Monthly Archives: மார்ச் 2004

பொன்மொழிகள் – போடுங்கம்மா ஓட்டு

TheStar.com: ஹமீத் கர்சாய் பெரிய மனதாக ஒரு அறிக்கை விட்டுள்ளார். மகளிர் தினத்தை இவ்வளவு சிறப்பாக நையாண்டி செய்ய முடியாது. “அன்பு சகோதரர்களே! உங்கள் மனைவியையும் (அல்லது மனைவிகளையும்) சகோதரிகளையும் ஓட்டளிக்கப் பதிவு செய்யுங்கள். அவள் யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்று நீங்களே சொல்லிவிடுங்கள்; ஆனால், ஓட்டளிக்க அனுமதியளிப்பது முக்கியம்”.

ஆஃப்கானிஸ்தாலுள்ள நூறு லட்சம் வாக்காளர்களில், இதுவரை பதின்மூன்று லட்சம் மட்டுமே வாக்காளர் அட்டை பெற்றிருக்கிறார்கள். இதில் கால் பங்கு மட்டுமே பெண்மணிகள்.





Madras Talkies presents ... A Mani Ratnam Film ... Aaiytha Ezhuthu ... Official Website... coming soon..


சிஎன்என்: ஹஃப் – 6 எனப்படும் ஷாஹீன் – 2 ஏவுகணையை பாகிஸ்தான் பரிசோதித்திருக்கிறது. முன்பு புது டில்லி அல்லது பம்பாய் வரையிலுமே தாக்கும் திறன் கொண்ட (435 மைல்) ஹஃப் – 4-ஐ விட, சென்னை/கொல்கதா வரை (1250 மைல்) சென்று அணுகுண்டை விட்டுவிடும் திறன் கொண்டவை.



ஸ்டேட்ஸ்மேன் – மன்னிப்போம்… மறப்போம்: காங்கிரஸை விட பிஜேபி அரசு முஸ்லீம்களுக்கு சாதகமாக இருந்ததாக மத்திய அமைச்சர் ஷாநவாஸ் ஹூசேன் “நாங்கள் கூட செல்பேசி வைத்துக் கொள்கிறோம்” என்கிறார். பிஜேபி அடுக்கும் சாதனை பட்டியல்.

* ஹஜ் உதவித்தொகை

* முஸ்லீம் ராஷ்டிரபதி

* இந்தியா பாகிஸ்தானிடையே மேம்பட்ட உறவு

மக்கள் மறக்கவேண்டியதை ஸ்டேட்ஸ்மான் பட்டியலிடுகிறது:

* குஜராத் நிணைவுகள்

* உணர்ச்சிகளைத் தூண்டும் நரேந்திர மோடியின் சொற்பொழிவுகள்

மகளிர் – கலை… விளையாட்டு… சமூகம்

கல்கி – 01.02.2004

‘புதுக்கோட்டையிலிருந்து சரவணன்’ படத்தின் நாயகி அபர்ணா, அமெரிக்க அழகிப் போட்டியில் ‘மிஸ் ஃபோட்டோ ஜெனிக்’ ஆகத் தேர்வு பெற்றவர். அம்மா, அப்பா, அக்கா, அண்ணன், அண்ணி என இவரது குடும்பமே கல்விப் பணியில் இருக்கிறது. “சென்னை, திருச்சி, துபாய் ஆகிய பகுதிகள்ல மொத்தம் பதினான்கு ஸ்கூல் நடத்தறோம். நானும் அந்தத் துறைக்கு வரணும்னுதான் வீட்ல எல்லோருக்கும் ஆசை. லயோலாவில் விஷுவல் கம்யூனிகேஷன் படிச்சிட்டிருந்தேன். கேமராவுக்குப் பின்னால் நிற்கிற படைப்பாளிக்கான படிப்பு”



– அப்பு (அபர்ணாவை விரட்டிய பேய்!)




அபர்ணாவின் முழு பேட்டியையும் துரத்திய பேயையும் அறிய கல்கி – 01.02.2004 பார்க்கலாம்.


டென்னிஸ் உலகின் மகளிருக்கான பிரிவில், உலக அளவில் இரண்டாவது இடத்தில் இருப்பவர் பெல்ஜியம் நாட்டைச் சேர்ந்த கிம் கிளிஸ்டெர்ஸ். சென்ற ஆண்டு பிரெஞ்ச் ஓபன் மற்றும் அமெரிக்க ஓப்பனின் இறுதி சுற்றையும், ஆஸி. ஓப்பன் மற்றும் விம்பிள்டனின் அரையிறுதிச் சுற்றையும் அடைந்தவர் (ஏனுங்க அம்மணீ… ஒண்ணுத்திலும் கோப்பையை தூக்க மாட்டேன்றீங்க?!)

வரும் ஒலிம்பிக் பந்தயத்தில் இவர் கலந்து கொள்ளப் போவதில்லையென்று அடம் பிடிக்கிறார். காரணம் பதக்கம் அவர்கள் நாட்டுக்குத்தான் (என்பதாக இருக்கலாம்). பெரும் தொகையும் கிடைப்பதில்லை. இவர் மணக்கவிருக்கும்

ஆஸ்திரேலிய டென்னிஸ் சாம்பியனான லேட்டன் ஹெவிட்டும், ஏதென்ஸில் கலந்து கொள்ளப் போவதில்லையாம்.



– குல்லூ (அடம் பிடிக்கிறார் க்ளிஸ்டெர்ஸ்)


“உலகத்திற்கு சேவை செய்யவும், ஆன்மிக ஞானத்தைப் பரப்புவதற்கும், ஒவ்வொரு கிராமத்திலிருந்தும் குறைந்தது இரண்டு இளம் வயதினராவது முன் வந்தால், சமாதானமும் அன்பும் அனைவரும் ஒரே குடும்பம் என்னும் உணர்வும் நிறைந்த புதிய உலகை நாம் உருவாக்கிவிடலாம்” என்று அருளுரைக்கிறார் அம்ருதானந்தமயி. அப்படியொரு பக்குவம், ஆன்மிக நாட்டம், தன்னலம் நினையாத பெருமனம் எல்லோருக்கும் வாய்க்க இறைவன்தான் வழிகாட்ட வேண்டும்.

சின்ன வயதிலேயே வீட்டில் ‘அம்மா’ காசு திருடியதுண்டு. எந்த வீட்டிலாவது யாராவது பசித்திருந்தால் கதாமணிக்குப் பொறுக்காது. தாயாரின் உண்டியல் பணம் அங்கு இடம் மாறிப் பசி தீர்க்கும்.

ஏழைகளுக்கு இலவச வீடுகள் வழங்கும் ‘அமிர்தகுடீரம்’ முக்கியமானது. வரும் பத்தாண்டுகளில் நாடெங்கிலும் ஒரு லட்சம் வீடுகள் கட்டுகிற குறியீடு. இதுவரை உருவாகியிருப்பதில் புனேயில் உள்ள அமிர்தகுடீரம்தான் பெரியது; 1750 வீடுகள் கொண்ட குடியிருப்பு அது.

இன்னும் ஆதரவற்ற பெண்களுக்காக உதவும் மாதாந்திர உதவித் திட்டம் ‘அமிர்த நிதி, ஆதரவற்ற குழந்தைகளின் நலனுக்கான ‘அமிர்த நிகேதன்’, அன்பு இல்லம் என்கிற பெயரில் ‘முதியோர் இல்லம்’ என்று சிறு சிறு திட்டங்கள் ஒரு புறம்.

“இந்த உலகமே உங்களுடைய குடும்பம் என்பதை நினைவில் கொள்ளுங்கள். உங்களை அறியாமல், நீங்கள் உங்களது இடது கையைக் காயப்படுத்தி விட்டால், உடனே உங்களது வலதுகை, இடதுகைக்கு உதவ முன் வருகிறது. ஏனெனில்,

அந்தக் கையும் உங்களது உடலின் அங்கமே என்னும் உணர்வு உங்களுக்கு உள்ளது. இதே போன்ற ஐக்கிய உணர்வோடு, உலகத்தில் உள்ள நமது சகோதர சகோதரிகளுக்கு நாம் உதவ வேண்டும்” என்கிறார் அம்மா.



– பாலன் (வேறென்ன வேண்டும்?)




அனைவருக்கும் மகளிர் தின வாழ்த்துக்கள்… 🙂

தென்றல் – புத்தம் புது பாட்டு

நன்றி: Yahoo! Groups : Vaali

மற்றும் ராகா

புஷ்பவனம் குப்புசாமி:(திரையில் லாரென்ஸ்)

வணக்கம் வணக்கம் வணக்கம்

நான் வாழும் பூமிக்கு வணக்கம்

இருக்கோ இல்லையோ தெரியாது

ஓரு வேலை இருந்தா சாமிக்கும் வணக்கம்

குத்த வெச்சு கூத்து பார்க்கும் உங்களுக்கு வணக்கம்

உச்சியிலே வந்து பார்க்கும் நிலாவுக்கும் வணக்கும்

பரம்பரை சொல்லித் தந்த பாட்டுக்கும் தான் வணக்கம்

நான் பறை போடத் தோலு தந்த மாட்டுக்கும் தான் வணக்கம்

வணக்கம் வணக்கம் வணக்கம்

கோரஸ் 1:

புத்தம் புது பாட்டு வந்தா தாண்டவக்கோனே

ஏன் ரத்தமெல்லாம் தீ பிடிக்கும் தாண்டவக்கோனே

தப்பெடுத்து அடிக்கையிலே தாண்டவக்கோனே

ஏன் நெத்தியிலே இடி இடிக்கும் (அல்லது) கிடுகிடுக்கும் தாண்டவக்கோனே

பாட்டு என்னும் சன்னல் வழி தாண்டவக்கோனே

ஏன் பழையகாலம் தெரியுதடா தாண்டவக்கோனே

பாட்டு என்னும் சன்னல் வழி தாண்டவக்கோனே

ஏன் பழையகாலம் தெரியுதடா தாண்டவக்கோனே

ஹேய்…

கோரஸ் 1

ஏய் மாட்டு வால புடிச்சி மாடக் குளம் கடந்து

தாமரை பூ பறிச்சுத் தந்தேனய்யா என் மச்சினிக்கு

ஆ மஞ்சுவிரட்டுக்குள்ள மயிலக் காளை அடக்கி

தங்கச் செயின் எடுத்து தந்தேனய்யா என் தங்கத்துக்கு

என் ஆனந்திக்கு புடிக்குமுன்னு ஆலமரப் பொந்துக்குள்ள

ஆதியில புடிச்ச கிளி பாதியிலே பறந்திருச்சே

என் பச்சகிளி அது பறந்த பின்னே

நான் ஒத்த கிளி நாளை செத்த கிளி

தந்தன… தந்தன…

ராஜா டாக்கீஸுக்குள்ள ரகசியமா நான் குதிக்க

பாஞ்சு புடிச்சானே பாலயத்தான் – அந்த ரங்கசாமி

நேத்து நனவாக நாளை கனவாக

இன்று என் காலடியில் நழுவுதடா, மனம் உருகுதடா

வந்த தேதி சொன்னதுண்டு, வாழ்ந்த தேதி நெஞ்சில் உண்டு

போகும் தேதி எந்த தேதி, ஊரில் யாரும் சொன்னதுண்டா

போகும் தேதி என் போல் கண்டார் உண்டா

அதைக் கண்டுகொண்ட நானும் கடவுள் தாண்டா

எஸ்.பி.பி.: (திரையில் பார்த்திபன்)

பறை பறை பறை…

விலங்கு விரட்ட பிறந்த பறை

கை விலங்கு ஒடிக்க ஒலிக்கும் பறை

கடைசி தமிழன் இருக்கும் வரை

காதில் ஒலிக்கும் பழைய பறை

வீர பறை, வெற்றி பறை, போர்கள் முடிக்கும்,

புனித பறை ,

கயிறு கட்டி கடலின் அலையை நிறுத்த முடியுமா

விரலை வெட்டி பறையின் இசையை ஒடுக்க முடியுமா

இது விடுதலை இசை, புது வீறு கொள் இசை

வேட்டையாடி வாழ்ந்த எங்கள் பாட்டனின் இசை

பு.கு. : (வசன கவிதை)

என் பாட்டன் முப்பாடன்களோடு போயி சேரப் போறேன்

இப்ப நான் மறுபடியும் அம்மா கர்ப்பப் பையிலே படுத்துகிட்டேன்

எல்லாரும் அம்மவோட வயித்துக்குள்ளே இருக்குறப்போ தெரியுமாமே

ஓரு இருட்டு, அது இப்ப எனக்குத் தெரியுது

கதகதப்பா இருக்கு, நான் மறுபடியும் பொறந்து வருவேண்டா

பத்திரமா பாத்துக்கங்க என் பறையை…

என் அப்பனுக்கும் ஆத்தாளுக்கும் தாண்டவக்கோனே

என் தப்பு சத்தம் கேட்டிடுமா தாண்டவக்கோனே

செய்திகளிலும் வலைப்பதிவுகளிலும் மகாமக முழுக்கு

என்னுடைய ஷார்ப்ரீடர் ஆர் எஸ் எஸ் செய்தியோடை பட்டியலை வலையேற்றி உள்ளேன். குமரகுரு கொடுத்த தமிழ் வலைப்பக்கங்கள் பட்டியலையும் ஸ்லேட்டின் opml கோப்பையும் இணைத்து இன்னும் கொஞ்சம் ஹிந்து ஸ்டேட்ஸ்மான் தேடிப்பிடித்து குருவியாய் சேர்த்த பட்டியல். இவ்வளவு செய்திகளும் படித்தால் வேலையும் பார்க்க இயலாது; சொந்த வலைப் பதிவும் செய்ய முடியாது; உருப்படியாக கிரகிக்கவும் முடியாது போல் மலைப்பாக இருக்கிறது. எனவே, எல்லாவற்றையும் கீழிறக்கி சேர்த்துக் கொள்வதற்குமுன் ஒரு முறைக்கு இரண்டு முறை யோசித்துவிட்டு இணைத்துக் கொள்ளுங்கள்!

அம்மாவின் பொய்கள் – ஞானக்கூத்தன் (1971)

பெண்ணுடன் சினேகம் கொண்டால்

காதறுந்து போகும் என்றாய்

தவறுகள் செய்தால் சாமி

கண்களை குத்தும் என்றாய்

தின்பதற் கேதும் கேட்டால்

வயிற்றுக்குக் கெடுதல் என்றாய்

ஒருமுறை தவிட்டுக்காக

வாங்கினேன் உன்னை என்றாய்

எத்தனை பொய்கள் முன்பு

என்னிடம் சொன்னாய் அம்மா

அத்தனை பொய்கள் முன்பு

சொன்ன நீ எதனாலின்று

பொய்களை நிறுத்திக் கொண்டாய்

தவறு மேல் தவறு செய்யும்

ஆற்றல் போய் விட்டதென்றா?

எனக்கினி பொய்கள் தேவை

இல்லையென் றெண்ணினாயோ?

அல்லது வயதானோர்க்குத்

தகுந்ததாய்ப் பொய்கள் சொல்லும்

பொறுப்பினி அரசாங்கத்தைச்

சார்ந்ததாய்க் கருதினாயா?

தாய்ப்பாலை நிறுத்தல் போலத்

தாய்ப் பொய்யை நிறுத்தலாமா

உன்பிள்ளை உன்னை விட்டால்

வேறெங்கு பெறுவான் பொய்கள்?

—-

ஞானக்கூத்தன் கவிதைகள் – விருட்சம் – ரூ. 80.00

virutcham@mailcity.com

ஹாலிவுட் டு கோலிவுட்

சுந்தர் பசுபதி மூக்கு

அவருடைய மிகப் பெரிய (சமீப காலப் படங்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கும்) பட்டியலில் இருந்து தமிழில் வெளிவந்த ஒத்த படங்களை பட்டியலிட ஆசை:

A walk in the clouds = பூவேலி

AI கன்னத்தில் முத்தமிட்டால்

American pie Baby’s day out = ???

Bruce almighty == உருவங்கள் மாறலாம்

Erin brokowich == கோவில்பட்டி வீரலட்சுமி

Godfather == நாயகன்

Heat சிவசக்தி

Maid in manhattan எல்லாம் இன்ப மயம்

Mask of zorro == நான் சிகப்பு மனிதன்

Meet the parents == காதலா காதலா

Mrs.doubtfire ++ அவ்வை சண்முகி

My best friend’s wedding ==> (மறந்தே போச்சு)???

You’ve got mail ==>காதலர் தினம்

கேள்விக்குறிகளை தெளிவிப்பதற்கும், மற்ற படங்களை சொல்வதற்கும் முன்கூட்டிய நன்றி.

நன்றி: பிடித்த பட பட்டியல்

புலம்பல்ஸ் – ஹரி

Cliche:

1] நண்பன் ஒருவன் முடி வெட்டிக்கொண்டு வரும்போது சக நண்பன் அல்லது நண்பர்கள் சொல்வது “தலைய எந்த பொந்துக்குள்ளடா வுட்ட?”

[2] ரெண்டு பேர் டிவி பாத்திடிருப்போம் – டிவி-ல ஒரு குரங்கு வரும்.. உடனே இவன், ” டேய் உன் friend பாருடா!”

[3] வீட்டு பெரிசு “டேய் என்னடா லீவு விட்டாச்சா? இனிமே அவுத்து வுட்ட கழுதை தான்!”

நன்றி: தமிழ் வழக்கில் க்லீஷேக்கள்

நெடுந்தொடர் ரசிகன்

பவித்ராவின் இன்றைய கோலங்கள் பதிவுக்குத் தோன்றிய கொஞ்சம் பெரிய பின்னூட்டம். நாம் நெடுந்தொடர் பார்க்க ஆரம்பிப்பதுதான் கஷ்டம். தூர்தர்ஷன் ‘மெட்ரோ’ ஆரம்பித்த காலங்களில் ரயில் ஸ்னேஹம் விரும்பி பார்ப்பேன். ‘இரவில் ஒரு பகல்’ என்று ரேவதியும் சுரேஷ் மேனனும் செய்த ஸ்லோ த்ரில்லர் ஒன்றும் நினைவில் நிற்கிறது. இரண்டுக்குமே விழுந்தடித்து செய்யும் வேலையை அந்தரத்தில் விட்டுவிட்டு கவனிக்க செய்தன. கிருஷ்ணசாமியோ, சுப்பிரமணிய சுவாமியோ, வீணையை வைத்துக் கொண்டு இழுத்த ஒரு மகா கடி தொடர் (தலைப்பு தெரியுமா?) பதிமூன்று வாரங்களுக்கு வருகிறது என்பது மட்டும் தெரிந்து கொண்டு பாராமல் கழிப்போம்.

அதையும் ஒன்றிரண்டு வாரங்கள் கவனித்திருந்தால் வலையில் விழுந்திருப்பேன். கோலங்களை ஒன்றிரண்டு நாள் மட்டுமே பார்த்து வருவதால் அதில் வரும் சோகச்சுவை மட்டுமே கண்ணில் படுகிறது. நாத்தனார்களும், மாமியார்களும் படுத்துகிற ஜென்மங்கள்தான். ஆனால், மிகைப்படுத்தலை இங்கும் செய்கிறார்கள். உத்தமராக மாமனார்; அனால், கோழை அல்லது வாய்மூடி அங்கலாய்ப்பவர். வேலைக்கு செல்லும் ஹீரோயின் தேவயானி இவற்றை எல்லாம் மௌனியாக எதிர்க்கமாட்டார் என்பது ‘ஆட்டோகிரா·பின்’ இரண்டாம் காதலி திடீரென்று தமிழ் பேசுவது போல் நம்பமுடியவில்லை.

ஒவ்வொரு சீரியலிலும் சில கேரக்டர்கள் நன்றாக இருக்கும். நடிப்பாலோ அல்லது பாத்திர படைப்பாலோ அல்லது பிடித்த விஷயங்களை செய்வதாலோ அல்லது ஒருங்கிணைந்து கொள்வதினாலோ, எதனால் என்று சொல்லமுடியவில்லை. ‘மெட்டி ஒலி’யில் மாப்பிள்ளை (இவர்தான் ‘கோலங்கள்’ இயக்குனர்; கோலங்களிலும் தேவயானிக்குக் காதல் கடிதம் கொடுத்தவர்; ஆனால், மெட்டி ஒலியில் ராயர்களின் நக்கல் போல் டயலாக் அமர்க்களமாக எவரையும் எகிறாமல் விடாது!), முன்பு வந்த விகடனின் ‘அப்பா’வில் கள்ளச்சாராயம் காய்ச்சுபவனின் மகளாக நடித்த ஒரு தலைக் காதலி, கோலங்களில் தீபா வெங்கட் என்று அடுக்கலாம்.

பவித்ரா சொல்வது வாரத்தில் என்றாவது ஒரு நாள் ஒரு சீரியலை பார்த்தால் deja-vuவும், தலைவலியும் வராமல் நாட்டு நடப்பையும், தொலைக்காட்சிப் பிரியர்களின் ரசனையையும் அறிந்து வைத்துக் கொள்ளலாம். உறவுகள் விரிசலாவதையும் மரபுகள் மீறப்படுவதையும் மட்டுமே வித்தியாசமாக நினைத்து சீரியல் இயக்கும் பாலச்சந்தரை விட ‘கோலங்களும்’ ‘மெட்டி ஒலி’களும் எவ்வளவோ மேல்…

அம்மா மாட்டிகிட்டாங்க!

BBC NEWS | Business | Jury finds Martha Stewart guilty: ரொம்ப நாள் முன்னாடியே சிக்கிக் கொண்டவர்தான் என்றாலும் தீர்ப்பு சீக்கிரமே வெளிவந்து விட்டது. மங்கையர் எப்படி வாழவேண்டும், எவ்வாறு வீட்டை அலங்கரிக்க வேண்டும் என்று ‘அவள் விகடன்’ ரேஞ்சுக்கு அட்வைஸ் கொடுத்துக் கொண்டிருந்தார். ‘இம்க்ளொன்’ நிறுவன அதிபரின் ஆலோசனைப்படி கம்பெனியின் படுப்பதற்கு முன்பே பங்குகளை சகாய விலையில் விற்று பெரும் நஷடத்தைத் தவிர்த்து விட்டார். ஆனால் என்ரான், எம்சிஐ என்று மட்டிக் கொண்ட பிசினஸ்களின் வரிசையில் அடுத்த பெயராக மார்த்தா ஸ்டுவர்ட். பிறருக்குத் தெரியாத தகவல்களைக் கொண்டு 228,000 பங்குகளை விற்றதாக குற்றசாட்டு.

Martha Stewartஇரண்டு தபா பொய்யான வாக்குமூலமும், குற்றம் செய்ததற்காக ஒரு முறையும், காவல்துறையின் செய்ல்பாடுகளைத் தடுத்ததற்காக ஒரு வாட்டியும் தப்பு செய்துவிட்டதாக ஜூரிகள் முடிவெடுத்திருக்கின்றனர். ஒவ்வொரு குற்றத்திற்கும் ஐந்தாண்டு கடுங்காவல் கிடைக்கலாம். மில்லியன் டாலர் அபராதாமும் போடலாம். நீதிபதி மெதுவாகத்தான் முடிவெடுப்பார். ஜூன் 17-தான் தெரியும்.

கல்யாணத்துக்கு என்ன டிரெஸ் போட்டுக்கலாம் என்பது முதல் கழிவறையில் என்ன திரைச்சீலை போடலாம் என்பது வரை அறிவுறுத்தி அதன் மூலம் ஆண்குலத்துக்கு செலவும் டார்ச்சரும் செய்து வந்தவர்களில் ஒருவர் குறைக்க்கப்படுவார்? (டிஸ்க்ளெய்மர் போட்டுக்கலாம்: நான் பெண்ணியத்துக்கு எதிரானவன் அல்ல 🙂 அடுத்த வாரம் மகளிர் தினமாமே… ஏதாவது ஸ்பெஷலாய் செய்ய வேண்டும்! )

நிலாச்சாரல் – நட்சத்ரன்

அகிரா குரோசாவாவின் திரைப்படைப்பியக்கம் : நட்சத்ரன் கடந்த பத்தாண்டுகளாக தமிழ் சிற்றிதழ்களில் கவிதைகள், கட்டுரைகள் எழுதி வருபவர். சுபமங்களா, கணையாழி, சதங்கை, சுந்தரசுகன், குமுதம் ஆகிய இதழ்களிலும், அம்பலம், நிலாச்சாரல், ஆறாம்திணை, திண்ணை ஆகிய இணைய இதழ்களிலும் கவிதைகள் வெளியாகியுள்ளன. தூக்கணாங்குருவிக்கூடு என்ற நாவல் ஒன்றையும் எழுதியுள்ளார்.

“நல்ல திரைப்படம் பற்றிய எழுத்து தமிழில் மிகவும் குறைவு. எனவேதான் நான் திரைப்படக்கட்டுரைகளை பெருமளவில் எழுதத் தீர்மானித்துள்ளேன். அதற்கு முதல்படியாகவே திரைப்பட மேதை அகிரா குரோசாவா பற்றிய இக்கட்டுரை.

முதன் முதலில் அவர் உலகப்புகழ்பெறக் காரணமான படம் ‘ரஷோமான்’(தலைவாயில்) ஆகும். இது உலகெங்கிலும் உள்ள திரைக்கலைஞர்களுக்கெல்லாம் ஒரு இலக்கணமாக அமைந்தது.

இகிரு(1952), செவன் சாமுராய்(1954), குலோநோசு( ரத்த சிம்மாசனம்-1957), செந்தாடி(1965), கனவுகள்(1987), கஸ்ட் ராப்ஸடி(1990) போன்ற மகத்தான திரைப்படங்களைப் படைத்து, உலகத் திரைப்பட வரலாற்றில் தனியிடம் பெற்ற குரோசாவாவுக்கு, அவரது வாழ்நாள் பணிக்காக 1991-ல் சிறப்பு ஆஸ்கார் விருது வழங்கப்பட்டது. ”