Monthly Archives: பிப்ரவரி 2004

தமிழோவியமும் தத்துவமும்

மனத்திற்கு : கன்றுக்குட்டி டெக்னிக்: ”

கம்பராமாயணத்தில் ஒரு இடம்

செத்துக்கிடந்த ராவணணைப் பார்த்து அழுகிற மண்டோதரி, ” ஐயா.. இளமையில் நீ தவம் தவம் என்று காமத்தை அடக்கினாய். அதனால்தான் அந்தக் காமம் இன்று உன்னைப் பின்னாளில் பழிவாங்கிவிட்டது..” என்று புலம்புகிறாள். எனவே எதையும் எதிர்த்து நீங்கள் உங்கள் சக்தியை பிறயோகிக்கவேண்டாம். அடக்குமுறை நிச்சயம் எதிர்மறை விளைவை ஏற்படுத்தும். தாயுமானவர் ” மனம் அடங்க கல்லாருக்கு வாய் ஏன் பராபரமே ” என்றார். ” மனம் அடக்க ” என்று பாடவில்லை. மனம் தானே அடங்கவேண்டும். நீங்கள் அதை அடக்கக்கூடாது. ”

எதையுமே திணித்தால் எடுபடாதுதான்; அந்த சிந்தனையோடு ஒத்துப் போகிறேன். ஆனால், விளையாட்டாக ஒரு கேள்வி:

காமத்தை சில காலம் அடக்கின ராவணனுக்கே அந்த கதி என்றால், பல காலம் அடக்கியாண்ட ராமருக்கு? மனைவியே பக்கத்தில் இல்லாமல் இருந்த இலக்குமணருக்கு எப்படி பழி வாங்கியதாம்!?

இதுதான் நியூயார்க் – வைரமுத்து

வானைத் தொடத் துடிக்கும்

விஞ்ஞான விரல்களாய்க்

கட்டடங்கள் புடைத்து நிற்கும்

கால்வலித்த மேகம்

உச்சிமாடியில்

உட்கார்ந்து போகும்

தீப்பிடித்த வீடாய்

வாழ்க்கை விரையும்

மூழ்கும் கப்பலின் எலிகளாய்க்

கார்கள் பறக்கும்

கார்நிறுத்த இடம் கிடைத்தால்

உலோபியின் புதையலாய்

உள்ளம் களிக்கும்

போகத்தின் உச்சத்தில் பேசும்

பொருளற்ற வார்த்தைகளாய்

அங்கங்கே மெல்லிசை காதுகிழிக்கும்

வீதியில் பூக்கும்

வெள்ளை ரோஜாக்கள்

பெண்மையின் அடையாளங்களை மட்டும்

மூடி மறைத்து முறுவலிக்கும்

‘வா’ என்று கேட்க

வண்டுக்கும் உரிமையுண்டு

‘போ’ என்று தள்ளப்

பூவுக்கும் உரிமையுண்டு

கணவனுக்கு – மனைவியினும்

காரின் கற்பு

முக்கியமாகும்

மனைவிக்கு

பர்த்தாவை விடவும்

‘பாத்ரூம்’ சுத்தம் முக்கியமாகும்

நடைபாதைக் காதல்

மூச்சுவிட மறந்து

முத்தமிட்டுக் கொண்டிருக்கும்

சுற்றிவரும் போலீஸ்

ஒட்டிய உதடுபிரிக்க

உதவும்

0

ஷாம்பூ போட்டுக் குளித்த

மரங்கள்

வாழை இலைச் சாலைகள்

முடிவெட்டிக் கொண்ட

புல்வெளிகள்

கட்டடங்களை

உரசி பறக்கும்

உலோகப் பறவைகள்

எல்லாம் இருந்தும்

ஏதோ ஒன்று இல்லாத வாழ்க்கை

0

அறிவு –

உறவை

டாலர்களாய்ப் பார்க்கும்

உணவை

வைட்டமின்களாய்ப் பார்க்கும்

நாற்பது வரைக்கும்

அவர்கள் சாப்பிட உணவு

நாற்பதுக்குப் பிறகு

அவர்களை சாப்பிடும் உணவு

வாரத்தில் ஐந்துநாள்

வாழ்க்கை விற்கப்படும்

வாரத்தில் இரண்டுநாள்

வாழ்க்கை வாங்கப்படும்

பாசம்

பாலித்தீன் பை

காதல்

கைதுடைக்கும் காகிதம்

….

அங்கங்கே

ரகசியக் குரலில்

கோஷம் கேட்கும்

வீட்டுக் கூரையில்

நிலா வேண்டுமா?

மாத்திரை போடு

சூரியனில் நடக்க வேண்டுமா?

மாத்திரை போடு

கிளியோபாட்ராவை

எழுப்பித் தருகிறோம்

மாத்திரை போடு

இப்படி

வீதி முனைகளில்

சுலபத் தவணையில்

தற்கொலை விற்கும்

0

பாப்கார்ன் கொறித்துக் கொண்டே

பள்ளி மாணவி சொல்வாள்:

‘இன்றைக்கே

கலைத்து விடுங்கள் டாக்டர்

நாளை

பத்தாம் வகுப்பு பரீட்சை’

0

1989

நன்றி: வைரமுத்து கவிதைகள்

(கி.பி. 2000 வரை கவிஞர் வைரமுத்து எழுதிய கவிதைகளுள்

அறிஞர்கள் தேர்ந்தெடுத்த தொகுப்பு)

உரிமை: டாக்டர் பொன்மணிவைரமுத்து

ரூ. 300/-

சூர்யா வெளியீடு


என்னுடைய சில சிதறல்கள்:

* அமெரிக்கா வருவதற்கு முன்பே படித்து விட்ட கவிதை.

* வார்த்தைகளும் எண்ணங்களும் பிரமிப்பை ஏற்படுத்தியது அந்தக் காலம்.

* சொல்லமைப்புகள் மட்டுமே ஒரு ‘அட…’வையும், தட்டையான பிம்பங்கள் மேல் ஒரு ‘ஹ்ம்ம்ம்…’மும் போடுகிறேன் இந்தக் காலம்.

* நியூ யார்க்கை குறித்து மற்றவர்கள் இன்னும் இப்படித்தான் கற்பனை செய்து வைத்திருக்கிறார்களா….!

சாரு நிவேதிதாவின் கோணல் பக்கங்கள்

நான் பலமுறை சொல்லியிருக்கிறேன்… எனக்கு கணினி பற்றி ஏதும் தெரியாது. இன்னமும் என் கட்டுரைகளை நான் காகிதத்தில் தான் எழுதி வருகிறேன். மிகச் சமீபத்தில் தான் webcam என்பது கூட தெரியும். இன்னமும் கணினியின் மைக் வழியே மற்றொருவருடன் எனக்குப் பேசத் தெரியாது.

ஸீரோ டிகிரி மின் நாவலாக வெளிவர என் உதவியாளர்களே பொறுப்பேற்றுக் கொண்டனர். இந்திய மொழிகளிலேயே முதல் மின் நாவல் என்று ஸீரோ டிகிரியைப் பற்றி விளம்பரப்படுத்தியது அவர்களுடைய தவறு. அவர்கள் எனக்கு விஷயத்தைச் சொன்ன பிறகு நான் வேறு வேலைகளில் மூழ்கி விட்டேன்; பயணங்கள் வேறு.

அதற்குள் ஒருவர் ஏதோ கொலைக் குற்றத்தைக் கண்டுபிடித்து விட்டதைப் போல் தனது இணைய தளத்தில் கூப்பாடு போட்டிருக்கிறார். என் உதவியாளர் செய்த பிழைக்காக “சாரு பொய் சொல்லுகிறார்’ என்று அலறும் இவர் யார் தெரியுமா? பொய் சொல்லுவதையே தனது தொழிலாகக் கொண்டவர். அந்தக் கீழ்மையான தொழிலுக்குக் கூலி: சில பல லட்சங்கள். தொழிலில் ஒப்பாரி வைப்பதும் உப தொழில்.

கூலிக்கு ஒப்பாரி வைப்பவர்களைக் கண்டிருக்கிறீர்கள் தானே? அதுபோல் இவர் சமீபத்தில் வைத்த ஒப்பாரி என்ன தெரியுமா?

ஒரு அரசியல் தலைவரின் மரணத்தின் போது தழுதழுத்த குரலில் (பொய்யான தழுதழுப்பு என்று வெளிப் படையாகவே தெரிந்தது.) “ஒரு சகாப்தமே இங்கு உறங்கிக் கொண்டிருக்கிறது’ என்று கூறியது. இப்படிச் சொல்வதற்கு உங்கள் தன்மானத்தை நீங்கள் விற்க வேண்டும். விலையாக சில பல லட்சங்கள் உங்களுக்குக் கிடைக்கும். இப்படி கூலிக்கு மாரடிப்பவர்கள் தான் விளிம்பு நிலையில் நின்று, பட்டினி கிடந்து, உலக இலக்கியங்களை உருவாக்கிக் கொண்டிருக்கும் என்னைப் போன்றவர்களைப் பார்த்து குற்றம் சாட்டுகிறார்கள்.

இவர்களால் எனது படைப்பை எதிர்கொள்ள முடியாது. அதற்கு வேண்டிய இலக்கிய அறிவு இவர்களிடம் இல்லை. இவர்களிடம் இருப்பது பண பலம், அதிகார பலம். இதையெல்லாம் காண்பித்து ஒரு கலைஞனை பயமுறுத்த நினைப்பது கோழைத்தனம்.

நேற்று எம்.எஃப்.ஹுசேனின் ஓவியங்களை சில அரசியல் ரவுடிகள் நாசப்படுத்திய போது அவர் கூறினார்: “இது mediocrityயின் காலம். நீங்கள் உங்களுடைய தலையை உயர்த்த முடியாது. உயர்த்தினால், உங்கள் தலை நசுக்கப்படும்… ஆனால், இவர்கள் கோழைகள். கலாச்சாரம் பற்றி ஏதுமறியாத கூலிப்படையை வைத்து இவர்கள் நம்மைத் தாக்குகிறார்கள். ஆனால், இது நீடிக்காது. காலம் இவர்களைக் காணாமல் அடித்துவிடும்…’

இலக்கிய உலகில் புகுந்து இலக்கியவாதிகளை மிரட்டும் அரசியல் தரகர்களுக்கும் என்னுடைய பதில் இதே தான்!

சாரு நிவேதிதா

நன்றி: கோணல் பக்கங்கள்

காதல் சடுகுடு

Kaathal Sadugugu (c) Hindu

மேகத்தில் ஒன்றாய் நின்றோமே அன்பே

மழைநீராய்ச் சிதறிப் போகின்றோம் அன்பே

(மேகத்தில்)

பிரிவென்பதால் நெஞ்சிலே பாரமில்லை

மழையென்பது நீருக்கு மரணமில்லை

மீண்டும் ஒரு நாள் மேகம் ஆகி

வானில் சேர்ந்திடுவோம்

இருவரும் கூடி ஒருதுளியாகி

முத்தாய் மாறிடுவோம்

(மேகத்தில்)

கண்ணைக் கவ்வும் உன் கண்களைக் காதலித்தேன்

கற்பைத் தொடும் உன் பார்வையைக் காதலித்தேன்

ஆசை கொண்டு உன் ஆண்மையைக் காதலித்தேன்

மீசை கொண்டு உன் மென்மையைக் காதலித்தேன்

நிலா விழும் உன் விழிகளைக் காதலித்தேன்

நிலம் விழும் உன் நிழலையும் காதலித்தேன்

நெற்றி தொடும் உன் முடிகளைக் காதலித்தேன்

நெஞ்சை மூடும் உன் உடைகளைக் காதலித்தேன்

கண்ணா சில நாள் பிரிவோம் அதனால் உறவா செத்துவிடும்

கடல் நீர் கொஞ்சம் மேகம் ஆனால் கடலா வற்றிவிடும்

வெளியூர் போகும் காற்றும் ஒரு நாள்

வீட்டுக்குத் திரும்பி வரும்

பிரிதல் என்பது இலையுதிர் காலம்

நிச்சயம் வசந்தம் வரும்

(மேகத்தால்)

அன்பே, அன்பே உனை எங்கனம் பிரிந்திருப்பேன்

நிலா வந்தால் என் இரவுகள் இருந்திருப்பேன்

உன்னை எண்ணி என் உயிர்த்தலம் உறைந்திருப்பேன்

கண்ணால் கண்டால் நான் இருமுறை உயிர்த் தரிப்பேன்

அன்பே, அன்பே உனை எங்கனம் மறந்திருப்பேன்

நித்தம் நித்தம் உன் கனவுக்குள் இடம் பிடிப்பேன்

பெண்ணே, பெண்ணே நம் பிரிவினில் துணையிருப்பேன்

கண்ணே கண்ணே என் கண்களை அனுப்பி வைப்பேன்

இத்தனை பிரிவு தகுமா என்று

இயற்கையைக் கண்டிக்கிறேன்

ஏன்தான் அவரைக் கண்டேன் என்று

என் கண்களைத் தண்டிக்கிறேன்

(மேகத்தால்)

நன்றி: புகாரி – உயிரெழுத்து

சிறுவர் புத்தகங்கள் – ஆர். பொன்னம்மாள் (7)

இராஜேஷ்: மாணிக்கமாக மாறிய சிறுவன் பெற்றப் படிப்பினையை சுவாரஸ்யம் குறையாமல் சொன்ன நாவல். வானதி வெளியீடு.

கனிந்த மனம்: சிறுவர் நாடக நூல். வானதி வெளியீடு.

பொன் மனம்: 1997-இல் குழந்தை எழுத்தாளர் சங்கம் நடத்திய நாடகப் போட்டியில் ஏவிஎம் வெள்ளிப் பதக்கம் பெற்ற நாடக நூல். வானதி வெளியீடு. அருணை உதாரணச் சிறுவனாகக் கொண்டாடும் நாடகம்.

திருந்திய நெஞ்சம்: சிறுகதைத் தொகுப்பு. எல்லாமே சிறுவர்களுக்கான அற்புதமான கதைகள். ‘இப்ப என்ன அவசரம்’ என்று சோம்பேறித் தனத்தை வளர்த்துக் கொண்டு உல்லாசமாக இருக்கும் சிறுவன் திறமையிருந்தும், விழலுக்கு இறைத்த நீராய் பாராட்டுப் பெறாமல் நிற்பது, கானாப் பாடல் போல் சிறுவர் மனதில் பதியும் (வானதி வெளியீடு).

பாட்டி சொன்ன கதைகள் 1,2,3: 1980-ல் முதல் பாகம் வானதி பதிப்பகத்தாரால் வெளியிடப் பட்டது. நான்கு பாகத்தையும் எழுதிக் கொடுத்தாலே வெளியிடுவேன் என்றார் திரு. திருநாவுக்கரசு அவர்கள். சவாலுடன் முடித்துக் கொடுத்தார் என் அன்னை. 1992-ல் இரண்டாம் பாகமும், 1993-ல் மூன்றாம் பாகமும் வெளி வந்தது. நான்காம் பாகம் இன்னும் வெளிவர வில்லை. பழங்காலக் கதைகள். அத்தனையும் நவரத்தினங்கள். கையிலெடுத்தால் பெரியவர்களுக்கும் கீழே வைக்க மனம் வராது.

‘சொக்கா… சொக்கா… சோறுண்டா?’, இருட்டில் ஏன் சாப்பிடக் கூடாது என்பதை விளக்குகிறது. குணமித்திரன் கதை முழக் கயிறாலும் பொருள் ஈட்டலாம் என்று சொல்கிறது. ‘வர வர மாமியார் தேய்ந்து கழுதை போலானாள்’ என்பதை இப்போதும் படித்து வயிற்றைப் பிடித்துக் கொள்ளலாம். அஷ்டலட்சுமிகளையும் வீட்டுக்குள் வரவழைக்கும் தந்திரம் சொல்லப் பட்டிருக்கிறது.

(சிறு குறிப்பு வளரும்)

புத்தகக் குறிப்புகள் – ஆர். பொன்னம்மாள் (6)

ஈசாப் நீதிக் கதைகள் பாகம் 1,2: 1998 மார்ச்சில் கங்கை புத்தக நிலையத்தாரால் பிரசுரிக்கப் பட்டவை. பொறுக்கு எடுத்த நவமணிகள். முதல் பாகத்தில் 19 கதைகளும் (96 பக்கம்), இரண்டாம் பாகத்தில் 22 கதைகளும் (103 பக்கம்) இருக்கின்றன. ஒரு கதையில் கழுகு செய்த நன்மைகளும், பசி நட்பை மறக்கச் செய்த விதமும் சொல்லப் பட்டிருக்கிறது. குட்டிக் குட்டிக் கதைகளை மாணவர் மூலமாக நிகழ்கால உவமானக் கதைகள் கூறி விளக்கி யிருக்கிறார். இது என் தாய்க்குக் கை வந்த கலை. இந்த 25 வயதுக் குழந்தை விரும்பிப் படித்த கதைகள்.

பண்டிகை, பலகாரம், மந்திரம் மகிமை: 1983 அக்டோபரில் அம்பாள் பதிப்பக வெளியீடு. 224 பக்கங்கள். ஒவ்வொரு பண்டிகைக்கும் செய்ய வேண்டிய பலகாரம், பூஜா மந்திரம், வழிபாட்டு முறை, அதன் மகிமை எல்லாம் அடங்கியுள்ள நூல். மொத்தம் 19 பண்டிகைகள் உள்ளன. தமிழ்ப் போற்றிகளும் உண்டு.

ஸ்ரீசித்ரகுப்த பூஜை: 1997 ஏப்ரலில் கிரி ட்ரேடிங் ஏஜன்ஸியால் வெளியிடப் பட்ட நூல். 32 பக்கங்கள்.

அரிச்சந்திர புராணம்: வானதி அவர்களின் மைந்தரான திரு. ராமநாதன் கேட்டு எழுதிப் பிரசுரித்த புத்தகம் இது. அரிச்சந்திரன் பொய் சொல்லி வருணனை ஏமாற்றினான் என்ற செய்தி எனக்கு முதல் அதிர்ச்சி. அவர் எப்படிப் சத்தியவானன் ஆனான் என்பது சுவாரஸ்யமான கதைப் போக்கு. 123 பக்கங்களில், 15 அத்தியாயங்களில் தர்ப்பையைக் கழுத்தில் கட்டிப் பிள்ளையை விற்ற விசுவாமித்திரரின் மனைவியை சந்திக்கலாம். திரிசங்கு, நிமி இவர்களோடு தூங்கியதற்காக சபித்த வசிஷ்டரையும் காணலாம்.

பிள்ளையை விற்ற அஜீகர்த்தன், விசுவாமித்திரரின் வளர்ப்புப் பிள்ளை சுனச்சேபன் ஆகியோரும் உலவுகிறார்கள். முப்பது விதமான நரகங்கள் விஸ்தரிக்கப் பட்டிருக்கின்றன. பாபம் செய்ய மனம் நடுங்கும் அவைகளைப் படித்தால். இதே போல் சொர்க்க விபரங்களும் தரப் பட்டிருக்கின்றன. பாதாள உலகமும் வர்ணிக்கப் படுகிறது. இவற்றை யெல்லாம் எமதர்மனே அரிச்சந்திரனுக்குச் சொல்கிறார்.

(சிறு குறிப்பு வளரும்)

விருமாண்டியோடு நாங்கள்

அன்னலஷ்மி

நாங்கள் வசதியான குடும்பம். ஜல்லிக்கட்டு பார்க்க செல்வேன். டூ-வீலரில் ஊர்

சுற்றுவேன். ரொம்ப ஜாலியாக இருந்தேன். எங்க கிராமத்தில் வெட்டு குத்து

கொஞ்சம் அதிகம். அப்படி அடிபட்டுக் கொண்ட விருமாண்டிக்கு மனிதாபிமானத்தில்

உயிரை காப்பாற்றினேன். அவனோ என்னைத் தொடர்ந்து பிட்டு போட்டுக்

கொண்டேயிருந்தான்.

சித்தப்பாவும் கல்யாணப் பேச்சை எடுக்காததால், பின்சீட்டில் பக்கத்தில் உட்காரும்

சித்தியும் கண்டுக்காத்தால் வேறு வழியின்றி நானும் காதலிக்க ஆரம்பித்தேன்.

சொந்த நிலத்தையும் ஊருக்குத் தாரைவார்த்துவிட்ட ஏமாளியை முன்னுக்குக்

கொண்டு வரும் எண்ணத்தில் வீட்டை விட்டு ஓடிப்போய் விட்டோம். சித்தப்பாவின்

முன்னிலையில் தாலி கட்டாததால் அவருக்கு என் மேல் கோபம். நான் உயிரோடு

இருந்தால் தூக்கு தண்டனையின் அருமை பெறுமைகளை விவரிக்க முடியாது

என்பதால் தூக்கு தண்டனை கொடுத்துக் கொண்டேன்.

கோவில் பூசாரி

ஆண்டு பூஜையில் மட்டுமே எனக்கு சம்பாத்தியம் வரும். விருமாண்டி அன்னலஷ்மி

கல்யாணத்துக்கு அவர்கள் எனக்கு வாத்தியார் சம்பாதணைக் கொடுக்கவில்லை.

நான் வலிந்து கேட்டபிறகு தங்க மோதிரம் என்று சொல்லி, கல்யாணி கவரிங்

கொடுத்து ஏமாற்றி விட்டார்கள். தட்சிணைக் கொடுக்காதத் திருமணம் செல்லுபடியாகாது

என்பதால் கோர்ட்டில் அவர்களின் மணமுடிப்பை ரத்து செய்துவிட்டேன்.

ஜெயிலர்

எனக்கு ரொம்ப வேலை கிடையாது. பேய்க்காமனே எல்லாவற்றையும் திறமையாக

கவனித்துக் கொள்கிறான். சிறைச்சாலைக் கைதி இறந்ததற்கு ஆர்ப்பாட்டம்

நடந்ததால், ஜெயிலில் பரிசோதனை என்று கண்துடைப்பு வேலை ஆரம்பித்தேன்.

சரியாகப் புரிந்து கொள்ளாத சிறைவாசிகள் என்னைத் தீர்த்துக் கட்டிவிட்டார்கள்.

விருமாண்டிக்கு போலீஸ் ஆடை மேல் விருப்பம். ஜெயிலை முழுவதும் சுற்றி

பார்க்கவும் ஆசை. கொத்தாளத்தேவரைக் கொலை செய்யவும் விரும்பினான்.

அவனின் திட்டத்தில் என்னையறியாமல் மாட்டிக் கொண்டேன்.

ஏஞ்சலா என்ற ஏஞ்சலா ஜேம்ஸ் என்றழைக்கப்பட்ட ஏஞ்சலா காத்தமுத்து

பெயரை மாற்றினால் வெற்றி கிட்டும் என்று சொன்னதால் இது வரை மூன்று

முறை மாற்றிக் கொண்டுவிட்டேன். குறும்படத் தயாரிப்பில் பரபரப்புடன்

செயல்பட்டு வருகிறேன். தூக்குதண்டனையை ஒழிக்க செய்திச்சுருள்

தயாரிக்க சென்று, தூக்கு தண்டனையின் மகத்துவத்தைப் புரிய வைக்கும்

பதிவை செய்துள்ளேன். ‘முதல்வன்’ அர்ஜுன் மாதிரி எல்லாத் தொலைக்

காட்சியிலும் என்னை பேட்டி கண்டார்கள். இணைய பத்திரிகைகளில்

கூட என்னை முகப்பு செய்தியாக்கினார்கள். எனக்கு ஆஸ்கார் கிடைக்குமா?

ஏஞ்சலாவின் அஸிஸ்டெண்ட்

மரணதண்டனை குறித்த திரைப்பதிவுகளுக்கு எங்கள் தொலைகாட்சியில்

போதிய ஆதரவு கிடைக்கவில்லை. ஏஞ்சலாவுக்கு எப்படியாவது அதை

பிராபல்யபடுத்தும் திட்டம். அப்பாவிக் கைதியிடம் திருட்டுதனமாகப்

படம் பிடித்து அவனை சாகடிக்க வைத்துவிட்டாள். அந்த குற்றவுணர்வு

எதுவும் இல்லாமல், பத்துக்கு மிகாமல் கொலை செய்த விருமாண்டிக்குத்

தூக்குக் கிடைக்காமல் இருப்பதற்காக என்னையும் இறக்க வைக்கிறாள்.

நல்லம்ம நாயக்கர்

விருமாண்டியிடம் கதை சொல்லும்போதே எனக்குத் தோன்றியது. அவனுடைய

பதிவுகளில் எனக்கு ஒரு மூலை மட்டுமே கொடுப்பான் என்று பட்டது. விருமனுக்கு

செல்பேசி கொடுத்ததுதான் நான் செய்த ஒரே குற்றம்.

பேய்க்காமன்

ஊர்ப் பெரியவரிடம் மட்டும் மஸ்கா போடாமல் கொத்தாளத்தேவரோடும் சகவாசம்

வைத்திருப்பது சிலருக்குப் பிடிக்கவில்லை. வாழ்க்கையில் முன்னேறத் துடிக்கும்

இளைஞன் நான். வெட்டு, குத்து, சாராயம், நிலத் தகராறு, பஞ்சாயத்து என்று

இருக்கும் கிராமங்களிலும் சமரசம் செய்து வைத்து அமைதிப் புறாவை பறக்க

விடுபவன். பொறுபற்ற காவலர்கள் நடுவே, கைதிகளுக்குள் கலவரம் வராமல்,

அதிகாரிகளுக்குத் தலைவலி கொடுக்காமல், கம்பிமேல் நடக்கும் பாலன்ஸ்

தெரிந்த வித்தகன். இந்த ஒழுங்கு பிடிக்காமல் சுயலாபத்துக்காக ‘ரெய்ட்’

கண்துடைப்பு நடத்தித் தலவலி உண்டு செய்கிறான் ஜெயிலர். அதற்கும் மேல்

சென்று விருமாண்டியைத் தப்பிக்கவிட்டு, எதிர்சாட்சியான கொத்தாளனையும்

கொலை செய்யப்படும் நிலைமையை உண்டு செய்கிறான்.

அரிவாளோடு சுத்திக் கொண்டிருந்த பக்கத்து கிராமங்களின் பெருந்தலைகளை

கோர்ட்டு, நீதிபதி, வக்கீல், வாய்தா, தூக்கு தண்டனை என்று எதுவும் இல்லாமல்

காணாமல் போக்கியதையோ, சண்டியரை சாந்தபடுத்தியதையோ கண்டுக்காமல்

மரணதண்டனை குறித்து வீடியோ பிடிக்கறாங்களே!?

எங்க வீட்டு வீடியோ கேஸட்டு

என்னுடைய இதே இழைகளில்தான் ‘படம் எடுப்பதற்கு ரொம்ப கஷ்டப்படுகிறோம்;

நான் நடிக்க வருவதற்குமுன் சராசரியான படங்களை பார்த்துவிட்டு என்ன

படம் எடுக்கிறார்கள் என்று கமெண்ட் அடிப்பேன்; திரையரங்கிலேயே சத்தமாகக்

கிண்டல் செய்வோம்’. ஆனா, இப்பொழுதுதான் தெரிகிறது எவ்வளவு உழைப்பும்

நேரமும் ஆர்வமும் ஒவ்வொரு ·ப்ரேமுக்குள்ளும் செல்கிறது’ என்று ஸ்னேஹா

சொன்னதை பதிவு செய்து வைத்திருந்தார்கள். ரிவ்யூ, விமர்சனம், பார்வை, எண்ண

அலைகள், பதிவுகள், குறிப்புகள், சிந்தனை, அலசல் என்று விருமாண்டியை (மட்டும்)

துவம்சம் செய்யாமல் இருக்க சொல்லுங்கள்

சூபர் ஹிட் முகாப்லாவும் ரெட்டும்

அமிதாப் தயாரிக்கும் முதல் படம். இரு பஞ்சாபி நடிகைகள் அறிமுகம்

ஆகிறார்கள். அப்பாவி தென்னியந்தப் பார்வதியாக ப்ரியா கில். ஓரத்தில்

இரண்டாம் கதாநாயகியாக சிம்ரன் நவல். படத்தின் ஒரு பாட்டில்

சிம்ரன் ஆடுவதைக் கூட யாரும் பெரிதாக கண்டுகொள்ளவில்லை.

மீண்டும் ‘சூப்பர் ஹிட் முகாபலா’வுக்கேத் திரும்பி விடலாம் என்றால்

அங்கும் வேறு யாரோ ஆக்கிரமித்து விட்டார்கள்.

Priya Gill ப்ரியாவுக்கோ படவாய்ப்புகள் குவிகின்றன. ஷாருக்கு ஜோடியாக ‘ஜோஷ்’,

‘காதல் கோட்டை’யின் ஹிந்தி பதிப்பில் தேவயானி ஏற்ற வேடம் என்று

வரிசையாக பதிவு செய்யபடுகிறார். அழகு, நளினம், பாந்தமான நடிப்பு

அனைத்தும் பெற்ற ப்ரியா வெற்றிபெறுவாரா? நெட்டைக் கொக்கு, பருத்த

நடிகைகள் விரும்பும் கோலிவுட்டில் கால் வைப்பு, ·பாரெக்ஸ் பேபி

அப்பாஸ¤டன் இரண்டு படங்கள் என்று தடுமாறுகிற சிம்ரன் நிலைப்பாரா?

Simran ஆனால், ப்ரியாவுக்கோ இறங்குமுகம். சிம்ரனோ தெலுங்கு, மலையாளம்,

மணிரத்னம் படம் என முன்னேறுகிறார். ‘ஒன்ஸ் மோரில்’ ஆரம்பித்தவர், தனது

ஆடைத்தேர்வு, இளங்கதாநாயகர்கள், பண்பட்ட நடனம், புன்சிரிப்பால்

தமிழ் பத்திரிகைகளின் அட்டை முதல் வாசகர்களின் உள்ளம் வரை நிறைத்தார்.

‘தேரே மேரே சப்னே’ ABCL-ஐ மூட வைப்பதற்கு உதவிய படம். கிட்டத்தட்ட

அதன் மறுபதிப்பான ‘விஐபி’யிலும், கிட்டத்தட்ட அதே மாதிரி கதாபத்திரத்தை

ஏற்று, படத்தையே ஹிட்டாக்கியவர் சிம்ரன். அஜீத்துக்கு ‘அவள் வருவாளா’, ‘வாலி’

என்று உச்சாணிக் கொம்புக்கு கைதூக்கியவர். ப்ரியாவும் அஜீத்துடன் ‘ரெட்’டில்

ஜோடி சேர்ந்தார். டாப் 10-ல் சன் டிவி பாடலை ஓட்டியும், அவருக்கு படம்

கைகொடுக்கவில்லை.

இவ்வளவு பெரிய வியாக்கியானம் எதற்கு?

1. நாவல்தான் எழுதவில்லை. ‘நவல் புராண’மாவது கொடுப்போமே?

2. அற்புதமான ஆரம்பம் கிடைத்தாலும், ஒருவர் வெற்றி வெறுவார்

என்பது நிச்சயமில்லை?

3. ‘வந்தாரை வாழவைக்கும் தமிழ்நாடு’, சிலருக்குத்தான் பொருத்தம்?

4. திறமை இருந்தால் போதாது. ‘காற்றுள்ள போதே தூற்றிக் கொள்ளும்’

மனப்பான்மையும், சமரசங்கள் செய்யவும் தயாராய் இருக்க வேண்டும்?

கதை விட வாங்க – 6

சுந்தர ராமசாமி

உலக அரங்கில் தமிழ் இலக்கியம்

ஒரு படைப்பாளி இளைய தலைமுறைக்குக் கூற விரும்புபவை

சுந்தர ராமசாமியுடன் ஒரு நேர்முகம் – வே. வெங்கடரமணன்

ஆட்டோகிராஃப் – திரைப்பாடல் விமர்சனம்

இசை: பரத்வாஜ்

நட்சத்திரங்கள்: சேரன், கோபிகா, ஸ்னேஹா

இயக்கம் & தயாரிப்பு: சேரன்

1. ஞாபகம் வருதே – பரத்வாஜ் – 2.5 / 4

‘அவரவர் வாழ்க்கையில் ஆயிரமாயிரம் மாற்றங்களை’ப் பிடித்தவர்களுக்கு, இந்தப் பாடலும் பிடிக்கும். பட்டியலிடுவது கொஞ்சம் அலுப்பு தட்ட வைத்தாலும், வரிகளை காயப்படுத்தாத இசை.

பிடித்த வரிகள்:

‘முதல் முதல் பார்த்த டூரிங் சினிமா

முதல் முதல் வாழ்ந்த கிராமத்து வீடு

முதல் முதல் அழுத சினேகிதன் மரணம்’

புளித்த வரிகள்:

‘முதல் முதல் குடித்த மலபார் பீடி

முதல் முதலாக விரும்பிய இதயம்’

2. ஜகதோ தாரண – ஸ்ரீவித்யா, ரேஷ்மி – 3 / 4

என்ன ராகம் என்று தெரியாது. ஆனால் கேட்பதற்கு ரம்மியமாக இருக்கிறது. ஒரு மெல்லிய மாலையில் காபியை வைத்துக் கொண்டு பனி விழுவதை வேடிக்கை பார்க்கும்போது கேட்பதற்கு ஏற்ற பாடல். சரளி வரிசை வந்தாலும் போரடிக்காமல் உள்ளது.

3. கிழக்கே பார்த்தேன் – யுகேந்திரா, ஃபோனி – 1.5 / 4

எதற்காக பாடல் நடுவில் ‘ராப்’ நுழைந்தது என்று தெரியவில்லை. தோழியின் பெருமைகளை அடுக்கும் சாதாரணமான இசை கொண்ட பாடல். கேட்காமலும் விடமுடியாது; கேட்டாலும் மனதில் இடம் கேட்டு ஆக்கிரமிக்காது

பிடித்த வரிகள்:

‘என் பயணத்தில் எல்லாம் நீ கைகாட்டி மரமாய் முளைத்தாய்

தோழி ஒருத்தி கிடைத்தால் இங்கு இன்னொரு பிறவி கிடைக்கும்

இதுவரை இந்த உண்மை ஏன் தெரியவில்லை எவருக்கும்?’

4. மனமே நலமா – பரத்வாஜ் – 2 / 4 (பிட் பாடல்)

கொஞ்சம் பீட்… கொஞ்சம் கொஞ்சல்…

5. மனசுக்குள்ளே தாகம் – ஹரிஷ் ராகவேந்திரா, ரேஷ்மி – 2 / 4

மெலடிக்கு மலையாளம் ரி-மிக்ஸ் கொடுத்த வார்த்தைகள். ஆங்காங்கே எட்டிபார்க்கும் ஸேக்ஸும், மலையாள வாத்தியங்களும் மெருகேற்றுகிறன. ஹரிஷும் ஏமாற்றவில்லை.

பிடித்த வரிகள்:

அனேகமாக மொத்தப் பாடலையும் சொல்ல வேண்டும்.

புளித்த வரிகள்:

‘தமிழ்நாட்டு வெட்கம் வந்துச்சோ…’

6. நினைவுகள் நெஞ்சில் – உன்னி மேனன் – 1.5 / 4

காதல் பிரிவில் வரும் துக்கப் பாடல். சோகரசத்தை விட தாலாட்டு போல் தெரிகிறது. இசையமைப்பாளரும் பாடலாசிரியரும் இன்னும் கொஞ்சம் மனதைப் பிழிந்திருக்க வேண்டிய பாடல்.

‘என்னை எனக்கேப் பிடிக்கவில்லை

காரணம் கேட்டால் தெரியவில்லை’

7. ஒவ்வொரு பூக்களுமே – சித்ரா – 2.5 / 4

நெடுந்தொடர் முன் வரும் பாடல் போல் உள்ளது. (ஆனால், நன்றாகவே உள்ளது). சேரனுக்கு ஸ்னேஹா கொடுக்கும் அட்வைஸ் படலமாக இருக்கலாம். அதை நினைத்தால் பாடல் இன்னும் மெருகேறுகிறது.

பிடித்த வரிகள்:

‘மலையோ அது பனியோ நீ மோதி விடு

ஓரு கனவு கண்டால்

அதை தினம் முயன்றால்

ஓரு நாளில் நிஜமாகும்’

புளித்த வரிகள்:

சில cliches இருந்தாலும் இனிமையான பாடல்.

8. மீசை வைச்ச பேராண்டி – கோவை கமலா, கார்த்திக் க்ரூப் – 3 / 4

‘பார்த்திபன் கனவில்’ கூட குத்தல் பாட்டு வைத்திருக்க வேண்டும். இங்கு பெணகளினால் ஏற்படும் சோகத்தை கூத்தாக சொல்லும் பாடல். ஜாலியாக ஆடிவிட்டு, தெருத்துவத்தை சிலாகிக்கவும் உள்ள ‘பெப்ஸி’ உங்கள் சாய்ஸ் பாடல். ட்ராஃபிக் ஜாமில் மாட்டிக் கொண்டால் ஒலிப்பேழையோடு சத்தமாகப் பாடி ‘டைம்பாஸ்’ செய்யுங்கள்.

காதைக் கிழிக்காத இசையையும், திரைப்பாடல்களில் வைரவரிகளைத் தேடுபவர்களுக்கும் உருப்படியான சமாசாரம் நிறைய இருக்கு. அவசியம் கேளுங்க