Daily Archives: ஏப்ரல் 30, 2004

ஸ்ரீதேவி ஜோடி ஆவாரா?

ரஜினிகாந்தின் புதிய பட தொடக்க விழா, வருகிற மே 4-ம் தேதி (செவ்வாய்க்கிழமை) சித்ராபவுர்ணமி அன்று நடைபெறுகிறது. ஜுலை மாதம் படப்பிடிப்பு தொடங்குகிறது.

நன்றி:

TFM Pages

Daily Thanthi Article Pages

Ravikumar to direct Rajni`s next film – Sify.com

இரண்டு சுந்தர்

கடந்த வாரம் இரண்டு பதிவுகளை மிகவும் உணர்ந்து ரசித்தேன்.

சுந்தரவடிவேல்: நாடக விமர்சனத்தை விட அவர் கிளம்பிய விதமும், விழாவில் நடந்த கூத்துக்களும் அனுபவித்த ஒன்று. ஒரு இடத்துக்கு செல்வதற்கு ஒன்பது மேப் எடுத்துக் கொள்வது; கடைசி நேரத்தில் மனைவியிடம் வரைபடத்தை சரி பார்க்க சொல்வது; அவர்கள் சரியாக சொன்னாலும் நான் தவறான வழியை எடுப்பது; எங்கு சென்றாலும் குழந்தைக்கு ஸ்பெஷல் சாப்பாடு எடுத்து செல்வது; கார் நூறைத் தொடுமா என்று வேகமாக ஓட்டி பார்ப்பது; மாமாவை (போலீஸின் செல்லப் பெயர்) பார்த்தவுடன் பம்முவது; என்று எனக்கு மட்டும் உரித்தான குணாதிசயங்களை சுவாரசியமாக விவரித்திருந்தார்.

சுந்தர்ராஜன்:’குழலூதி மனமெல்லாம்’ மற்றுமொரு நினைவுகளை அசை போட வைத்தது. முன்னாள் அமைச்சர்கள் சாதிக் பாச்சா, பொன். முத்துராமலிங்கத்தின் மகன்களுடன் படித்த ஸ்கூல் காலங்கள் நினைவுக்கு வந்தது. மாண்புமிகு மகன்களோடு ஊரை வலம் வருவதின் பலமே தனி. அப்போது முயற்சி செய்த கோல்ட் ஃப்ளேக் கிங்ஸ்; கொஞ்ச காலம் கழித்து பிலானி மாணவிகளே தம் அடிக்கும் peer pressure-இனால் முயற்சி செய்த மென்தால்-More; ரம்மோடு சேர்ந்த ராத்மேனின் அனுபவமே தனி என்னும் பெங்களூர் சகாக்கள் சொல்லுக்கு மதிப்பு கொடுத்தது எல்லாம் நிழலாடியது. ஏனோ, எதுவுமே வெற்றியடையாததால் வளையமும் விடத் தெரியாது; Patch அணிந்து கொள்ளும் பாக்கியமும் கிடையாது. ‘ஆட்டோகிராஃபில்’ போகிற போக்கில் பட்டியல் போட்டு சென்ற சேரனின் பாடலுக்கு சுந்தரை விட அழகாக யாராலும் பொழிப்புரை எழுத முடியாது!

‘பேரழகன்’ – காதலுக்கு

புஷ்பவனம் குப்புசாமி பாடும் ‘பறை’ பீட் பாடல். நடுவில் ‘குனித்த புருவமும்’ ஷோபனா போல் பாசுரமும் வைத்துக் கொண்டிருக்கிறார்கள்.



சுத்துகிற பூமியில எத்தனையோ சாமி உண்டு

ஏதாச்சும் ஒரு சாமி எங்களக் காக்க வேணுமடா

கூடிநிற்கும் சனங்க எல்லாம் கோஷம் போடுங்கடா

கஞ்சி கேக்கும் வயித்துக்காக காசு போடுங்கடா

காதலுக்குப் பள்ளிக்கூடம் கட்டப் போறேன் நானடி

காம்பவுண்டு சுவருல உன்ன ஒட்டப் போறேன் பாரடி

கண்ணகியின் சிற்பம் ஒண்ணு செத்துப்போச்சு சென்னையில

அந்தச் சில உசிரோட நிக்குது என் கண்ணுக்குள்ள

நட்சத்திரத்த நட்டுவச்ச பல்லுடா

கத்திமுனையில் ஏறி நிற்கும் தில்லுடா

பத்துவிரலும் அர்ச்சுனரு வில்லுடா

என்னப் போல எவனிருக்கான் சொல்லுடா

ஆலமரத் தோப்புக்குள்ள வாழமரம் நீயடி

முக அழகப் பாத்து மயங்கிப்புட்டேன் நானடி

யுவன ஷங்கர் ராஜாவின் முழுப் பாடலையும் கேட்க ராகா செல்லலாம்.

‘பேரழகன்’ பாடல் குறித்த முந்தைய பதிவு.

அருள் – திரைப்பாடல் அறிமுகம்

‘அநியாயம் பண்ணினா ஆண்டவனுக்குப் பிடிக்காது; அசிங்கமாப் பேசினா அருளுக்குப் பிடிக்காது’ என்று அருள் விக்ரம் உதாருடன் நம்மை வரவேற்கிறார். ட்ரெய்லரில் நிறைய அடிதடி; சண்டை முடிந்தவுடன் வேல் கம்பு; அப்புறம் மேற்சொன்ன வசனம். தொடர்ந்து குத்து சண்டை. டிஷ¤ம் டிஷ¥ம் ம்யுசிக் என்று நிறைய முஷ்டி தூக்கும் ரத்தம்.

இசை: ஹாரிஸ் ஜெயராஜ்

மருத மலை அடிவாரம் ஒக்கடாத்துப் பப்படாமே: நா. முத்துகுமார் – எல்.ஆர்.ஈஸ்வரி, டிப்பு, தேனி குஞ்சரம்மா – ***/4

காதல் எதிர்ப்பு அருள்வாக்கு டப்பாங்குத்து. கொஞ்ச நாட்கள் அனைவரின் வேதமாக உலாவரும். எல்.ஆர்.ஈஸ்வரி இன்னொரு ரவுண்டு வரவேண்டும்.

‘கண்ண பார்த்து

கலர பார்த்து

காதலுன்னு நம்ப வேண்டாம்

லைட்டா நீ சிரிச்சாலும்

லைட் ஹவுஸில் பார்த்தேன்னு

சும்மாவே சுத்துவானே ரீலு

லேசா நீ பார்த்தாலும்

ரோசாப்பூ தூக்குதுன்னு

காதுலதான் வைப்பானே பூவு’

பத்து விரல்: வைரமுத்து – எஸ்.பி.பி., ஸ்வர்ணலதா – *.5/4

வரிகள் புரியும் சாதாரணமான தாலாட்டு. இரண்டு நல்ல பாடகர்கள் கடமையை முடித்திருக்கிறார்கள். ஆபீஸில் கேட்காதது உத்தமம். தூங்கிவிடும் அபாயம் இருக்கிறது. புதிய அறிவியல் விஷயங்களை சொல்லும் ஆர்வத்தில் பாதரசத்தின் தன்மையை எழுதியிருக்கிறார்.

ஓசையில்லாத பிம்பத்தை போல விழுந்து விட்டாயே மனசுக்குள்ள!

புண்ணாக்குன்னு: நா. முத்துகுமார் – டிப்பு, ஸ்ரீராம் – **/4

காரணமில்லாமலோ காரணத்துடனோ சாமியின் ‘வேப்பமரம் பாடல்’ நினைவுக்கு வரலாம்.

‘கள்ளில் சிறந்த கள்ளு ஒத்த மரத்து கள்ளு

டயரில் பெரிய டயரு லாரியோட டயரு’

ஒட்டியாணம்: வைரமுத்து – ஹரிஹரன், மதுமிதா – **/4

வைரமுத்து இனிப்பான காதல் பாடல்களை எழுதிக் கொண்டிருந்தார். இப்ப அவருக்கு என்னாச்சுங்க ?

‘தங்கத்தோடு நான் தாரேன்

அங்கத்தோடு நீ வாரியா?

மஞ்சக் கயிறு நீ தந்தா

என்ன உரிச்சு தாரேன்யா’

சூடாமணி: ஸ்னேஹன் – ரஞ்சித், ஷாலினி சிங் – **/4

சிட்டி காலத்திற்கு ஏற்ற பாய்ஸ் ‘டேட்டிங்’ ஆகவும் இல்லாமல், முதல் மரியாதை எசப்பாட்டாகவும் முடியாமல் தவிக்கும் பாடல்.

‘ஆம்பளைக்கு எப்பவுமே கை கொஞ்சம் நீளம்

கூட்டத்தில் பொண்ணு இருந்தா சீண்டிப் பார்க்க தோணும்

பொம்பளைக்கு எப்பவுமே வாய் ரொம்ப அதிகம்

ஆம்பளையக் கண்டா எப்பவுமே ஜாடை பேசத் தோணும்’

‘மின்னலே’ ஹாரிஸ் ஜெயராஜும் தெரியவில்லை; ‘சாமி’யும் ஆடவில்லை. இந்த ஒலி நாடாவைக் கேட்காவிட்டால் பெரிதாக ஒன்றும் தவறவிடப்போவதில்லை. கவிதைக்கெல்லாம் கஷ்டப்படாத பாடல் வரிகள். ஆனால், எனக்கு ‘கில்லி’யின் பாடல்கள் கூட பெரிதாக ரசிக்கவில்லை. சிலர் இப்பொழுது ரம்மியமான பாடல்கள், புத்திசை கானங்கள் என்று விமர்சிக்க, படம் ஹிட்டானதால் ‘கொக்கரக்கோ’வை நூற்றியெட்டு முறை கேட்டதாலும் குழப்பத்தில் உள்ளது போல், இந்தப் பாடல்களுக்கும் வாய்ப்பு இருக்கிறது.

நன்றி: தமிழோவியம்

யாஹு க்ரூப்ஸ்

சில தமிழ் சார்ந்த யாஹு குழுமங்களும் அவற்றில் இருக்கும் உறுப்பினர்களின் எண்ணிக்கைகளும்:

ஆதி மரத்தடி – 72

அகண்ட பாரதம் – 276

அகத்தியர் – 516

தினம் ஒரு கவிதை – 1800

எறும்புகள் – 29

ஈ-சுவடி – 272

ஈ-உதவி – 178

பெட்னா – Federation of Tamil Sangams of North America – 1646

க்ளோபல் தமிழ் – 1262

இந்திய மரபுகள் – 518

கலைச்சொல் – புதிய சொல்லாக்கம் – 81

கலைவாணி – 239

மரபிலக்கியம் – 42

மரத்தடி – 379

மெய்கண்டார் – 243

மதுரை திட்டம் – 309

பொன்னியின் செல்வன் – 405

பொ.செ.-வரலாறு – 86

புத்தகப்புழு – 60

ராயர் காபி க்ளப் – 255

ஆர்.கே.கே – கோப்புகள் – 218

சந்தவசந்தம் – 75

தமிழில் அறிவியல் – 36

தமிழ்ல் தொழிற்நுட்பம் – 21

தமிழ்-உலகம் – 541

தமிழ்-ஆராய்ச்சி – 2038

தமிழ்ப் பாடல்கள் – 4822

தமிழ் வலைப்பதிவாளர்கள் (ஆங்கிலம்) – 34

தமிழ் வலைப்பதிவாளர்கள் – 95

தமிழ் லீனக்ஸ் – 427

பாடல் வரிகள் – 1103

சிறுகதை விவாதகளம் – 57

தினம் ஒரு திரைப்பாடல் – 142

தமிழக மீனவர்கள் – 6

தமிழா! உலாவி – 90

‘தென்றல்’ – அமெரிக்காவில் வெளிவரும் மாத இதழ் – 1273

துளிப்பா – 106

உண்மை – 25

உயிரெழுத்து – 140

வாலி – தமிழ்ப்பாடல் வரிகள் – 582

‘ழ’ கணினி – தமிழ் பிசி திட்டம் – 69

மீண்டும் மீண்டும் படிக்கத் தூண்டும்…

காலச்சுவடு கண்ணன்:

தமிழ் சத்திரம் | நேசமுடன் – தமிழோவியம்



வலைப்பூக்கள்

தமிழ்வலை சுற்றி: நா கண்ணன் | உதயா | காசி ஆறுமுகம் | அருணா ஸ்ரீநிவாஸன்



எனக்குப் பிடித்த கதைகள் – பாவண்ணன்

வளவ.துரையன் | ஜெயஸ்ரீ