Monthly Archives: பிப்ரவரி 2004

ஜே. கிருஷ்ணமூர்த்தி (தமிழாக்கம்: பி.கே. சிவகுமார்)

இதயத்தின் எளிமை (Simplicity of the heart)

நற்பண்பு (Virtue)

அனுபவித்தல் (Experiencing)

அரசியல்

கௌரவம் (Respectability)

சடங்குகளும் மாற்றமும் (Ceremonies and conversion)

பணக்காரரும் ஏழையும்

அறிவு (Knowledge)

தனித்திருத்தலும் தனிமைப்படுத்தப்படுதலும் (Aloneness and Isolation)

எண்ணமும் அன்பும்

வம்பு பேச்சும் கவலையும்

பிடிவாதமும் ஆவேசமும் நிறைந்த பித்து (obsession)

அடையாளம் காண்கிற தற்காப்பு

உரிமை கொண்டாடுகிற ஆளுமை

பொறாமை

தூண்டப்படாததும் தன்னிச்சையுமான இயல்பு

தன்னகங்காரத்தின் மூன்று பக்தர்கள்

சீடனும் குருவும்

நன்றி: திண்ணை.காம்

தமிழ் சிறுகதைப் போட்டி (கனடா தமிழ் இலக்கியத் தோட்டம்)

Thinnai – Weekly Tamil Magazine: “கனடா தமிழ் இலக்கியத் தோட்டமும், காலம் இதழும் இணைந்து நடத்தும் தமிழ் சிறுகதைப் போட்டி – கடைசித் தேதி 30, ஏப்ரல் 2004

போட்டிக்கு சிறுகதைகள் அனுப்பவேண்டிய முகவரி:

Tamil Short Story Contest

16, Hampstead Court,

Markham, ON L3R3S7

Canada

போட்டி விபரங்கள்:

* சிறுகதைகள் தட்டச்சில் அல்லது கம்புயூட்டரில் அச்சடிக்கப்பட்டு, 2000 வார்த்தைகளுக்குள் அடங்கி இருக்கவேண்டும். இந்த விதிகளை புறக்கணிக்கும் சிறுகதைகள் நிராகரிக்கப்படும்.

* முதல் மூன்று கதைகளைத் தவிர மேலும் பிரசுரத்துக்கு உகந்தவற்றை, ஆசிரியர் சம்மதத்துடன், காலம் இதழ் பிரசுரிக்கும்.

* சிறுகதையின் எந்தப் பக்கத்திலும் ஆசிரியர் பெயர் இருக்கக்கூடாது. கதையுடன் வரும் மேல் இணைப்பில் கீழ் கேட்கும் விபரங்களை குறிப்பிடுதல் அவசியம்.

அ) சிறுகதை வார்த்தைகளின் எண்ணிக்கை.

ஆ) ஆசிரியர் பெயர், முகவரி, தொலைபேசி எண், தொலைநகல், ஈமெயில் போன்ற விபரங்கள்.

இ) நூறு வார்த்தைகளுக்கு மேற்படாமல் ஆசிரியரைப் பற்றிய சிறு குறிப்பு. “

ஜானட் ஜாக்ஸன் போனார்… கெர்ரிகேட் அவல் வருகிறது

ட்ரட்ஜ் ரிபோர்ட் வலைப்பக்கங்கள் இன்னொரு சர்ச்சையை கிளப்பி விட்டிருக்கிறது. வாஷிங்டன் போஸ்ட் முதல் சிகாகோ சன் டைம்ஸ் வரை ஆராய ஒரு புது திரியை உலவ விட்டிருக்கிறார்கள். சுதந்திர கட்சி என்றாலே காதல் மன்னன் கென்னடியும், காதல் இளவரசர் கிளிண்டனும் நினைவில் வருவார்கள். அவர்கள் ஜனாதிபதியானது போலவே, கெர்ரியையும் ஆக்க முயற்சி செய்கிறார்கள்.

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் நிற்கும் வேட்பாளர்களில் ஜான் கெர்ரி முண்ணனியில் உள்ளார். சுதந்திர கட்சி சார்பாக பதினான்கு மாகாணங்களில் நடந்த தேர்தல்களில் பன்னிரெண்டை கைப்பற்றி விட்டார். மார்ச் 2-க்குப் பிறகுதான் சண்டியர் புஷ்ஷை யார் எதிர்ப்பவர் என்று தெரியும் என்றாலும், அனேகமாக கெர்ரிதான் என்று பரவலாக பேச வைத்துள்ளார். முதல்கட்டத்தைத் தாண்ட வேண்டும் என்பதற்காக பாஸ்டனில் பெரிதாக அடிபடும் ஓரினக் கல்யாணங்கள் சர்ச்சையிலும் வழவழா கொழ கொழா பதிலகள் கொடுப்பது, புஷ்ஷை வீழ்த்துவதற்கு அதிக வாய்ப்பு உள்ளவராக காண்பித்துக் கொள்வது என்று காய்கள் நன்றாகவே நகர்த்தப்பட்டு வருகின்றன.

தற்போதைய பணக்கார மனைவி தெரஸா ஹெய்ன்ஸை 1995-இல் மணமுடிக்குமுன், 1988-இல் முதல் மனைவியுடன் விவகரத்தானது. இடைப்பட்ட சொர்க்க காலமான ஏழு வருடத்தில் பல பெண்பார்க்கும் படலம் நிறைவேறியது சகஜம். அப்பொழுது சந்தித்த அஸோசியேடட் ப்ரெஸ் நிருபர் ஒருவருக்குக் குழந்தையும் கொடுத்து, அவளை நாடு கடத்தியதும்தான் இப்பொழுதைய சர்ச்சை.

தேர்தல் சமயத்தில் விவகாரங்களை பிரபலபடுத்துவது சாதாரணமான விஷயம். வாக் தி டா·க் திரைப்படம் முதல் என்.பி.சி.யின் வெஸ்ட் விங் வரை எல்.கே.ஜி. சொல்லிக் கொடுப்பது போல் அமெரிக்க அரசியல் அல்வாக்களை செய்முறை விளக்கியுள்ளார்கள்.

பொதுமக்களுக்கு ஒரு சந்தேகம்தான்… கெர்ரியே இப்படி செய்தி உண்டு செய்தாரா? அல்லது தேர்தலில் பரபரப்பக பேசப்பட்டு, அப்புறம் ஊளையிட்டு, இப்பொழுது மூலையில் தள்ளப்பட்டு தமிழகத்தின் உழவர் உழைப்பாளர் கட்சி போல் தள்ளாடும் ஹோவார்ட் டீன் விதைத்த செய்தியா?

விவாதத் திறமை

சொ.சங்கரபாண்டி

புத்திசாலித்தனமான ஆனால் விஷமத்தனமானவர்கள்

தன் கருத்துக்கு ஒவ்வாதவர்களையோ, தன் எதிரிகள் என்று கருதுபவர்களையோ

இழிவுசெய்து எழுதக் கையாளும் உத்திகள் பல உண்டு:

1. இலேசாக பொய்களை ஆங்காகே தூவுவது (Machiavellian strategy).

2. எதிரிகளின் கருத்தை சிறிது திரித்து எழுதுவது (distortion or misrepresentation).

3. எதிரிகளின் கருத்தை சுருக்கி எழுதும் சாக்கில் தனக்குச்சாதகமான சிலவற்றை

எடுத்து எதிரிக்குச் சாதகமான பலவற்றை விடுத்து களங்கம் ஏற்படுத்தல் (The

Straw Man Fallacy or writing out of context).

4. எதிரியின் கருத்துக்களை விடுத்து, உருவ மற்றும் செயல்படும் திறமைக்

குறைவை பெரிதுபடுத்தல் (focussing on physical discrepancies).

நன்றி: தமிழோவியம்

மனோரமா இயர்புக் 1997 – காலந்தோறும் தமிழிசை

கவிதாசரண்-சிஃபி:

முனைவர் இ. அங்கயற்கண்ணி

இசைத்துறை தமிழ்ப்பல்கலைக்கழகம், தஞ்சாவூர்.

இன்றைக்குத் தேவாரப் பாடல்களைப் பாடிவரும் முறையினை அடிப்படையாகக்கொண்டு சென்னை தமிழிசைச் சங்கத்தில் ஆண்டுதோறும் நடைபெற்றுவரும் தேவாரப் பண்ணாராய்ச்சி மாநாட்டில் ஆராய்ந்ததில் இருபத்தி நான்கு பண்களுக்குரிய இன்றைய இராகங்கள் கிடைத்துள்ளன. இவை பாடப்பட்டு வரும் காலங்களுக்கேற்ப பகற்பண்கள், இரவுப்பண்கள், பொதுப்பண்கள் என்றவாறு வகைப்படுத்தப்பட்டுள்ளன.

எண் –/ பண்கள் / இராகம்

பகற் பண்கள்

1. / புற நீர்மை / பூபாளம்

2. / காந்தாரம் / நவரோசு

3. / பியந்தைக்காந்தாரம் / நவரோசு

4. / கெüசிகம் / பைரவி

5. / இந்தளம் / நாதநாமக்ரியை

6. / தக்கேசி / காம்போதி

7. / நட்டராகம் / பந்துவராளி

8. / சாதாரி /பந்துவராளி

9. / நட்டபாடை / கம்பீர நாட்டை

10. / பழம் பஞ்சுரம் / சங்கராபரணம்

11. / காந்தார பஞ்சமம் / கேதார கௌளை

12. / பஞ்சமம் / ஆகிரி

இரவுப் பண்கள்

13. / தக்கராகம் / காம்போதி

14. / பழந்தக்க ராகம் / சுத்த சாவேரி

15. / சீகாமரம் / நாதநாமக்ரியை

16. / கொல்ý / நவரோசு

17. / கொல்ýக்கெüவாணம் / நவரோசு

18. / வியாதுக்குறிஞ்சி / செüராஷ்ட்ரம்

19. / மேகராகக் குறிஞ்சி / நீலாம்பரி

20. / குறிஞ்சி / குறிஞ்சி

21. / அந்தாளிக்குறிஞ்சி / சாமா

பொதுப் பண்கள்

22. / செவ்வழி / எதுகுலகாம்போதி

23. / செந்துருத்தி /மந்தியமாவதி

24. / திருத்தாண்டகம் / அரிகாம்போதி”

ஒரு அரட்டையும் ஒரு பதிவும்

அம்பலம் அரட்டை – தேசிகன் பக்கம்: ”

w-sujatha: டகடேசுவரன அமுத சரபியில் ரவி சப்ரமண்யம் வெ சா இரா முருகன் கட்டுரைகளை படிததீர்களா

மகுடேசுவரன்: சார். அவசியம் படிக்கிறேன். கொஞ்ச காலமாகவே அமுத சுரபி படிக்கவில்லை

w-sujatha: மகுடேசுவரன் அதில் உங்கள் கவிதைகளைப் பற்றி இராமுருகன் எழுதியள்ளார் ரவி வைரமுத்து வுக்க சாகித்திய அகாதமி விருது பற்றி எழுதியுள்ளார்

மகுடேசுவரன்: தமிழ் இலக்கியம் 2004 மாநாட்டில் கவியரங்கப் பங்கேற்பிற்கு சென்னை வந்திருந்தேன். அந்நிகழ்ச்சியை ஒட்டி என் கவிதைகள்குறித்து அவர் எழுதியுள்ளாரோ ?

மகுடேசுவரன்: சார். அந்த மாநாட்டில் அவருக்கு ஒரு வணக்கம் போடத் தவறிவிட்டேன்.

w-sujatha: மகுடேசுவரன் இந்த வணக்கங்கள் எல்லாம் அவசியம்

மகுடேசுவரன்: சார், தாமதமாகப் புரிந்துகொண்டிருக்கிறேன்.

shankar: i have a theory. v always blame the rulers for dishonesty and currption. but recnetly i have seen many of the public are equaly currupt and not honest in their own way from cheating taxes to govt etc. so when we will become currupt free if most of us corrupted already?? may be good law is required

w-sujatha:நிறைய பேசிவிட்டோம் அடுதத வாரம சந்திப்போம் ஷங்கர் நீங்கள்சொல்லும கருத்தினஅடிப்படையிலதான் டைரகடர் ஷங்கரின் அடுதத படமான `அன்னியன்` அமைந்திருக்கிறது எல்லோருக்கம் வணக்கம்

சிஃபி/அமுதசுரபி – தமிழ் இலக்கியம் 2004 – இரா. முருகன்: “என் கருத்து – எஸ்.பொ.வின் பாலுணர்வுத் தேடல்கள், அவருடையவை. அவற்றை வாழ்க்கை வரலாற்றில் பகிர்ந்து கொள்வதால் என்ன நிறைவு அடைந்திருக்கிறார், அவர்? அதுவும் அவரோடு இருந்த, பெயர் குறிக்கப்பட்ட பாலியல் தொழிலாளிப் பெண்கள் பற்றியெல்லாம், அவர்கள் மூலம் தனக்கு பால்வினை நோய் வந்ததைப் பற்றி எல்லாம் எழுதித்தான் இருக்க வேண்டுமா? அது மெல்லிய குரூரம் இல்லையா? இந்தப் பெயர்களும் எஸ்.பொ. வுக்குப் பால்வினை நோய் வந்ததும் எப்படி வரலாற்றில், வரலாற்றோடு வாழ்வதாகும் என்று எனக்குச் சத்தியமாகப் புரியவில்லை.

ஒரு மணி நேரத்துக்கு மேல் ஞானி பேசினாலும் அவையில் குண்டூசி விழுந்தாலும் கேட்கும் நிசப்தம். பேசி முடித்து அவர் கீழே இறங்கிய போது உணர்ச்சி வசப்பட்டு ஓர் அன்பர், அவர் காலில் விழுந்தார். ஞானியின் புன்சிரிப்புக்கு என்ன அர்த்தம் என்று எனக்குப் புரிகிறது.

—-

கவியரங்கில் ஏமாற்றம், மகுடேசுவரன். சுஜாதாவின் செல்லப் பிள்ளையாகக் கணையாழியில் எழுதி வளர்ந்தவர். (இலக்கியச் செல்லப்பிள்ளைகள் தறுதலைகளாவது பற்றித் தோழமை அரங்கில் மாலன் குறிப்பிட்டதாக நினைவு). தான் தற்போது எழுதிவரும் “மூன்றாம் பால்” தொகுப்பில் இருந்து கவிதைகளைப் படித்தார், மகுடேசுவரன். ஊர்ப் பெயர்களாக அடுக்கி ஒரு காதல் தம்பதியின் கதையைச் சொல்லும் கவிதை ஒன்று இப்படி முடிந்தது.

இப்போது / பழனியில் அவன்

திரிகிறான் / பரதேசியாக.

வேலூரில் அவள்

இருக்கிறாள் /வேசியாக.

‘Don’t send me such trash anymore’”

விமான விபத்து – கிஷ்

சென்னை ஆன்லைன்: கிஷ்: “அமீரகத்தில் இருப்பவர்களுக்கு, அதுவும் நிரந்தரக் குடியுரிமையில்லாமல் இருப்பவர்களுக்கு கிஷ் தீவு ஒரு வரப்பிரசாதம் என்றுதான் சொல்லவேண்டும் அமீரகத்தில் ஏதேனும் ஒரு வேலை கிடைக்குமா என்ற ஏக்கத்தில்

இந்தியாவிலேயே இருந்துவிடாமல், விசிட் விசாவில் அமீரகம் வந்து வேலை தேடலாம் என்று நினைக்கும் இந்தியர்கள் உள்ளிட்ட உலக மக்கள் ஏராளம் பேர். முதலில் விசிட்டில் வந்து, பின் employment visa பெறும் நபர்களுக்கும் பேருதவியாய் இருப்பது கிஷ் தீவுதான். பதிநான்கு நாள்களிலும் விசிட்விசாவோ employment visaவோ கிடைக்கப்பெறாதவர்கள் பத்திரமாய் கிஷ்விமானதளத்திற்கு அனுப்பப்படுவார்கள். கிஷ் செல்வதற்கான இன்னொரு காரணம், கிஷ் செல்ல விசா வாங்கவேண்டியதில்லை என்பது.” என்று பிரசன்னா எழுதித்தான் கிஷ் மகாத்மியம் அறிந்து கொண்டேன்.

‘வெற்றி கொடி கட்டு’ கனவுகளுடன் கிஷ்ஷில் இருந்து ஷார்ஜாவுக்குப் திரும்பிக் கொண்டிருந்த நாற்பத்தி நான்கு பேர்கள் விமான விபத்தில் இறந்து விட்டார்கள். இருவர் மட்டுமே உயிருக்குப் போராடி வருகின்றனர். பன்னிரண்டு இந்தியர்களும், ஒரு பங்களாதேஷியும் இறந்துள்ளார்கள்.

ஹரன்பிரசன்னா கிஷ்ஷை வைத்து ஒரு கதையும் எழுதியுள்ளார்.

ஆடோகிராஃப்


நன்றி: குமுதம்

வாழ்க்கையை இன்ச் பை இன்ச் ரசிக்கிறேன் – அனுராதா ரமணன்

சந்திப்பு : மாயன் (குமுதம் ஜங்ஷன்): “நான் பாண்டிச்சேரி அரவிந்த ஆசிரம அன்னையின் பக்தை. அன்னைக்காக தினமும் நூறுரூபாய் வரை பூக்கள் வாங்குவேன். தாமரைப்பூ, செண்பகப்பூ என்று பலவிதமான பூக்கள்.

எழுதுவதற்காக உட்கார்ந்தால் எழுத்துகள், வார்த்தைகள், வரிகள், பக்கங்கள், அத்தியாயங்கள் என்று போய்க்கொண்டே இருக்கும். ஒரே நேரத்தில் பல வேலைகளைச் செய்வது என் பழக்கம். எழுதிக் கொண்டிருக்கிறபோதே முன்பின் தெரியாத சிநேகிதிகள் எனக்கு போன் செய்வார்கள். அவர்களின் பிரச்னையை எடுத்துச் சொல்வார்கள். அவர்களின் பிரச்னையை போனிலேயே தீர்த்து வைப்பேன்.

பகல் நேரத்தில் என்னை யாராவது பார்த்தால் புல் மேக்கப்பில் இருப்பேன். ‘மேடம், எங்கேயாவது வெளியே போறீங்களா?’ என்று என்னைப் பார்த்து நிச்சயம் கேட்பார்கள். இந்த அலங்காரத்தை நான் வேஷமாக நினைப்பதில்லை. உற்சாகமாக இருக்க இதுவும் அவசியம் என்று எனக்குப் படுகிறது.”

மரபு காக்கும் தமிழ் நாள் காட்டி — தமிழ்க்கனல்

ஆறாம்திணை: “அனைத்தும் தமிழ்மயமாக வேண்டும் எனும் குரல்கள் வலுப்பெற்று வரும் நிலையில், முழுவதும் தமிழ் முறையிலான தமிழ் நாள்காட்டியைப் பின்பற்ற வேண்டும் என்ற குரலும் கூட வலுத்து வருகிறது.

‘வழக்கில் −ருந்து வரும் பிரபவ முதல் அட்சய வரையிலான அறுபது ஆண்டுகளும் தமிழ் ஆண்டுகள் அல்ல. −வற்றுக்குச் சொல்லப்படும் கதை அறிவியலுக்குச் சற்றும் பொருத்தமானதாக −ல்லை. சித்திரை தொடங்கி பங்குனி வரை தமிழ் மாதங்களாகச் சொல்லப்படுபவை தமிழ்ப் பெயர்களே அல்ல.

கி.மு. 31 ஆம் ஆண்டைத் திருவள்ளுவர் ஆண்டின் தொடக்கமாகக் கொண்டு, திருவள்ளுவர் (தமிழ்) தொடர் ஆண்டின் அடிப்படையில் −ந்த நாள்காட்டி அமைக்கப்பட்டுள்ளது. −ன்றைய எண்களுக்கு மூலமான தமிழ் எண்களே −ந்த நாள்காட்டியில் குறிக்கப்பட்டுள்ளன. கோள்களை அடிப்படையாகக் கொண்டு பண்டைத் தமிழர் பின்பற்றி வந்த மாத, நாள் முறையே −தில் −டம் பெற்றுள்ளது.

மேழம் (ஆடு வடிவம்), விடை (காளை), ஆடவை (−ரண்டு ஆடவர்), கடகம் (நண்டு), மடங்கல் (சிங்கம்) கன்னி (பெண்), துலை (தராசு), நளி (தேள்), சிலை (வில்) ஆகிய மாதங்களும் பெயரிடப்பட்டன.

சந்திரனை அடிப்படையாகக் கொண்டு ஆரிய −னக் குழுவினர் ஏற்படுத்திய மாதங்களை நடைமுறைக்கு வரச் செய்தனர். அறிவன், காரி ஆகிய நாள்களை முறையே புதன், சனி என வடமொழிமயமாக்கினர். பக்கல் என்பதைத் தேதி என மாற்றினர். பற்சக்கர முறையிலமைந்த பிரபவ முதல் அட்சய வரையிலான 60 ஆண்டுகள் முறையைப் புகுத்தினர். பெண்ணாக மாறிய நாரத முனிவனுடன் கிருஷ்ணன் அறுபதாண்டுகள் கூடியிருந்ததாகவும் அப்போது ஆண்டுக்கு ஒன்றாகப் பிறந்த குழந்தைகளின் பெயர்களே பிரபவ முதல் அட்சய வரையும் என்ற கதையும் கூறப்பட்டது.

மறைமலையடிகள் தலைமையில் 1921 ஆம் ஆண்டு சென்னை பச்சையப்பன் கல்லூரியில் கூடினர். எந்த சாதி, சமயப் பிரிவையும் சாராத உலகப் பொதுமறையை −யற்றிய திருவள்ளுவரின் காலத்தை அடிப்படையாகக் கொண்டு தமிழ் தொடராண்டு பின்பற்றுவதென அவர்கள் முடிவு செய்தனர். −லங்கைத் தனித் தமிழ் அறிஞர் கா.பொ. ரத்தினம் உள்பட உலகெங்கும் உள்ள தனித்தமிழ் ஆர்வலர்கள் திருவள்ளுவர் தொடர் ஆண்டு முறையைப் பரப்பும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர்.

தேவநேயப் பாவாணரின் உலகத் தமிழ்க் கழகம், பெருஞ்சித்திரனாரின் உலகத் தமிழின முன்னேற்றக் கழகம், தென்மொழி −தழ், கல்பாக்கம் வேம்பையன் எனப் பல தரப்பினராலும் அப் பணி −ன்றும் தொடர்ந்து வருகிறது. “