Monthly Archives: ஜூலை 2004

காலமும் கவிதையும் – மனுஷ்யபுத்திரன்

1: இலக்கியமும் சமூகமும்

2: புதிதும் புதிதைப் போன்றதும்

3: ஒரு கவிதை ஏன் புரிகிறது, அல்லது புரியாமல் போகிறது?

4: எதார்த்த உலகும் கவித்துவ எதார்த்தமும்

5: தமிழில் அரசியல் கவிதைகள்

6: ஆத்மாநாம்

7: ஆத்மாநாமின் நகர்சார் படிமங்கள்

8: எப்போதும் வாழும் கோடை

9: சுகுமாரன்-2

10: கரிசலின் மணமும் வெக்கையும் – மு. சுயம்புலிங்கம் கவிதைகள்

தீராநதி – குமுதம்.காம்

சுஜாதா நேர்காணல்:

சிறுவயதில் நான் மாங்காய் அடித்தது, பள்ளிக்கூடம் ‘கட்’ அடித்தது போன்ற தகவல்கள் வாசகர்களுக்கு எந்த விதத்திலும் தேவையற்றவை என்றே கருதுகிறேன்.

பெரும்பாலான கதைகள் இதுபோல் பத்திரிகைகளின் அவசரத்துக்காக எழுதியவைதான். இதனால் கதையின் தரம் பாதிக்கப்பட்டிருக்கலாம். ஆனால், சில நேரங்களில் இதனாலேயே அது நல்ல கதையாக அமைந்து விடவும் வாய்ப்புகள் உண்டு. ‘அவசரம் இல்லை, எப்போது வேண்டுமானாலும் கொடுங்கள்’ என்றால் தள்ளிப் போட்டுக் கொண்டே வந்து கடைசியில் எழுதாமலேயே விட்டுவிடுவேன். எனவே, எனக்கு அவசரம் தேவையாகத்தான் இருக்கிறது. இந்த விஷயத்தில் புதுமைப்பித்தனை என்னுடைய முன்னோடி என்று சொல்லலாம். அவருக்கு ஒரு கை போதுமானதாக இருக்கவில்லை. இரண்டு கைகளும் தேவைப்பட்டிருக்கின்றன. அவருடைய அவசரத்தைப் பார்க்கும்போது, அவருடைய குறைந்த வாழ்நாளை அவர் முன் உணர்ந்துவிட்டார் என்றுதான் தோன்றுகிறது. ‘சித்தி’ குறுநாவலில் அந்த அவசரம் தெரியும். குறுநாவலின் வடிவம் அவருக்குப் பிடிபிடவில்லை. ஆனால், அதற்காகக் காத்திருக்க அவகாசம் இல்லை. கைவரும் அளவுக்கு எழுத வேண்டிய கட்டாயம்.

‘‘கதை எப்படி இருக்கிறது என்பதை அடுத்த வாரம் வாசகர்கள் கடிதத்தில் இருந்து தெரிந்து கொள்வேன்” என்பார். அவ்வளவு நம்பிக்கை. நானும் அந்த நம்பிக்கையை எப்போதும் தவறாகப் பயன்படுத்தியதில்லை. ஏனெனில், அவரைவிட என் கதைகள் மீது எனக்குதான் பொறுப்புகள் அதிகமாக இருக்கின்றன.

சாம்ரசட் மாம், டபிள்யு டபிள்யு ஜேக்கப்ஸ், டி.ஹெச்.லாரன்ஸ், ஜேம்ஸ் ஜாய்ஸ், அப்புறம் சில அமெரிக்க எழுத்தாளர்கள். முக்கியமாக ஜான் அப்டைக். மற்றபடி அனேகமாக எல்லா எழுத்தாளர்களது முதல் நாவலையும் படித்து விடுவேன். விளாதிமிர் நபக்கோவுடைய, ‘லோலிதா’ நாவலின் பெரிய பாதிப்புகள் என் எழுத்துகளில் உண்டு. கிரேட் பிராட்பெரி, ஒ.ஹென்றி, செகாவ், மாப்பஸான், கேதரின் மான்ஸ் பீல்ட் இவர்களுடைய நடைகளும் என்னைப் பாதித்தன.

தீவிர வாசகர்கள் பார்த்துவிட்டு சிறியதாக புன்னகைத்துவிட்டுப் போய்விடுவார்கள். அல்லது கை கொடுத்து விட்டுப் போவார்கள். அவ்வளவுதான்; நீயும் பெரிய மனிதன், நானும் பெரிய மனிதன் என்பது மாதிரி. ஆனால் பெரும்பாலும் தொந்தரவுதான். கிட்டத்தட்ட ஒரு சினிமா நடிகனுக்கு உண்டான அளவு தொந்தரவு. எப்போது வேண்டுமானாலும் வீட்டுக்கு வருவார்கள். சும்மா பார்த்துவிட்டுப் போகலாம் என்று வந்தோம் என்பார்கள்.

அதற்கு பின்னால் உள்ள காரணங்கள் என்ன என்பதும் தெரிந்தது. நான் அதனைப் பொருட்படுத்த வேண்டியதில்லை என்றுதான் நினைக்கிறேன். பதில் எழுதினால் அதற்கு ஒரு மறுப்பு வரும். அப்புறம் மறுப்புக்கு மறுப்பு வரும். அப்படியே போய்க்கொண்டே இருக்கும்.

இலக்கியத் தரமாக எழுதும் ஒருவனால் வெகுஜன வாசகர்கள் விரும்புவதுபோல் எழுத முடியாது. முடியாது என்பதைவிட கூடாது என்று அவர்கள் கருதுகிறார்கள். அப்படிச் செய்வது ஆலயப் பிரவேசம் மாதிரி ஒரு பெரிய மீறல் என்று நினைக்கிறார்கள்.

நவீனத்துவம், பின்நவீனத்துவம், அமைப்பியல்வாதம் போன்ற பல்வேறு விஷயங்கள் தங்களுடைய பண்டிதத் தன்மையைக் காட்டிக்கொள்ளும் அளவிலேயே முன்வைக்கப்பட்டுள்ளன. அவற்றைச் சரியாக விளக்குவதற்கான முயற்சிகள் நடக்கவில்லை.

என்னுடைய தனிப்பட்ட ‘பர்சனாலிட்டி’ என்பது வேறு. என் எழுத்து என்பது வேறு. இரண்டையும் குழப்பாமல் இருந்ததால்தான் இவ்வளவு வருடம் என்னால் தாக்குப் பிடிக்க முடிந்திருக்கிறது என்று நினைக்கிறேன். எழுத்தாளன் அவனுடைய தனிப்பட்ட வாழ்க்கையையும் அவனது எழுத்தையும் சேர்ப்பதன் மூலம் வாழ்க்கையை சிக்கலாக்கிக் கொள்ளக் கூடாது என்பதைத்தான் என் வாழ்க்கையின் பாடமாக நினைக்கிறேன்.



எஸ்.ராமகிருஷ்ணன்

உலகம் – சிறுகதை

  • அறையிலிருந்த இருளைப் போலவே அவளும் உருமாறிக்கொண்டு வருவதாக நினைத்தபடி அவசரமாக வெளியே வந்துவிடுவார்.
  • சந்தேகம் ஒரு காட்டை போன்றது. ஒன்றுக்குள் ஒன்று விரிந்து கொண்டே போய்க்கொண்டிருக்கும். சந்தேகத்தை தீர்த்துவிடக் கூடாது.
  • காகிதங்களை வெள்ளைக்காரர்கள் மலம் துடைக்கப் பயன்படுத்துகிறார்கள் என்பது தனக்குத் தெரியும் என்றும் சொன்னார். நான் அது வேறுவகையான காகிதம் என்றேன். ஓதுவார் அதைக் கேட்டுக் கொண்டதாகத் தெரியவில்லை.
  • தேவாரம் ஒரு பாடல் அல்ல — ஒரு ஜோதி அல்லது — ஒளிப்பிரவாகம் என்று மனதில் தோன்றியது. நெடுநேரம் பிராகாரத்திலே நின்றிருந்தேன். தேவாரத்தை பாடிய மனிதன் போய்விட்டிருக்கக்கூடும். ஆனால் கோவிலின் கற்தூண்களில் அப்பாடலின் ரீங்காரம் ஒளிந்திருந்தது.
  • ‘காற்று உடலுக்குள் சென்று வெளியேறி வருவதை நம்புகிறாயா? அப்படியானால் மனமும் அது போல உள்ளும் வெளியும் சென்றுவரக்கூடியது. ஓரிடத்தில் நிரந்தரமாகத் தங்காதது என்றால் நம்பமாட்டாயா?’

    நன்றி: kumudam.com

  • ஓ… மாரியா… ஓ… மரியா…

    MARIA SHARAPOVA

    சபாடினியின் அலட்சியம்

    ஸ்டெஃபி கிராஃப்பின் ஆளுமை

    செரினாவின் துணிச்சல்

    வீனஸின் திறமை

    ஹின்ஜிஸ் புன்னகை

    செலஸ் ‘ஹ்ஹூம்ம்ம்ம்’

    க்ரிஸ் எவர்ட் நளினம்

    நவ்ரதிலோவா முயற்சி

    கோர்னிகாவாவின் அழகு

    சொந்த மூளை….

    அடுத்த விம்பிள்டன் நாயகி?

    ஒரு நிமிட வலியா? ஓராயுள் வாழ்க்கையும் தண்டனையா?

    உணர்ச்சிபூர்வமாக பார்த்தால் மரணதண்டனை சரியென்றே தோன்றுகிறது.

    நாமக்கல் ராஜா: >>>இரும்பாலான தங்கள் இதயத்தை கழட்டி எடைக்கு போட்டுவிட்டவர்கள்.

    அவனுக்கு மரணம் நிகழ்த்துவதால் இந்தியாவில் மாறுதல் எதுவும் வந்துவிடப்போவதில்லை. நாளைக்கே ஒரு அரசியல்வாதியின் கொள்ளுப்பேரனோ, சூழ்நிலைக்கு அடிமையாகும் இன்னொருவனோ, அடக்கப்பட்ட தலித் மீதோ, வேறொரு குழந்தையிடமோ வன்முறை பாய்ச்சிக்கொண்டுதான் இருக்கப் போகிறான். தனஞ்ஜெயை தூக்கிலிடுவதன் மூலம் நீதி நிலைபடுத்தப்பட்டு விட்டதாக நமக்கு சந்தோஷம். அதற்கு பதிலாக, பல ஆயுள் தண்டனை கொடுப்பது, தனிமைச்சிறையில் போடுவது, அவனுடைய ஆயுள் முடியும் வரை வேலை வாங்கி, அதில் கிடைக்கும் நிதியில் பெண்கள் அனைவருக்கும் ஸ்டன் கன் அல்லது பெப்பர் ஸ்ப்ரே கொடுப்பது என அவசர சட்டம் போட்டு, அந்த சட்டத்தை குறித்த விழிப்புணர்வை ‘தனஞ்செய் ஏன் திஹாரில் உள்ளார்’ என்ற விளம்பரங்கள் மூலம் பட்டி தொட்டிகளில் பரப்பலாம்.

    Eelanathan: >>>ஒருமுறை சிங்கப்பூர் வந்து பாருங்கள்

    சிங்கப்பூர் வளர்ந்த நாடு; இந்தியாவைப் போல் ‘வளரும்’ நாட்டுக்கு மரண தண்டனை தடூப்பூசியாக முடியாது. எயிட்ஸ் விழிப்புணர்வு கூட சென்றடையாத நாட்டில் ‘மரண தண்டனை’க்கு பயந்துபோய், தவறு செய்யும் இச்சை வரும்போது, தடுத்து நிறுத்திக் கொள்வார்கள் என்பதை ஒப்புக்கொள்ள மாட்டேன். மேலும், சிங்கப்பூர் அளவில் சிறிய இடம். புது தில்லியில் இரவு ஒன்பது மணிக்கே கடைகள் மூட ஆரம்பித்துவிடுவார்கள். மவுண்ட் ரோட் போல நடுநாயகமான கன்னாட் ப்ளேஸ் போன்ற இடங்களில் பத்து மணிக்கு மேல் ஆள் நடமாட்டம் இருக்காது. சென்னையில் நைட் ஷோ முடியும்வரையாவது நகரம் களையோடு இருக்கும். அமெரிக்காவில் பின்னிரவு இரண்டு மணிக்குக் கூட கார்களும், மக்களும் சாரி சாரியாகக் காணப்பட்டாலும் கொலை, பாலியல் வன்முறை நடந்துகொண்டேதான் இருக்கிறது. (அமெரிக்காவின் பல மாநிலங்களில் மரண தண்டனை இருக்கிறது.)

    தமிழோவியமும் உங்கள் கருத்தை பிரதிபலிக்கிறது. செய்யப்பட்ட குற்றங்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப நாற்பது, ஐம்பதாண்டுகள் சிறை வாழ்வு கொடுக்கும் ஆயுள் தண்டனை சட்டம் வரும்வரை மரண தண்டனை சரியே என்று தோன்றலாம்.



    go2tamil.com – கொலைக்குக் கொலைதான் தீர்வா?: “1989இல் இந்திராகாந்தியின் கொலைஞனைத் தூக்கில் ஏற்றியபின், இன்றுவரையில் (இந்தியாவில்) எவருமே தூக்கிலிடப்படவில்லை. நிலப்பரப்பைப் பொறுத்த மட்டில், மிகச்சிறிய நாடான சிங்கப்பூரில்தான் அதிகம் மரண தண்டனைகள் நிறைவேற்றப்பட்டு வருகின்றன. 4 மில்லியன் ஜனத்தொகையைக் கொண்ட இந்தச் சிறிய நாட்டில் வருடாவருடம் 70 பேர் மரண தண்டனை பெற்று வருகிறார்களாம். போதை வஸ்து கடத்தும் குற்றவாளிகளே தண்டனை பெறுபவர்களில் அதிகமானவர்களாக இருக்கின்றார்கள்.

    மரண பயம் ஏற்படுத்தினால் குற்றங்கள் தொடராது என்பது ஒரு சாராரின் விவாதமாக இருக்கின்றது. உயிரை எடுக்க வேண்டாம். சிறையில் தள்ளி, தனிமையில் விட்டு, கடூழியம் செய்து தன் தவற்றிற்காக ஆயுள் முழுவதும் வருந்த வைப்பதுதான் சரியான தண்டனை என்று இன்னொரு சாரார் வாதாடுகின்றார்கள். ஆனால் இன்றைய காலகட்டத்தில் பழிவாங்கும் குணந்தான் நம்மிடம் மேலோங்கி நிற்கின்றது. மன்னிப்பது விரும்பப்படாத ஒன்றாகி வருகின்றது. பல்லுக்கு பல், கண்ணுக்கு கண் என்ற பழிவாங்கும் உணர்வே நம்மைப் பிடித்தாட்டுகின்றது.”



    வக்கீல் பிரபுவிற்கு பதிலாக, என்னுடைய முந்தைய மரத்தடி பதிவு

    MARIA SHARAPOVA  

    MARIA SHARAPOVA
     Posted by Hello

    விருப்பப் பட்டியல் – திண்ணை.காம்

    திண்ணை:

    1. யூனிகோட் எழுத்துரு கொண்டிருக்க வேண்டும்.

    2. மரத்தடி.காம் போல் எழுத்தாளர் பட்டியலிட்டு, ஒருவரின் அனைத்து படைப்புகளையும் எளிதில் படிக்கும் வசதி வேண்டும்.

    3. ஒவ்வொரு வெள்ளியன்றும், அந்த வாரம் வெளிவந்த புதிய பகுதிகளின் பட்டியலை, என்னைப் போல் விரும்புவோருக்கு, மின்மடல் மூலம் அறிவிக்க வேண்டும்.

    4. திண்ணை.காமில் வெளிவரும் பகுதிகளில் சிலவற்றையாவது, மாதாந்தரியாக பதிப்பித்து, இந்தியாவிலும், அமெரிக்காவிலும் விற்க வேண்டும்.

    5. கடிதங்களுக்கு தலைப்பு (subject) கொடுக்க வேண்டும்.

    6. மத்தளராயர் எழுதும் வாரபலன், ஜெயமோகன் எழுதும் புத்தக வாசிப்புகள் போன்றவற்றில், தலைப்புகளை பெரிதாகப் போட்டு, உபதலைப்புகளுக்கு ஒரு போடவேண்டும்.

    7. திண்ணை களஞ்சியம் well-organizedஆக, எளிதில் தேடி கண்டுபிடிக்கக் கூடியதாக இருக்க வேண்டும்.

    இணையப் பொறுக்கன்

    1. எழுத்து விளையாட்டு: சே… 142-தான் கிடைத்தது! 😦 😦 அவ்வளவு மெதுவாகவா தட்டுகிறேன்!

    2. நவீன மொழி இயக்கம்: தமிழுக்கு இடம் இல்லை; ஹிந்தி கூட பின்தங்கிய நிலையில் தான் இருக்கிறது.


    3. இசை விமர்சகர்களின் வார்ப்பு: சுப்புடுக்களைத் திருப்திபடுத்தும்படி இசையமைத்தல் எப்படி?

    4. வலைப்பதிவுகளில் வலம் வரும் புத்தகங்கள்: புத்தகப் பட்டியல்கள் தவிர சுவாரசியமான வேறு சில விஷயங்களும் இருக்கிறது. கூகிளில் எந்த வார்த்தைகள் அதிகம் ‘ஹிட்’ கொடுக்கிறது என்று அலசலாம்.

      நான் பார்த்தது:

      # ஜெ.ஜெ (88)

      # கலைஞர் (86)

    5. எந்த புத்தகம் படிக்கலாம்? இன்பமா, துன்பமா? நகைச்சுவையா, நோ நானசென்ஸா? எதிர்பாராத திருப்பங்கள் வேண்டுமா? வன்முறை இருக்கட்டுமா? என்ற கேள்விகளுக்கு பதில் சொன்னால், படிப்பதற்குப் பரிந்துரைகள் கிடைக்கும்.

    6. மேலும் மேலும் நுண்ணிய தேடல்: ப்ரெஞ்ச் நிறுவனம், ஆப்பிரிக்காவில் சட்டத்துக்குப் புறம்பாக மனிதர்களிடம் செய்யப்படும் சோதனைகளைக, முப்பத்தேழு வயது ஜப்பானிய விவசாயி கண்டுபிடித்த வழக்கை, அமெரிக்க ஜூரிகள் கண்துடைப்பாக விசாரிக்கும் கதை வேண்டுமா? இங்கே சென்றுத் தேடிப் பார்க்கவும். இந்தியாவும் அமெரிக்காவும் சேர்ந்த புத்தகங்கள் வேண்டும் என்று நான் தேடிப் பார்த்ததில் ‘Line of Control – Tom Clancy’s Op-Center 8’ முதலிடத்தைப் பிடித்தார்.

    7. உங்க ஊரில் என்ன படிக்கிறார்கள்? அமெரிக்காவின் அனைத்து நூலகங்களிலும், பெரிய புத்தகக் கடைகளிலும், ஒவ்வொரு மாதமும் படிக்கவேண்டிய புத்தகம் ‘இவை’ என்று பட்டியல் போட்டு கொடுப்பார்கள். அனைவரும் ஒரே சமயத்தில் ‘விஷ்ணுபுரம்’ படித்து சென்று, இன்று போல் ஒரு பௌர்ணமி இரவில் விவாதிப்பதற்கு சௌகரியமாக இருக்கும்!?

    8. வானிலை ஆய்வு மையம்: ஒரு புயலின் பாதை.

    நன்றி: நியு யார்க் டைம்ஸ்

    Bar Chart of various Languages 

    Bar Chart of various Languages Posted by Hello

    How many Hindi speakers in US? 

    How many Hindi speakers in US? Posted by Hello

    நீ வருவாய் என (பாடல் வரிகள்)

    அந்தரங்க நீர்க்குளத்தே

    பூத்திருந்த தாமரைகள்

    அந்தியிலே மொட்டாகி

    சிந்தையிலே கோலமிட்டதோ

    காதலிலே நீர்வேட்டை

    காற்றினிலே மாளிகைகள்

    வானகத்து வீதியினிலே

    வலம்போகும் கற்பனைகள்

    நான் அவரை பார்த்துவிட்டேன்

    அத்தனையும் கனவுகளே

    நீ வருவாய் என

    நான் இருந்தேன்

    ஏன் மறந்தாய் என

    நான் அறியேன்

    கண்கள் உறங்கவில்லை

    இமைகள் தழுவவில்லை

    கவிதை எழுத ஒரு வரியும் கிடைக்கவில்லை

    அமைதி இழந்த மனம் எதையும் நினைக்கவில்லை

    வாராயோ….



    அடி தேவி

    உன்தன் தோளில்

    ஒரு பூவானால் இன்று

    இறவெங்கே உறவெங்கே

    உன்னைக் காண்பேனே என்றும்

    அமுத நதியினில் தினமும் என்னை நனையவிட்டு

    இதழை மறைத்துக் கொண்ட இளமை அழகுசிட்டு

    தனிமை மயக்கம்தனை விரைவில் தணிப்பதற்கு வாராயோ?

    ஒரு மேடை

    ஒரு தோகை

    அது ஆடாதோ கண்ணே

    குழல்மேகம்

    தரும் ராகம்

    அது நாடாதோ என்னை

    சிவந்த முகத்தில் ஒரு நகையை அணிந்து கொண்டு

    விரிந்த புருவங்களில் அழகை சுமந்து கொண்டு

    எனது மடியினில் புதிய கவிதையை சொல்ல வாராயோ?

    பாடல் கேட்க: தினம் ஒரு பாடல்