Daily Archives: ஓகஸ்ட் 23, 2004

பத்துப் பாட்டு

அந்தக்கால பாடல்களின் சரணங்களில் இருந்து ஒரு/சில வரிகள் மட்டும் இங்கே கொடுத்திருக்கிறேன். படத்தின் பெயரின், பாடலையும் உங்களால் கண்டுபிடிக்க முடிகிறதா என்று பாருங்கள். அனைத்துப் பாடல்களும் சிவாஜி நடித்ததில் டி.எம்.எஸ் & சுசீலா பாடிய டூயட்கள்.

1. சரணம் 1: பாதித் தூக்கத்தில் கூந்தலைத் தடவி ரசிப்பதில் இன்பம்

சரணம் 2: கவிஞர் சொன்னது கொஞ்சம்… இனிமேல் காணப்போவது மஞ்சம்

2. கரும்போ

கனியோ

கவிதை சுவையோ

விருந்து கொடுத்தான்

விழுந்தாள் மடியில்

3. சரணம் 1: மீனாளின் குங்குமத்தை நானாள வேண்டுமம்மா!

சரணம் 2: பால் வண்ணம், பழத்தட்டு, பூக்கிண்ணம் மணப்பெண்ணின் தாய் தந்த சீராகக் காண்போமா?

4. அந்தக் கருணைக்கு நான் பரிசு தந்தேன் தொட்டிலின் மேலே

5. டி.எம்.எஸ்.: ஆசையுள்ள மேனியிலும் ஒரு பக்கம் அச்சமுள்ள மான் இனமோ

சுசீலா: நாடு விட்டு நாடு வந்தால் பெண்மை நாணமின்றி போய் விடுமோ

6. என்றும் சிலையான உன் தெய்வம் பேசாதைய்யா…

…காற்றான அவள் வாழ்வு திரும்பாதைய்யா

7. காலத்தை நில் என்று சொன்ன மாயம் என்ன

கண்பட்டு கலந்துகொண்ட வேகம் என்ன

8. முற்றாத இரவொன்றில் நான் வாட

முடியாத கதை ஒன்று நீ பேச

9. தாயாரின் சீதனமும்

தம்பிமார் பெரும்பொருளும்

மாமியார் வீடு வந்தால் போதுமா?

மானாதி மானங்களைக் காக்குமா?

10. அன்னை என்னும் கடல் தந்தது

தந்தை என்னும் நிழல் கொண்டது…

…நன்றி என்னும் குணம் கொண்டது

நன்மை செய்யும் மனம் கொண்டது