Monthly Archives: ஜூலை 2004

Mutation in Banana Fruit with Pomegranate 

Mutation in Banana Fruit with Pomegranate Posted by Hello

Child Bear or Chilled Beer – It is Bihar Folks 

Child Bear or Chilled Beer – It is Bihar Folks Posted by Hello

Kudaikkul Mazhai Poster in Chennai by Eraa Parthib…

Kudaikkul Mazhai Poster in Chennai by Eraa Parthiban Posted by Hello

ERDAL Shoes 

ERDAL Shoes Posted by Hello

MAP of South Africa…. aargh South Korea 

MAP of South Africa…. aargh South Korea Posted by Hello

இருவர்

இளம் தம்பதிகளுக்காக, கனடாவில் இருந்து வெளிவரும் 2: The Magazine for Couples என்னும் புத்தம்புது பத்திரிகையில் வெளிவந்த மேட்டரின் உல்டா இது:

மணமானவர்களை எவ்வாறு பிரிக்கலாம் என்று நக்கலடித்திருக்கிறார்கள். நம்ம ஊராக இருந்தால் என்ன பெயர் கொடுத்திருப்பார்கள்?

1. The Honeymoaners – தமிழக காங்கிரஸ் கட்சியினர்

2. The Trumps – துக்ளக் சோ-வினர்

3. The Mullets – ??? (தெரியவில்லை)

4. The Re-Gifters – ரீ-சைக்கிளிக்கள்

5. The Swingers – பா.ம.க.-வினர்

6. The Pet Shop Bores – தியாகராஜ பாகவதர் ரசிகர் மன்றம்

7. The Clones – கமல்ஹாசன் ரசிகர் மன்றம்

8. The Hard Cells – ரஜினிகாந்த் ரசிகர் மன்றம்

9. The Zealots – தங்கர் பச்சான் ரசிகர் மன்றம்

10. The Conspicuous Consummators – ஷங்கரின் ‘பாய்ஸ்’

11. The Joined-at-the-Hipsters – ‘ஆய்த எழுத்து’க்காரர்கள்

12. The Breeders – திமுக-வினர்

13. The Brunchosauruses – ??? (தெரியவில்லை)

14. The Better Haves – சசிகலா பரிவாரம்

15. The Dr. Philistines – அரட்டை அரங்கவாசிகள்

16. The Crown Moulders – விஜய டி ராஜேந்திரர்கள்

17. The Brewsome Twosome – ஜனநாயகத்தில் வாக்காளர்கள்.

18. The Silent Partners – தற்போதைய காங்-கம்யூ ஆட்சியினர்

19. The Trophy Couple – நோ காமெண்ட்ஸ் 😛

ரெண்டு வரி நோட்: இணையக் குழுக்களை எப்படி வகைப்படுத்தலாம்?

கருடா சௌக்கியமா – ஆனந்த் சங்கரன்

ஒரு பெரிய பணக்காரன். அவனுக்கு படு சுட்டியாக ஒரு பிள்ளை. எல்லாவற்றையும் தூக்கியெரிவது, கிழே கொட்டுவது அவன் வேலை. தன் மகனின் பிறந்தநாளுக்கு அவன் ஒரு வைர மோதிரத்தை போட்டு அழகு பார்த்தான்.

ஒரு நாள் அந்த பிள்ளை விளையாடும் பொழுது அந்த வைரக்கல் கீழே விழுந்துவிட்டது. அதைக் கண்ட அந்த பொடியன் அதை எடுத்து வாசலில் எரிந்தான். பணக்காரன் வீடாயிற்றே வாசலில் அழகிய தோட்டமும் புற்களும் இருந்தன. இந்த வைரக்கல் அங்கே இருந்த கூழாங்கற்களோடு சேர்ந்து விழுந்து விட்டது.

விழுந்தது வைரக்கல்லாக இருந்தாலும் அது விழுந்த இடம் சாதாரண கூழாங்கற்கள் இருக்கும் இடம். அப்போது அங்கே வந்த அந்த பணக்காரணின் நாய் அருகில் இருந்த பூந்தொட்டியில் காலை தூக்கி தன் வேலையை காட்டியது. அது அருகில் இருந்த அந்த வைரக்கல்லின் மீதுபட்டது.

அப்பொழுது அந்த வைரக்கல் சே ! நான் எவ்வளவு உசத்தி, என்னை வாங்க பணக்காரர்கள் வரிசையில் நிற்கிறார்கள் இருந்தாலும் இப்படி ஆகிவிட்டதே என்று வருந்தியது. அப்பொழுது அருகே இருந்த கூழாங்கல், அட என்ன இப்படி சொல்கிறாய் நீயும் கல், நானும் கல் இங்கு எல்லாமே ஒன்றுதான் என்றது. வைரக்கலுக்கு ஒன்றும் புரியவில்லை, எப்படி தானும் இந்த கூழாங்கல்லும் ஒன்றாக ஆனோம் என்று யோசித்த படி இருந்தது.

அப்பொழுது அங்கே வந்த தோட்டக்காரன் வைரக்கல்லை பார்த்து, ‘அட இந்த கண்ணாடி கல் நல்லாயிருக்கே’ என்று வியந்து அழகு பார்த்தான்.

வைரக்கல்லிற்கு மேலும் வருந்தமாக போயிற்று. என்னது தன் நிலமை இப்படி ஆகிவிட்டதே என்று வருந்தியது.

நல்ல வேளையாக அப்பொழுது வீட்டு எஜமானன் அங்கே வர, தோட்டக்காரன் அந்தக் கல்லை அவரிடம் கொடுத்தான். எஜமானன் அதைப் பார்த்தது நல்லபடியாக வைரக்கல் கிடைத்துவிட்டது. இதை மறுபடியும் தங்க மோதிரத்தில் பதித்து தான் அணிந்து கொள்ள வேண்டும் நினைத்துக்கொண்டான்.

அப்பொழுது வானொலியில் கண்ணதாசன் எழுதிய ‘பரமசிவன் கழுத்திலிருந்து பாம்பு கேட்டது..’ பாடல் ஒலித்தது.



குழந்தைகளுக்கான கதை எழுத ஆனந்திடம் திறமை இருக்கிறது என்று எனக்குத் தோன்றுகிறது.

Purloining

நன்றி: ஆறாம்திணை.காம்



ஹி..ஹி.. படம் வரைவது எப்படி?கார்ட்டூனிஸ்ட் சுதர்ஸன்:

“சித்திரக்கலை பயில்வது சுலபம். வித்தையை எப்படியும் கற்றே தீருவேன் என்று ஆவல் அவசியம். சித்திரம் வரைய முற்படுவோர்களுக்கு மனித உருவங்களை முதன் முதலில் வரையும் போது கூச்சம், பயம் ஏற்படும். உருவம் சரியாக அமையுமோ அமையாதோ என்ற அச்சமே அது. அச்சத்தை அகற்றிடல் வேண்டும்.

ஜனரஞ்சகமான பத்திரிகைகளில் பற் பலவிதமான படங்கள் வாசகர் கவனத்தைக் கவரும். கதை படங்கள் (Illustration), கேலி சித்திரம் (Cartoon) தமாஷ் படம் (Humur Joke) ஹாஸ்யத் துணுக்குகள் (Funny Picture) முதலியன இருக்கும். ஒவ்வொன்றுக்கும் தனித் தன்மை உண்டு.

பத்திரிகைகளில் வரும் தமாஷ் துணுக்குகளைப் பல பகுதிகளாகப் பிரிக்கலாம். 1. சிலேடை ஹாஸ்யம், 2. சீஸன் ஜோக். 3. செய்தி சிரிப்பு, 4. சிரஞ்சீவித் துணக்கு, 5. சினிமா உலகம். இப்படி எத்தனையோ.”



கவிஞர் விக்கிரமாதித்யன்சந்திப்பு: சந்திரா

  • ‘பாரதி, பாரதிதாசனை மீறிய பிரமிள்’ என்று சமீபத்தில் நீங்க எழுதியிருக்கீங்க. பிரமிள் இவர்களை விடவும் பெரிய கவிஞனா?

  • நவீன கவிதைகள் எல்லாம் புரியாமல் எழுதப்படுகின்றன என்ற குற்றச்சாட்டு இருக்கிறதே?

  • நவீன கவிஞர்கள் அக உலகத்தைப் பற்றித்தான் அதிகமாக எழுதுகிறார்கள் என்ற குற்றச்சாட்டு இருக்கிறதே?

  • ‘வானம்பாடி’ கவிதைகளினால் கவிதை உலகத்திற்கு எந்த வளர்ச்சியுமே கிடையாதா?

  • இங்கு வாழ்வியல் சார்ந்து பேசுகின்ற கவிஞர்கள் மேற்கத்திய கவிதை போன்ற ஒரு அறிவியல் சார்ந்த தத்துவார்த்த விசாரணையில் ஈடுபடக்கூடியவர்களாகயில்லையே ஏன்?

  • ஈழத்துக் கவிதைகளிலிருக்கும் வெவ்வேறு தளங்கள் தமிழ்க் கவிதைகளில் இல்லை என்று சொல்கிறார்களே? அதைப் பற்றி நீங்க என்ன சொல்றீங்க?

  • பெண் கவிஞர்கள் அதிகமாக இல்லாததற்குக் காரணம், அவர்களுக்குக் கவிதை வாசிப்பு இல்லாத காரணமா?



    உடுமலை நாராயண கவிராயர்தெ.மதுசூதனன்:

    “1933 -இல் சிதம்பரம் ஜெயராமன் கதாநாயகனாக நடித்த ‘கிருஷ்ணலீலை’ என்ற படத்திற்கு வசனம், பாடல்கள் எழுதுவதுடன் உடுமலையாரின் பயணம் தொடங்குகிறது. பெரியார் கொள்கைகளில் பிடிப்புள்ளவராக இருந்தார். இதனால் தனது கடைசி நாள் வரை திராவிட இயக்கத்தின் தீவிர பிரச்சாரகராகத் திகழ்ந்தார். ‘குடியரசு’, ‘திராவிட நாடு’ பத்திரிகைகளில் இவரது தனிப்பாடல்கள் வெளியிடப்பட்டன. திராவிட இயக்க மாநாடுகள் உடுமலையாரின் பாடலுடன்தான் துவங்கப்பட்டன.

    அண்ணாதுரை வசனம் எழுதிய ‘வேலைக்காரி’ (1951) படத்தில் ‘ஓரிடந்தினிலே’ கருணாநிதியின் பராசக்தி (1952) ‘கா… கா.. கா..’ முதலிய புகழ் பெற்ற பாடல்களை எழுதினார். ‘நல்லதம்பி’யில் (1949) வரும் இந்திர சபா கூத்தும், கிந்தனார் காலட்சேபமும் தமிழ்த் திரையுலகின் மறக்க முடியாத படைப்புகள். இவரது பகுத்தறிவு, கடவுள் மறுப்பு கருத்தாக்கம் ஓங்கி நிற்பது ‘சொர்க்க வாசலில்’ (1954) தான்.”

    ‘காட்டையும் மேட்டையும் உழுகாமப் போனா

    கஞ்சிக்கு வருமே டேஞ்சரு

    கட்டுப் பாட்டுக்குள் அடங்காதவர்கள்

    கட்சியில் -ருப்பது டேஞ்சரு

    ஓட்டுப் போடத் தெரியாவிட்டால்

    நாட்டுக் கதனால் டேஞ்சரு

    உலகம் போற்றும் உத்தமரானால்

    உயிருக்கே ரொம்ப டேஞ்சரு

    தன்னல மற்ற தியாகிகளுக்குச்

    சர்க்கார் பதவி டேஞ்சரு

    சர்க்கார் பதவி கொண்டவனுக்கே

    தாட்சண்யத்தால் டேஞ்சரு

    அண்ணன் தம்பியைப் பகைத்தவனுக்கு

    அடுத்தவராலே டேஞ்சரு

    அறிவில்லாதவன் எவனோ அவனுக்கு

    அவனே வெரிவெரி டேஞ்சரு’

    – ‘மாதர் குல மாணிக்கம்‘ (1956)

  • படித்ததும் நினைத்ததும்

    1. அஜீவன்: “என்னிடம் (2000) இரண்டாயிரத்துக்கு மேல் தமிழ் புத்தகங்கள் இருக்கின்றன. மு.வரதராசன், கல்கி, திருக்குறள், பாரதியார் கவிதைகள்……………………..” என்று அடுக்கிக் கொண்டே போனார். எனக்கு தலை கிறு கிறுத்தது. சோவென பனிமழை கொட்டி உடலெல்லாம் நனைந்து நடுங்குவது போன்ற உணர்வு. (வலைப்பதிவு வைத்திருக்கிறாரா என்று அஜீவனிடம் விசாரிக்க வேண்டும்.)

    2. ஞானதேவன்: “உறவினர்களை அங்கேயே விட்டு, தனியே குளிக்க சென்றேன். தண்ணீர் பெருக்கெடுத்து ஓடினாலும், எனக்கு இடுப்பளவு மட்டுமே இருந்தது. சிறிது நேரத்தில் எங்கள் மனம் மாறியது, கம்பியை தாண்டி செல்லலாம் என்று முடிவெடுத்தோம். யாரும் அறியாமல், நீருக்குள் மூழ்கி, உடலை வளைத்து கம்பிக்கு நடுவில் புகுந்து மறுபக்கம் வந்தோம். ஏதோ சுதந்திரமே கிடைத்து விட்ட சந்தோசம்.” (நீமோ மாதிரி மாட்டிக் கொண்டிருக்கிறார்… மெர்லின் உதவியுடன் தப்பித்தாரா?)

    3. ஜூனியர் விகடன்:: ‘காட் ஃபாதர்’ என்ற ஒரு நாவலில் ‘வெற்றியின் மூலமாக நண்பர்கள் வருவார்கள். மிகப் பெரிய வெற்றியின் மூலமாக நிறைய எதிரிகள் உருவாவார்கள்’ என்று இடம்பிடித்திருக்கும் வரிகளைத்தான் இப்போது நினைத்துக்கொள்கிறேன். மிகப் பெரிய வெற்றியின் பலனாக எனக்கு இப்படியரு பிரச்னை வந்திருக்கிறது. – தங்கர்பச்சான் (எனக்கு எதிரிகள் உருவாகியிருக்கிறார்களா? நண்பர்கள் வந்திருக்கிறார்களா? நெனப்புதாண்டா பொழப்பக் கெடுக்குது 🙂

    4. ஹாய் மதன்: இரா. வெங்கடேசுவரன், திருமலைராயபுரம்

    ஒருவருக்கு முக்கியத்துவம் தருவது பிடிக்காவிட்டால் ‘அவருக்கென்ன கொம்பா முளைச்சிருக்கு?’ என்று கேட்கிறோமே.. இதில் கொம்புக்கு என்ன சம்பந்தம்? (மதனுக்குக் கொம்பு முளைக்கவில்லை என்கிறார்!?)

    5. இது சிறகுகளின் நேரம் – கவிக்கோ அப்துல் ரகுமான்:

    ‘வணக்கம்’ என்பதற்குத் ‘துணிவு’ என்று எழுதினாலே போதும், எதுகை ஆகிவிடும். ஆனால், அழகாக இருக்காது.

    கவிதை என்பது ஒர் அழகியல் அனுபவம். அரங்கத்தில் பாட வந்திருப்பவர்கள் பெரிய புலவர்கள். தாமோ “நீர் எழுத்துக் கவி எழுதுபவன்” என்கிறார் கலைஞர். நீர் மேல் எழுதும் எழுத்து உடனே அழிந்துவிடும். அதைப்போல் அற்பமானது தம் கவிதை என்கிறார் கலைஞர்.

    “நீர் எழுத்து” என்பதில் வேறொரு பொருளும் தொனிக்கிறது. பூமியில் விளையும் தாவரங்கள் எல்லாம் நீர் எழுதும் எழுத்துத்தான். இது அவைக்கு அடங்குவது போல் காட்டி அவையை அடக்குதல்.

    (புலவருக்கும் கவிஞருக்கும் இவர் சொல்லும் வித்தியாசம் சிரிப்பை வரவைக்கிறது.)

    6. நிழல்கள் – பிரசன்னா: நிஜ இலக்கியவாதிகள் சண்டையிட்ட மறுநாளே பூங்கொத்துக் கொடுத்துக்கொள்வர் என்பது என் அசைக்கமுடியாத நம்பிக்கை. (இன்னொரு அ.மு.ந. படித்து விட்டீர்களா?)

    7. சந்தோஷ் குரு: “சன் டி.வி யோ இந்த நேரத்தில் தான் கும்பகோணம் நகராட்சி சுடுகாட்டினை சரியாக பராமரிக்கவில்லை, நகராட்சி மந்தமாக இருக்கிறது என்று கூறி இங்கேயும் கூட ‘அரசியல்’ செய்துகொண்டு இருக்கிறது.” Publicity, publicity, PUBLICITY is the greatest moral factor and force in our public life என்று கூறினாராம் பத்திரிக்கையாளர்களின் குரு என மதிக்கப்படும் ஜோஸஃப் புலிட்சர், சரியாத்தான் சொன்னார்.”

    (கும்பகோணம் தீ விபத்தின் மறுபக்கத்தை இன்னும் விரிவாக அனைவரும் எழுதவேண்டும். சோனியா, பிரியங்கா, ராஜீவ் என்று பெயர் வைத்த குழந்தைகளை வைத்து கலைஞர் அறிக்கை விடுவதும், ஜெயலலிதா மூக்கை மூடிக் கொண்டதை க்ளோஸப் கொடுக்கும் cheap politics-உம், ஆய்வுக்காக (inspection) தமிழ் மீடியம் நடத்தப்படும் நிர்ப்பந்தங்களும் அலசப்படவேண்டும்.)

    8. Ananova: இரண்டு இதயம் வேண்டும் என்று எழுதிய கவிஞர் பொறாமைப்படும்படி, இரு இதயங்களுடன் குழந்தை பிறந்திருக்கிறது. அடுத்து இதயமே இல்லாமல் யாராவது பிறப்பார்களா?

    ஃபோர் ஸ்டுண்ட்ஸ்



    இசை: ஜஸ்ஸி கிஃப்ட்

    லஜ்ஜாவதியே

    – ஜஸ்ஸி கிஃப்ட் – 2.75 / 4

    ‘ஞாபகம் வருதே’வை ஜாலியாகப் பாடினால் எப்படி இருக்கும்? இளமைக் காதலை சந்தோஷமாக உருகுகிறார். அடுத்த வாரம் நடக்கும் டெமொக்ராடிக் மாநாட்டினால், போக்குவரத்தில் மாட்டிக்கொண்டால், கஷ்டப்படாமல் தாளம் போட்டு ட்ராஃபிக்கையும் என்சாய் செய்ய ஒரு பாடல். ‘லஜ்ஜாவதியே’ என்றால் என்னங்க அர்த்தம்?

    உந்தன் விழிமுனை

    – ஜஸ்ஸி கிஃப்ட், கங்கா – 1.5 / 4

    ஜஸ்ஸி கிஃப்ட்-தான் அடுத்த ஏ.ஆர்.ரெஹ்மான் என்பது எல்லாம் டூ மச். ஆனால், பாடலை மீண்டும் மீண்டும் கேட்க வைக்கும் அதிர வைக்காத இசை. அத்னான் சாமியின் கொஞ்சல், உதித் நாராயண் குரலில் தெரியும் குழந்தைத்தனம், மனோவின் கணீர் உச்சரிப்பு என்று வித்தியாசமான கலவை.

    பூவாலே இந்த

    – ஹரீஷ் ராகவேந்திரா – 1.75 / 4

    வீட்டில் விளக்கையெல்லாம் அணைத்துவிட்டு, பால்கனியில் கையில் கோப்பையுடன், மூன்றாம் பிறையை தரிசனம் செய்துகொண்டே, வெறுந்தரையில் உட்கார்ந்து கொண்டு கேட்க, jazzy ஹரிஷ் ராகவேந்திரா பாடல்.

    அன்னக்கிளி – 1 – பிரசன்னா – 3 / 4

    அன்னக்கிளி – 2 – ஜஸ்ஸி கிஃப்ட் – 2.5 / 4

    பிரசன்னாவின் ‘அன்னக்கிளி’, ஜஸ்ஸியை விட சாதாரணமாக இருந்தாலும் பெட்டராக இருக்கிறது. மற்றொரு எளிமையான அசத்தல் பாடல். ‘ஜெயச்சந்திரன் உங்கள் சாய்ஸி’ல் அனைவரும் விரும்பிக் கேட்கும் பாடலாக ‘அன்னக்கிளி’ நிச்சயம் இருக்கும்.

    ஃபோர் தி பீப்பிள்

    – உன்னி மேனன் – 1 / 4

    இளைஞர்கள் அமைக்கும் இயக்கத்தின் தீம் சாங். உருப்படியான ஆங்கிலப் பாடலாக அமைத்திருக்கலாம். அல்லது, வழக்கம்போல் ஒரு எழுச்சிப் பாடல் கொடுத்திருக்கலாம். இரண்டுங்கெட்டான்.

    Four Students பாப் பாடல்கள்தான் மலையாளர்களின் தாரக மந்திரமாக இருக்கிறது என்கிறார்கள். தமிழில் அவ்வளவு பெரிய ஹிட் ஆகாவிட்டாலும், ஜஸ்ஸி கிஃப்ட் குரலில் பல மயக்கும் பாடல்கள் வரப்போவது நிச்சயம்.

    பாடல்களைக் கேட்க: RAAGA – Four Students – Tamil Movie Songs

    எம்பி3: ((::Mohan’s Music/Mp3 Page – Latest Mp3 – 4 Students::))

    குமரகுரு: teakada: Lajjavathiye enna asathura rathiye

    Song of the Day: LajjavathiyE from 4 Students

    செவ்வி: Music India OnLine – Jassie Gift, Music Director (4 The People) 2004