Daily Archives: ஏப்ரல் 26, 2004

திங்கள்கிழமை வேலை அதிகம்

1. Tamil Writers Association நடாத்திய சிறுகதைப் போட்டியில் ஜெயந்தியின் பொம்மை கதை இரண்டாவது பரிசைப் பெற்றுள்ளது.: வாழ்த்துக்கள்… (அந்தக் கதை எங்கு கிடைக்கும்???) தனி மடலிலாவது அனுப்ப வேண்டுகிறேன். அட்வான்ஸ் நன்றிகள்.



2. சிலப்பதிகாரத்தில் இலக்கியம்: மருதத்தில் இந்திர விழா , பாலையில் கொற்றவை வழிபாடு, குறிஞ்சியில் முருகன் வழிபாடு, முல்லையில் திருமால் வழிபாடு, நெய்தலுக்குரிய வருணன் வழிபாடு என்று வகைப்படுத்தினார்.

ஐந்திணைகள் ஒரு அடையாளத்துக்கும், அழகுக்கும் தான் என்று சொல்லி அருண் தொகுத்த வலைப்பதிவுகள்:

நெய்தல் – சிரித்து வாழ வேண்டும்!

கொசப்பேட்டைக் குப்சாமி, டுபுக்கு, இட்லி வடை, புண்ணாக்கு, பரி, முத்து, சந்திரவதனா

பாலை – போவோமா ஊர்கோலம்

ஐகாரஸ், வெங்கட், நாட்டாமை, மாலன், ரஜினி, சுந்தரவடிவேல், சாமான்யன், ராஜா, குமரேசன், சுவடு, தங்கமணி

மருதம் – தினம் தினம்

‘என் மூக்கு’, காசி, பத்ரி, பாஸ்டன் பாலாஜி

முல்லை – வலை வலம்

ஜான்போஸ்கோ, குறும்பூ, முத்துராமன்

குறிஞ்சி – வலைப்பதிவுகள் குறித்த முதல் கட்டுரை

பவித்ரா, ராதாகிருஷ்ணன், ஈழநாதன், ‘எளிய தமிழில் இனிய மார்க்கெட்டிங்’, துடிமன்னன்

என்னுடைய கருத்து எதற்கு; தொல்காப்பியர் என்ன சொல்கிறார் என்று பார்ப்போம் 🙂

தொல்காப்பியம் – பொருளதிகாரம்:

மாயோன் மேய காடு உறை உலகமும்

சேயோன் மேய மை வரை உலகமும்

வேந்தன் மேய தீம் புனல் உலகமும்

வருணன் மேய பெரு மணல் உலகமும்

முல்லை குறிஞ்சி மருதம் நெய்தல் எனச்

சொல்லிய முறையான் சொல்லவும் படுமே.

காரும் மாலையும் முல்லை. 6

குறிஞ்சி,

கூதிர் யாமம் என்மனார் புலவர். 7

பனி எதிர் பருவமும் உரித்து என மொழிப. 8

வைகறை விடியல் மருதம். 9

எற்பாடு,

நெய்தல் ஆதல் மெய் பெறத் தோன்றும். 10



3. சாரு நிவேதிதா – கோணல் பக்கங்கள்:

“You Kiss by the book…” – ரோமியோ ஜூலியட்டின் மூலம், ஒரு இத்தாலியக் கதை. Arthur Brooke எழுதிய The Tragical History of Romeus and Julietஐத் தான் ஷேக்ஸ்பியர் தனது ஆதாரமாகக் கொண்டார். சொல்லப்போனால் ஷேக்ஸ்பியரின் எந்தப் படைப்புமே அவரால் சுயமாக புனையப்பட்டவை அல்ல. 1476ம் ஆண்டு Masuccio Salernitano எழுதிய Cinquante Novelle என்ற கவிதை தான் ரோமியோ ஜூலியட்டின் மூலம் என அறியப்படுகிறது. 1562ம் ஆண்டு ஆர்தர் ப்ருக் எழுதிய நெடுங்க விதை. இதுவே ஷேக்ஸ்பியரின் நாடகத்துக்கு அடிப்படை. ஷேக்ஸ்பியர் செய்த ஒரே மாற்றம் ஜூலியட்டின் வயது. ப்ருக் ஜூலியட்டின் வயது 18. ஷேக்ஸ்பியர் ஜூலியட்டுக்கு வயது 13. ஷேக்ஸ்பியர் இந்த நாடகத்தை 1595ம் ஆண்டு எழுதினார்.

இளவேனில் துவங்கி விட்டது… – சமீபத்தில் நண்பர் ப்ரதாப் போத்தனின் வேண்டுகோளுக்கு இணங்க ஷேக்ஸ்பியரின் ரோமியோ ஜூலியட் நாடகத்தைப் படித்தேன். படிக்கும் போதே பல இடங்களில் கண்ணீர் விட்டேன். இதை தமிழில் சினிமாவாக எடுக்க இருக்கிறார் ப்ரதாப். “ஜூலியட் பாத்திரத்தில் நடிக்க பதினேழு வயதில் ஒரு பெண் தேவை’ என்றார். எனக்குத் தெரிந்து பதினேழு வயதான நகரத்துப் பெண்களுக்கு தமிழ் தெரியுமா என்றே சந்தேகமாக உள்ளது.

ஓர் ஆன்மீக அனுபவம்: ரோமியோ ஜூலியட் நாடகத்தை முறையாகப் படித்தவர்கள் அதன் நுணுக்கமான அழகுகளைப் பற்றி அறிந்திருந்தாலும் எனக்கு எழுதலாம். அமெரிக்காவில் வாழும் தமிழர் பலர் பொழுது போகாமல் எங்கள் அண்ணா, லேடி கில்லர் என்று சினிமாவுக்குச் சென்று தங்களின் கலைத்தாகத்தைத் தீர்த்துக் கொள்கின்றனர். தமிழ் சினிமாவில் வரும் இரட்டை அர்த்த வசனங்களைப் போல் ஷேக்ஸ்பியர் வரிக்கு வரி பயன்படுத்தியிருக்கிறார். கத்தி என்பதற்கு ஷேக்ஸ்பியர் தரும் இரண்டாம் அர்த்தம் புரிந்திருக்கும் என்று நினைக்கிறேன்.

ஸீரோ டிகிரி மின் நாவல் விற்பனை நின்று விட்டது. விற்ற எண்ணிக்கை 60. விலை: ஐந்து டாலர். ஆனால், 2000 பேரிடம் இந்த நாவலின் மின்நாவல் பிரதி இப்போது கிடைக்கப் பெற்றுள்ளது.

இந்தக் கட்டுரைகள் ‘உயிர்மை’யிலும் வெளிவருகிறது.


4. ஜிம்பாப்வேயின் கிரிக்கெட் அரசியல்: இப்பொழுது இலங்கை அணிக்கும் ஜிம்பாப்வே அணிக்கும் நடக்கும் கிரிக்கெட் போட்டிகளைப் பார்க்க பரிதாபமாக இருக்கிறது. இதுவரை நடந்துள்ள இரண்டு ஒருநாள் போட்டிகளிலும் ஜிம்பாப்வேக்கு தோல்வி. இப்பொழுதுள்ள ஜிம்பாப்வே அணியை பங்களாதேஷ் கூட எளிதாகத் தோற்கடித்து விடும்!

நேற்று ஜிம்பாப்வே முப்பத்தைந்து ஓட்டங்களை மட்டுமே எடுத்து ஆட்டமிழந்து விட்டது. இது உலகக் கோப்பையில் கனடாவின் மிகக் குறைந்த ரன் எடுக்கும் சாதனையான 36-ஐ முறியடிக்கிறது. ‘4, 4, 7, 0, 0, 2, 4, 0, 4, 0, 3’ என்னும் தலைப்போடு இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தியை வெளியிட்டதாக நண்பர் சொல்கிறார்.


5. ப்ரியமுடன் பிகேபி நாளை கிசுகிசு சொல்வார்!


வசந்த கால வருகை

ஆண்:

மொட்டுகளே மொட்டுகளே

மூச்சு விடா மொட்டுகளே

கண்மணியாள் தூங்குகிறாள்

காலையில் மலருங்கள்

பொன்னரும்புகள் மலர்கையிலே

மென்மெல்லிய சத்தம் வரும்

என் காதலி துயில் கலைந்தால்

என் இதயம் தாங்காது

பெண்:

நீ ஒரு பூ கொடுத்தால்

அதை மார்புக்குள் சூடுகிறேன்

வாடிய பூக்களையும்

பேங்க் லாக்கரில் சேமிக்கிறேன்

ஆண்:

உன் வீட்டு தோட்டம் கண்டு இரவில் வந்து சேர்வேன்

ரோஜாக்களை விட்டுவிட்டு முட்கள் திருடிப் போவேன்

பெண்:

நீ ஆகட்டும் என்றே சொல்லிவிடு

இன் சட்டையில் பூவாய் பூப்பேன்

ஆண்:

காதலி மூச்சு விடும்

காற்றையும் சேகரிப்பேன்

காதலி மிச்சம் வைக்கும்

தேநீர் தீர்த்தம் என்பேன்

பெண்:

கடற்கரை மணலில் நமது

பெயர்கள் எழுதிப் பார்ப்பேன்

அலைவந்து அள்ளிச் செல்ல

கடலைக் கொல்ல பார்ப்பேன்

ஆண்:

உன் நெற்றியில் வேர்வை கண்டவுடன்

நான் வெயிலை வெட்ட பார்ப்பேன்

RAAGA – Roja Koottam – Tamil Movie Songs