பிடிக்காத பாடல்கள்


1. மலர்ந்தும் மலராத பாதி மலர் போல – தூர்தர்ஷனில் சின்ன வயதில் அடிக்கடி

போட்டு படுத்துவார்கள். சோகம் கர்னாடகக் காவிரி போல் வழிந்தோடும்.

பாடல் வரிகள் எல்லாம் கவனிக்காமல், காட்சியமைப்பும் பிடிக்காமல்,

கண்ணை மூடி, பல்லைக் கடித்து, அடுத்த பாட்டுக்காக காத்திருக்கும்

காலங்கள் நரகம்.

2. ஆயிரம் தாமரை மொட்டுக்களே – இது விவிதபாரதியில் அடிக்கடி ஒலித்ததால்

அலுத்துப் போனது என நினைக்கிறேன். பாடலைப் பார்த்த பிறகு

வெறுப்பின் உச்சகட்டத்துக்கே சென்று விட்டேன். என் வயசுப் பயல்

கார்த்திக் செய்யும் அட்டகாசம் எங்கள் அனைவரின் வயிற்றெரிச்சலையும்

கொட்டிக் கொண்டது.

3. பசுமை நிறைந்த நினைவுகளே – பெருசுகளின் சிலாகிப்பு.

‘முஸ்தபா..முஸ்த·பா’ வந்ததோ, நான் பிழைத்தேன்.

4. பொன் மகள் வந்தாள் – ஏற்கனவே செயற்கைத்தனம் நிறைந்த காட்சியமைப்பு;

மறுபடி அதே பாட்டை உல்டா செய்ய என்னத்தைக் கண்டார்களோ?

5. அப்பனே…அப்பனே.. பிள்ளையாரப்பனே –

படத்தில் ரஜினி இருக்க,

பார்ப்பதற்கு ரசிகர்கள் நாங்கள் இருக்க,

யானையின் தயவு எதற்கு?

6. நடக்கட்டும் ராஜா நம்ம ராஜ்ஜியம் –

அந்தக் கால கமலை விற்பதற்கு, மிருகங்கள் தேவைதான் என்றாலும்

மற்றுமொரு அறுவை பாடல்.

7. சங்கீத மேகம் தேன் சிந்தும் நேரம் –

சாகப் போறவன் ரொம்ப சிரிக்கிறான்.

சீக்கிரம் முடிங்கப்பா பாட்டை.

8. என்னவளே… அடி என்னவளே – ‘காதலன்’ வந்த சமயம், பரிட்சையில் கேட்கக்கூடிய

முக்கிய பகுதி போல் அடிக்கடி கேட்டு/பார்த்ததாலோ என்னவோ, பிறகு

மொத்தமாக வெறுத்து விட்டது.

9. ராஜாவின் பார்வை ராணியின் பக்கம் – தலைவரை ஏமாற்றும் சரோஜா தேவியுடன்

கனவுலக டூயட் பாடுகிறாரே என்ற வருத்தம் இருந்தாலும், பாட்டு முழுக்க

சாரட் வண்டிதானே?

10. செண்பகமே… செண்பகமே – நாலு பேர், நாலு தடவை பாடறதுக்கு, அப்படி என்ன

இருக்குங்க இந்த பாட்டில்?

அடிக்க வருவதற்கு முன் நிறுத்திக் கொள்கிறேன்.

பின்னூட்டமொன்றை இடுக

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.