அண்ணாச்சி(அமர)காவியம் – குரோம்பேட்டைக் கவிராயர்


Jeeva Jyothiமரபிலக்கியம்:

இட்லி சாம்பாரும் இடியாப்பக் குருமாவும்

லட்டுமிட்டாயும் விற்றிருந்தான் – கெட்ட

சனிதசை கண்டு சகவாசம் பலகொண்டு

இனிமீளா இடம் ஏகினான்.

0

குலவிளக்காய் ஒருமனைவி குடிகெடுக்க அன்றே

அளவெடுத்து வேறொருத்தி நீகொணர்ந்தாய் – விலைகொடுத்து

வேறொன்றும் வாங்க விதியுன்னைத் துரத்தியதால்

பார், இன்று பரதேசிநீ!

Thatstamil செய்திகள்: நேற்று ஜீவஜோதியின் கணவர் பிரின்ஸ் சாந்தகுமார் கொலை வழக்கில் 10 ஆண்டு கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்ட சரவண பவன் ஹோட்டல் அதிபர் ராஜகோபாலுக்கு, ஜீவஜோதி கடத்தல் வழக்கில் இன்று 3 வருட கடுங்காவல் தண்டனை வழங்கப்பட்டுள்ளது. மேலும் ரூ. 10,000 அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டமொன்றை இடுக

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.