எழுதியவரை சொல்லுங்கள்


பா. ராகவன் ஆறாம் வகுப்பு படிக்கும்போது எழுதிய கவிதை இது. அப்பொழுது அழ. வள்ளியப்பா அப்புசாமி குப்புசாமின்னு ஒரு தொடர் கோகுலத்துல எழுதினார். அதேமாதிரி பாரா எழுதினதை அருகில் அமர்ந்து செப்பனிட்டு எழுதியதாம். கோகுலத்திலும் வெளிவந்தது.

அழ. வள்ளியப்பாதான் எனக்கு அறிமுகமான முதல் எழுத்தாளர். குழந்தைகளுடன் குழந்தையாகவே மாறிப் பேசுவார். அண்ணா நகரில் அவரது வீட்டுக்கு சென்ற நாட்களும் பொழுதுகளும், அவர் எங்களைப் பார்க்க வந்திருந்த நேரங்களும் மிகவும் இனிமையானவை. நான் எழுதிய கிறுக்கல்களை முதன்முதலில் பிரசுரித்தவர். கோகுலம் இதழில் இருந்து வெளியாகும் சிறு துணுக்குகளுக்கும் சன்மானம் வருவது துள்ளிகுதிக்க வைக்கும்.

அவரை குறித்து மேலும் அறிய சந்தவசந்தம் குழுவில் நிறைய பதிவுகள் இருக்கிறது. மன்ற மையத்திலும் பேசியிருக்கிறார்கள்.

பின்னூட்டமொன்றை இடுக

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.