Monthly Archives: மார்ச் 2004

யார் இவர்?

LTTE leader Mr. V. Pirapaharan at Heroes dayTamil: “இந்திய அரசு புதிதாக ஆயுதங்களை தரும் அல்லவா?” என்றார் அமைச்சர் பண்டுருட்டியார். தான் கூறியதை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து ரஜீவிடம் சொன்னார். அதை ஆமோதிப்பதுபோல பிரதமரும் தலையசைத்தார். புலிகளின் தலைவர் பிரபாவுடன் ஏதோ ஒரு சுமுகமான இணக்கப்பாட்டிற்கு வந்ததுபோல மகிழ்ச்சியுடன் காணப்பட்டார் ரஜீவ். பிரபாகரனுக்கு மனதில் மகிழ்ச்சி இல்லை. அவரது முகத்தில் அது தெளிவாகத் தெரிந்தது.

பண்டுருட்டியார் சிறிது நேரம் யோசித்தார். ‘இந்த இரகசிய உடன்பாட்டில் சர்ச்சைக்குரிய பல விடயங்கள் இருக்கின்றன அல்லவா? பண விவகாரம் இருக்கிறது. ஆயுதக் கையளிப்புப் பிரச்சினை இருக்கிறது. இதெல்லாம் அம்பலத்திற்கு வந்தால் இந்தியாவிலும் இலங்கையிலும் பெரும் அரசியற் சூறாவளியே ஏற்படும். உங்களுக்கு பிரதமரில் நம்பிக்கையில்லை? இரு பெரும் மனிதர்களின் எழுதப்படாத ஒப்பந்தமாக இருக்கட்டுமே? என்றார் அமைச்சர். ரஜீவ்காந்திக்கும் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துச் சொன்னார்.

Book by Balasinghamஇலங்கையில் வட,கிழக்கு மாகாணங்களைக் கொண்ட நிலப்பரப்பில் தமிழர்களும், தமிழ் பேசும் முஸ்லிம் மக்களும் வரலாற்று hPதியாக வாழ்ந்து வருகின்றார்கள். இந்த நிலம் அவர்களது சொந்த நிலம். அவர்களது தாய்நிலம். இந்த தாயக நிலத்தைப் பிரிக்கும் எந்தத் திட்டத்தையும் தமிழ் மக்கள் ஏற்றுக் கொள்ளப்போவதில்லை. வட-கிழக்கு மாகாணங்களைக் கொண்ட நிலப்பரப்பு தமிழ் பேசும் மக்களின் தாயகமாக இந்திய-இலங்கை ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டபோதும், இந்த தாயக நிலத்தின் பிரதேச ஒருமைப்பாட்டை கருத்து வாக்கெடுப்பிற்கு விடுவது என்ற தீர்மானத்தை நாம் ஏற்றுக் கொள்ள முடியாது. இது தமிழர் தாயகத்தை கூறுபோட வழிவகுக்கும் என்று விளக்கினேன்.

பண்டுருட்டியார். ‘எதற்காக யோசிக் வேண்டும். இந்தியா கொடுத்த ஆயுதங்களில் பழைய, பாவிக்க முடியாத துருப்பிடித்த ஆயுதங்கள் சிலவற்றை கொடுத்தால் போச்சு” என்றார். ‘இந்தியா கொடுத்த ஆயுதங்கள் எல்லாம் அப்படித்தான்” என்று பிரபாகரன் கிண்டலாக பதிலளித்தார்.”

கணை விடும் களங்கள்

ஜெயமோகனைக் கேளுங்கள் முடியப்போகிறது. அதற்கு முன் அவரின் படைப்புகளை அலசி விட்டு வினா தொடுக்கலாம். பொதுவான சில கேள்விகளைப் பாராவிடம் கேட்டு அவரது எண்ணங்களைப் பெறலாம். அப்படி எதுவும் தோன்றாவிட்டால் சில இலக்கிய-ஸ்டாண்டர்ட் கேள்விகள்:

1. படிப்பு அனுபவம் / படைப்பு அனுபவம் என்ற வித்தியாசத்தை பலர் வலியுறுத்துகின்றனர் – நீங்கள் எப்படி பார்க்கிறீர்கள்?

2. உங்கள் சம – கால எழுத்தாளர்களின் உங்களை வாசிக்கத் தூண்டிய எழுத்து யாருடையதாக இருந்தது?

3. பத்திரிகை ஆசிரியராக இருந்திருக்கிறீர்கள். உங்கள் Sensitivity – யை இவைகள் பாதித்தனவா அல்லது மேலும் எழுத வித்திட்டதா?

4. சென்னை நூல் வெளியிட்டு விழாக்கள் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

5. பொதுவாக இன்று “சாதி” எழுத்துக்கள் “தனித்த அடையாளம்” என்ற பெயரில் உருவாகின்றனவே? இது ஆரோக்கியமான போக்கா?

6. டி.வி. மெகாசீரியல்கள் குறித்து உங்கள் பார்வை என்ன?

7. நீங்கள் ஏன் இலக்கியத்தின் மற்ற வடிவங்களை பிரயோகிக்கவில்லை. அதாவது கவிதை உலகில் நீங்கள் பரவலாக கவனம் பெறாமல் போன காரணம் என்ன?

8. தத்துவ இலக்கிய உலகிற்குள் எப்போது நுழைந்தீர்கள்? ஏன்?

9. உங்கள் படைப்புலகத்திற்கு உந்து சக்தியாய் அமைந்த இளமைக்கால அனுபவங்களைக் கூறமுடியுமா?

10. அடுத்து என்ன முயற்சியில் ஈடுபட்டுள்ளீர்கள்?

நன்றி: வெப்-உலகம்

சூரியனும் நிலாவும்……. – பிரேம் நிமல்

பிரேம் நிமல் வலைப்பதிவு:

பூமிதான் அம்மா

நிலா தம்பி

சூரியன்தான் அண்ணன்

….

….

தானே விளையாட்டில் வெற்றி

கொள்ள வேண்டும் என்ற

ஆசையில் அங்கேயே நிற்கிறான் அண்ணன்…

அங்கே சென்றால் நாம் தோல்வி

அடைந்து விடுவோமோ

என்ற பயத்தில் செல்லாமல்

அம்மாவை சுற்றுகிறான் தம்பி….

அம்மாவும் தன் வேலையை

பார்த்துக்கொண்டிருக்கிறாள்…..

இத்தனை காலம் முடிந்தும்

அண்ணன் தம்பி பக்கத்திலும்,

தம்பி அண்ணன் ப்க்கத்திலும்,

செல்லாமல் இருக்கின்றனர்…………….

ஆண்டுவிழா மலர் – ஆசிப் மீரான்

தமிழ்-உலகம் – ஆசிப் மீரான்: வருகிற மே மாதம் முதல்வாரம் அமீரகத் தமிழிணைய நண்பர்கள் அமைப்பின் நான்காமாண்டு நிறைவுவிழா நடைபெறவிருக்கிறது. எல்லா வருடங்களையும் போலவே இந்த விழாவின்போது கணினியில் தமிழ் தொடர்பான செயல்முறைவிளக்கம்,குறுந்தகட்டில் தமிழ் மென்பொருட்களின் இலவச வினியோகம், கவியரங்கு, நூல் வெளியீடு ஆகியவை முக்கிய நிகழ்வாக இடம் பெறப் போகின்றன.

அமீரகத் தமிழ் அமைப்புக்களின் பிரதிநிதிகளும், முக்கிய பிரமுகர்களும் கலந்து கொள்ளும் இந்த விழாவில் குறைந்தது 500 பேராவது கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கிறோம். இந்த விழாவின்போது வெளியிடுவதற்காக ஆண்டுவிழா மலர் தயாரிக்கும் வேலைகளிலும் நாங்கள் இப்போது ஈடுபட்டிருக்கிறோம்..இதற்காக தமிழறிஞர்கள்,ஆன்றோர் பெருமக்களிடமிருந்து ஆக்கங்களை வரவழைத்துக் கொண்டிருக்கிறோம்.

1000 பிரதிகள் அச்சிடப்படும் இந்த் ஆண்டு விழா மலரில் உங்களது ஆக்கமும் இடம் பெற வேண்டுமென்றால் வரும் ஏப்ரல் மாதம் 10ஆம் தேதிக்குள்ளாக உங்களது படைப்புகளை எனக்கு அனுப்பித் தரும்படி மிக அன்புடன் வேண்டுகிறேன்.

aaNdu vizaa malar padaippu என தலைப்பிட்டு அனுப்பினால் மிக நன்றியுடையவனாவேன்.

அமீரகத் தமிழிணைய நண்பர்களின் ஆண்டு விழா மலரைச் சிறப்பிக்கும் வண்ணம் உங்கள் ஆக்கங்களை அனுப்பித தருமாறு மீண்டும் அன்புடன் வேண்டுகிறேன்.

மிக்க அன்புடன்,

ஆசிப் மீரான் – aj at emirates . net . ae

(அமீரகத்தமிழிணைய நண்பர்களின் மலர் குழுவினருக்காக)

வாக்களித்த அனைவருக்கும் நன்றி

அடுத்த கருத்துக்கணிப்பு:

தங்களை எண்ணங்களை அதிகம் தாக்கம் செய்யும் வலைப்பதிவு எது?

1. ஆப்பு 2. பத்ரி 3. இட்லி-வடை

4. கார்த்திக்ராமாஸ் 5. பெயரிலி 6. பாரா

7. ரஜினி ராம்கி 8. தங்கமணி 9. வலைப்பூ

10. அனைத்து வலைப்பதிவுகளிலும் நகைச்சுவையையே மிளிர்கிறது.

தங்கள் மேலான ஓட்டைப் பதிவு செய்ய (விரைவில்) அழைக்கிறேன் 🙂

திருட்டு ஆய்த எழுத்து

தயவு செய்து ஒலிப்பேழையோ, வட்டோ வாங்கி விடவும். அது வரையில் பாடல்களைக் கேட்பதற்கு:

ஃபனா

குட் பை நண்பா

ஜனகனமண

நெஞ்சம் எல்லாம் காதல்

சண்டைக் கோழி

டோல் டோல்

நன்றி: டீகட

அங்கும் இங்கும்

இல்லாத ஒன்றை இருப்பதாக சொல்வதில் கருணாநிதியும் ஜெஜெவும்தான் தேர்ந்தவர்கள் என்று நினைத்திருந்தேன். ஆதாரமற்ற குற்றசாசாட்டுகளை வைப்பதில் தமிழருக்கு எந்த விதத்திலும் ஜான் கெர்ரியும் சளைத்தவரல்லர். அபாண்டமாகப் பழி போடுவதை விட நேரடியாக பச்சை பச்சையாகத் திட்டுவதே மேலா?

அப்படியானால், வெஸ்ட் விங், 24, சிக்ஸ் ஃபீட் அண்டர் போன்ற தொலைக்காட்சி நட்சத்திரங்களுக்குப் பிடித்த கெட்ட வார்த்தைகளைப் பார்க்கலாம். (இந்த மாதிரி சுட்டி கொடுப்பதற்காக எந்தத் தகாத வார்த்தையை உபயோகித்தீர்கள்?)

இந்த மாதிரி உரல்கள் ஏன் கொடுத்தாய் என்று கேட்டால் ரிபப்ளிகன் பொன்மொழிகள் பலவற்றுள் மாதிரிக்கு ஒன்றை மொழிபெயர்த்தால் தன்னிலை மறுப்புக்கு உதவும்:

நான் தளபதி – யாருக்கும் விளக்கம் தரத் தேவையில்லை; ஏன் செஞ்சேன், எதற்காக சொன்னேன் என்று எல்லாம் விளக்க வேண்டாம். ஜனாதிபதியாக இருப்பதன் பலன் இதுதான். மற்றவர்கள், தான் செய்வதற்கு நியாயம் கற்பிக்க அவசியம் இருக்கலாம்; நான் யாருக்கும் விளக்கம் சொல்ல கடமைப்பட்டவன் போல் தோன்றவில்லை. – ஜார்ஜ் புஷ் (நவ. 19, 2002)

வெள்ளை மாளிகையில் அதிபர் ஜார்ஜ் புஷ்ஷை கமல் சந்திப்பார் என்று தெரிகிறது என்னும் செய்தியை நிலா முற்றம் சொல்கிறது. இந்தச் செய்தி உத்தரவாதமானதுதானா என்று கூகிளில் தேடலாம் என்றால் நம்பாதே என்று அறைகூவுகிறது எனக்கு வந்த ஒரு மடல். அமெரிக்கரின் வசம் இருக்கும் கூகிளும் ஃப்ரெஞ்சுக்கு எதிராகத்தான் பக்கங்களை வரவழைத்துத் தருகிறது போல.

ஆனால், வதந்திகளை நம்பக் கூடாது. புக்கர் பரிசை நூலிழையில் தவறவிட்ட மோனிகா அலி ஆரஞ்சு பரிசையாவது வெல்லலாம் என ஆருடம் நிலவுகிறது. தாய்பே டைம்ஸ் கூடப் புகழும் ரூபா பாஜ்வா, இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஜும்பா லஹரி, காம்பிளியின் கதை சொல்லும் சிமாமந்தா என்று சரியான போட்டி நிலவுகிறது.

பிகு: இல்லிஸ்ட்ரேடட் வீக்லியில் வாராவாரம் ‘Separated at Birth’ என்ற பகுதியின் நினைவாக ரெஹ்மான்/மாதவன் படம்.

ஆய்த எழுத்து – பாடல்கள்

எம்பி3யில் கேட்க.

ரியல் மீடியாவில் கேட்க:

குட் பை நண்பா – ஷங்கர் மஹாதேவன், சுனிதா சாரதி, லக்கி அலி, கார்த்திக்

ஜனகனமண – ஏ. ஆர். ரெஹ்மான், கார்த்திக்

சண்டைக் கோழி – மதுஸ்ரீ, ஏ. ஆர். ரெஹ்மான்

டோல் டோல் – ராப்: ப்ளேஸ்/ஷாஹீன்

நெஞ்சம் எல்லாம் காதல் அத்னான் சாமி, சுஜாதா

ஃபனா – ஏ. ஆர். ரெஹ்மான், சுனிதா சாரதி, ஷாலினி சிங்

நன்றி:

1. டீகட பின்னூட்டங்கள்

2. ஏ. ஆர். ரெஹ்மான்

தெரிந்தது மட்டும் vs. கற்றதும் பெற்றதும்



Non Sequitur

பிகு: தலைப்புக்கும் படத்துக்கும் என்ன சம்பந்தம் என்று எல்லாம் யோசித்து வழுக்கையாக வேண்டாம்.

அங்கம்மாளின் கவலை – ஞானக்கூத்தன் (1981)

பலகைக் கதவில் நான்காவதனைக்

கஷ்டப்பட்டு விலக்கி எடுக்கையில்

அங்கம்மாளின் கண்ணில் நாராயணன்

வருவது தெரிந்ததும் அலுத்துக் கொண்டாள்

ஊதுவத்தியில் இரண்டைக் கொளுத்திப்

பூ கிடைக்காத சாமிப் படத்துக்கும்

கல்லாப் பெட்டிக்கும் காட்டிவிட்டு

இடத்தில் அமர்ந்தாள் அங்கம்மாள்.

கடைக்கு நாராயணன் வந்து சேர்ந்தான்

சங்கடமான சிரிப்பொன்று காட்டினான்.

பார்க்காதவள் போல் அவளிருந்தாள்

சுருட்டுக்காக அவன் வந்திருந்தான்

முதல் வியாபாரத்தில் கடனைச் சொல்ல

கூச்சப்பட்டு ஓரமாய் நின்றான்

என்ன வென்று அவள் கேட்கவில்லை

என்ன வென்று அறிந்திருந்ததால்

சைகிளில் வந்தான் சுப்பிரமணியன்

அவனைக் கண்டதும் அவள் வியர்த்தாள்

காலைப் பொழுதில் இரண்டாயிற்று

இன்றைக் கெப்படி ஆகப் போகுதோ?

“என்னடா நாணி? ஆரம்பிக்கலையா?”

“உன்னைத்தான் பார்த்தேன் நீ ஆரம்பி.”

அங்கம்மாள் இந்தப் பேச்சை கேட்டு

உள்ளுக்குள்ளே எரியத் தொடங்கினாள்.

“நாணிக்கிரண்டு எனக்கிரண்டு

நடக்கட்டும் வியாபாரம் இன்றைக்கென்று

சுப்பிரமணியன் வண்டியை விட்டுக்

கடைக்குப் பக்கமாய் நெருங்கி வந்தான்

ஒன்றும் சொல்லாமல் அவள் இருந்தாள்

வேகம் குறையாத நடை பயின்று

கோபாலன் வந்தான் சேர்ந்து கொண்டான்

கேட்பதைத் தனக்கும் சேர்த்துக் கேளென்றான்

அங்கம்மாள் அவனை ஒருகணம் முறைத்தாள்

“என்ன முறைக்குது அங்கம்மா?” என்றான்

எல்லா முறைப்பும் சரியாப் போய்விடும்

வருகிறான் அங்கே ரத்தினம்” என்றான்

அந்தப் பெயரை கேட்டதும் அங்கம்மா

கொஞ்சம் பதறி நிலைமைக்கு வந்தாள்

‘என்னடா அங்கே காலை வேளையில்

கிண்டல் கலாட்டா நமது கடையில்?

ரத்தினம் குறும்புடன் சிரித்துக் கூறினான்

“வாடா இன்னும் மத்தவனெல்லாம்

வரலியா?” என்றாள் அங்கம்மா

“என்னடா ரத்தினம் பெண்டாட்டி வாயில்

அடாபுடா? வெட்கம்” என்றான் கோபாலன்

சீற்றத்தோடு அங்கம்மாள் எழுந்து

நாயென்றும் கழுதையென்றும் அவர்களைத்

திட்டினாள்

“கணவன் மனைவி உறவில் இதெல்லாம்

சகஜம்” என்று ரத்தினம் சொன்னான்.

“நீங்களெல்லாம் படித்தவர்கள் தானா?

உங்களுக்கு எந்த மூடன் கொடுத்தான்

பட்டங்கள்?” என்று பொரிந்தாள் அங்கம்மா.

‘அவரும் ஒருவேளை உன்னிடம் வருவார்

சுருட்டுக் கேட்டெ’ன்று நாராயணன் சொன்னான்

“அவரைப் பிடித்துக் கொண்டு அப்புறம் என்னை

விட்டு விடாதே”யென்று ரத்தினம் கெஞ்சினான்

அந்தச் சமயம் வேணுவும் வந்தான்

சுருட்டை எடுக்கக் கடைக்குள் நீண்ட

வேணுவின் கையை அவள் மடக்கினாள்

சுகமோ சுகமென்று வேணு பாடினான்

ரத்தினம் அவனது தலையில் தட்டி

அத்து மீறினால் உதை என்று சொல்லி என்

பெண்டாட்டி என்பது மறந்ததா என்றான்

மன்னிக்கச் சொல்லி வேணு சிரித்தான்

வேணுவின் கையை மடக்கிய வேகத்தில்

சேலை நகர்ந்து சிறிது வெளிப்பட

நல்லதாய்ப் பெயரை உங்கப்பன் வைத்தான்

என்றான் ரத்தினம் அங்கம்மாளுக்குக்

கோபம் பொரிய உங்கம்மாவைப்

பார்த்துச் சொல்லென்று உரக்கக் கூவினாள்

இடையில் சிறுவன் மிட்டாய்க்கு வந்தான்

எடுத்துக் கொடுத்து அனுப்பிய பின்பு

சீயக்காய்க்குக் கிழவி ஒருத்தியும்

வெற்றிலைக்குக் கோனார் ஒருவரும்

ஊறுகாய்க் கென்று பிச்சைக் காரியும்

வந்து போனதும் கோபாலன் மெல்ல

முதல் வியாபாரம் நடந்த பிற்பாடு

தாமதம் ஏனென்று கையை நீட்டினான்

நீட்டிய கையைத் தட்டி நீக்கினாள்

தட்டிய கையைத் தீண்டிய தன் கையை

முத்தம் கொடுத்து பிறர்க்கு நீட்டினான்

அந்தக் கைக்கு முத்தம் கொடுத்தனர்

கௌரவமான தகப்பன் தாய்க்குப்

பிறக்காத பிறவிகள் நீங்களென்று

ஒட்டு மொத்தமாய் அங்கம்மாள் திட்டினாள்

உன்னைப் பார்த்தோம் உன்னைத் தொட்டோம்

முத்தம் கூடக் கிடைத்துவிட்டது

சுருட்டைக் கொடுத்து எங்களை அனுப்பென்று

வேணு நயமாய் எடுத்துக் கூறினான்.

அவளுக்குக் கோபம் எல்லை தாண்டிற்று

அவர்கள் சிரிப்பும் எல்லை தாண்டிற்று

அடுத்த வீடுகள் எதிர்த்த வீடுகள்

இன்னும் தெருவில் போவோர் வருவோர்

அனைவரும் இதனைப் பார்த்து ரசிக்க ஒரு

சுருட்டுப் பெட்டியைத் தெருவில் எறிந்தாள்

ஆளுக் கொன்று பற்ற வைத்துத்

தங்கள் பாக்கியை ஒன்றாய்த் திரட்டி

அங்கம்மாளை ஆங்கிலப் படத்துக்குக்

கூட்டிக் கொண்டு போகலாமென்று

ரத்தினம் சொல்ல அனைவரும் சிரித்தனர்

ஒன்பதுக் கப்புறம் இரவில் பார்ப்பதாய்

வேணு சொன்னதும் அனைவரும் கலைந்தனர்.

அங்கம்மாள் இருக்கையில் அமர்ந்தாள்

அருகில் இருந்த ஒருவரைக் கேட்டாள்.

‘என்ன சாமி எனக்கும் வயது

நாளை வந்தால் ஐம்பதாகிறது

இந்தப் பிள்ளைகள் என்னைத் தாயாய்

நினைக்காமல் போகக் காரணம் என்ன?’

—-

ஞானக்கூத்தன் கவிதைகள் – விருட்சம் – ரூ. 80.00

virutcham@mailcity.com