசாரம் திருநெல்வேலி உபசாரம்

மானுக்கு ஒரு புள்ளி ஏறி என்ன, குறைந்து என்ன?

வெட்கப்படுகிற வேசியும் வெட்கம்கெட்ட சமுசாரியும் உதவாதவர்கள்.



நெட் மொழிகள்

குணமான பிறகு ஒவ்வொரு நோயாளியும் ஒரு டாக்டரே.

விளக்குமாற்றுக்குத்தான் தெரியும் வீட்டின் அழுக்கு.

நிறைந்த வயிற்றுக்கு எப்போதும் புரியாது பசித்த வயிறு.



வாக் போகையிலே… – மெரீனா

”என்ன சார், ஈவினிங் வாக்கா?”

”ஆமா..”

”ஏன், இப்பல்லாம் நீங்க ஒண்ணுமே எழுதறதில்லே?”

”நிறைய எழுதியாச்சே..”

”நிறைய பேசியாச்சேன்னு, யாராவது பேசாம இருக்காங்களா?” உதிர்த்த பொன்மொழியை அவரே ரசித்துக்கொண்டார்!

”எப்பவாவது எழுதக் கூடாதா?”

”எதை எழுதுவது?”

”எதையாவது…”

”எதையாவது எழுதினா யாரு போடுவாங்க..?”

”யாராவது..”

”யாரு படிப்பாங்க?”

”படிக்கிறவங்க படிச்சுட்டுப் போறாங்க…”

”நீங்க படிப்பீங்களா?”

”ஐயையோ! என்னை நம்பி எழுதாதீங்க… எனக்கு எதைப் படிக்கவும் நேரமில்லே.. போறபோக்குலே பத்திரிகை போஸ்டர்களைப் படிக்கிறதோட சரி..” புறப்பட்டேன்.

”சும்மா இருக்காதீங்க.. என்னை மாதிரி தினம் டைரியாவது எழுதுங்க. எழுதற பழக்கம் விட்டுப் போயிடக்கூடாது!”



ஏன்? எதற்கு? எப்படி? – சுஜாதா

ஆர். விஜி, அரகண்டநல்லூர்

இந்த நூற்றாண்டில் எவையெவை அழிந்துபோகும்..?

பெட்ரோலும், கூட்டுக் குடும்பங்களும், கல்யாணமும், பிள்ளைப் பேறும், தாய்ப்பாசமும், விமான, பஸ் பயணமும், செலுலாய்டு சினிமாவும், டெலிபோனும் பெரும்பாலான வியாதிகளும், கடவுள் பக்தியும், கதை, கவிதைகளும், ரூபாய் நோட்டும் என ஒரு பெரிய பட்டியலே இருக்கிறது அழிந்து போக. தற்கொலை மட்டும் பாக்கியிருக்கும்.

த. சத்தியநாராயணன், அயன்புரம்.

உலகின் முதல் டெர்ரரிஸ்ட் யார்?

சதாம் என்கிறது அமெரிக்கா. ஒஸாமா என்றும் சொல்லி வந்தார்கள். ‘அமெரிக்காதான் உலகின் முதல் டெர்ரரிஸ்ட்’ என்கிறார் நொவம் சாம்ஸ்கி. மகாபாரதத்தில் துரியோதனன் மகன் ஒருவன் டெர்ரரிஸ்ட்டாக இருந்திருக்கிறான். இந்திரன்தான் உலகின் முதல் டெர்ரரிஸ்ட் என்று இந்து புராணங்களை ஆராய்ச்சி செய்த ஒருவர் எழுதியிருக்கிறார். முதல் டெர்ரரிஸ்ட் சரித்திரத்தில் முதன் முதல் ஒடுக்கப்பட்ட குழுவினரில்தான் பிறந்திருக்க வேண்டும்.

காதல் எப்போதும் – செழியன்

வீட்டில் யாருக்கும் தெரியாமல்

நள்ளிரவில் கண்விழித்து

உனக்குக் கடிதம் எழுத

விருப்பம் என்றேன்.

தீர்ந்த மைப்புட்டியில்

இரண்டு மின்மினிகளை அடைத்து

மேசைவிளக்கெனப்

பரிசளிக்கிறாய்.

கவிதையானதுதான் காதல்

எப்போதும்.

முதல் முத்தம் புறங்கையில்.

இரண்டாவது

ஃபேர் அண்ட் லவ்லி மணக்கும்

கன்னத்தில்.

மங்கிய இரவில்,

பூங்காவில்

தற்செயலாய் நீ

முகம் நிமிர்ந்த கணத்தில்

மூன்றாவது.

முத்தத்தை விடவும் இனிமையானது

பின் நிகழும் மௌனம்.

அவஸ்தையானதுதான் காதல்

எப்போதும்.

முத்தம் கேட்டால்

காகிதத்தில் முத்தமிட்டுக்

கடிதம் தருவாய்.

சிறுதுயில் கொள்ள

உன்மடி கேட்டால்

நீண்ட கனவுகள் தருவாய்.

உடனிருக்கும் வாழ்க்கை

கேட்டால்

முழுவாழ்க்கைக்குமான

நினைவுகள் தருவாய்.

ஏமாற்றமானதுதான் காதல்

எப்போதும்.

Thanks: vikatan.com

விமர்சனம் எழுத வேண்டிய ஹாலிவுட் படங்கள்

  1. The Accidental Tourist: அமைதியான படம். முடிவு ஏமாற்றமளிக்கிறது, ஆண்,பெண்களின் திருமண உறவின் எதிர்பார்ப்புகளை ஓரளவு நன்கு அலசும் படம்.
  2. Duplex: தயவு செய்து பார்க்காதீர்கள். ஏன் என்று எழுதலாம்.
  3. Adaptation: நான் ஒருவிதமாகப் புரிந்து சிலாகித்தேன். என் மனைவி இன்னொரு விதமாய் புரிந்து கொண்டு ரசித்தாள். உங்கள் ரசனை எப்படி இருந்தாலும் பார்க்க வேண்டிய படம்.
  4. Y tu mama tambien: ஸ்பானிஷ் படங்களுக்குத் தப்பாமல் கொச்சைப்படுத்தபடும் உறவுமுறைகள், அதிர்ச்சியூட்டும் காட்சியமைப்புகள், அடவைஸ் கொடுக்கும் தோரணை என்றிருந்தாலும், முடிவு என்ன என்று பார்த்த பிறகு, மீண்டும் முதலில் இருந்து மறுவாசிப்பைக் கோரும் படம்.
  5. Mulloholland Drive: வித்தியாசமான திரைக்கதை அமைப்பு. ஆய்த எழுத்தை ஆராதித்தால், இந்தப் படத்தையும் இரு முறை பார்க்கலாம்.
  6. Bend it like Bekham: நார்மல் படம். நம்ம ஊரு கதை.
  7. Road to Perdition: டாம் ஹான்க்ஸ் உருப்படியாக நடித்த (அரிதான) படம். அந்தக் கால நடை உடை சமாசாரங்களை இம்மி பிசகாமல் கொண்டு வந்ததற்காகவே கை தட்டலாம் என்றலாம், சிறப்பான திரைக்கதை, முடிவு என்று பலதையும் சொல்ல வேண்டும்.
  8. Inventing the Abbotts: ஜெனிஃபர் கானலி சிந்தனையைத் தூண்டாவிட்டாலும், உளவியல் அலசல்களை சப்-டெக்ஸ்ட்டாக சொல்லுகிறார்கள். உண்மை என்ன என்று தோண்டித் துருவுகிறோம்; தெரிந்து விட்ட அடுத்த விநாடியில் புழுவாய்த் துடிக்கும் சில கதாபாத்திரங்களின் ஆய்வு.
  9. Bruce Almighty: ஒரே ஒரு தபா பார்க்கலாம். அற்புதமாக எடுக்கப் படவேண்டிய கதையை எவ்வாறு கொடுமை படுத்தலாம் என்பதை அறிந்து கொள்ள. நல்ல கரு; மோசமான திரைக்கதை + படத்தொகுப்பு!
  10. Chicago: நொடிக்கொரு பாடல் வந்தாலும், அலுக்காமல், ஒவ்வொன்றிலும் அசத்திய, தியேட்டர் டிராமாவைத் தழுவிய படம். ஒரிஜினலைப் பார்த்து விட்டு படத்திற்கு இண்ட்ரோ கொடுக்க வேண்டும்.

மறுமொழிக் கவியருவி

நடக்கும் ஐ.பி.கே.எஃப் விவாதம் (163) கஞ்சி சித்தர்களை (170) மறுமொழிகளில் மிஞ்சிவிடும் போல் இருக்கிறது. எட்ட நின்று பார்த்ததில் எனக்குத் தோன்றியவை சில:

1. தமிழ்ப் படைப்பாளிகளின் சமூக இருப்பு:

ஒரு படைப்பாளி எல்லாப் பிரச்சினைகளிலும் தனது கருத்தைப் பதிவுசெய்யவேண்டும் என்ற கட்டாயம் எதுவுமில்லை. ஒருவருக்குக் குறிப்பிட்ட சந்தர்ப்பத்தில் நிலைப்பாடு எதுவும் இல்லாமல் இருப்பதற்கோ அல்லது அப்படியே இருந்தாலும் அதை வெளியே சொல்லாமல் இருப்பதற்கோ உரிமையுண்டு. தன்னுடைய நிலைகளையும் கோழைத்தனத்தையும் பாதுகாத்துக் கொள்வதும் கூட ஒருவரது அடிப்படை உரிமையே. ஆனால் ஒரு சமூகம் நீடித்திருப்பதற்கான அடிப்படை நியாயங்கள் மீறப்படும்போதுகூட ஒருவர் எந்த எதிர்வினையும் ஆற்றுவதில்லை என்ற நிலை அந்த நியாயங்களை அழிப்பவர்களை ரகசியமாக ஆதரிப்பதாகிவிடும்.

மிக நெருக்கடியான சந்தர்ப்பங்களில் கூடத் தமிழ் எழுத்தாளர்களிடையே அவர்களது தனிப்பட்ட உறவுநிலைகள்தான் முக்கியத்துவம் பெறுகின்றன. (‘கலைஞரின் கைது வைபவத்தின் போது… மனுஷ்யபுத்திரன்)

2. பலரும் முன்பே நிர்ணயிக்கப்பட்ட முடிவுரைகளை மனதில் வைத்துக் கொண்டுதான் மறுமொழியவே ஆரம்பிப்பது போல் தோன்றுகிறது.

3. ஒருவரின் எழுத்தை வைத்து, (கருப்பொருளை விட்டுவிட்டு) தனிமனிதரை குறித்த அபிப்ராயத்தை வெளிப்படுத்துகிறார்கள்.

4. மறுமொழிப் பெட்டியில் பதில் கொடுப்பதை விட சொந்த வலைப்பதிவில் எழுதுவதால், எழுத்துக்கள் கோர்வையாக இருப்பதற்கான வாய்ப்புகள் இருக்கிறது.

5. ஈழ வலைப்பதிவாளர்கள் பெரும்பாலானோர் களத்தில் இறங்கி, தங்களின் இரண்டு செண்டுகளை சொன்னார்கள். இந்தியத் தமிழர்களில் ஒரு சிலரே மௌனம் கலைத்தனர். ஏன் என்பது புரிவது போல் இருந்தாலும், ‘நோநோ’க்களும், ‘நேமில்லை’க்களும், ‘அனானிமஸ்’ திருவாய்மொழிகளும் முகம் கலைக்காதது ஏன் என்று குழப்பமாகவே இருக்கிறது.

6. அசிங்கமான வார்த்தை சொல்லி அழைத்தால், மறுத்துப் பேசுபவர்களும், கிட்டத்தட்ட அதே லெவலுக்கு இறங்குவது நாகரிகமா அல்லது ‘விடாக்கண்டன் – கொடாக்கண்டன்’தனமா என்று மனசுக்குள் பட்டிமன்றம் நடத்தி வருகிறேன்.

7. முகமூடி போட்ட ரியல் முகங்களுக்கும், அமைதி காத்தோரும், இட்லி-வடை போல பெரிய மனுஷத்தனத்தோடு கலந்துகொண்டவர்களை நான்கு வருடம் கழித்து ‘சுட்டி’க்காட்டி உரல் கொடுப்பார்கள்.

8. கும்புடு போட்டு பேச்சு வெட்டியாகாமல், செயல்திட்டமாகவோ, ஒவ்வொருவரின் எண்ண முடிவுரைகளாகவோ இல்லாமல், அங்கும் இங்கும் சிதறலாகவே நின்று விடுகிறது. (இதற்கும் காரணம் ஓரளவு ஊகிக்க முடிகிறது: இந்த மாதிரி ‘resolutions’களுக்கு பின்னூட்டங்களாக சில நக்கல், குத்தல் பதிவுகள் வந்து, தொடர்வதால் என்று நினைக்கிறேன்).

9. என்னதான் ஸ்மைலி, கண்ணடிப்பு போட்டாலும், இணையத்தில் எவர் பதில் பேசினாலும் ‘preconceived notion’ கொண்டே பார்க்கப்படுகிறது.

10. இந்தப் பதிவு, ‘யார் மனதையும் புண்படுத்த அல்ல; புரிந்து கொள்ளவே!’ என்று டிஸ்க்ளெய்மர் போட்டாலும்; இந்த மாதிரி போஸ்ட்களைப் போலவே எந்தப் பயனும் கொடுக்காதது.

தலைப்புக்கு நன்றி : மறுமொழிக் கவியருவி