அகக் குரலும் புறச்சூழலும்


திசைகள் – அரும்பு சொல்வெளி:

அனைத்துலகப் பெண்கள் தினத்தன்று முற்றிலும் பெண்களே முன் நின்று நடத்தும் இலக்கிய நிகழ்ச்சி:

 

அகக் குரலும் புறச்சூழலும் — மார்ச் 8ம் நாள் மாலை 6 மணி

தீபீகா அரங்கம் / அரும்பு வளாகம் / 49, டெய்லர்ஸ் சாலை / சென்னை 600 010

 

படைப்பும் பதிவும்

சுற்றுச் சூழல் கவிதைகளின் தொகுப்பான நிற்பதுவே நடப்பதுவே பறப்பதுவே என்ற கவிதை நூலை எழுத்தாளர் சிவசங்கரி வெளியிட முதல் பிரதியை கல்கி வார இதழ் ஆசிரியர் சீதா ரவி பெற்றுக் கொள்கிறார்.

நூல் அறிமுகம்: கவிஞர் சுமதி மணிமுடி

படைப்பும் பகிர்வும்

கவிஞர்கள் கனிமொழி, வைகைச் செல்வி, ஆண்டாள் பிரியதர்சினி, இளம்பிறை, க்ருஷாங்கிணி, திலகபாமா, தமிழச்சி, வத்சலா ஆகியோர் தங்கள் கவிதைகளை வழங்குகிறார்கள்.

கருத்தும் காட்சியும்

கவிதைக் காட்சி: சுற்றுச் சூழல் குறித்துப் பெண்கவிஞர்கள் எழுதிய கவிதைகளும், புத்தகக் கண்காட்சி: பெண் படைப்பாளிகளின் நூல்களும் பார்வைக்கு வைக்கப்படும்.

பின்னூட்டமொன்றை இடுக

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.