வலைப்பதியா விட்டால் சோம்பேறி அல்ல


கிப்பன் (Gibbon) தன்னுடைய “ரோமாபுரி சாம்ராஜ்யத்தின் வீழ்ச்சி” என்கிற நூலை எழுத 20 ஆண்டுகள் எடுத்தக்கொண்டாராம்.

பிளாட்டோ தன்னுடைய ‘குடியரசு’ (Republic) நூலின் முதல் வரியை ஒன்பது விதமாக எழுதி மனநிறைவு அடைந்த பிறகே வடிவமைத்தாராம்.

எட்மன்ட் பர்க் (Edmund Burke) நாடாளுமன்றத்தில் வாரன் ஹேஸ்டிங்ஸ் (Warren hastings) குறித்த தீர்மானத்தில் பேச எழுதிய முடிவுரையை 16 முறை எழுதி எழுதி செம்மைப் படுத்தினாராம்.

பட்லர் (Butler) தன்னுடைய பகுத்தாய்வை (Analogy) 20 தடவைகள் எழுதி

னாராம்.

விர்ஜில் தன்னுடைய ‘எனீட்’ (Aeneid) நூலை எழுத 12 ஆண்டுகள் செலவழி

த்தாராம். இருந்தாலும் அதில் அவருக்கு மனநிறைவு ஏற்படவில்லை. ஆகவே மரணப் படுக்கையிலிருக்கும்போது அதைக் கொளுத்த முயற்சித்தாராம்.

எர்னஸ்ட் ஹெமிங்வே (Ernest Hemingway) தன்னுடைய ‘வயோதிகனும் கடலும்’ (old man and the sea) நூலை 202 தடவை திரும்பத் திரும்ப எழுதினாராம்.

விட்மன் (Whitman) தன்னுடைய ‘புல்லின் இதழ்களை’ திரும்பத் திரும்ப செம்மைப் படுத்தி இறுதியாக இதுவே முடிவான வடிவம் என்று பிரகடனப்படுத்தினாராம்.

டால்ஸ்டாய் தன்னுடைய ‘போரும் சமாதானமும்’ (War & Peace) நூலை திரும்பத் திரும்ப எழுதினாராம்.

காப்கா தன்னுடைய ‘விசாரணை’ உட்பட பல நூல்களை பதிப்பிக்க வேண்டாம் என்று எழுதிவிட்டுத்தான் இறந்து போனாராம்.

-பழனி

சிங்கை

தமிழ்-உலகம் மின்குழுமம்

From: http://groups.yahoo.com/group/tamil-ulagam/message/20512

பின்னூட்டமொன்றை இடுக

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.