Monthly Archives: பிப்ரவரி 2004

புத்தக வெளியீடுகள் – எழுத்தாளர்கள் சங்கம்

28.02.2004 சனி 6:00 PM

தேவநேயப் பாவாணர் நூலக அரங்கம்

அண்ணா சாலை, சென்னை

வரவேற்புரை: கி.ஆ. சச்சிதானந்தம்

ஒருங்கிணைப்பாளர்: ரவி சுப்ரமணியம்

தலைமை: டாக்டர் சுந்தரமூர்த்தி

புத்தக வெளியீடு: (1)

‘கொங்குதேர் வாழ்க்கை’ (சங்க காலச் செய்யுள் சில உரையுடன்) – எஸ். சிவகுமார்

வெளியிடுபவர்: எஸ். ராமச்சந்திரன்

பெற்றுக் கொள்பவர்: பல்லடம் மாணிக்கம்

புத்தக வெளியீடு: (2)

‘புதுக்கவிதை வரலாறு’ – ராஜமார்த்தாண்டன்

வெளியிடுபவர்: வெங்கட் சாமிநாதன்

பெற்றுக் கொள்பவர்: கா மோகனரங்கன்

நன்றியுரை: ராஜமார்த்தாண்டன்

புத்தக வெளியீடு: (3)

‘தென்குமரியின் கதை’ (கன்யாகுமரி மாவட்டம்: சங்ககாலம் முதல் நிகழ்காலம் வரை) – அ.கா. பெருமாள்

வெளியிட்டு பேசுபவர்: பழ. கருப்பையா

நன்றியுரை: அ.கா. பெருமாள்

புத்தக வெளியீடு: (4)

‘இரவு’ (எலி வெசெல்: சுயசரிதை) – தமிழில்: ரவி இளங்கோவன்

வெளியிட்டு பேசுபவர்: கோபாலகிருஷ்ணன் (‘சூத்ரதாரி’ எழுதியவர்)

பெற்றுக் கொள்பவர்: அ. சாரங்கன் (ஓவியர், கு. அழகிரிசாமியின் மகன்)

புத்தக வெளியீடு: (5)

‘ஏழாம் உலகம்’ (நாவல்) – ஜெயமோகன்

வெளியிடுபவர்: நாஞ்சில் நாடன்

பெற்றுக் கொள்பவர்: ·ப்ரான்சிஸ் கிருபா (கவிஞர்)

நன்றியுரை: ஜெயமோகன்

மேலும் விவரங்களுக்கு: tamilininool@yahoo.co.in/044 28110759

ஒரு காதல் கதை – சாரு நிவேதிதா

முகம் I: “சரி, பேசி விட வேண்டியதுதான்’ எனத் தீர்மானித்தேன். கொஞ்ச நேரம் ஆகட்டும் என்று நினைத்த

படி, வாங்கி வந்த போகர் வைத்தியம் 700 என்ற நுõலைப் புரட்ட ஆரம்பித்தேன். கண்ணில்

தென்பட்ட பக்கம் சுவாரசியமாக இருந்தது. இதோ:

“”உலகத்தில் மக்கள் கழுதையை இழிவாகக் கருதுகிறார்கள். ஆனால், உண்மை அப்படியன்று.

கழுதைப் பிறவி மாண்புடையதாகும். அதற்கு மறுபிறவி இல்லை. கழுதையைக் கொண்டு பற்பல

வித்தைகளை உலகில் செய்து முடிக்க முடியும்.

உதாரணமாக, சுழல் வண்டு, குழியானை, மின்மினிப்பூச்சி, ஈப்பு1⁄4 என்னும் பூச்சி, நாய்ப்பால்,

மருள் ஊமத்தை விதை, ஐவிர1⁄4ச்சாறு, பேய்க்கரும்பின் சாறு, செந்நெல்முளையரிசி, பாதரசம்,

கோரோசனை ஆகியவற்றைச் சம அளவு எடுத்து கல்வத்தில் இட்டு அதோடு கழுதையின் விந்தை

எடுத்துச் சேர்த்து அரைக்க வேண்டும். இதனோடு சல்1⁄4க்கொடியின் வேரையும் அரைத்துச் சேர்த்துக்

குளிகையாகக் கட்டிக் கொள்ள வேண்டும். இக்குளிகையோடு பெண்ணை வசியம் செய்ய நினைப்

பவனுடைய கண் பீளை, காதுக்குறும்பி, மூக்குச்சளி, எச்சில், வேர்வை ஆகிய ஐந்து அழுக்குகளை

யும் அவனுடைய விந்தையும் சேர்க்க வேண்டும். இவ்வாறு செய்யப்பட்ட குளிகையைப் பால்,

பழம், காய்கறி, சாப்பாடு, வெற்றிலைப் பாக்கு, பலகாரம் ஆகியவற்றுள் எதனுடனாவது சேர்த்துத்

தனக்கு வேண்டியவளை உட்கொள்ளச் செய்தால் அவள் வசியமாவாள்…”

என்னவென்று சொல்ல முடியாத அதி ஆச்சரிய உணர்வுகளுடன் புத்தகத்தை மூடி வைத்து விட்டு

நிமிர்ந்தேன்.



நான் மிக நேர்த்தியாக ஆடை அணிவேன். ஒரு நாள்… தலை குளித்திருந்தேன். தலை பின்ன நேரம் இல்லை.

தலைமுடி விரிந்து கிடந்தது. கருஞ்சிவப்பு நிறப் புடவை. நான் கரும்பலகையில் எழுதிக் கொண்டே

இருந்தேன். பொதுவாக மாணவர்கள் முன்னே புடவைத் தலைப்பை பறக்க விட மாட்டேன். இதிலெ

ல்லாம் நான் மிகவும் கண்டிப்பு. ஆனால், அன்றைக்கு என்று பார்த்து செருகியிருந்த புடவைத்

தலைப்பு அவிழ்ந்து விட்டது. வழுக்கிக் கொண்டு போகும் சேலை அது. அந்த வகுப்பில் குறும்பு

செய்பவர்கள் அதிகம் என்று பேர்.


நன்றி: கோணல் பக்கங்கள்

தமிழோவியம் மின்புத்தகங்கள்



Tamiloviam Ebooks
நம்ம வலைப்பதிப்பாளர்களுக்காக தமிழோவியம் பதினைந்து சதவிகிதம் தள்ளுபடி கொடுக்கிறது. புத்தகங்களை உடனடியாக வலையிறக்கி வாசிக்கும் சௌகரியம். ஷிப்பிங் அண்ட் ஹாண்ட்லிங், இந்தியா விஜயம், என்றெல்லாம் பிக்கல் பிடுங்கல் கிடையாது என்பதையும், கட்டிலில் தாச்சுண்டு படிக்க முடியாது போன்றவற்றையும் வெங்கட்/பத்ரி என அனைவரும் அலசி விட்டார்கள். இந்தப் புத்தகங்களில் பலவற்றை நான் வாங்கி இருந்தாலும், படித்து முடித்திருப்பது ‘அலகில்லா விளையாட்டு’ மட்டுமே. அதன் விமர்சனத்தை இங்கு படிக்கலாம்.

தமிழோவியம் வெளியிட்ட மின்-புத்தகங்களின் பட்டியல்:

ஆயிரம் வாசல் உலகம் – என். சொக்கன்

வலைத்தமிழ் – ஐகாரஸ் பிரகாஷ்

அலகிலா விளையாட்டு – பா. ராகவன்

அம்பானி – என். சொக்கன்

உள்ளம் உதிர்த்த பூக்கள் – பா.ராகவன்

பேனா மன்னர்கள் – முத்துராமன்

முதல் பொய் – என். சொக்கன்

பிருந்தாவனில் வந்த கடவுள் – நாகூர் ரூமி

விவாஹப் பொருத்தம்: ஒரு விவாதம் – ஜோதிடரத்னா S. சந்திரசேகரன்

கூபான் எண்ணை இங்கிருந்து வெட்டி ஒட்டலாம் –> VCT02EB029

இணையத்து ஸ்டைல் டிஸ்க்ளெய்மர்கள்:

1. இந்த புத்தகங்களை நீங்கள் வாங்குவதால் எனக்கு நயா அணா கூலி கிடையாது.

2. இணையத்தில் தவணை அட்டையை சுற்றும் முற்றும் பார்த்து விட்டு விடவும்.

3. புத்தகம் படிக்கும்போது உங்கள் மானேஜர் வந்தால் நான் பொறுப்பல்ல.

4. புத்தகத்தில் இருக்கும் விஷயங்களை (என் போன்றவர்களுக்காக) வெட்டி வேறெங்கும் நோட்பேடிட முடியாது.

5. இருநூறு பக்கத்தை பிரிண்டருக்கு அனுப்பி அதில் வரும் சத்தத்தில் கூட்டாளிகள் தூக்கம் கலையலாம்.

6. புத்தகத்தை ஊடுருவி கொந்த முடிந்தால் எனக்கும் ஒரு வார்த்தை சொல்லுங்கள்.

பாலுக்கும் காவல்; பூனைக்கும் தோழன்?

rhizomes&nodes: “நாடெர் எடுத்துள்ள முடிவு குறித்தும் எழுத வேண்டும்.அவர் ஜனநாயக் கட்சி மீது வைக்கும் விமர்சனங்கள் நியாயமானவையே- ஆனால் இம்முடிவு யார் தரப்பை வலுப்படுத்தும், ஒட்டுகள் சிதறினால் யார் பயனடவார்கள்?“.

தமிழ்நாட்டில் பெயர் குழப்பம் செய்வார்கள். திமுக சார்பாக மைலாப்பூரில் ‘ராமஜெயம்’ என்பவர் தேர்தலில் நின்றால், அதே பெயர் கொண்டுள்ள இருவர் சுயேச்சையாக போட்டியிடுவார்கள். திமுக-வை சேர்ந்த இன்னும் சிலர் போட்டி வேட்பாளராக எதிர்கட்சியின் சார்பில் களமிறக்கப் படுவார்கள். அவரின் சாதி, இனம், மொழி இன்ன பிற பாகுபாடை சேர்ந்தவர்களும் சுயேச்சையாக நிக்கவைக்கப் படுவார்கள். திமுகவும் இதே மாதிரி வேலையை தன்னுடைய எதிர்கட்சி வேட்பாளருக்கு பதில் மரியாதை செய்யும்.

அமெரிக்காவின் ரால்ஃப் நாடரும் கிட்டத்தட்ட இதே போன்ற உதவியை புஷ்ஷுக்கு மீண்டும் செய்வார் போலத் தெரிகிறது. போன தடவை ப்ளோரிடா மற்றும் பல மாநிலங்களில் விந்தியாவின் மெல்லிய ஆடை நெய்த இழை போன்ற ஓட்டு வித்தியாசத்தில் ஆல் கோர் தோற்கக் காரணமானவர். ஆனால், புளித்துப் போன இரு கட்சிகளுக்கு நல்ல மாற்றாகவும் விளங்குபவர். சிகரெட் விற்பவர்களும், காப்பீடு நிறுவனங்களும், மருந்து தயாரிப்பவர்களும், கார் கம்பெனிகளும் பணத்தைக் கொட்டி வளர்க்கும் கட்சிகளுக்கு நடுவே, தேர்தல் நிதி கையூட்டு வாங்காமல் போட்டியிட முயற்சிப்பவர்.

அமெரிக்காவின் முக்கிய நிறுவனங்கள் அனைத்துமே இரு கட்சி வேட்பாளர்களுக்கும் பணத்தை வாரி வழங்குகிறது. தங்களுக்குத் தேவையான சட்டதிட்டங்களை நிறைவேற்ற இது வழிவகுக்கும். கொடுக்கும் விகிதாசாரங்களில்தான் வேறுபாடு. இந்த டிவி சீரியல் மந்தை கூட்டத்தில் தனித்து நிற்பவர்: நாடர்.

த.மா.கா. சீரிய கொள்கைகளை கொண்டிருக்கலாம். ஆனால், தனிவழி சென்றதால், மீண்டும் அதிமுக கோலோச்ச வழிவகுத்தது. பஞ்சதந்திரக் காலத்தில் இருந்து சொல்லி வரும் ‘ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு’ ஏனோ நினைவுக்கு வருகிறது.

மனுசனை மனுசன் சாப்பிடறாண்டா….

சில நாட்கள் முன்பு பிபிசியின் இந்த நாள் பகுதியில் லுமும்பா இறந்ததாக அறிவிக்கப்பட்ட தினத்தை நினைவு கூர்ந்திருந்தார்கள். இவரை குறித்து எனக்கு முதலில் அறிமுகம் செய்தவர் கணேஷ். ராகாகி-யில் அவர் எழுதியதில் இருந்து:



காங்கோ நாட்டின் முதல் பிரதமர் “லூமும்பா”…. சுருக்கமாகச் சொல்வதானால் காங்கோ நாட்டு காந்தி…

Patrice Lumumbaதனது பேச்சாற்றலினால் காங்கோ மக்களை ஓன்று படுத்தி பெல்ஜியத்திடமி¢ருந்து விடுதலை வாங்கித் தருகிறார். 35 வயதில் காங்கோவின் முதல் பிரதமர்…..ஆனால், வெளியேற வேண்டிய பெல்ஜிய அதிகார கும்பலும் அமெரிக்க CIA வும் சேர்ந்து இரண்டே மாதங்களில் லுமும்பாவை பதவியை விட்டுத் தூக்கிவிட்டு, கர்னல் “மொபுட்டு” வை பிரதமராக்குகிறார்கள்..லுமும்பா house arrestல்…. ஒர் மழை நாள் இரவில் லுமும்பா குடும்பத்தோடு காரில் தப்பிக்கிறார்… அவர்களை ஓட விட்டு நாட்டின் எல்லையில் பிடிக்கிறது ராணுவம்…..சிறையில் அடைக்கப்பட்டு சித்ரவதை செய்யப்படுகிறார்.. காங்கோ நாட்டின் அரசாங்க விழாவில் “மொபுட்டு” லுமும்பாவின் தியாகத்தை மக்களின் முன் புகழ்ந்து கொண்டிருக்கும் போது, மொபுட்டுவின் ராணுவம் லுமும்பாவை காட்டில் வைத்து சுட்டுக் கொல்கிறது……..

படம் பாருங்கள்.. நமக்கு பரிச்சயமில்லாத, பழக்கமில்லாத ஓரு நாட்டின் தலைவன்….இருந்தாலும் படம் பார்த்தபின் லூமும்பா நம் மனதை தொட்டுச் செல்வது உறுதி… அதுவே இந்த படத்தின் படைப்பாளிகளின் வெற்றியும்………

படம் பிரெஞ்ச் மொழியில், ஆங்கில sub titles……

பிபிசி செய்தித்தளம் மேலும் தகவல்களைக் கொடுக்கிறது.

(அமெரிக்காவில் எந்த ஊடகமாவது இதே போல் ‘ஹைதி’ குறித்து பாரபட்சமற்ற அலசல்களைக் கொடுக்கிறதா?):

* கசாய் மாகாணத்தில் ஆயிரம் பேரை கொன்று குவித்ததாக லுமும்பாவின் மீது குற்றஞ்சாட்டப் பட்டிருந்தது.

* நான்கு மாதமே அரியணையில் இருந்த பிறகு, கம்யூனிச சிந்தனைகளால் ராணுவத்தின் ஆதரவை இழக்கிறார்.

* புதிய ஜனாதிபதி மொய்ஸே ஷோம்பெ “இது எங்களுடைய பிரச்சினை; மற்றவர்கள் தலையிட வேண்டாம்” என்று கூறி ஐக்கிய நாடுகள் சபை விசாரிக்க முயற்சித்ததை (இந்தியா காஷ்மீர் விவகரத்தைத் தடுப்பது போல்) தடுத்து விடுகிறார்.

காலம் நிகழ்வு
ஜூன் 1960 லுமும்பா பிரதம மந்திரியாகத் தேர்ந்தெடுக்கப் படுகிறார்.
அக்டோபர் 1960 பதவி பறிக்கப் படுகிறது
டிசம்பர் 1960 லுமும்பா கைதாகிறார்.
18 ஜனவரி 1961 லுமும்பா மற்றும் நெருங்கிய ஆதரவாளர்கள் encounter முறையில் கொலை செய்யப்படுகிறார்கள்.
செப்டம்பர் 1961 புதிய ஜனாதிபது கசுவுபூ ்கர்னல் சோசப் மொபுட்டுவை ஆட்சியிழக்க வைக்கிறார்.
நவம்பர் 2001 அமெரிக்கா மற்றும் பெல்ஜியாவுக்குத் தெரியாமல் லுமும்பா கொலை அரங்கேறியிருக்காது என்னும் பெல்ஜியாவின் அறிக்கை வெளியாகிறது.்
பிப்ரவரி 2002 பெல்ஜியா தவறை ஒத்துக் கொண்டு மன்னிப்பு கேட்கிறது. சுதந்திரத்தை நிலைநாட்ட கொங்கோவுக்கு மூன்று மில்லியன் நிதி அள்ளித் தருகிறது.

ஆஸ்கர் – ‘அ’ முதல்… – சந்திரன்

நச்சாதார்க்கும் இனியன் : “ஆஸ்கர் பரிசு பெற்ற படங்களின் வரிசையையும் சிறு குறிப்பை மட்டுமே ஆசிரியர் தந்துள்ளார். ஏன் அந்தப் படம் ஆஸ்கர் பரிசு பெற்றது- போன்ற செய்திகள் நூலில் இல்லை. வெறும் தரவுகள் வாசகனுக்கு எந்தவித அனுபவத்தையும் தரப்போவதில்லை. படம் பார்க்காத பார்வையாளர்களையும் பார்க்க வைக்கும்படி படங்களைப் பற்றி எழுதியிருக்க வேண்டும். நூலாசிரியர் பார்க்காத காரணத்தினால் பல படங்களை வாசகன் அறிந்து கொள்ள முடியாமல் ஆக்கப்பட்டிருப்பது இந்நூலின் குறை!”

நன்றி: ஆறாம்திணை

பீடி – (மீறல் வகைமையில் ஒரு சிறுகதை): கோபி கிருஷ்ணன்

சிறுகதைகள் மீது என்னுடைய பார்வை, ஒரு சிலரின் கவிதை மேலான கருத்து போல் ஆகி வருகிறது. குமுதம்/விகடனாலோ அல்லது இணையத்தில் காணப்படும் கதைகளினாலோ, இப்படி ஒரு எண்ணம் மேலோங்கி விட்டது. (இவ்வாறு தோன்றுவதற்கும் நான் கதை எழுத ஆரம்பித்ததுக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை Smile). ரசிக்கும்படியான கதைகளை படித்தல் அரிதாகி வரும் தருணங்களில், நான் படித்ததில் பிடித்த ஒன்றில் இருந்து சில பகுதிகள்:



“பீடி ஒரு கலாச்சாரக் குறியீடு… கலாச்சாரப் பாதுகாவலர்கள் மன்னிக்காவிட்டால் பாதகமில்லை.

சூழலியல்வாதிகள் கண்டனம் தெரிவிக்கவும், ஓஸோன் படலத்தில் பொத்தல். மனப்படலத்தில் ஏராளமான பொத்தல்கள் . வாயில் சதா நிக்கோட்டினை நாடும் விழைவு.

புகைத்தலின் உதயம் : 16.10.68 இரவு. காரணம் அந்தரங்கமானது. என் மீது நானே அருவருப்பு கொள்ளச் சுயமாக ஏற்படுத்திக்கொண்ட களங்கம்.

புகைத்தலின் மறைவு : என் மறைவு நாள். என் பிணத்துக்கு எரியூட்டும் போது ஒரு கட்டு சந்திரிகா பீடியை என்னருகில் வையுங்கள். என் இறுதி ஆசை இது மட்டும்.

1975 தாம்பரத்தில் ஒரு ராத்தங்கலுக்கு ஒரு விடுதியில் அறை எடுத்துத் தங்கியிருந்தேன். படுக்கையில் கிடந்தவண்ணம் புகைத்துக்கொண்டிருந்தேன். யதேச்சையாகக் கூரையைப் பார்த்ததில் ‘உங்கள் சாம்பலை எங்கு அனுப்ப?’ என்ற ஆங்கில வாசகம் தென்பட்டது. இருப்பினும் அமைதியாக புகைத்தல் தொடர்ந்தது.

பீடி ஒரு குறியீடு.”



நன்றி: ஆறாம்திணை

யோசிப்பாரா ரஜினி? – ஆர்.வெங்கடேஷ்

தமிழ் சிஃபி – சமாச்சர்:: ரஜினி: “நடிகர்கள் அரசியலுக்கு வருவது என்பது இன்று அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒன்றாக ஆகிவிட்டது. இந்தியா முழுவதுமே, சினிமா தரும் பாப்புலாரிட்டியை நம்பி, அரசியலில் கால் வைக்கும் பிரபலங்கள் ஏராளம். குறைந்தபட்சம் ஒரு எம்.பி.யாகவோ, மந்திரியாகவோ கூட ஆகிவிடுகிறார்கள். கவர்ச்சி அரசியல் என்பது இன்றைய இந்தியாவின் தலையெழுத்துக்களில் ஒன்று. அதை இந்தியர்கள் ஏற்கவும் பழகிவிட்டார்கள்.

ஆனால், ரஜினி விஷயத்தில் எம் கவலையெல்லாம், ரசிகர்கள் பக்கம்தான். இன்னும் ரஜினி வாயைத் திறந்து தமது அரசியல் பயணம் பற்றியோ, கொள்கைகள் பற்றியோ எதுவுமே பேசவில்லை. தனக்கென இயக்கம் கண்டு, ஜனநாயக அரசியலில் அவர் பங்கெடுத்துக்கொள்வதற்கான பணிகளைத் தொடங்கவும் இல்லை. ஆனால், ரசிகர்கள் மட்டும் உதைபட்டுக்கொண்டும், மண்டை உடைந்துகொண்டும் இருக்கிறார்கள்.”

சுற்றுபுற வீடுகள் (4) – Muse Log

நான் கோக் குடிப்பதில்லைதான் என்றாலும், விரும்பி அருந்தும் மனைவி மற்றும் நண்பர்களை உஷார் செய்யவேண்டும். இந்தியாவில்(லும்) எந்தவிதமான நச்சுப் பொருளகளும் இல்லை கற்பூரமேற்றி சத்தியம் செய்கிறார்கள். அவர்கள் தயார் செய்யும் சுத்திகரிக்கப்பட்ட தண்ணீர் புட்டிகள் வாங்குபவர்களும் கவனமாக இருக்க வேண்டும். தமிழ்நாட்டில் எந்தத் தண்ணீர் குடித்தாலும் ஆபத்தே. பேசாமல் சக்கரவாகப் பறவையாகி மழையை மட்டும் அட்மாஸ்ஃபியருக்கு அப்பால் சென்று குடித்து விட்டு உயிர் வாழவேண்டும்.

குமரகுருவின் ம்யூஸ்-லாஃக் மூலம் என்னுடைய வருகைப் பதிவேடு அதிகரித்தது. அவருடைய Muse Log-க்கு ஒரு அறிமுகம் தேவையில்லை. கல்யான் வர்மாவின் கோக் ஏன் குடிக்கக்கூடாது என்னும் செய்முறை விளக்கத்தை பார்க்க சொல்லியிருந்தார்.

குமரகுரு சொல்வது போல் இந்தியா மிளிர்கிறது பார்ப்பதற்கு ரம்மியமாக உள்ளது. விஐபி லக்கேஜ் விளம்பரத்தில் வந்த அம்மா-பையன் பிரிவாக இருக்கட்டும், இப்போது வரும் ஐசிஐசிஐ ‘நான் உன்னுடன் வாழ்நாள் முழுவதும்’ ஆகட்டும், ரிலயன்ஸ் மொபைலின் சம்பந்தம் இல்லாமல் ஊக்கமடைபவர்களைக் காண்பிக்கும் செல்பேசியாகட்டும், ‘ஹமாரா பஜாஜ்’ உருக்கமாகட்டும், ஒரு செண்டிமெண்டல் ஃபூலாகிய எனக்குப் பிடித்த விளம்பரங்கள் அனைத்துமே.

அவர்கள் தாய்மண்ணையும், இந்தியப் பற்றையும், பாசபந்தத்தையும் காட்டி காசு செலவழிக்க சொல்கிறார்கள். வாஜ்பேயி ஓட்டு கேட்கிறார். தவறா?

நன்றி: வர்மா

ஆஸ்கார் ஆருடங்கள்

ஆஸ்கர் விருதுகளில் கிட்டத்தட்ட நிறையவற்றை ஹேமந்த் சரியாகவே கணித்துள்ளார்.

என்னுடைய பட்டியல்:

விருது பெறப்போகிறவர் பெற்றிருக்க வேண்டியவர்
சிறந்த நடிகர் ஜானி டெப் சான் பென்
சிறந்த துணை நடிகர் டிம் ராபின்ஸ் பெனிசியோ டெல் டோரோ
சிறந்த நடிகை டயான் கீடன் சர்லீஸ் தெரான்
சிறந்த துணை நடிகை ஹாலி ஹண்டர் ரெனீ செல்வகர்
சிறந்த வரைமுகட்ட படம் ஃபைண்டிங் நீமோ ??? (தெரியாது)
சிறந்த கலை லார்ட் ஆஃப் தி ரிங்ஸ் நான் விரும்பும் படம் பரிந்துரைக்கப் படவில்லை (பைரேட்ஸ் ஆஃப் தி கரிபியன்) எனவே, தி லாஸ்ட் சாமுராய்
சிறந்த உடை அமைப்பு லார்ட் ஆஃப் தி ரிங்ஸ் லாஸ்ட் சாமுராய்
சிறந்த முகப்பூச்சு லார்ட் ஆஃப் தி ரிங்ஸ் லாஸ்ட் சாமுராய்
சிறந்த இயக்கம் லார்ட் ஆஃப் தி ரிங்ஸ் மிஸ்டிக் ரிவர்
சிறந்த எழுத்து (புத்தகத்தை அடிப்படையாக வைத்து) லார்ட் ஆஃப் தி ரிங்ஸ் லார்ட் ஆஃப் தி ரிங்ஸ்
சிறந்த எழுத்து (திரைக்கதை) லாஸ்ட் இன் ட்ரான்ஸ்லேஷன் ஃபைண்டிங் நீமோ
சிறந்த மாயாஜால வித்தை லார்ட் ஆஃப் தி ரிங்ஸ் பைரேட்ஸ் ஆஃப் தி கரிபியன்
சிறந்த இசை (திரைப்படம்) லார்ட் ஆஃப் தி ரிங்ஸ் பிஃக் ஃபிஷ்
சிறந்த படம் லார்ட் ஆஃப் தி ரிங்ஸ் மாஸ்டர் அண்ட் கமாண்டர்: தி ஃபார் சைட் ஆஃப் தி வோர்ல்ட்

ஆஸ்கார் பரிந்துரைகள் வந்தவுடன் கொடுத்த வலைப்பதிவு.