Monthly Archives: மார்ச் 2004

"இப்படி ஒரு மாமியார் இருப்பாரா"



Kolangal Serial by Sun TV
தமிழ் சிஃபி.காம்: “இந்த மாதிரி மாமியாருங்க எக்கச்சக்கமா இருக்காங்க. சும்மா.. அப்படியே கிராமப் பக்கம் போய்ப்பாருங்க. அப்ப தெரியும் இதைவிட கரிச்சு கொட்ற மாமியாருங்க நிஜமாவே இருக்காங்க.

தேவயானி கேரக்டரே வித்தியாசமானது. குடும்பத்தில் அவங்க மூத்த பெண். தன்னோட பொறுப்பை உணர்ந்து எல்லா விஷயங்களையும் அமைதியாக சகித்துக்கொள்கிற உறுதியான பெண். அவளால் மாமியாரை எதிர்த்து பேசமுடியாது என்று அர்த்தமல்ல. யாருக்கும் தன்னை புரிந்துகொள்ளும் தன்மை இல்லை என்று விலகிவிடுகிறாள். அவ்வளவுதான்.”

கோலங்கள் இயக்குநர் திருசெல்வம்.

குழுமங்களிலும் வலைப்பதிவுகளிலும் என்ன எழுதலாம்?



to be frank with you , நான் ஆ.வி பாத்துட்டு கிளப்புக்குள்ள சேந்ததே ஒரு பார்வையாளனாகத்தான். பங்கேற்பாளனாக இல்லை. . ஹா இது தான் நமக்கான இடம். தடையில்லாம் இனிமே படிக்கலாம்னு நெனைச்சேன். உங்க புஸ்தமெல்லாம் படிச்சது, புடிச்சது இதெல்லாம்

” அப்பா. நலம். ஹாஸ்டலில் மெஸ்ஸுக்கு பணம் கட்டவேண்டும் (பொய்) .உடனே ஐநூறு ரூபாய் தந்தி மணியார்டரில் அனுப்பவும்” அப்படிங்கற மாதிரியான கடிதம் தவிர்த்து, வேற எழுதறது எனக்கு பழக்கமே இல்லை. ஒரு ஆங்கில மாதமிருமுறை பத்திரிக்கையில், கரஸ்பாண்டென்ட்டாக ஒரு ஐந்து ஆண்டுகள் பணியாற்றியதால், ஆங்கிலம் மட்டும் சுமாராக வரும். கிளப்புக்குள்ளே சேந்தப்புறந்தான் எனக்கே தெரியும் ஆங்கிலத்த விட தமிழ் நல்லா வருதுன்னு.

எவ்ளோ அசையாக வந்தேன் தெரியுங்களா ? ஒரு நாள் ஓய்வா இருந்தப்போ பழைய மடல்களை யெல்லாம் பாத்தேன் . மனசு ஆத்து ஆத்து போறது சார். எவ்ளோ நல்ல டாபிக், எத்தனை பேரோட பங்களிப்பு, மனசு புண்படாத கால் வாரல்கள், புதுசு புதுசான செய்திகள், எத்தனை எழுத்தாள , நூல் அறிமுகங்கள். அதெல்லாம் எங்க போச்சுன்னே தெரியலையே? சே. அப்பமே நான் சேந்திருக்கணும் .

புச்சு புச்சா இன்னும் எழுதவேண்டியது எவ்ளோ இருக்கு?

Madras Musings s.முத்தையா பத்தி,

‘கரைந்த நிழல்கள்’ பத்தி,

நகைச்சுவை துளியுமில்லாமல் அங்கதம் எழுதும் இ.பா பத்தி,

ஆர்.சூடாமணியின் கதைகள் பத்தி,

ஜெயகாந்தனின் தற்போதைய சமரசங்கள் பத்தி,

கிருத்திகாவின் ‘வாசவேஸ்வரம் பத்தி,

எம்.வி.வி யின் ‘பெட்கி’ பத்தி,

திசைகள் பத்தி,

சாவி உருவாக்கிய எழுத்தாளர்கள் பத்தி,

சுப்ரமண்ய ராஜு ‘கசடதபற வில்’ எழுதிய மீராவின் கவிதைதொகுப்பின் விமர்சனம் பத்தி ( மீரா நல்ல கவிஞர். ஆனால் கவிதைகளே எழுதவில்லை – சு.ராஜூ),

ஆத்மாநாம் கவிதைகள் பத்தி, ;

‘கால்களின் ஆல்பம்’ பத்தி,

சிங்கப்பூர் அரவிந்தன் பத்தி,

வத்சலாவின் கவிதைகள் பத்தி,

சத்தியமாக கண்ணில் நீர் வரச்செய்த ‘தீட்டுக்கறை படிந்த பூ அழிந்த சேலைகள் ‘ என்கிற ஈழக்கவிதை பத்தி,

Aldous Huxely பத்தி,

பாதிராஜ்யம் பத்தி,

யே ஜோ ஹை ஜிந்தகி பத்தி,

‘different strokes’ பத்தி,

நளினி சிங்கின் டெலி ரிபோர்ட்டிங் பத்தி,

M.J. அக்பர் பத்தி,

அல்பாயுசில் போய்விட்ட அற்புதமான ந்யூஸ் ப்ரசென்ட்டர் அப்பன் மேனோன் பத்தி,

வயலார் பாட்டு பத்தி,

சௌந்த்ர்யாவின் த்வீபா பத்தி,

எம்.எஸ்.சத்யு வின் கரம் ஹவா பத்தி,

‘பரதனின் ‘தகரா’ , ‘சாவித்திரி ‘ பத்தி,

ஜென்சி யோட பாடல்கள் பத்தி,

சுதா வின் ‘குறையன்றுமில்லை’ பத்தி,

phaneesh murthy யின் திருவிளையாடல் பத்தி,

இளையராஜாவின் கன்னட திரைஇசை பத்தி,

புட்டண்ணா கனகாலின் ‘நாகரஹாவு’ பத்தி,

மாஸ்தி வெங்கடேச ஐயங்கார் பத்தி,

அகில பாரத நாடக விழாவில் முதல் பரிசு வாங்கிய மாலனின் sci-fi ரேடியோ நாடகம் பத்தி,

ருத்ரையா பத்தி,

ஆற்றூர் ரவிவர்மா பத்தி,

‘சங்க சித்திரங்கள்’ பத்தி,

அ.ச.ஞா வின் தமிழ் பத்தி,

வாத்யாரின் ‘ஆர்யபட்டாவிற்கும்’ எஸ்.பாலச்சந்தரின் ‘அந்த நாளு’க்கும் உள்ள ஒற்றுமை பத்தி,

டி.ஆர் ராமச்சந்திரன் பத்தி, காளி.என்.ரத்தினம் பத்தி,

ஞானசவுந்தரி பத்தி, மகேந்திரனின் ‘மெட்டி’ பத்தி, அழியாதகோலங்கள் பத்தி,

பாலுமகேந்திராவின் திண்ணையில் வந்த நேர்காணல் பத்தி,

அற்புதமான நடிகை ஷோபா பத்தி, எஸ்.வி ரங்காராவின் குணச்சித்திர நடிப்பு பற்றி,

உங்கள் கனவுக்கன்னி ஜெயசித்ரா பத்தி,

டில்லி பாரதி பாலு என்கிற ‘நகுபோலியன்’ பத்தி,

கோவை ஞானி பத்தி,

பெங்களூர் ரவிச்சந்திரன் பத்தி,

எம்.ஜி.வல்லபனின் தைப்பொங்கல் படம் பத்தி,

அக்கிரகாரத்தில் கழுதை இயக்கிய ஜான் பிரகாம் பத்தி,

ரா.கி.ர வின் கிருஷ்ணதேவராயர் பத்தி,

பாக்கியம் ராமசாமியின் அப்புசாமி சீதாபாட்டி பத்தி ,

இவை எல்லாவற்றிற்கும் மேலாக ஹாம்பர்கர் பிட்ஸா உண்டு ‘கஷ்டத்தில்’ ஜீவித்திருக்கும் நம் பரதேச மென்பொருளாளர்கள் பத்தியும் , அவர்களைப் பற்றி எங்கள் சுதேசி மனங்களில் ஏற்பட்டிருக்கும் ‘தட்டையான பிம்பம்’ பத்தியும் எழுத வேண்டியது எவ்ளோ இருக்கு?

இன்னொரு முக்கியமான இசைத் தடமான country music பற்றி யார் எழுதப் போகிறீர்கள்? ஹாங்க் வில்லியம்ஸ், ஜெண்டில்மேன் ஜிம் ரீவ்ஸ் என்று தொடங்கி நடாலியா இம்ப்ரோக்லியா வரை நீளும் சுவையான வரலாறு இல்லையா அது?

இந்தக் கடிதத்தை யார் எழுதியது என்பதற்கு ராகாகியில் இரா. முருகன் கொடுத்த முன்னுரையில் இருந்து ஒரு பகுதி:



Dear all,

I am reproducing an interesting mail I reced from one of our friends. (u can easily guess who it is from the writing style 🙂

What an impressive list of items to cover in RKK! Thanks dear ….

Why can’t we start forthwith?

rgds,

era.murukan

வாழ்க்கை – சுஜல்

(c) Corbis.comஅம்மாவின் மடியில் படுத்து உறங்க அக்காளுடன் சண்டை

அப்பாவின் கை பிடித்து சென்று கடையில் வாங்கிய பச்சை ரிப்பன்

பக்கத்து வீட்டு ரகுவிடம் பல்ப்பத்திற்கு பாகப்பிரிவினை

பாட்டியின் வடுமாங்காய்,தாத்தாவின் கண்ணன் கதைகள்

இவையாவும் நேற்று கண்ட பகல் கனவாய் மனதில்…

இன்று மூடிய அறையில் கணினி மட்டும் துணையிருக்க

அக்காவின் கல்யாணத்தை வீசீடி யிலும்

அப்பாவின் கைபட்ட வாரமொருமுறை மின்னஞ்சலையும்

பார்க்க முடியாமல் போன பாட்டியின் கடசி நேர முகத்தையும் எண்ணி …

மூடு பனி சூழ்ந்த வீட்டினில் ,நானும் ஒரு இயந்திரமாய்…

உற்றமும் சுற்றமும் கண்டு பொறாமைப்படும்

என அமெரிக்க வாழ்க்கை!

தினம் ஒரு கவிதை

Happy Birthday to DOK

நான் முன்பே வலைப்பதிந்தது போல் எனக்கும் யாஹு குழுமங்களுக்கும், தொடர்பு கொடுத்த ‘தினம் ஒரு கவிதை’ ஆறாவது வருடத்தில் கால்பதிக்கிறது. என்னுடைய வாழ்த்துக்கள்.

யுகாதி புத்தாண்டு வாழ்த்துக்கள்

Happy New Year

நேற்று புத்தாண்டு பிறந்த தெலுங்கு மற்றும் கன்னட நண்பர்களுக்கு யுகாதி வாழ்த்துக்கள்.

பிகு: காமிரா இல்லாமல் வசந்த கால பூக்காட்சிக்கு சென்றது வருத்தம்தான்; ஆனால், அவர்கள் செய்திருக்கும் தோட்ட வித்தைகளுக்கு ஏற்ப வீடு இல்லாமல் இருப்பதும் சௌகரியமே. (வேலை அதிகம் செய்ய வேண்டாமே!)

வாரம் ஒரு பட்டியல்: பி.கே. சிவகுமார்

அரசியலும் சமூகமும்

ஜாதீயத்தின் காரணிகள் மற்றும் சார்பும் முரணும

ஜாதீயம் என்கிற ஒற்றைப் பரிமாணப் பார்வை

ஜெயகாந்தன் பற்றிய விமர்சனப்பரப்பில் அரவிந்தனின் இடம்

பொருந்தாக் காமம்

சிறுகதை

கோயில் விளையாட்டு

Humor In Maraththadi for the New Year – (1)

Humor In Maraththadi for the New Year – (2)

Humor In Maraththadi for the New Year – (3)

கவிதைகள்

ஞாபகங்கள்

யேன் செய்ததில்லை?

பி.கே. சிவகுமார் கவிதைகள்

எந்திர வாழ்க்கை

பி.கே. சிவகுமார் கவிதைகள்

என் காதல்….

எட்ட நின்று எட்டிப் பிடி தேசத்தை

இயந்திர நனைதல்

தமிழ் மாநாடு

பி.கே. சிவகுமார் கவிதைகள்

இலக்கியக்கட்டுரைகள்

வாசக அனுபவம்: வல்லிக்கண்ணனின் “வாழ்க்கைச் சுவடுகள்”

வாசக அனுபவம்: உமா மகேஸ்வரியின் “வெறும் பொழுது”

புதுமைப்பித்தனும் தமிழ் இலக்கியமும் – கருத்துப் பரிமாற்றங்கள்

ஜே. கிருஷ்ணமூர்த்தி (தமிழாக்கம்: பி.கே. சிவகுமார்)

தனித்தமிழ் என்னும் போலி – (1)

தனித்தமிழ் என்னும் போலி – (2)

பாரதி சின்னப் பயல் – ஹரி கிருஷ்ணன்

பாரதியார் கவிதைகள்:

பாரதி என்ற பெயரைக் கேட்டாலே மனதில் மலர்ச்சி ஏற்படுகிறது. பாரதிக்குப் பராசக்திப் பித்து அதிகமா அல்லது கண்ணன் பித்து அதிகமா என்று கேட்டால் முன்னது என்றுதான் சொல்லவேண்டியிருக்கும். பாஞ்சாலி சபதத்தில் இதற்கு விடை இருக்கிறது.

அவைக்கு ஒரு வேண்டுகோள். பாரதியின் உரைநடை பற்றியும் பேசலாம். அதிகம் கவனிக்கப்படாமலே இருக்கும் துறை அது. கட்டுரை, சிறுகதைகள், ஆங்கில எழுத்து, பத்தி¡¢க்கைக் கட்டுரைகள், மொழிபெயர்ப்பு என்று பலதுறைகளுக்கும் தன் பங்கைச் செலுத்தியிருப்பவன் பாரதி. Fox with a Golden Tail என்ற கூடார்த்தக் கதை பாரதி தமிழில் மட்டுமல்ல; ஆங்கிலத்திலும் நகைச்சுவை எழுதுவதில் வல்லவனாய் இருந்தான் என்பதற்குச் சான்று. தாகூர் சிறுகதைகளைத் தமிழிலும் ஆழ்வார் பாசுரங்களை ஆங்கிலத்திலும் மொழிபெயர்த்திருப்பது பலருக்குத் தொ¢யாது. அவற்றைப் பற்றியும் பேசலாமே.

(பலருக்கும் தெரியாதது என்னவென்றால் பாரதிதாசன் கவிதைகளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து அயல்நாட்டுப் பத்திரிக்கைகளில் வெளிவரச் செய்திருக்கிறான். பாரதிதாசனே குறிப்பிடும் உண்மை இது.)

யாப்பறிந்தவர்கள் பாரதியின் யாப்பியல் கொள்கைகளை விவாதிக்கலாமே. இலக்கணம் அறியாத வெள்ளைப் புலவன் என்ற உரையின் உண்மை என்ன என்பதையும் பார்க்கலாமே. (வெளிவிருத்தம் என்ற வகைக்கு எடுத்துக்காட்டு வேண்டுமானால் பாரதியின் ஒளிபடைத்த கண்ணினாய் வாவாவா என்ற பாடலை அல்லவா பார்க்க வேண்டும்.)

அதிகம் அறியப்படாத பாரதி கவிதைகளையும் அவ்வப்போது வெளிவரும் பாரதி ஆராய்ச்சி நூல்கள் பற்றியும் பரிமாறிக்கொள்ள இந்த இழை எவ்வளவு வாய்ப்பானது! இப்படி ஓர் இழையினை ஆரம்பித்தவருக்கும் இந்த இழையை மிகுந்த ஆர்வத்துடன் இதுவரை பின்னிக்கொண்டிருப்பவர்களுக்கும் திக்குகள் அனைத்தையும் நோக்கி வந்தனம் செய்கிறேன். (பாரதி இழை வெறுமையாக இருக்கலாமா என்ற ஆதங்கம் ஒன்றையும் பார்த்தேன்.) அடடா. உங்கள் உணர்வுகள் என் கண்களைப் பனிக்கச் செய்கின்றன.

என் பங்குக்கு பாரதி சின்னப் பயல் என்ற ஈற்றடியில் பாரதி எழுதிய அவனுடைய ஆரம்பகால வெண்பாக்களை இங்கு இடுகிறேன்.

ஆண்டில் இளையவனென் றந்தோ அகந்தையினால்

ஈண்டிங் கிகழ்ந்தென்னை ஏளனஞ்செய் – மாண்பற்ற

காரிருள்போ லுள்ளத்தான் காந்திமதி நாதனைப்

பாரதி சின்னப் பயல். (1)

இந்த வெண்பாவை எழுதியதும் காந்திமதிநாதன் அடைந்த (அவரும் அப்போது 16-17 வயது இளைஞர்தாம்) நாணம் சிறுவன் பாரதியைத் தாக்கியிருக்கவேண்டும். இன்னொரு வெண்பாவும் பாடினான்.

ஆண்டில் இளையவனென் றைய அருமையினால்

ஈண்டின்றென் றன்னைநீ யேந்தினையால் – மாண்புற்ற

காரதுபோ லுள்ளத்தான் காந்திமதி நாதற்குப்

பாரதி சின்னப் பயல். (2)

இந்த நிகழ்ச்சி 1895லிருந்து 1898க்குள் நடந்திருக்கவேண்டும் என்று கருதப்படுகிறது. அதாவது பாரதிக்குப் 13 முதல் 16 வயதுக்குள். அவைக்கு ஒரு வினா. கண்ணன் பாட்டில் பாரதி பொதுவாக ஒரு முறையைக் கடைப்பிடித்திருக்கிறான். ஆண் வடிவத்திற்குக் கண்ணன் என்றும் பெண் வடிவத்திற்குக் கண்ணம்மா என்றும் பெயர் வைத்திருக்கிறான். குழந்தை வடிவில் ஆண் குழந்தையாகவும் பெண் குழந்தையாகவும் பார்த்திருக்கிறான்.

தாய் என்ற வடிவத்தில் மட்டும் அது என்ன கண்ணன் என் தாய்? கண்ணம்மா என் தாய் என்றல்லவோ இருந்திருக்கவேண்டும்? தலைப்பில் தவறா என்று பார்த்தால் பாட்டிலும் பாரதி “கண்ணன் எனும் பெயருடையாள்” என்றல்லவோ சொல்கிறான்? இது ஏன்? (என் விளக்கத்தை முதலில் இட்டு உங்கள் கருத்துகளுக்குச் சாயமேற்ற விருப்பமில்லை.) யாரேனும் விளக்கம் தர முடியுமா?

நன்றி: மன்ற மையம்

அதிகம் தாக்குபவர் இவர்



Survey Results Thanks to Sparklit and YOU

இந்தத் தேர்தலிலும் பெருவாரியாகக் கலந்துகொண்டு வாக்களித்து ரசிப்புத் திறனுக்கு ராஜ மரியாதையும், பின்னூட்டத்திற்கு ஊக்கமும் தர அனைவரையும் ஆவலுடன் அழைக்கிறேன்.

சித்திரக் கதை

யாஹு குழுமங்களில் இப்படிப் பேசினால் –>

Pickles cartoon

இப்படி எண்ணத் தோன்றும் –>


Blondie - Dagwood courtesy of Washington Post

முடிவு இப்படி ஆகிப் போகும் –>


Pickles

பார்த்ததுவே… கேட்டதுவே… நினைப்பதுவே…

Hail Pakistan

பாகிஸ்தான் குறித்த இவரின் எண்ணங்களுக்கு மறுபேச்சே கிடையாது 😛 அனைவரும் ஒப்புக்கொள்வார்கள்!?



அமுதசுரபியின் புதிய புத்தகங்களாக காந்தளகம் அனுப்பிய பட்டியல்:

1. தமிழில் இணைய இதழ்கள்: அண்ணா கண்ணன் – ரூ. 80/-

2. மலர்மன்னன் கதைகள்:மலர்மன்னன் – ரூ. 100/-

நாற்பத்தைந்து ஆண்டுகளாய் எழுதிவரும் மலர்மன்னனின் முதல் சிறுகதைத் தொகுப்பு.

3. பாரதியார் சரித்திரம்: செல்லம்மா பாரதி – ரூ. 60/-

1943-இல் முதல் முதலாக வெளியான நூல். அதே வடிவில் 63 ஆண்டுகளுக்குப் பிறகும்.

4. கேப்டன் கல்யாணம்: அமரர் வசுமதி ராமசாமி – ரூ. 125/-

1959-இல் வெளியான புதினம் இப்பொழுது மீண்டும் அச்சில் வந்துள்ளது.

5. விவாதங்கள் சர்ச்சைகள்: வெங்கட் சாமிநாதன் – ரூ. 120/-

இலக்கிய முகமூடிகள், க.நா.சுவும் கோவிந்தாக்களும், வல்லிக்கண்ணனுக்கு ஒரு பாராட்டு, தமிழினி 2000, பிச்சமூர்த்தி நினைவு விழாவில், இன்னும் பல சுவையான கட்டுரைகள்.

தமிழ்நூல் இணையதளத்தில் சுஜாதாவின் புத்தகங்களைத் தேடினபோது கிடைத்த விடைகளைப் பாருங்களேன்! நீங்களும் உங்களுக்குப் பிடித்த எழுத்தாளரின் பேரைக் கொண்டோ, புத்தகத்தின் தலைப்பைக் கொண்டோத் தேடிப் பார்க்கலாம்.



நடைபெறும் தேர்தலை நாளையோடு ஏறக்கட்டிவிட்டு புதிய கருத்துக்கணிப்பை ஆரம்பிக்க எண்ணம்.

கேள்வி: பின்னூட்டங்களின் மூலம் கவனத்தைப் பெரிதும் கவர்பவர் யார்?

எனது எண்ணத்தில் இதுவரை உதித்தவர்கள்: 1. பத்ரி 2. டைனோ 3. பரி 4. பிரபு ராஜதுரை 5. ரமணீதரன் 6. ரவியா 7. உஷா 8. மறுமொழிகளில் எவரும் அக்கறை ஏற்படுத்துவதில்லை!

நான் தவறவிட்ட உகப்பானவர்களை பின்னூட்டத்திலோ bsubra at india . com முகவரியின் மூலமோ சொல்லுங்கள்.