தங்கள் கதை வெளிவரவில்லை என்பதற்கு எழுத்தாளர்களின் தலை பத்து பதில்:
10. அந்த பத்திரிகையின் ‘நடை’க்கு உட்பட்டு நான் எழுதவில்லை.
9. வெளிவந்தால்தான் ‘நல்ல’ எழுத்தா?
8. போன கதை மாதிரிதானே இதையும் எழுதினேன்!
7. வெகுஜன ஊடகங்களுக்காக நான் எழுதுவதில்லை.
6. நல்ல எழுத்துக்கு இப்போது மதிப்பேது?
5. என் கதைகள் சாதாரணர்களுக்குப் புரியாது.
4. புகழ் பெற்றவர்களையும், விதண்டாவாதம் செய்பவர்களையும்தான் மதிக்கிறார்கள்.
3. எனக்கு பதிப்பாளர்களுடன் அறிமுகம் கிடையாது.
2. சினிமா, அரசியல், டிவியில் எல்லாம் பங்கு பெறாததால்தான்….
கடைசியாக…
1. இறந்த பிறகுதான் பாரதி போன்றோருக்கே அங்கீகாரம் தரப்படுகிறது.
யார் மனமாவது புண்பட்டிருந்தால், அவரே உண்மையான படைப்பாளி! 🙂










