Daily Archives: மே 21, 2004

ஹாரி பாட்டர் பார்த்ததுண்டா?

i'm in gryffindor!

எந்த வீடு @ nimbo.net

வெகு விரைவில் புது ஹாரி பாட்டர் படம் வருகிறது. ஹாரி பாட்டர் படம் பார்க்காவிட்டாலும் இந்த கணிப்பை எடுத்து பார்க்கலாம். ஆனால், முடிவின் தாத்பரியம் தெரியாமல் போகும். நான் க்ரிஃபிண்டார் என்பதை நம்பமுடியவில்லை. ‘ஸ்லிதெரின்’ ஆக இருக்கத்தான் வாய்ப்பு என்று எண்ணியிருந்தேன்!

தினபூமி

விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்குவதை எதிர்க்கிறேன் – மன்மோகன்சிங்:

விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்கப்படுவதை பொதுவாக தாம் எதிர்ப்பதாக புதிய பிரதமராக பதவி ஏற்கப் போகும் டாக்டர் மன்மோகன்சிங் தெரிவித்துள்ளார். இருந்தாலும் விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்கும் ஆந்திர அரசின் முடிவு நியாயமானதே என்றார். தமிழகத்தில் இலவச மின்சாரத்தை தொடர்ந்து வழங்கும் வகையில் விவசாயிகளுக்கு மணியார்டர் மூலம் நிதிஉதவி செய்யப்பட்டது. ஆனால் தி.மு.க. உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் இலவச மின்சாரம் தமிழகத்தில் நிறுத்தப்பட்டு விட்டதைப் போல போராட்டம் நடத்தின. கொள்கை அளவில் தாம் இதை ஏற்கவில்லை என்றும் கூறினார் மன்மோகன்சிங்.

இத்தாலியில் இளையராஜா இசை நிகழ்ச்சி – இளையராஜா:

நான் இதுவரை மேடை நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளாமல் தவிர்த்து வந்தேன் முதன் முறையாக இத்தாலியில் கடந்த மே மாதம் 14, 15_ம் ஆகிய நாட்களில் எனது இசை நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த இசை நிகழ்ச்சி இத்தாலியில் வாழும் இந்தியர்களுக்காக இல்லை. இத்தாலி ரசிகர்களுக்கு தான் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சி வருட வருடம் “மாடர்ன் ஆப் ஒப்ரா” என்ற இடத்தில் இசை குழுவினர்களின் நிகழ்ச்சி நடைபெறும். இசை நிகழ்ச்சியின் முடிவில் எனது இசை நிகழ்ச்சி நடைபெற்றது. எனது இசை நிகழ்ச்சி முக்கிய நிகழ்ச்சியாக நடந்தது.

சொல்லாத காதல் – தமிழ்மதி:

“தன்னுறு வேட்கை கிழவன்முற் கிளத்தல்

எண்ணுங் காலைக் கிழத்திக் கில்லைப்

பிறநீர் மக்களின் அறிய ஆயினால்

பெய்ந்நீர் போலும் உணர்விற் றென்ப” என்பது தொல்காப்பியம்.

தோழியிடம் சொல்லிப் புலம்புகின்றாள். இது

“நோயலை கலங்கிய மதனழி பொழுதின்

காமம் செப்பல் ஆண்மகன் கமையும்

யானே பெண்மைதட்ப நுண்ணிதின் தாங்கி” (நற்.94)

என்ற பாடலடிகளில் புலம்கின்றது.

ஆண்டாள், தன் `நாச்சியார் திருமொழியில் (13:1) இந்த உணர்வுக்கு ஆட்பட்டுத்தான் “பெண்ணின் வருத்தமறியாத பெருமான்” என்று பாடித்தவிக்கின்றாள்.

சினிமா துணுக்குகள்:

  • வித்யாசாகரின் இசையில் இளையராஜாவின் மகன் கார்த்திக் ராஜா ஒரு பாடலை பாடியுள்ளார். எந்தப் படத்துக்குப் பாடியிருக்கிறோம் என்பதே அவருக்குத் தெரியாதாம். கரு. பழனியப்பன் இயக்கும் `சதுரங்கம்’ படத்துக்காகத்தான் இவர் பாடியிருக்கிறார்.

  • ஒரு பாடல் எழுதுவதற்கு 10 ஆயிரம் சம்பளம் வாங்குகிறார்கள் தமிழ்ககவிஞர்கள்.

குவிஸ்:

  • ‘JANE EYRE’ நூலின் ஆசிரியர் யார்?

  • `பாக்ஸிங்’ விளையாட்டில் ஒரு ரவுண்ட் என்பது எவ்வளவு?

விடுகதைகள் :

  • சின்னவன் ஓடுவான் அடுத்தவன் நடப்பான் பெரியவன் தவழுவான். அவர்கள் யார்?

  • சுனை ஒன்று சுவர் மூன்று அது என்ன?

தமிழ் நாள்காட்டி

நன்றி: sysindia.com – தமிழர் பக்கம்