Monthly Archives: மே 2004

Sonia is an elected leader ;;) 

Sonia is an elected leader ;;) Posted by Hello

Cinema Poster :) 

Cinema Poster 🙂 Posted by Hello

குமுதம்.காம்

சோமரத்னே திசயனாயக்கே – உரையாடல்: “வசந்தகுமார்: ‘லிட்டில் ஏஞ்சலை’ நான் இப்படி உள்வாங்கிக் கொள்கிறேன். பெரைரா, ஆட்சியாளர்களையும், தமிழ்ச் சிறுமி தமிழர்களையும், பெரைராவின் மகனான பிரச்னைக்குரிய சிறுவன் இலங்கை தேசத்தையும் பிரதிபலிக்கிறார்கள். சிறுமியின் முயற்சியால்தான் சிறுவன் சுமுகமான நிலைக்கு வருகிறான். இனபேதம் மறைந்து அமைதி திரும்புகிறது. ஆனால், சிறுமி அங்கிருந்து சென்றதும் சிறுவன் பழையபடி கலவர மனநிலைக்குத் திரும்பி விடுகிறான். இந்தப் படத்தின் பிரதான பின்னணி 1983 இனப்படுகொலை; பதின்மூன்று சிங்கள ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டதும், அதைத் தொடர்ந்து தமிழர்கள் பழிவாங்கப்பட்டதும்தான். இலங்கை வரலாற்றின் அழிக்க முடியாத கறை இது என்பதை மறுப்பதற்கில்லை. ஆனால் மறந்து போன அதனை மறுபடியும் நினைவுபடுத்துவது இலங்கையில் நடைபெற்று வரும் அமைதிப் பேச்சு வார்த்தைக்கு இடையூறு ஏற்படுத்துவதாகாதா?

“இதை இப்போது சுட்டிக்காட்டுவதன் மூலம், மக்களிடம் இது மறுபடியும் நிகழக்கூடாது என்கிற எண்ணமும் அதன்பால் வெறுப்புணர்வும் ஏற்பட வழி செய்யமுடியும். நாம் இப்போது சில நேரங்களில் ஹிட்லரைப் பற்றிப் பேசுகிறோம். அவர் செய்தது சரி என்று சொல்லவா? அல்ல; அதை ஞாபகப்படுத்துவதன் மூலம் அதன் தீயப் பக்கத்தைக் காட்டவே.”



Truth, Love & a little Malice: குஷ்வந்த் சிங் – கி அ சச்சிதானந்தம்:

இந்திரா காந்திக்கும் அவருடைய இரண்டாம் மருமகளான மேனகா காந்திக்கும் இடையிலான மோதலை, மாமியார் மருமகள் சண்டையைப் பற்றி விரிவாக எழுதியுள்ளார். மேனகா காந்தியை தன் நேர்முக உதவியாளராக இந்திராகாந்தி நியமித்தார். இதை சோனியா காந்தி கடுமையாக எதிர்த்தார். தன் நாடான இத்தாலிக்கே தன் குடும்பத்துடன் திரும்பிப் போய்விடுவதாக மிரட்டினார். இந்திரா காந்தியால் ஒன்றும் செய்யமுடியவில்லை. இந்திராகாந்தி, மேனகாவை வீட்டை விட்டுத் துரத்தி விட்டார். பத்திரிகைகள் மாமியார் மருமகள் சண்டையைப் பெரிது படுத்தின.



விக்ரமாதித்யன்: “வாழ்வினுடைய சாரமே இல்லாத வெறும் மொழியை வைத்துக்கொண்டு உற்பத்தி செய்யப்படும் கவிதைகளைத்தான் நான் ‘டொமஸ்டிக்’ கவிதைகள் என்கிறேன். அவற்றில் அக்கவிஞனுடைய வாழ்வுகூட இல்லை. மொழியால் செய்யப்படும் கட்டடங்கள்தான் எல்லாம். வாழ்வும் மொழியும் இசையும் போதுதான் நல்ல கவிதை பிறக்க முடியும். அது இங்கு நடக்கவில்லை.

ராமர் பிறப்பதற்கு முன்பே ராமாயணம் எழுதப்பட்டுவிட்டது. இவ்வளவு பெரிய முனிவர் எழுதி விட்டாரே என்று அவனும் அதுபடி வாழ்ந்து விட்டான் என்று ஒரு ஐதீகம் இருக்கிறது. இதுபோல் நான் குடிகாரன் என்பதும் முன்பே தீர்மானிக்கப்பட்டுவிட்டது.”

‘அச்சாணி’

மூடப்படும் தேவாலயங்கள் | பாஸ்டன் க்ளோப் தலையங்கம்

Data analysis by Bill DedmanTamil Christian Songs:
மாதா உன் கோவிலில்
மணிதீபம் ஏற்றினேன்
தாயென்று உன்னைத்தான்
பிள்ளைக்குக் காட்டினேன் மாதா….

மேய்ப்பன் இல்லாத மந்தை வழி மாறுமே
மேரி உன் ஜோதி கண்டால் விதி மாறுமே
மெழுகு போல் உருகினோம்
கண்ணீரை மாற்ற வா

காவல் இல்லாத ஜீவன் கண்ணீரிலே
தரைகண்டிடாத ஓடம் தண்ணீரிலே
அருள்தரும் திருச்சபை
மணியோசை கேட்குமோ

பிள்ளை பெறாத பெண்மை தாயானது
அன்னை இல்லாத மகனை தாலாட்டுது
கர்த்தரின் கட்டளை
நானென்ன சொல்வது

மெடிமிக்ஸ் – தினகரன்: தமிழ் சினிமா விருதுகள்

விருது பெற்றவர் திரைப்படம் வழங்கியவர்கள்
சிறந்த நடிகர் விக்ரம் பிதாமகன் சரத்குமார்
சிறந்த நடிகை ஸ்னேஹா பார்த்திபன் கனவு ராதிகா & மெடிமிக்ஸ் நிர்வாகி
தலைமுறை சிறப்பு விருது – நடிகர் ஜெமினி கணேசன்   கே பாலச்சந்தர் & விஜயகுமார்
தலைமுறை சிறப்பு விருது – நடிகை சரோஜா தேவி   ஏவிஎம் சரவணன் & சிந்தாமணி முருகேசன்
சிறந்த இயக்குநர் பாலா பிதாமகன் மெடிமிக்ஸ் நிர்வாகி
சிறந்த அறிமுக இயக்குநர் செல்வராகவன் காதல் கொண்டேன் தனுஷ் & நதியா
சிறந்த அறிமுக நடிகர் ரவி ஜெயம்  
சிறந்த அறிமுக நடிகை சதா ஜெயம்  
சிறந்த குணச்சித்திர நடிகர் ரகுவரன் திருமலை ஸ்ரீகாந்த் & தேனப்பன்
சிறந்த குணச்சித்திர நடிகை சங்கீதா பிதாமகன் ஜி தியாகராஜன் & ஷ்யாம்
சிறந்த நகைச்சுவை நடிகர் கருணாஸ் திருடா திருடி குஷ்பூ
சிறந்த வில்லன் ஜீவன் காக்க காக்க நெப்போலியன் & சித்ரா லஷ்மணன்
சிறந்த ஒளிப்பதிவாளர் பாலசுப்ரமணியம் பிதாமகன் பிசி ஸ்ரீராம் & விந்தியா
சிறந்த இசை தினா திருடா திருடி ரீமா சென்
சிறந்த பாடகர் ஹரீஷ் ராகவேந்திரா ‘தேவதையைக் கண்டேன்’ சிபிராஜ் & அருண்குமார்
சிறந்த பாடகி மாலதி ‘மன்மத ராசா’ இப்ராஹிம் ராவுத்தர் & தாரிகா
சிறந்த பாடலாசிரியர் வைரமுத்து இயற்கை சேரன்
சிறந்த கலை கே பிரபாகரன் அன்பே சிவம் ஜெய் ஆகாஷ் & உமா
சிறந்த நடனம் சிவசங்கர் ‘மன்மத ராசா’ விக்னேஷ் & ஸ்ருதிகா
சிறந்த கதை பாக்யராஜ் சொக்கத்தங்கம்  
சிறந்த வசனம் ஹரி சாமி  
சிறந்த குழந்தை நட்சத்திரம் பேபி கல்யாணி ஜெயம்  
சிறந்த சண்டை ஸ்டன் சிவா பிதாமகன் ஸ்ரீமான் & கணிகா
விமர்சகரின் சிறந்த படம் அன்பே சிவம் லட்சுமி மூவி மேக்கர்ஸ் கஸ்தூரி ராஜா & ரமேஷ் கன்னா

 

ஆதாரம் + நன்றி:

1. Y! India Movies

2. தினகரன் தமிழ் சினிமா விருதுகள்

3. தினகரன் – 2004 (1)

4. தினகரன் – 2004 (2)

5. விருது பெற்றிருக்கவேண்டிய பாடல்??

விரல் நுனியில் குறள்

திருக்குறள்: என்னிடம் இருக்கும் பதிப்பு http://www.suvadi.com என்னும் முகவரியை சுட்டுகிறது. தற்போது அது இயக்கத்தில் இல்லை. ‘விரல் நுனியில் குறள்’ மிகவும் உபயோகமான நிரலி. தமிழில் திருக்குறள்; கூடவே சுருக்கமான அர்த்தம். ஆங்கிலம் வசதிப்படுமானால் ஆங்கிலம்; தமிழில் அர்த்தம் வேண்டுமானால் தமிழ். அதிகாரம் வாரியாக டக் டகென்று மேயும் வசதி.

Installation Instructions: Kural works under Windows 95, 98 and NT©. Unzip the kural.zip file and extract the Kural.exe file to any directory on your PC. That’s all. To uninstall, simple delete the Kural.exe file.

எழுதியவர்: இளங்கோ சம்பந்தம்

கிடைக்கும் சுட்டி: திருக்குறள்

வாதம் vs. விவாதம்

நான் பார்த்த இணையத்தில் இந்த நாள் மட்டும், எந்த ஒரு விவாதமும் முழுமையாக முடியவடியவில்லை. மணிக்கணக்காய் விவாதம் செய்தாலும் முடிவில் ‘என் கருத்து எனக்கு, உன் கருத்து உனக்கு’; உன் மூக்கு, என் மூக்கு என்று முடிந்து விடுகிறது. இந்த விவாதத்தில் நமக்கு மிஞ்சுவது சிறிது மன உளைச்சல்தான். இப்படி பைசா பிரயோஜனம் இல்லாத ஒரு விஷயத்துக்கே நம்மால் ஒத்து போக முடியவில்லையென்றால் எப்படி இதையே பிழைப்பாக நடத்தும் அரசியல்வாதிகளும், சினிமா நட்சத்திரங்களும் ஒத்துப் போவார்கள். ஆனால் நாம் விடாமல் பக்கம் பக்கமாக அரசியல்வாதிகள் முதல் அனைவரையும் இப்படி செய்ய வேண்டும், அவரோடு பேசி சமாதானம் ஆக வேண்டும் என்று எழுதுகிறோம். நாம் இப்படி செய்வது…

1. ஊருக்குதான் உபதேசம்.

2. நான் செய்வது சரி ஆனால் அவர்கள் அப்படி செய்யக்கூடாது (சமூகத்தின் பார்வைபடுவதால்).

3. அட போய்யா பெருசா வந்துட்டான்.

4. நான் செய்வது சும்மா பொழுது போகாமல்; ஆனால் அவர்களுக்கு இது பிழைப்பு, ஆகவே அவர்கள் ஒத்துப் போக வேண்டும்.



Poll Results 1 

Poll Results 1 Posted by Hello

கவர்ந்த உபயோகங்கள்

  • பயிற்சிநிலை பொறுக்கி

  • பரிபூரண பொறுக்கி

  • மீனாட்சி என்றால் தாமிர தேகம்

  • கோவிலுக்கு சென்று நன்றி அறிவிப்பு கூட்டங்கள்

  • சாகசம் கலந்த வருமானம்

  • மானசீக குரு; மரியாதைக்குரிய நண்பன்

  • ஓயாத ஞாபக படையெடுப்புகள்

  • பிசாசெனக் கவிந்து நின்ற தனிமை

  • கலை நேர்த்தியுடன் செய்கிற அயோக்கிய கவிஞன்

  • முகத்தில் அறையும் விஷச் சொற்கள்

  • ஆத்மசுத்தியுடன் கெட்ட காரியங்கள்

  • பால்பாயிண்ட் பேனா சைஸில் எழுதப்பட்ட திருக்குறள்

தூணிலும் இருப்பான் – பா. ராகவன்

சபரி / ரு. 55

I thought it is very relevant to the internet blog…

I thought it is very relevant to the internet blogging world 🙂 Posted by Hello