Monthly Archives: ஜூலை 2004

To The Moss

How you came to know all that you are sure of

how you discovered the darkness of green

uncurling into the daylight out of

its origins unsounded as your own

how you leraned to fashion shapes of water

into softness itself that stayed in place

and kept some secret of caves wherever

you were but with such welcome seemed to rise

that in time you became as some believe

a model for the cheek and then the breast

the wren felt she knew most of that before

there were breasts or cheeks and she made out of

living bits of you the globe of her nest

as though that was what you had grown there for

WS Merwin

(வெளியான இதழ்: தி நியு யார்க்கர்)

என்னுடைய ‘அ-மொழியாக்கம்’:

ப்ச்ச்…

——–

அடர்பாசியின் கரும் உள்ளிருப்பு

கற்றை வெயிலின் பிறப்பிடம்

சுழிநதிக்கு சலசலத்தல்

கூழாங்கல் பிஞ்சுமனசு

காற்றாடி வானத்து உச்சம்

காலவெள்ளத்தில் நம்பகம்

சிட்டுக்குருவி றெக்கையெழுப்பி

மார்தட்டி கீக்கீ இரையும்

விட்டுசென்ற உலகத்தைக்

கடக்கும் இறகுத்துளிகளை

அலட்டாத கர்வத்தோடு

நிச்சயமாக கொடுப்பது எப்படி

பச்சையாக சொல்லு

-பாஸ்டன் பாலாஜி

சன் டிவி: கல்யாண மாலை

Yahoo! Groups – RaayarKaapiKlub: போன வார நிகழ்ச்சி ஒன்றில் பெண்ணின் தாயார் ‘பையன் சூட்டிகையாக இருக்க வேண்டும். சுறுசுறுப்பாக வேலை செய்ய வேண்டும்.” என்றார். தொடர்ந்த அவரின் மகள், ‘எனக்கு வரப் போகிறவர் துறுதுறுவென்று புத்தியாலியாக அமைய ஆசை’ என்று தொடர்ந்தார். கேட்ட எனக்கு ‘பரவாயில்லை… காலம் மாறிப் போச்சு. பெண் வீட்டுவேலை செய்வாளா என்னும் காலம் போய், பையன் பம்பரமாய் செயல்படுவானா என்று கேட்கும் காலம் வந்தது நல்லதுக்கே!’ என்று நினைத்தேன்.

இன்னொரு குடும்பத்தில், ‘எங்களுக்கு யாராக இருந்தாலும் ஒகே. நாங்கள் வடமா… பிரஹ்ச்சரணம், வாத்திமா என்றாலும் எங்களுக்குப் பரவாயில்லை’ என்று தன் பரந்த மனப்பானமையை சொன்னார்.

தமிழகத்தில் இல்லாமல், வெளிநாட்டில் உட்கார்ந்து கொண்டு, மக்கள் மாறியிருக்கிறார்களா, காதல் திருமணம் பெருகியிருக்கிறதா, டேட்டிங் கலாசாரம் கோலோச்சுகிறதா, மதப்பிரிவினைகள் நீங்கி விடுமா, சாதி விட்டு சாதி திருமணம் அதிகரிக்கிறதா என்பதை கணக்குப் போட பயனுள்ள நிகழ்ச்சி.

நடுவே வரும் காமெடி சொற்பொழிவு இன்னும் அற்புதம். போன வாரம் வினுச் சக்கரவர்த்தி சினிமா நடிகர்களின் தியாகங்களைப் புட்டுப் புட்டு வைத்தார். ரஜினிக்குப் பின் ராகவேந்திரா பக்தி அதிகமானது ஒத்துக்கொள்ளவேண்டிய விஷயம். எம்ஜிஆருக்கு முன் யாருமே நல்லாட்சி தரவில்லை என்பதும், சினிமாவில் சம்பந்தப்பட்டவர்களே இனி அரசாள்வார்கள் என்ற பிரகடனையும், சிரிப்பை வரவழைத்தது.

இங்குள்ள என்.ஆர்.ஐ.க்களுக்கு திரிசங்கு சொர்க்கம் போன்ற நிலை. அமெரிக்கர்களை டேட்டிங் செய்ய வெள்ளியிரவு, சனியிரவு பார் பாராக ஏறி இறங்கினாலும் க்ளிக் ஆகாது. இந்தியாவில் அரேஞ்ட் மாரேஜ் செய்துகொள்ளவும் மனம் விரும்பாது. கண்டதும் காதலிலும் நம்பிக்கை லேது. நண்பியிடமும் காதலை சொல்வதில் தயக்கம். காதலியிடம் கல்யாணம் செய்து கொள்ள சம்மதம் கேட்பதிலும் தயக்கம்.

ரொம்பக் கஷ்டப்படறாங்க…

-பாஸ்டன் பாலாஜி

காதலன்

ஏதோப் பெருசுங்க அந்தக் காலப் படத்தை ரசிச்சு சொல்றீங்க. நான் எங்க காலப் பட பெருமையை சிலாகிக்கப் போகிறேன்.

இன்று மதியம் சன் டிவியில் என்ன படம் என்று சும்மா திருப்பிப் பார்க்க, ‘காதலன்’ வந்தார். இன்றும் ஆட்டம் போட வைக்கும் பாடல்கள், பாலகுமாரனின் வசனம் என்று கில்லி வேகத்தில் தூள் கிளப்பியிருக்கிறார் சங்கர். அங்கு ஆரம்பித்த காதலியின் ஹூக்கு சேகரிப்பது, ‘ஜீன்ஸ்’-இல் பபுள்-கம் உறை வரை வளர்ந்திருக்கிறது.

சின்ன வயது நக்மா, ‘சங்கமம்’ விந்தியா போல் சாணி மிதிக்காமல் நடனம் ஆடுகிறார். ரெஹ்மானின் ஜோரான பிண்ணனியில், பிரபுதேவாவின் எகிறித் தள்ளும் பரதமும், அந்தக் காலால் கோலம் பாடும் காட்சியமைப்பும், மதிய சியஸ்டாவை கெடுத்து விட்டது. இவ்வளவு சொல்லிவிட்டு, ‘ஞாயிறு என்பது…’ பாடும் எஸ்.பி.பி.யை சொல்லாமல் விட்டாமல் அடுத்த வேளையில் ‘அப்பு’ போன்ற படம்தான் கிடைக்கும். என்ன அருமையா நடிக்கிறார்! அந்தக் கால பாகவதர் போல் பாடுவதுடன் எஸ்.பி.பி. ஹீரோவாக ஆகி இருந்தால், கமல், சிவாஜிக்கு எல்லாம் சரியான சவாலாக இருந்திருப்பார்.

பாலகுமாரன் வேறு எந்தப் படங்களுக்கு வசனம் எழுதியிருக்கார்? ‘காதலனில்’ இருந்து ஜெம்களில், என் நினைவில் இருந்து சில….

* கோபமோ, ஆத்திரமோ, ஆசையோ, காதலோ; அஞ்சு நிமிஷம் தள்ளிப் போடு; அதற்கப்புறமும் அதே எண்ணமும் வேகமும் இருக்கிறதா என்று பார்.

* மல்லி ‘ரகுவரன்’, காகாலால் க்ரிஷ் கர்னாடி’டம், “இப்ப நீதான் நான் சொல்றபடி கேக்கணும். நான் சொல்றதை நம்பறதைத் தவிர உனக்கு வேற வழியில்லை… நான் உனக்குக் கடவுள் மாதிரி. எனக்கு இன்னும் பணம் கொடு”.

* எஸ்பிபி: ‘எந்தப் பொண்ணைடா காதலிக்கறே? எதிர்த்த வீடா? பக்கத்து வீடா? நம்ம காலனியா?”

பிரபுதேவா: ‘காகர்லால்’

எஸ்பிபி: ‘காகர்லால் வீட்டுலே வேலை பார்க்கிறாளா? காகர்லால் வீட்டுக்குப் பக்கத்திலே இருக்காளா? காகர்லால் வீட்டுலே வேலை பார்க்கறவங்க பொண்ணா? என்னடா எதைக் கேட்டாலும் இல்லேங்கேறே… காகர்லால் பொண்ணையா காதலிக்கிறே!”

* காதல் எல்லா சக்தியையும் கொடுக்கும். காதல் எதை சாதிக்கவும் வெறியைத் தரும். காதலால் முடியாதது எதுவுமே கிடையாது. காதலிக்காக எதை வேண்டுமானலும் செய்து காட்டத் தயாராக இருக்கணும்.

* இந்த மாதிரி சேஷ்டைகளில் காட்டும் புத்திசாலித்தனத்தைப் படிப்பில் காட்டினால், எங்கேயோப் போயிடுவடா நீ

* எம்.ல்.ஏ.க்களை விலைக்கு வாங்குவதால் செலவுதான் ஜாஸ்தி. நமக்கு என்ன லாபம்? வெடி வெடிக்கக் கம்மி பணம்தான் ஆகும். அதே சமயம் செத்தவங்களுக்காகக் காசியில் போய் பிண்டம் வைக்கவும் நான் இருப்பேன்.

* என்னை உனக்கு அவ்வளவு பிடுக்குமா? ஒரு நாளில் இவ்வளவு செஞ்சு அசத்தறியே… காட முட்டை, கிழங்குக் கறி, புடைவைத் தூளி, நிலக்கடலை ரோஸ்ட் என்று கேட்கக் கேட்கக் கொண்டு வந்து கொடுக்கிறயே!

மிஸ்ஸியம்மா-வில் இந்த மாதிரி தத்துவ டயலாக் கீதா சொல்லுங்க.

-பாஸ்டன் பாலாஜி

Yahoo! Groups : RaayarKaapiKlub Messages

இவர்களுக்குள் என்ன ஒற்றுமை???



Shania Twain 

Shania Twain Posted by Hello

Laura Bush 

Laura Bush Posted by Hello

Andre 3000  

Andre 3000
 Posted by Hello

வீக் எண்டே ரிலாக்ஸ் ப்ளீஸ்

புதிய ஆப்பிரிக்க வரைபடத்துக்கு நன்றி: MapZones.com : South Korea Map

(அதை எனக்குக் சுட்டியதற்கு) நன்றி: Backspace – Gigabytes Of Fun For Everyone

இன்னும் கொஞ்சம் சுட்ட படங்கள்: bioscope

So… many Cats…  

So… many Cats…  Posted by Hello

Anybody loves Ice cream in winter… Including me….

Anybody loves Ice cream in winter… Including me… but this is a Monkey Posted by Hello