Daily Archives: ஏப்ரல் 22, 2004

காதல் சொல்லும் பாடல்

‘பேரரகன்’ சூர்யாவே பேசியிருக்கும் சுவாரசியமான வசன கவிதை ராகாவில் மனதைக் கவர்ந்தது.



அவன்:

ஒரு அழகான பொண்ணு இருந்தா

அதவிட ஒரு அழகான பையன் இருந்தான்

அவங்க ஒரு நாள் சந்திச்சாங்க

அவள்:

என்னது…?

அவன்:

அவளுக்குத் தமிழே வராதுடி

அவள்:

போடா…

அவன்:

ஹே… ஒகே.. ஓகே…

அவளுக்கு அவனப் பிடிச்சது

ஆனா சொல்லலை

ஏன்னு தெரியலை

அவள்:

என்ன…?

அவன்:

ஓண்ணுமில்லே…

அவள்:

சொல்லு!?

அவன்:

அந்தப் பொண்ணு பேசுவா.. பேசுவா…

பேசிட்டே இருப்பா

ஆனா

அது அவனுக்குப் பிடிச்ச ராகம்

அவனுக்கு தூரத்தில இருந்தா தெரியாது

பரவாயில்லை

தன்னுடைய உலகத்தை அவளோடப் பெரிய பெரிய கண்களில் பார்த்தான்

அவ கையெழுத்துக் கிறுக்கல்

ஆனா

அதை எடுத்து

பைத்தியமா இருந்தான்

அவ நடக்கிறப்பக் கொஞ்சம் கசமுசா என்றிருக்கும்

ஆனா அவ முடி அசையறதைப் பார்த்தால்

அந்தக் காற்றுக்கேப் பொறாமை வரும்

அவள்:

ஹே…

நிறுத்து… நிறுத்து

அவன்:

You know Priya

He just loved everything about Her

அவ முடி

அவ நெற்றி

அவ கண்

அவ மூக்கு

அவ கன்னம்

அவ உதடு

அவ கழுத்து

அவ ….

கோரஸ்:

த்தநந…த்தநந…

அவன்:

அவளப் பத்தின நிறைய விஷயம் அவனுக்குப் பிடிக்கலே

அவ பேசற விதம்

ஸ்மோகிங்

The way she behaves

இப்படி நிறைய

நிறையக் கிண்டல் பண்ணியிருக்கான்

அவளப் பிடிச்சிருக்கு

அவன யாருக்கும் பிடிக்கலே

He was really bad Priya

ஆனா தனியா

எப்பவும் தனியா இருந்தான்

அவளுக்கு அவனப் பிடிச்சது ப்ரியா

Don’t know Why

ப்ரியா…!

ஏன் ப்ரியா…?

ஏன் என்னை?

கல்யாணம் பண்ணிக்கோ

எப்பவும் உன்கூடயே இருக்கணும்

உன்னைக் காதலிக்கணும்

உன்னைத் தொல்லை பண்ணனும்

உனக்காக வீட்டுக்கு வரணும்

உன் மடியில் தூங்கணும்

இதே மாதிரி எனக்கொரு குட்டி ப்ரியா வேணும்

அவளை பார்த்துகிட்டே எனக்கு வயசாயிடும்

நான் உன்னோடுதான் சாகணும்

அப்படியில்லேன்னா

சாகணும்

இங்கே…

இப்போ

இளவேனில் கால வாழ்த்துக்கள்



பொங்கல பொங்கல வைக்க

மஞ்சள மஞ்சள எடு

தங்கச்சி தங்கச்சி தங்கச்சி

புஞ்சையும் நஞ்சையும்

இந்த

பூமியும் சாமியும்

இனி

நம் கட்சி நம் கட்சி நம் கட்சி

பூப்பூக்கும் மாசம் தை மாசம்

ஊரெங்கும் வீசும்

பூ வாசம்

சின்னக்கிளிகள் பறந்து ஆட

இன்று கவிகள் குயில்கள் பாட

புது ராகம் புது தாளம்

ஒன்று சேரும் நேரம் இந்நேரம்

வாய்க்கலையும் வயற்காட்டையும்

படைத்தான் எனக்கென

கிராம தேவதை

தெம்மாங்கையும் தெருக்கூத்தையும்

நினைத்தால்

இனித்திடும் வாழும்நாள் வரை

குழந்தைகள் கூட

குமரியும் ஆட

மந்தமாருதம் வீசுது

மலையமாருதம் பாடுது

ஊ…

நான் தூங்கியே

நாளானது

அது ஏன்…

எனக்கொரு மோகம் வந்தது

பால்மேனியும் நூலானது

அது ஏன்…

அதுக்கொரு தாகம் வந்தது

மனதினில் கோடி

நினைவுகள் ஓடி

மன்னன் யாரெனத் தேடுதோ

உன்னைப் பார்த்ததும் கூடுதோ

ஓ…



பாஸ்டனில் கொஞ்சமாக ஸ்பிரிங் ஆரம்பமாவதற்கான அறிகுறிகள் தெரிய ஆரம்பித்துள்ளன…! மேலேயுள்ள படம் அமெரிக்கத் தலைநகர் வாஷிங்டனில் ‘சுட’பட்டது.

நன்றி: RAAGA – Varusham 16 – Tamil Movie Songs

ரஜினி பொம்மையா?

Rajni Toys

பிரமிள்

Introduction to lesser known authors in thamizh:

தருமு சிவராம் என்றழைக்கப்பட்ட பிரமிள், 04-20-39 இல் இலங்கை திருகோணமலையில் பிறந்து வளர்ந்தவர்; எழுபதுகளின் ஆரம்பத்திலேயே இந்தியா வந்து விட்டார். பிறகு தம் பெரும்பாலான வாழ்நாளைச் சென்னையிலேயே கழித்தார். வேலுர் அருகிலுள்ள கரடிக்குடியில் 11-6/97இல் மறைந்தார்.

தமது இருபதாவது வயதில், சென்னையிலிருந்து வெளிவந்த ‘எழுத்து’ பத்திரிக்கையில் எழுத ஆரம்பித்த இவர், பிறகு தமிழகத்திலேயே வாழ்ந்து தம் படைப்புகளை வெளிப்படுத்தியதால், ஒரு தமிழக எழுத்தாளாராகவே மதிக்கப் பட்டார். இலங்கை எழுத்துலகமும் இவ்வாறே இவரை கணித்து வந்துள்ளது.

நவீன தமிழ் இலக்கியத்தில் பாரதிக்கும், புதுமைபித்தனுக்கும் பிறகு தோன்றிய ஒரு மகத்தான ஆளுமை பிரமிள் ஆவார். புதுக்கவிதை, விமர்சனம், சிறுகதை, நாடகம் போன்றவற்றில் இவரது படைப்பாற்றல் ஒரு உயர்ந்த பட்சத்தை எட்டியிருக்கிறது. ஓவியம், களிமண் சிற்பங்கள் செய்வதிலும் திறமை படைத்தவர்; இவரது ஆன்மீக ஈடுபாடு, இலக்கிய ஈடுபாட்டுக்கும் மேலானதாக இருந்து வந்திருக்கிறது. ‘படிமக் கவிஞர்’ என்றும், ‘ஆன்மீகக் கவிஞர்’ என்றும் சிறப்பிக்கப்பட்ட இவரது கவித்துவம், இரண்டாயிரமாண்டுத் தமிழ்க் கவிதை வரலாற்றில், தனித்துயர்ந்து நிற்பதாகும்.

அவரின் சில கவிதைகளுக்கும், முழு விவரங்களுக்கும் ஃபாரம் ஹப் செல்லவும்.

ஆறாம்திணை கவிதைத் தொகுப்பு:

திசை மாற்றம் பட்டகம்



“ஒரு இலக்கிய முயற்சி உருவாவதற்கு மூன்று சக்திகள் துணை புரிகின்றன. இவைகளின் மூலபுருஷர்கள் முறையே எழுதுபவன், வாசகன், பிரசுரிப்பவன் இந்த முறை தான் சரியான முறை. ஆனால் யதார்த்த நிலையில் பிரசுரிப்பவன், வாசகன், எழுதுபவன் என்று மாறியிருந்தால் இலக்கியப் படைப்புகள் தரம் தாழ்கின்றன” – நகுலன்.



விடுகதை:

நீயும் நானும் பார்த்திருக்க

பொன்னாங்கண்ணி பூத்திருக்க – அது என்ன?