எப்பொழுதோ படித்தாலும் இன்றும் பிடிப்பது


‘அதுக்கப்புறம் நல்ல வேலை, ஜாஸ்தி சம்பளம் தராங்க-ன்னு சொல்லி இங்க வந்தாச்சு. நல்ல ஊருதான், ஆனா என்னவோ எனக்குப் பிடிக்கலை. காசுக்காக சொந்தஊரை விட்டுட்டு வந்துட்டோமேன்னு எனக்கு ஒரு தவிப்பு’,

ரெண்டாவது மொழியாவாவது தமிழைக் கத்துக்கட்டுமே-ன்னேன், அதுக்கும் ஒத்துக்கலை, அதைவெச்சு இவங்க தமிழங்க-ன்னு கண்டுபிடிச்சுடுவாங்களாம், என்ன முட்டாள்தனம்சார் இது?

நாம யாருங்கறதை மறைச்சு வாழறது ஒரு வாழ்க்கையா? சாகறவரைக்கும் அஞ்ஞாதவாசமா?’, உணர்ச்சிபொங்கப் பேசினார்.

ஆனா பெண்டாட்டி, பிள்ளையோட பேசாம தாய்பாஷையை வேற யார்கிட்ட பேசிக்கேட்கமுடியும் சொல்லுங்க? முன்னெல்லாம் ஒவ்வொரு புத்தகத்தை வாங்கிச் சேர்க்கும்போதும் எனக்கப்புறம் என் பிள்ளைங்க இதைப் படிக்கும், நான் சிரமப்பட்டமாதிரி ஞானத்தைத் தேடி அதுங்க அலைய

வேண்டியதில்லை-ன்னு தோணும். அந்த நினைப்புக்கெல்லாம் இப்போ அர்த்தமே இல்லாம போச்சு.’

– லாவண்யா

27 11 2001

(கொடை சிறுகதை)

பின்னூட்டமொன்றை இடுக

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.