Monthly Archives: ஏப்ரல் 2004

சென்னையில் ஒரு வெயில் காலம் – 2

சுங்கத்துறை அதிகாரிகளை வில்லன் போல் சித்தரித்த சில பதிவுகளை பார்த்திருக்கிறேன். அனேகமாக அவர்கள் எல்லாரும் பம்பாய் அல்லது டில்லியை மட்டுமே சேர்ந்தவர்களாக இருக்க வேண்டும். அமெரிக்கக் குடிபுகலை விட வேகமாக நகரும் க்யூ, குழந்தைகளை வைத்துக் கொண்டிருப்பவருக்கு என தனி வரிசை, வாயிலில் இன்முகத்துடன் ‘காமிரா ஏதாவது உள்ளே இருக்கா? லேப்டாப் திரும்ப எடுத்துண்டு போயிடுவீங்க இல்லியா?’ என கனிவான விசாரிப்பு என்று சுறுசுறுப்பாகவும் சினேக உணர்வோடும் வரவேற்கிறார்கள். ‘Shining India’ உண்மையோ இல்லையோ; ‘Discover India’ என்பது நிதர்சனம்.

பிரிட்டிஷ் ஏர்வேசில் வந்தால் பெட்டி படுக்கை வரத் தாமதமாகலாம். மற்ற (ஐரோப்பாவில் இருந்து தொடங்கும்) விமானங்கள் சீக்கிரமே கொண்டு வந்து வைத்து விடுகிறார்கள். எஸ்கலேட்டர் பாட்டுக்கு பெட்டிகள் இல்லாமல் வெறுமனே சுற்றிக் கொண்டிருக்க, அதற்கு அருகில் ட்ரா·பிக் ஜாமில் மாட்டிக் கொண்டிருக்கும் கார்கள் போல், வரிசையாக அடுக்கப்பட்ட பெட்டிகளின் நடுவே ‘இரும்புக் கோடரி’ கண்டுபிடித்தது போல் என்னுடைய லக்கேஜ்களை கண்டுகொள்வது எளிது. வெளியே எடுத்து வருவதற்கு தினசரி ஜிம் பயிற்சி தேவை.

நடுநிசி தாண்டிய இரவில் வீட்டுக்கு செல்லும் வழியில் தேர்தல் ஜோர் தெரியவில்லை. பத்து மணிக்கு மேல் புது டில்லியில் நாய் கூட ரோந்து சுத்தாது. பெங்களூர் எம்.ஜி. ரோடும், கல்கத்தாவின் பார்க் ஸ்ட்ரீட்டிலும் அப்பொழுதும் சில பாதசாரிகளைப் பார்க்கலாம். சென்னையின் எல்லா தெருக்களிலும் பலவிதமான போக்குவரத்தைக் காண முடியும். அது இன்னும் அமைதியாகத் தொடர்கிறது. ஆனால், பிரும்மாண்டமான கட்-அவுட்கள், தோரணங்கள், போஸ்டர்கள் எல்லாமே கொஞ்சம் அடக்கி வாசிக்கபட்டது போல் இருந்தது.

சில தேர்தல் சுவரொட்டிகளை பத்ரி படம் பிடித்துக் கொண்டிருந்தார். நான் பிடிக்க வேண்டும் என்று நினைத்து மறந்த ஒன்று: ‘பதிமூன்று மாதங்களில் ஆட்சியைக் கவிழ்த்தவர்கள் அவர்கள் (உம்மணாமூஞ்சி ஜெ.ஜெ. புகைப்படம்); நிலையன ஆட்சியைக் கொடுக்க வைத்தவர்கள் (கலைஞர் சிரிக்கிறார்)’. என்ன சொல்ல வருகிறார்: ‘எங்களைத் தேர்ந்தெடு… மீண்டும் பிஜேபிக்கோ காங்கிரசுக்கோ ஆதரவு தந்து கொண்டே ஆட்சி பீடத்தில் தொடருவோம்’ என்கிறார்களா? திமுகவின் கண்ணகி சிலை பளிச்சென்று முகத்தில் அறைகிறது. காமராஜர் சாலையில் சீரணி அரங்கமும், கண்ணகியும் இல்லாதது அழகு சேர்த்தது போல்தான் இருக்கிறது.

கோட்டையை பார்க்க நிறைய வெள்ளையர்கள் வந்திருந்தார்கள். சென்னை எங்குமே வெளிநாட்டினரை அதிகம் பார்க்க முடிந்தது. ஸ்பென்சர் ப்ளாசாவில், ஷாப்பிங் அரங்குகளில் என்று எல்லாவிதமான இடங்களிலும் தென்பட்டார்கள். ஆட்டோகாரர்கள் மாதிரி விஷயம் அறிந்தவர்கள் எவருமே இருக்க முடியாது. ரேடியோ மிர்ச்சியில் வரும் எழுபதுகளின் பாடலாசிரியரை சொல்கிறார்கள். சிம்ரன் மீண்டும் நடிக்க வருவது குறித்து அலசுகிறார்கள். ப.சிதம்பரத்தின் அரசியல் இயலாமையை அங்கலாய்க்கிறார்கள். விஜய்காந்த் நேர்மையானவர்; ஈகோ பார்க்காதவர்; கலைஞருக்குப் பின் அரசியலுக்கு வருவார் என்றும் மன்மோகனாமிக்ஸையும் அருண் ஜெட்laaw-வையும் தொட்டு புஷ்-ஒசாமா வரை தொட்டு ‘கனவு மெய்ப்பட வேண்டுமை’ திருட்டு விசிடியில் பார்ப்பேன் என்று திருவான்மியூர் டு திருமங்கலம் செல்லும் வரை அலுக்காமல் பேசுகிறார்கள்.

நான் படித்த சாந்தோமில் அனைவரும் ஸ்தோத்திரப் பாடல்கள் பாடுவது கட்டாயமாகிவிட்டது. இன்னும் தமிழ் மீடியம் உள்ளது. ஆனால், அங்கு படிப்பவனும் ஆங்கிலத்தில்தான் அளவளாவுகிறான். பத்தாவது பரிட்சை நடந்ததால் படிப்பில் காட்டும் ஆர்வம் அதிகம்; அதற்கு ஈடாக தோழிகளின் படிப்பிலும் அவர்களுடன் செல்லும் கோடை கால camp குறித்தும், பரிட்சை முடிந்து அழைத்து செல்லப் போகும் ட்ரீட்களுக்குமான திட்டமிடுதலில் காட்டும் ஆர்வமும் நிறைய.

சாந்தோம் தேவாலயத்தின் ஞாயிறு காலைகளில் கூட்டம் வாயிலைக் கடந்து நுழைவாயிலை எட்டிப் பிடிக்கிறது. கபாலீஸ்வரர் தேர் திருவிழாவில் இன்னும் என்ஜின் எதுவும் இழுக்காமல் வடம் பிடித்து, முட்டுக்கட்டை போட்டு, ·ப்ளாட் மாடிகளில் இருந்து பிஸ்லேரி தண்ணீர் பக்கெட் பக்கெட்டாக இழுப்பவர்கள் மேல் ஊற்றி, ரங்கராட்டினம் சுற்றி, பஞ்சு மிட்டாய் வாங்கி, கல் உப்பு கொட்டி, நான் எட்டாவது படிக்கும்போது பார்த்த அதே பொம்மைகளை விற்றுக் கொண்டாடுகிறார்கள். பக்தர்கள் செருப்போடு விபூது, குங்குமம் வாங்கிக் கொள்வது மட்டுமே மாற்றம். ‘உயிர்மை’யில் ஜெயமோகன் சொல்வது போல் ‘விஷ்ணுபுர’ களியாட்டங்கள் தேர் திருவிழா முன் எதையும் நான் பார்க்காதது மகிழ்ச்சியாக இருந்தது.

ஆனால், ரிஷபத்தின் முன் ‘குருவி குடைஞ்ச கொய்யாப்பழ’ டான்ஸ் போல் கரகாட்டம் இருந்தது. சூடான இசை, அதை விட sugestive nuance movements என்று கொஞ்சம் எசகுபிசகாக சாமிக்கு முன்பு இரவு ஒரு மணிக்குக் கூத்து நடந்து கொண்டிருந்தது. அறுபத்து மூவருக்காக நீர்மோர், சாம்பார் சாதம், வெண்பொங்கல், சர்க்கரைப் பொங்கல், தயிர் சாதம், சுண்டல், முறுக்கு, பட்டாணி என்று சகலமும் சகலாமானோரும் அளித்தார்கள். அடுத்த நாள் பிஷாடனராக இறைவனார் வந்தார். ஆனால், யாரும் எதுவும் விநியோகிக்கவில்லை.

(தொடரலாம்)

நீங்கள் நார்ஸிஸவாதியா?

Beliefnet.com – Are You a Narcissist?:

“0 – 40 : Selfless spirit. You don’t think much of yourself–literally–and it’s probably helped you get along with people and reduce the anxiety in your life.

41 – 80 : Occasional narcissist. You occasionally think too highly of yourself; catch yourself whenever it seems like the world revolves around you.

81 – 120 : Ego-maniac. You’re prone to delusions of grandeur that may hurt your relationships. Get over yourself!”

என்னுடைய ஸ்கோர் தெரியவேண்டும் என்று பிரியப் படுபவர்களுக்கு, 45-தான் எடுக்க முடிந்தது. எல்லாருமே நார்சிஸ்ட் என்று சிலரும் இந்த நோயைக் கண்டுபிடிப்பது எப்படி என்று நண்பர்களைப் பழிக்கும் ஒருவனின் கதையை சொல்லியும் கலைஞர்களுடனான ஈராயிரம் வருடத் தொடர்பையும் விளக்குகிறார்கள்.

டைம்ஸ் ஆஃப் இந்தியா

மும்பை பதிப்பு

விமர்சகரும் வாசகரும்

பிகேஎஸ் என்ன சொல்ல வருகிறார் என்று நினைக்கிறீர்கள்?

1. பொருள் குற்றம், சொற் குற்றம், இலக்கணக் குற்றம் கண்டுபிடிக்கக் கூடாது.

2. சுய விருப்பு வெறுப்பு சார்ந்து படைப்புகளை விமர்சிக்கிறார்கள்.

3. படைப்புகளைப் பாராட்டுபவர்கள் நார்ஸிஸ மனப்பாங்குடையவர்கள்.

4. வாசகரின் அறிவும் திறனும் படைப்புகளை விட குறைந்து இருந்தால்தான் ரசிக்க முடியும்.

5. விமர்சனங்களால் வாசகனுக்கும் எழுத்தாளனுக்கும் எவ்வித நன்மையும் கிடைக்காது.

6. எழுதிய எழுத்தாளரைவிடவும் சிறப்பாகவும் நுட்பமாகவும் எழுத்தாளரின் படைப்பை அனுபவித்து ரசிக்க வேண்டும். (ஆனால் எழுத்தாளருக்கு அறிமுகமாகியிருக்கக் கூடாது; படைப்பையும் பாராட்டக் கூடாது).

7. தமிழில் விமர்சகர்கள் பெருகி விட்டார்கள். வாசகர்கள் குறைந்து விட்டார்கள்.

8. விமர்சனம் என்கிற பெயரில் எழுதாமல், வாசக அனுபவங்கள் என்று தலைப்பிடவும்.

சென்னையில் ஒரு வெயில் காலம்

பெங்களூரில் இரண்டு வருடம், டெல்லியில் ஒரு வருடம், கல்கத்தாவில் இரண்டு மாதம், ராஜஸ்தானில் நான்கு வருடம், என்று இந்தியாவை க்ளோசப்பில் பார்த்தாலும் சென்னையோடு இருக்கும் love-hate தொடர்பைப் புதுப்பித்துக் கொண்டேன். வழக்கமாக ஒரு நாள் மட்டுமே சென்னையில் தங்கி பாஸ்டன் திரும்பிவிடும் எனக்கு இந்த முறை நீண்ட விடுமுறை. பத்து நாட்கள் இருந்தாலும் கிருஷ்ணா ஸ்வீட்ஸ் மைசூர்பா என திகட்டாத இருப்பு.

போன முறை ஏ.ஆர்.ரெஹ்மானையும் அதற்கு முந்திய முறை ரஞ்சிதாவுடனும் விமானத்தில் சிறிய சந்திப்புகள் கிடைத்தது. இந்த முறை மனைவி+குழந்தை. ‘ஆண்ட்டி என்ன கேட்டா’ என்று ஏர் ஹோஸ்டஸ் ஆங்கிலத்தில் கேட்டதை மொழி பெயர்த்தும், ‘அங்கிள் என்ன சொல்றா’ என்று பைலட் ஜெர்மனில் பேசுவதை விளக்கியும், மஞ்ச பொத்தானை அமுக்காதே என்று சொல்லியும் அமுக்கியதால் வந்து கோபத்துடன் ‘என்ன வேணும்’ என்று வினவிய விமான-விருந்தோம்பியிடம் மன்னிப்பு கேட்டும், மேகங்களையும் பாலைவனங்களையும் வேடிக்கை காட்டியும் விமானப் பயணம் சென்றது.

எனது celebrity meeting disorder syndrome-ஐ த்ரிஷா தீர்த்துவைத்தார். பார்க் ஷெராடன் வாசலில் பேசாத செல்·போனை ரொம்ப நேரம் காதில் வைத்துக் கொண்டு சோகமாகக் காத்திருந்தார். ரொம்ப நேரம் காத்திருந்தும்

பேசுவதாகவும் தெரியவில்லை; செல்பேசியைக் காதை விட்டும் எடுக்கவில்லை என்பதால் பொறுமையிழந்து நகர்ந்தேன்.

சென்னையில் ட்ரா·பிக் நன்றாக நகர்கிறது. பாஸ்டனையோ வேறு வளர்ந்த அமெரிக்க நகரங்களின் downtown-களுடன் ஒப்பிட்டால், ஆனந்தக் கண்ணீரே வருகிறது. பாரிமுனையாகட்டும், திரையரங்குகள் நிறைந்த அண்ணா சாலையாகட்டும், கடைகள் மட்டுமே உள்ள தியாகராய நகர் முதல் ஸ்டெர்லிங் ரோட் வரை எல்லா இடங்களிலும் வெகு எளிதாக ஆட்டோவும், காரும், டூ-வீலர்களும் ஓட்டப்படுகின்றன.

அமெரிக்கர்களுக்குக் கலாசார அதிர்ச்சி ஏற்படும் என்று முன்பு சொல்வார்கள். இப்பொழுது அந்த மாதிரி ஏதும் நிகழாது என உறுதியாக சொல்லலாம். பெண்கள் சுதந்திரமாக க்விகீஸ் காபி கடை வாசல்களிலும், மாண்டியத் ரோட் சந்திப்புகளிலும், இன்ன பிற upscale hangout-இன் திறந்தப் பிரதேசங்களில் ஊதித் தள்ளுகிறார்கள். லை·ப்ஸ்டைல், க்ளோபஸ், ஷாப்பர்ஸ் ஸ்டாப் என எல்லாப் பிரதேசங்களிலும் ஸ்லீவ்லெஸ் மினி டாப்களும், மைக்ரோ ஸ்கர்ட்களும் பாய் ·ப்ரெண்ட்களால் வாங்கித்தரப்படுகின்றன.

பைக்களில் முன்பு குழந்தையை இடுக்கிக் கொண்டு சேலையைப் பிடித்துக் கொண்ட மனைவியை பின்புறம் அமர்த்திய பேண்ட்-ஷர்ட் கனவான்களைப் பார்ப்பேன். அவர்களுடன், டை கட்டிய வாலிபர்கள் கொஞ்ச நாள் முன்பு பார்த்தேன். இப்பொழுது இவர்களுடன் காதில் கடுக்கண் அணிந்த, கறுப்பு பனியன் அணிந்த, அரை நிஜார் அணிந்த வாலிபர்களையும் அவர்களை இறுகப் பற்றிய இறுக்கமான ஆடைகளை அணிந்த வாலிபிகளையும் புதிதாக சேர்த்துக் கொள்ளலாம்.

ஐயங்கார் கல்யாணங்களில் இன்னும் ‘சாத்தமுது வேணுமா’ என விசாரிப்புகளுடன் (காதல் செய்தாலும்) விரிவான கல்யாணங்கள் நடைபெறுவது; கோவில்களில் எக்கச்சக்க கூட்டத்தினால், திடகாத்திரமாக இருந்து தள்ளுமுள்ளு தெரியாவிட்டால் பிரதோஷக் காலங்களில் கபாலி கோவில் உள்ளே கால் வைக்க முடியாமல் இருப்பது; லேண்ட்மார்க் அருகே ‘பார்க்’ என்று நண்பருடன் பேசிக் கொண்டு செல்லும்போது உரிமையோடு மக்கள் ‘பார்க் ஹோட்டல்

இங்கே இல்லையே… வழி தவறிட்டீங்களா?’ என நட்போடு வழி காட்ட முயல்வது; என்று பலவிதத்தில் சென்னையின் flavor intact-ஆக இருக்கிறது.

நிறைய ஆர்ட் காலரிகள்; அவற்றில் விதவிதமான கண்காட்சிகள். ரசனைக்கேற்றவாறு பயிலரங்குகள், கருத்தரங்குகள், திருவிழாக்கள், பொருட்காட்சிகள் என்று ரசிக்கத்தக்க சுவாரசியமான இடம்.

உணர்வுத் தளத்தில் விரியும் உன்னதப் படைப்பு – வையவன்

அமுதசுரபி – சிஃபி: உணர்வுத் தளத்தின் முழு வெளிப்பாடு மட்டுமே கலையாகி விடுவதில்லை. வெளியீட்டு நயம், சிந்தனை, சொந்தக் கால் தடங்களின் வழியே கடந்து செல்லும் புலனுணர்வுகள், இப்படிக் கனிந்த பக்குவத்தை எட்டினால்தான் கலைஞன் தான் அனுபவித்துப் பதிவு செய்யும் ஆனந்தம் கிட்டும்.

வரைந்த படம் வேறு; அனுபவிக்கும் பிரத்யட்சம் வேறு. இந்த இரண்டிற்கும் இடைப்பட்ட நுட்பமான இடை வெளியை இல்லாமல் ஆக்குவதே கலையின் வெற்றி. பாரதிபாலன் இந்தக் தொகுதியில் அமோகமான வெற்றியைப் பெற்றிருக்கிறார். அவரது கிராமம், ஒளி, ஒý சுவை, அசைவு கணங்கள் என்ற மிகைப்படுத்தப்படாத ஸ்பஷ்டமான பதிவுகளோடு இந்தத் தொகுதியில் வெளிப்படுகிறது.

வண்ணத்துப் பூச்சியைக் கொன்றவர்கள் – பாரதிபாலன்,

பக்கங்கள் : 219, விலை : ரூ 80/- வெளியீடு: சந்தியா பதிப்பகம்

உலகமெலாம் தமிழோசை – திருப்பூர் கிருஷ்ணன்

அமுதசுரபி – சிஃபி:”ஒருமுறை என் சகோதரியுடன் பேருந்தில் கேரளப் பயணம் மேற்கொண்டேன். அவளுக்காக வழியில் இறங்கிப் பூ வாங்கினேன். அதற்குள் பேருந்து புறப்பட எத்தனித்தது. அவசர அவசரமாகப் பூவுடன் பேருந்தில் ஏறினேன். “பூவா!’ என்று உரத்த குரýல் கூவினார் நடத்துநர். “ஆமாம்!’ என்றேன் நானும் பதிலுக்கு உரத்த குரýல்! என் சகோதரியின் முகமெல்லாம் முறுவல். என்ன செய்ய? “பூவா’ என்றால் “போகலாம்!’ என்று அர்த்தம் என்பதும் நடத்துநர் ஓட்டுநரிடம் போகலாம் என்பதைத்தான் உரத்த குரýல் தெரிவித்திருக்கிறார் என்பதும் அப்போது எனக்குத் தெரியவில்லை!

இந்தி மக்கள், மிக ஆதரவான வர்கள். நாம் சுமாரான இந்தியில் பேசினால் கூட, அன்போடு சிரித்தவாறே பதில் சொல்வார்கள். ஆங்கிலத்தில் பேசினால் அவர்களிட மிருந்து பதில் கிடைப்பது சிரமம். ஆங்கிலம் பெரும் பாலானவர் களுக்குத் தெரியாது என்பது மட்டுமல்ல; தெரிந்த சிலரும் தெரிந்ததாகக் காட்டிக்கொள்ள மாட்டார்கள்.

ஆங்கிலம் தெரியாவிட்டாலும் கூடத் தெரிந்ததாகக் காட்டிக்கொண்டு அதில் பெருமையும் அடைபவர்கள் தமிழர்கள் மட்டுமே. இந்தியர்கள் இருவர் எங்கு சந்தித்தாலும் தாய்மொழியில் பேசிக்கொண்டால் அவர்கள் மலையாளிகள் என்றும் தப்புத் தப்பான ஆங்கிலத்தில் பேசினால் அவர்கள் தமிழர்கள் என்றும் சொல்வதுண்டு.

தாய்மொழியைத் தவிரக் கூடுதலாக ஓரிரு மொழிகள் தெரிந்துகொள்வது எல்லோருக்கும் நல்லது. குறிப்பாக எழுத்தாளர்களுக்கு மிக மிக நல்லது. எழுத்தாளர்கள் ராஜம்கிருஷ்ணனைப் போல அதிகப் பயணங்கள் மேற்கொள்ள முன்வர வேண்டும். அப்போதுதான் மனம் விசாலமடையும். தமிழ் மட்டுமே தெரிந்து தமிழகத்தில் மட்டுமே உழன்று கொண்டி ருக்கும் எழுத்தாளர்களால் குறுகிய கண்ணோட்டங்களிýருந்து மீள இயலாது. அடிமனத் திலேயே குறுகிய கண்ணோட் டங்கள் தவறு என்று அவர்கள் உணராதவரை வெறும் அறிவுபூர்வ விவாதங்களால் அவர்களை மாற்றவும் இயலாது. அசோக மித்திரன், இந்திரா பார்த்தசாரதி, சுந்தர ராமசாமி போன்ற எழுத்தாளர்கள், ஜாதி, மதம் போன்ற குறுகிய பார்வைகளை விட்டுவிட்டு மேலான தளத்தில் மனிதனை மனிதனாகப் பார்த்து எழுதப் பல காரணங்கள் உண்டு. அவர்கள் பல வெளிநாட்டுப் பயணங்களை மேற்கொள்வதும் அதற்கான முக்கியமான காரணமாய் இருக்கக்கூடும். நாட்டின் பல பாகங்களையும் உலகின் பல பாகங்களையும் போய்ப் பார்த்து வருகிற போது மனம் சுலபமாய் விசாலமடைகிறது. “யாதும் ஊரே!’ என்ற கணியன் பூங்குன்றனாரின் வார்த் தைகளை உண்மையாகவே அனுபவித்து உணர்ந்தால்தான் “யாவரும் கேளிர்!’ என்ற அடுத்த வார்த்தைகளின் ஆழம் புரியும்.”

சிந்தனையைக் கவர்பவர்கள்

மக்களை அதிகம் தாக்கம் செய்யும் புகழ் பெற்ற நூறு பேர்களை டைம் பத்திரிகை வெளியிட்டுள்ளது. அல் க்வெய்தாவின் அல்-ஸர்காவிக்கும் ஒஸாமாவுக்கும் பக்கத்தில் வாஜ்பேயும், புஷ்ஷ¤ம் இருக்கிறார்கள். ரப்பர் ஸ்டாம்புகளான கோ·பி அன்னானை ‘வளரும் நாடுகளின் வாய்’ என்றும் கொண்டலீசா ரைஸை ‘அடுத்த உள்துறை அல்லது பாதுகாப்பு மந்திரி’ என்றும் வருணித்துள்ளார்கள்.

ஆஸ்கார் கொடுக்கப்படும் பிரிவுகள் அனைத்திலும் வென்ற இயக்குனர் பீட்டர் ஜாக்ஸன், ஹாரி பாட்டர் மூலம் சிறிய வயதிலேயே மக்களை ஆக்கிரமிக்கும் ரௌலிங் பாட்டி, அமெரிக்காவின் ‘வணக்கம் தமிழகத்தை’ நடத்தும் கேடி கௌரிக், கூட நம்ம ஐஷ்வர்யா ராயுக்கும் இடம் உண்டு.

நிஜமாகவே மக்கள் மனதை மாற்றும் சக்தி கொண்ட பில் கேட்ஸ், போப், வ்ளாடிமிர் பூடின், நியுஸை கொடுக்கும் ரூபர்ட் முர்டாக், சர்ச்சைகளைக் கிளப்பும் அல்-ஜஸீரா, குப்பை கூளத்தைக் கூட கூவி விற்க செய்த ஈ-பே நாயகி மெக் விட்மான், அகியோர் கூட விப்ரோவின் ஆசிம் ப்ரேம்ஜி இருக்கிறார்.

பிரான்ஸ் சைக்கிள் போட்டியை வென்று கொண்டே இருக்கும் ஆர்ம்ஸ்ட்ராங், பாஸ்டன் பாட்ரியாட்ஸின் கோச் பெலிசிக், ஜீசசின் அதிகாரபூர்வ இயக்குநர் மெல் கிப்ஸன், புத்தகம் முதல் எல்லாவற்றிலும் ரசனையை மேம்படுத்தும் கனிவுள்ள ஓப்ரா, கல்யாணம் நிச்சயித்த பிறகு கோப்பையே வெல்லாவிட்டாலும் டைகர் வுட்ஸ், கலி·போர்னியாவின் ம.கோ.ரா. ஆர்னால்ட், அமெரிக்காவின் நிரந்தர காதல் மன்னன் கிளிண்டன், வருங்கால ஜனாதிபதி ஹில்லாரி, கூட நெல்சன் மண்டேலா, தலாய் லாமா, டேவிட் பெக்கம் என்று பட்டியல் நீளுகிறது.

இவர்களில் பில் கேட்ஸ், ஓப்ரா, போப், மண்டேலா ஆகியோர் ஏற்கனவே டைம் பத்திரிகையின் ‘வருட நாயகர்’ பட்டம் சூட்டப்பட்டவர்கள். ஆராய்ச்சியாளர்கள், சிந்தனையாளர்கள், அறிவியலாளர்கள் பட்டியலில் (டொவால்ட்ஸ் தவிர) என்னால் ஒருவரைக் கூட டக்கென்று அடையாளம் கண்டு பிடிக்க முடியாததுதான் மிகப் பெரிய வருத்தம்!

ரால்·ப் நாடெர் போல வேற எந்த முக்கியமானவரை விட்டுவிட்டார்கள் என்று ஒரு பட்டியல் போடலாம்.

முழு விவரங்களுக்கு

இறப்பு… கொலை… விபத்து…

தமிழ் சிஃபி.காம்: நடிகை சவுந்தர்யா மரணம்



32 வயதான சௌந்தர்யாவுக்கு கடந்த ஏப்ரல் மாதத்தில் தான் பெங்களூர் சாப்ட்வேர் என்ஜினியர் ஸ்ரீதர் என்பவருடன் திருமணம் நடந்தது. மொத்தம் நான்கு மொழிகளில் 60க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள அவர் தயாரித்த ‘துவீபா’ என்ற கன்னட படம் கடந்த ஆண்டு தேசிய விருதைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. 12 ஆண்டுகளுக்கு முன் எம்.பி.பி.எஸ். முதலாமாண்டு படித்துக் கொண்டிருந்தபோது சினிமா வாய்ப்புக்கள் வரவே படிப்பை விட்டுவிட்டு நடிகையானவர் சௌந்தர்யா.

ராஜேஷ் பைலட், மாதவராவ் சிந்தியாவைத் தொடர்ந்து இன்னொரு ஹெலிகாப்டர் விபத்து. இந்தியாவில் காட்டப்படும் அலட்சிய மனப்பான்மை மனதில் நிழலாடுகிறது. பலவித கனவுகளுடன் இருக்கும் அனைவரையும் நினைக்கிறது மனம். திடீரென்று சம்பந்தா சம்பந்தமில்லாமல் பகவத் கீதை தோன்றுகிறது. கொடுத்த வாழ்க்கைக்குக் கடவுளுக்கு நன்றியும்; ரம்பா, ஹேமாமாலினி செல்லும் விமானங்கள் பழுதின்றி பறக்கவும் மனம் வேண்டுகிறது.

Palestinians gather round Rantissi's Subaruஹமாஸ் தலைவர் கொலை: ஹமாஸின் தோற்றுனர் ஷேக் அஹ்மத் ஹாஸினைக் கொன்றது போலவே, அப்தெல் ஆஸிஸ் அல்-ராண்டிஸியும் இறக்கடிக்கப் பட்டார். இஸ்ரேலி ஹெலிகாப்டர்கள் அவரின் காருக்கு ஏவுகணைகள் கொண்டு தாக்கியிருக்கிறது. ஹமாஸின் நம்பர் டூவை வீழ்த்திவிட்டார்கள். ஆனால், மற்ற ஹமாஸின் அடுத்த தலைவர்கள், தொண்டர்களை வெகுவாக சூடேற்றும் அறிக்கைகளை தொடர்ந்து வெளியிட்டு வருகிறார்கள்.

பிறப்பு: 1947

படிப்பு: குழந்தை நல மருத்துவம்

தகவல்களுக்கும் படங்களும் — பிபிசி

வாரயிறுதிக்கு ஓ போடு!

உலாக்கு உலா



Pardon my Planet

ரொம்ப நாளாய் உறங்கிய கலீல் கிப்ரான் விழித்துக் கொண்டு விட்டார்.

இட்லி-வடையின் உதவியால் காம்ப்ளெக்ஸ் நம்பர்களின் ஞாபகம் வந்தது. எட்டாவதிலோ ப்ளஸ் ஒன்னிலோ ஆரம்பித்து சுவாரசியமாய் கூடவே வந்து கொண்டிருந்தது. எதற்கு பயன்படுகிறது, எங்கு உபயோகிக்கிறார்கள் என்று யாராவது சொல்ல வேண்டும்.

பெயரிலி கவிதை மழை பொழிந்து கொண்டிருந்தது போல் பிகேஎஸ் ஆரம்பித்து உள்ளார். ரமணீயின் பதிவுகள் இன்னும் விளங்கிக் கொண்டேனா என்று சந்தேகத்தோடு படிக்க வைக்கிறது. இவருடையது direct delivery.

டைனோ என்று வலைப்பதிவு ஆரம்பித்து கவிதை டைம் கொடுக்கப் போகிறாரோ!

வலைப்பதிவில் சிறுகுறிப்பாக இட்டதை இன்னும் கொஞ்சம் விவரங்கள் சேர்த்து தமிழோவியத்தில் கட்டுரையாக வந்துள்ளது.

உலகத்தமிழின் 43, 44 பதிப்புகள் வெளிவந்து விட்டது. அதில் வெளிவந்த காலச்சுவடு கண்ணன் கட்டுரைக்கு மெய்யப்பர் பதில் கொடுத்துள்ளார்.

தமிழ்-உலகத்தில் வரும் தொடருங்கள் கதைப் போட்டியையும் நடந்த பறிமாடல்களையும் இன்றைய தினமலர் கம்ப்யூட்டர் மலர் விவரிக்கிறது.

பாராவின் காதல் அத்தியாயங்கள் கிறங்கடிக்கும். மெல்லினத்தில் வரும் இளவயதுக் காதல், அலகில்லா விளையாட்டின் கதாநாயகனை உழற்றும் வாத்தியார் மகளுடனான காதல் தோல்வி, தூணிலும் இருப்பான் மீனாட்சி என்று எல்லாவற்றிலும் தொட்டுக் கொள்ள உபயோகித்த காதலை தலைப்பிலே வைத்து 19.75 காதல் கதைகள் வர ஆரம்பித்துள்ளது. இந்த சமயமாவது ஹீரோவும் ஹீரோயினும் சேருவாங்களா???



Rudy Park by Darrin Bell and Theron Heir



ராஜா எழுதியது:

1 புதிய வானம் அஃமார்க் மசாலா படம். அது எந்த வகையில் சிறந்தது என்று விளக்கினால் நல்லது.

2 “அடிதடி” இடம் பெற்றிருக்கும் பட்டியலில் “என்னம்மா கண்ணு” இல்லாதது குறையாக தெரிகிறது. என்னம்மா கண்ணு பரவலாக அனைவராலும் பாராட்ட பட்ட வித்தியாசமான கதை அமைப்பு கொண்ட படம்.

கடமை கண்ணியம் கட்டுபாடு, கடலோர கவிதைகள், வேதம் புதிது, பூவிழி வாசலிலே, அண்ணா நகர் முதல் தெரு,நடிகன் ( சிறந்த நகைச்சுவை சித்திரங்கள், என் பொம்மு குட்டி அம்மாவுக்கு (சத்யராஜும், ரகுவரனும் சந்திக்கும் காட்சிகள் – மிக யதார்த்தம் ஆகியவை சத்யராஜ் படங்களுள் அமரத்துவம் பெற்றவைகளாக நான் கணிக்கிறேன்.

படங்களைப் பட்டியலிட்டது அவரது வளர்ச்சியை சொல்லவே. எப்படிப்பட்ட படங்கள் வெற்றி பெற்றிருக்கின்றன… எங்கே எப்படி மாற்றங்களைக் கொண்டிருக்கிறார்… எவ்வாறு சத்யராஜ் என்னும் பொருள் பரிணாமம் பெற்று மக்கள் மனதில் பதிந்திருக்கிறது என்பதை சொல்ல, நான் கண்ட அவருடைய ஹிட் படங்களை பட்டியலிட்டேன்.

புதிய வானத்தை மிக சமீபத்தில்தான் பார்த்தேன். (அப்பொழுதெல்லாம் பொறுக்கியெடுத்துதான் படம் பார்ப்போம்… சில படங்கள் மசாலா என்பதால் தள்ளுபடி செய்யப்படும். ‘ஜீவா’ போன்ற சில காவியங்கள், அமலாவின் நீச்சலுடைக்காக தடா செய்யப்படும்.) சன் டிவியின் ஒரு சனி மதியத்தில் ‘புதிய வானம்’ காட்டப்பட்டது. அன்று மாலை விஜய் நடித்த படம். புதிய வானத்தின் ஆரம்பத்தில் டாங்கர் ட்ரெய்லர் நிறைந்த சண்டைக் காட்சி. கடைசியில் வீரதீர சண்டைக்குப் பின் குழந்தையைக் காப்பாற்றி தாயிடம் ஒப்படைக்கிறார். அதே டாங்கர் ட்ரெயிலர்+க்ரேன்கள் நிறைந்த வளாகத்தில் ஹீரோயினை மீட்டெடுக்கிறார் விஜய், பத்து வருடத்திற்குப் பிறகு. புதிய வானமுக்கு முன்பே இவ்வகை சண்டைக் காட்சிகள் இடம் பெற்றிருக்கக் கூடும். ஆனால், ஜனரஞ்சகமான வெற்றிப் படம் என்பதை சொல்ல நினைத்தேன்.

‘என்னம்மா கண்ணு’ இன்னும் பார்க்கவில்லை. அண்ணா நகர் முதல் தெரு கூட கடைந்தெடுத்த மசாலாப் படம்தான். நல்ல பாடல் (மெதுவா… மெதுவா ஒரு காதல் பாட்டு…), ரெண்டு மூணு டிஷும் டிஷூம், காமெடி சரி விகிதாசாரத்தில் வந்த படம்.

வாரயிறுதிக்கு ஓ போடு!