உணர்வுத் தளத்தில் விரியும் உன்னதப் படைப்பு – வையவன்


அமுதசுரபி – சிஃபி: உணர்வுத் தளத்தின் முழு வெளிப்பாடு மட்டுமே கலையாகி விடுவதில்லை. வெளியீட்டு நயம், சிந்தனை, சொந்தக் கால் தடங்களின் வழியே கடந்து செல்லும் புலனுணர்வுகள், இப்படிக் கனிந்த பக்குவத்தை எட்டினால்தான் கலைஞன் தான் அனுபவித்துப் பதிவு செய்யும் ஆனந்தம் கிட்டும்.

வரைந்த படம் வேறு; அனுபவிக்கும் பிரத்யட்சம் வேறு. இந்த இரண்டிற்கும் இடைப்பட்ட நுட்பமான இடை வெளியை இல்லாமல் ஆக்குவதே கலையின் வெற்றி. பாரதிபாலன் இந்தக் தொகுதியில் அமோகமான வெற்றியைப் பெற்றிருக்கிறார். அவரது கிராமம், ஒளி, ஒý சுவை, அசைவு கணங்கள் என்ற மிகைப்படுத்தப்படாத ஸ்பஷ்டமான பதிவுகளோடு இந்தத் தொகுதியில் வெளிப்படுகிறது.

வண்ணத்துப் பூச்சியைக் கொன்றவர்கள் – பாரதிபாலன்,

பக்கங்கள் : 219, விலை : ரூ 80/- வெளியீடு: சந்தியா பதிப்பகம்

பின்னூட்டமொன்றை இடுக

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.