Tag Archives: வோட்டு

'நான் சம்பாதிப்பதை அரசாங்கம் பிடுங்கிக் கொள்ளலாமா?' – ஜோ

கடந்த ஞாயிறன்று பராக் ஒபாமா ஒவ்வொரு தெருவாக சென்று வாக்கு சேகரித்தார். அப்பொழுது குழாய்களை சரி செய்யும் ஜோ (Joe Wurzelbacher) என்பவர் கேட்ட கேள்விக்கு விரிவாக பதிலளிக்கிறார்:

வருடத்திற்கு 250,000 டாலருக்கு மேல் சம்பாதிக்கும் என்னை மேலும் வரி போட்டு வாட்டுவது சரியாகுமா? என்பது அவருடைய கேள்வி.

விவாதம் முடிந்தவுடன் சிபியெஸ் தொலைக்காட்சியின் கேட்டி கௌரிக் உடன் ஜோ உரையாடினார். அந்த ஒளிப்பதிவு மற்றும் பேட்டி:
Joe The Plumber's Chat With Couric – Horserace

மேலும் விவரங்களுக்கு: And Then There’s Joe – The Caucus Blog – NYTimes.com

அடுத்த அதிபராக எவர் பொருத்தம்? – சத்யா

4. செனேட்டராக இருந்தபோதே தற்போதைய வீட்டுக்கடன் பிரச்சினையையும் அதன் மேலெழுந்த நிதிநிலை மதிப்பீடு நிலைகுலைவையும் கண்டுணர முடியாத ஒபாமாவா? இராக் மீது போர் தொடுத்தால் ஓரிரண்டு நாளில் அமெரிக்காவின் கடமை முடியும் என்று கணித்த மெகயினா? இருவரில் உங்கள் தேர்வு எவர்?

எனக்கு அமரிக்காவில் ஓட்டுரிமை இல்லை. அதனால் என்னுடைய உள்ளார்ந்த ஈடுபாடு ஒரு வேடிக்கை பார்ப்பவனின் மனநிலையே. அதனால் இந்த பதிலை அந்தக்கண்டோத்தில் பார்க்க கேட்டுக்கொள்கிறேன்.

ஆரம்பத்தில் ஒபாமாவின் பேச்சுக்களும் மாற்றம் மாற்றம் என்னும் தாரக மந்திரமும் சரியாக இருந்தாலும் கடந்த மூன்று மாதங்களில் மீடியாக்களின் ஆராதனைகளையும் தாண்டி மெக்கெயின் மெள்ள மெள்ள எனக்கு ஏற்றவராக தோன்றுகிறார்.

அதுவும் இந்த எழுநூறு பில்லியன் விவகாரத்தில் ஒபாமா எடுத்த முடிவு அவர் மாறுபட்டவரல்ல என்றே தோன்றுகிறது. இதில் ஆழமான பல பிரச்சனைகள் இருக்கின்றன.

ஒருபக்கம் சட்டென பாதிக்கப்பட வாய்ப்புக்கூடிய ஏழை மற்றும் நடுத்தர மக்கள் இன்னொரு புறம் டாலரை மீட்டெடுக்க இதையே சரியான வாய்ப்பாக பயன்படுத்தி இருக்கக்கூடிய வாய்ப்பு இரண்டையும் ஒரு சேர சமாளிக்க பெரும் திறனும் தேவை. ஒபாமாவும் தேசமும் விரும்பும் மாற்றத்துக்காக சரியான திட்டங்களின் மூலம் இதை சாத்தியமாக்கி இருக்கலாம்.

ஒரு பெரும் தலைவனிடம் அதையே தேசம் எதிர்ப்பாக்கிறது.இதில் அனுபவமும் அவருக்கு கைகொடுக்கவில்லை. மாற்றி மாற்றி பேசுவது நேருக்கு மாறாக உண்மையை சொல்வது என்று அவர் அடிக்கும் குட்டிகரணங்களை ஊடங்கள் மிகவும் இருட்டடிப்பு செய்வதாகவே தோன்றுகிறது.

குறைந்தபட்சம் சொன்ன சொல்லிலேயே நிற்கிறார் மெக்கெயின். தன் கட்சிக்காரர்களையே அவர் பகைத்துகொண்டு எடுத்த முடிவுகளும் பேலினை கொண்டுவந்து மீண்டும் கவனத்தை திரும்பவைத்த சாதுரியமும் அரசியலுக்கு மிகவும் தேவை.

பேலினையும் பேடனையும் சுற்றி நடக்கும் நாடகங்களை ஒரு aberrationஆக தேவையில்லாத இரைச்சலாகவே நான் பார்க்கிறேன். இருவருமே டிக் சேனி போல அதிகாரத்தை பயன்படுத்துவார்கள் என்று தோன்றவில்லை.

ஜனாதிபதி வேட்பாளர்கள் இருவரும் முன்வைக்கும் யோசனைகளும் திட்டங்களும் ஆழமின்றி வெறும் outline அளவிலேயே இருக்கின்றன. அதில்கூட பிரமிக்கதக்க மாற்றங்களை இருவருமே முன்வைத்ததாக தோன்றவில்லை. இதில் மாற்றத்தை கொண்டுவருவேன் என்று முழங்கிய ஒபாமா இன்னும் அதிகமாக கவனம் செலுத்தி இருக்கவேண்டும்.

இப்படி இருவருமே மிகவும் சாதாரண வேட்டபாளர்களாக இருக்கையில் டாலர், இரண்டு போர்கள், தடுமாறும் பொருளாதாரம், நசுங்கிப்போயிருக்கும் வெளிநாட்டு உறவுகள் என்று கழுத்தை நெரிக்கும் வேளையில் இந்த தேசம் அனுபவம் குறைந்த ஒருவரை தேர்ந்தெடுப்பது எந்த வகையில் சிறந்ததாக இருக்கும் என்று தோன்றுகிறது.

இது போன்ற பெரும் பிரச்சனைகளுக்கிடையில் ஒரு தேர்தலை அமரிக்கா சமீபகாலங்களில் சந்தித்து இருக்காது. இக்கட்டான இந்த சூழ்நிலையில் ஆற்றலும் பெரும் சிந்தனை மாற்றத்தை கொண்டு வருவதற்கான ஒரு வசீகரம் மிக்க தலைவன் தேவை. இது ஒரு redifining moment. அந்த அளவிற்கான வேட்பாளர்களாக இருவருமே இல்லை.

இன்னும் ஒரு மாதத்தில், ஒபாமா, என்ன இருந்தாலும் பழமைவாதத்தில் ஊறிய மிகப்பெரிய demographyயான white anglo saxon நடுத்தர மக்கள் கூட்டம் ஒபாமா ஏற்றுக்கொள்வதில் இருக்கும் மனத்தடைகள் சரிசெய்யவும், பிரச்சனைகளை பற்றிய தெளிவான பார்வைகளையும் திட்டங்களையும் முன்வைத்து ஒரு பெரும் அலையை ஏற்படுத்தக்கூடய ஆற்றலை வெளிக்காட்டாவிட்டால் என் ஓட்டு மெகயினுக்கே.

5. ஒபாமா 98% ஜனநாயகக் கட்சியின் கொறடா/வழிகாட்டலின் படி செனேட்டில் வாக்களித்திருக்கிறார். ஜான் மகயின் 90% புஷ்ஷோடு ஒத்துப் போய் இருக்கிறார். இவர்களுக்கு ‘மாற்றம்’ தாரக மந்திரத்தையும் ‘மேவ்ரிக்’ பட்டத்தையும் வைத்துக் கொள்ள என்ன தகுதி உள்ளது? Bipartisan என்று முழங்கினாலும் செய்கையில் அதை நிரூபிக்காதவர்களின் அடுத்த நான்கு வருடங்கள் புஷ்ஷோடு ஒப்பிட்டால் எவ்வாறு வேறுபடும்?

சத்யா

'அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் களம்' – செய்தித் தொகுப்பு

1. ஒபாமா அமெரிக்க ஜனாதிபதியாவதே உலகெங்கிலுமுள்ள மக்களின் விருப்பம்-பி.பி.சி :: தமிழ்செய்தி

ஒபாமாவின் தந்தையின் பிறப்பிடமான கென்யாவில் ஒபாமாவுக்கு 82 சதவீதமான ஆதரவும் இந்தியாவில் 9 வீதமான ஆதரவும் கிடைத்துள்ளது.

2. ஹெச்.2-பி விசா நடைமுறைகளை ஒழுங்குபடுத்த ஒபாமா ஆதரவு! :: வெப்துனியா

அமெரிக்காவில் வேளாண் துறை அல்லாத மற்ற துறைகளில், குறிப்பாக தகவல் தொழில்நுட்பம், மென்பொருள் துறைகளில் ஏற்படும் பணியாளர் பற்றாக்குறையை சமாளிக்க, வெளிநாடுகளில் இருந்து ஹெச்.2-பி விசா மூலம் குறிப்பிட்ட காலத்துக்கு தற்காலிகமாக ஊழியர்கள் நியமிக்கப்படுகின்றனர்.

3. அமெ‌‌ரி‌க்க ‌நி‌தியை பா‌கி‌ஸ்தா‌ன் இ‌ந்‌தியாவு‌க்கு எ‌திராக பய‌ன்படு‌த்து‌‌கிறது: ஒபாமா கு‌ற்ற‌ச்சா‌‌ற்று! :: வெப்துனியா

தீ‌விரவா‌த‌த்து‌க்கு எ‌திரான போரு‌க்காக அமெ‌ரி‌க்கா, பா‌கி‌ஸ்தா‌னு‌க்கு 10 ‌பி‌‌ல்‌லிய‌ன் டால‌ர் நி‌தி அ‌ளி‌‌த்து‌ள்ளது. ஆனா‌ல் பா‌கி‌ஸ்தா‌ன் அரசு அ‌ந்த ‌நி‌தியை பய‌ன்படு‌த்‌தி இ‌ந்‌தியாவு‌க்கு எ‌திராக போரு‌க்கு த‌ன்னை தயா‌ர் படு‌த்‌தி வரு‌கிறது எ‌ன்று கு‌ற்ற‌ம் சா‌‌ற்‌றியு‌ள்ளா‌ர்.

4. இந்தியாவுடன் நிரந்தர உறவு: அமெரிக்க குடியரசு கட்சி விருப்பம்! :: வெப்துனியா

இந்தியா-அமெரிக்கா இடையிலான அணுசக்தி ஒத்துழைப்பு ஒப்பந்தத்திலும் குடியரசுக் கட்சியின் பங்களிப்பு குறித்து எடுத்துரைக்கப்பட்டது

5. தட்பவெப்ப நிலை : ஒபாமா, மெக்கைனுக்கு ஐ.நா. வலியுறுத்தல் :: யாஹூ

புவி வெப்பமடைவதற்கு காரணமான பசுமைக்குடில் வாயுக்களை (கரியமில வாயு உள்ளிட்டவை) வெளியிடுவதில் முன்னிலை வகிக்கும் நாடுகளில் அமெரிக்காவும் முக்கியத்துவம் பெறுகிறது என்ற அவர், உலக அளவில் பொருளாதாரத்தில் மேம்பட்டு இருக்கும் அந்நாடு, புவி வெப்பமடைதலை தடுப்பதற்கு குறிப்பிடத்தக்க வகையில் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறியுள்ளார்.

அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ்சுக்குப் பிறகு, அப்பதவியை வகிக்கவுள்ள பராக் ஒபமா அல்லது ஜான் மெக்கைன், தற்போதையை நிலையைக் காட்டிலும் மிகச் சிறப்பான வகையில் தட்பவெப்ப நிலை மாற்றத்தைச் சமாளிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் பான் கி-மூன் வலியுறுத்தியுள்ளார்.

6. ஒபாமாவின் காணாமல் போன சகோதரர் கண்டுபிடிப்பு :: கூடல்

பராக் ஒபாமாவிற்கு ஜார்ஜ் ஹூசைன் ஓனியான்கோ ஒபாமா என்ற தம்பி இருக்கிறார். இவருக்கு இப்போது 26 வயது ஆகிறது. இவர் இப்போது ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான கென்யா நாட்டின் தலைநகர் நைரோபியின் புற நகர் பகுதி ஒன்றில் வசித்து வருவதாக தகவல் கிடைத்துள்ளது. இவர் ஒரு குடிசை வீட்டில் வாழ்ந்து வருகிறார். ஜார்ஜ் ஒபாமா வேறு ஒரு மனைவிக்கு பிறந்தவர் என்று இத்தாலியின் வேனிட்டி பேர் பத்திரிக்கை செய்தி வெளியிட்டுள்ளது.

தான் இரண்டே முறை தான் பராக் ஒபாமாவை பார்த்ததாகவும், 5 வயதாக இருக்கும் போது ஒருமுறையும், கடந்த 2006 ம் ஆண்டு பராக் ஒபாமா நைரோபிக்கு வந்திருந்த போது ஒருமுறையும் மட்டுமே பார்த்ததாக ஜார்ஜ் ஒபாமா கூறியதாக அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தகவல்கள் லண்டனில் இருந்து வெளிவரும் டெய்லி டெலிகிராப் என்ற செய்தி தாளிலும் வெளியிடப்பட்டுள்ளது.

7. சர்வதேச தலைவர்களுக்கான கூட்டத்தில் கார்த்தி ப.சிதம்பரம் :: மாலைச்சுடர்

அமெரிக்க முன்னாள் வெளியுறவுத் துறை அமைச்சர் மேடாலின் கே.ஆல்பிரைட் அழைப்பினை ஏற்று அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் கார்த்தி ப.சிதம்பரம் அமெரிக்கா பயணமானார்.

8. யுஎஸ் மீது புதின் தாக்கு :: மாலைச்சுடர்

அமெரிக்க அதிபர் தேர்தலில் பலனடையும் நோக்குடன் அமெரிக்க அதிபர் வேட்பாளர் ஒருவர் ஜார்ஜியா பிரச்சனையை கிளப்பி இருப்பதாக ரஷ்ய பிரதமர் விளாடிமிர் புதின் குற்றம் சாட்டியுள்ளார். அவர் குடியரசு கட்சி வேட்பாளர் ஜான் மெக்கைனை குறி வைத்து இவ்வாறு கூறியிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.

9. ஒபாமாவை கொல்ல சதி :: மாலைச்சுடர்

கைது செய்யப்பட்டவர்களில் ஒருவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் 750 அடி தொலைவில் இருந்து ஒபாமாவை துப்பாக்கியால் சுட்டு கொலை செய்ய திட்டமிட்டிருந்ததாக தெரிய வந்துள்ளது என்று அமெரிக்க தொலைக்காட்சி ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

ரிடையர்மென்ட் சபா தேர்தல்

Cartoon Mathy Dinamani Rajya Saba MP Selectionராஜ்ய சபா என்றழைக்கப்படும் இடத்திற்கு செல்ல கீழ்க்கண்டவற்றில் இரண்டு தகுதி தேவை:

  1. தற்போது மத்திய அமைச்சராக இருக்க வேண்டும். (பிரதம மந்திரியாக இருத்தல் நலம்.)
  2. முன்னாள் மாநில முதல்வராக இருக்க வேண்டும்.
  3. கலாட்டா செய்யத் தெரிந்திருக்க வேண்டும்.
  4. அகவை முப்பதே போதுமென்றாலும், எழுபதைத் தாண்டியிருத்தல் நலம். (தற்போதைய சராசரியான 61.8 ஆக இருந்தாலும் போஸ் ஸிஸ்டம் திருகியாவது கூச்சல் போட வல்லமை கொண்டிருக்க வேண்டும்.)
  5. பொதுத் தேர்தலில் தோற்றிருக்க வேண்டும்.
  6. சினிமாவில் தோன்றியிருந்தால் நலம்.
  7. கட்சித் தலைவரின் குழவியாக இருத்தல் இன்னும் நலம். அட்லீஸ்ட், வளர்ப்புக் குழவியாகவது இருக்க வேண்டும்.
  8. தப்பித்தவறி தூக்கக் கலக்கத்தில் பேச அழைத்துவிட்டால், நேற்று படித்த ஜோக் மடலை சபாவில் பகிரத் தெரியவேண்டும். (Email Forwards « Flyswatting….)
  9. என்னை மாதிரி எதுவுமே நடக்க மாட்டேங்குதே என்று புலம்பல் எழும்பினால், ‘நீங்க தேர்வாகாமல் இருப்பதினால்தான்’ என்று திசைதிருப்பும் பழிபோடும் அரசியல் வித்தகராக இருக்கவேண்டும். (So, who’s to blame for what happened to Scarlett Keeling? – Ambika Soni & Shantaram Laxman Naik blamed the ghastly crime on the victim’s folks)

ஜனநாயகக் கட்சி: 50%; குடியரசு – 37% ஆதரவு! ஆனால்…

இந்தியாவில் கட்சி/கூட்டணி சார்ந்த வோட்டுதான் பெரும்பாலும் விழும். ரஜினி வாய்ஸ் முதல் ராஜீவ் காந்தி வரை தனிப் பெரும் தலைவராக சிலர் முன்னிறுத்தப்பட்டாலும், ஆளுங்கட்சி vs எதிர்க்கட்சி இடையிலேயான போட்டி என்பதுதான் ஃபார்முலா.

அமெரிக்காவில் தனி நபர் சார்ந்த அரசியல் முன் வைக்கப்படுகிறது. ரான் பால் முதல் ரொனால்ட் ரீகன் வரை எல்லாருமே குடியரசுக் கட்சி சின்னத்தில் நின்றாலும் தனிப்பட்ட கொள்கை, ஆளுமை போன்றவற்றால் ஜனநாயகக் கட்சியிலும் அபிமானிகளைப் பெற்று வைத்திருக்கிறார்கள்.

இன்றைய தேதியில் ‘எந்தக் கட்சிக்கு உங்கள் வாக்கு?’ என்று கருத்துக்கணிப்பு நடத்தியதில் தெரியவந்ததுதான் தலைப்பாக இருக்கிறது. மாபெரும் வாக்கு வித்தியாசத்தில் டெமோக்ராட்ஸ் வாகை சூட வேண்டும். ஆனால், மெகெயினா/ஒபாமாவா (அல்லது) மெக்கெயினா/ஹில்லரியா என்றால், இழுபறி என்கிறார்கள். (முழுமையான முடிவுகள்: என்.பி.சி & வால் ஸ்ட்ரீட் ஜர்னல் கணிப்பு)

US President Elections Survey - Opinion Poll by NBC & WSJ - Obama, mcCain, Hillary Clinton, Barack

தற்போதைய ஜனாதிபது ஜார்ஜ் புஷ்ஷை பின்பற்றினாலோ அல்லது அவரின் வழியில் நடப்பேன் என்று பிரச்சாரத்தில் ஈடுபட்டாலோ, ஜான் மெகயின் அதோகதி என்பதையும் இந்த கருத்துக்கணிப்பு தெளிவாக்குகிறது.

WSJ Bush Approval Ratings Iraq Economy Direction

எந்தப் பகுதிகளில் எந்த வேட்பாளர் முன்னிலை?

Hillary Vs Obama Ratings Region Race Age Gender Ideology

முழு அலசல்:

1. More Americans Trust Democrats On U.S. Health Reform, Poll Finds – WSJ.com

2. McCain, GOP May Have Cause for Hope – WSJ.com

ஜெயிக்கப் போவது யாரு? – கருத்துக்கணிப்பு முடிவுகள்

நன்றி: லாஸ் ஏஞ்சலீஸ் டைம்ஸ்

results_president_usa_winners.gif

mccain_survey_polls_la_times.gif

அமெரிக்க அதிபர் தேர்தல் – எம் மணிகண்டன் (தினமணி)

உலகின் வலிமை மிகுந்த தலைவர்களுள் ஒருவராகக் கருதப்படுபவர் அமெரிக்க அதிபர். அவர் அந்நாட்டு நாடாளுமன்றத்துக்கோ, அமைச்சரவைக்கோ கட் டுப்பட்டவரல்ல. எந்தப் பிரச்னையிலும் தன்னிச்சையாக முடிவெடுக்க முடியும்.

அவரைப் பதவியிலிருந்து நீக்குவதும் சாதாரண விஷயமல்ல. தேசத்துரோகம், கொள்ளை போன்ற மோசமான குற்றங்களுக்காக மட்டுமே அவர்மீது நாடாளுமன்றம் குற்றவிசாரணை செய்து பதவியி லிருந்து நீக்க முடியும். வேறு தண்டனை எதுவும் வழங்கிவிட முடியாது. உலகிலேயே ராணுவம், பொருளாதாரம், தொழில்நுட்பத்தில் வல்லரசாக ஏற்றுக் கொள்ளப்பட்டிருக்கும் ஒரு நாட்டின் அதிபருக்கு இவ்வளவு அதிகாரங்கள் தரப்பட்டிருக்கின்றன என்பதால் அவரே உலகிலேயே அதிக வல்லமை படைத்தவராகிறார்.

இவருக்கு நேரெதிர் அமெரிக்காவின் துணை அதிபர். காலையில் எழுந்தவுடன், ‘அதிபர் நலமாக இருக்கிறாரா?’ என்பதைக் கேட்டுத் தெரிந்து கொண்டு, மீண்டும் தூங்கப் போய்விடலாம் என்று துணை அதிபரின் பணிகளைப் பற்றி நகைச்சுவை யாகக் குறிப்பிடுவதுண்டு. அதிபருக்கு உடல்நிலை சரியில்லாமல்போய் செயல்படமுடியாத நிலைக்குப் போனாலோ, அவர் இறந்துபோனாலோ துணை அதிபர், அதிபராவார். இது தவிர, செனட் அவையை வழிநடத்தும் பொறுப்பு அவருக்கு வழங்கப்பட்டிருக்கிறது.

அமெரிக்காவில் ஜனநாயகக் கட்சி மற் றும் குடியரசுக் கட்சி ஆகிய இரு தேசிய கட்சிகள் மட்டுமே தற்போது முக்கியக் கட்சிகளாக இருக்கின்றன. மூன்றாவது தேசியக் கட்சி உருவாவதற்கோ, மாநிலக் கட்சிகள் எழுச்சி பெறவோ வாய்ப்பு மிகவும் குறைவு. அதனால் இப்போதைக்கு இரு தேசியக் கட்சிகளின் வேட்பாளர்களே தொடர்ந்து அதிபராகவும் துணை அதிபராகவும் இருந்து வருகின்றனர்.

நாடாளுமன்ற அவைகளையும் இரு கட் சிகளின் உறுப்பினர்கள்தான் நிரப்புகி றார்கள். அரிதாக வேறு கட்சி அல்லது சுயேச்சைகள் இடம்பெறுவதுண்டு.

மற்ற நாடுகளைப் போல் அல்லாமல் அமெரிக்காவின் அதிபர் தேர்தல் நடை முறை மிகவும் சிக்கலானது. தேர்தல் நடப்பதற்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே அதிபர் தேர்தலில் போட்டியிட விரும்புவோர் முன்னிலைப்படுத்தப்படுகின்றனர்.

தேர்தல் பிரசாரம்:

அதிபர் தேர்தலுக்கான பிரசாரம் இரு கட்டங்களைக் கொண் டது. முதலாவது கட்சிகள் நடத்தும் வேட்பாளர் தேர்தலுக்கான பிரசாரம்.

இரண்டாவது, வேட்பாளர்கள் அறிவிக் கப்பட்டதும் இரு கட்சிகளுக்கு இடையே நடக்கும் போட்டி பிரசாரம்.

பொதுவாக அதிபராக இருப்பவரோ அல்லது துணை அதிபராக இருப்பவரோதான் அடுத்த தேர்தலுக்கு அந்தக் கட்சியின் சார்பில் வேட்பாளராவதற்கான வாய்ப்புகள் அதிகம். எந்தக் கட்சியைச் சேர்ந்தவர் அதிபராக இருக்கிறாரோ அந்தக் கட்சியின் வேட்பாளர் முன்னரே முடிவு செய்யப்பட்டுவிடுவார். அதில் போட்டி இருந்தாலும்கூட, அதில் அவரே வெற்றிபெறுவார். அதிபர் புஷ் இரண்டு முறை பதவி வகித்துவிட்டதாலும் துணை அதிபர் டிக் சீனி போட்டியி டப் போவதில்லை என அறிவித்துவிட்ட தாலும் 2008-ம் ஆண்டுத் தேர்தலில் இந்த நிலை இல்லை.

வேட்பாளர் தேர்தல்கள்:

நமது நாட்டில் நடப்பதுபோல் வேட்பாளர்களைக் கட்சி மேலிடப் பிரதிநிதிகள் மட்டுமே முடிவு செய்வதில்லை. கட்சி உறுப்பினர்களும் பொதுமக்களும் வேட்பாளர்களைத் தேர்வு செய்வதில் முக்கியப் பங்குவகிக்கின்றனர். வேட்பாளர்களைத் தேர்ந்தெடுப்பதற்காகக் கட்சிகளின் மாநிலப் பிரிவு கள் நடத்தும் தேர்தல்களே வேட்பாளர் தேர்தல் எனப்படுகின்றன. ஒரு கட்சியின் சார்பில் அதிபர் தேர்தலில் போட்டியிட விரும்புவோர் இந்தத் தேர்தலில் ஒவ்வொரு மாநிலமாகப் பிரசாரம் மேற்கொண்டு ஆதரவு திரட்டுவார்கள்.

பொதுவாகத் தேர்தல் நடக்கும் ஆண் டின் துவக்கத்தில் இருந்தே வேட்பாளர் தேர்தல்கள் நடக்கின்றன.

வேட்பாளர் தேர்தல்களைப் பொறுத்த வரை ஒவ்வொரு மாநிலமும் வெவ்வேறு நடைமுறைகளைக் கடைப்பிடிக்கின்றன.
கட்சிகளும் வெவ்வேறு விதிமுறைகளைக் கடைப்பிடிக்கின்றன. ஒவ்வொரு மாநிலத்துக்கென இரு கட்சிகளும் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான பிரதிநிதிகள் வாக்கை ஒதுக்கியிருக்கின்றன. இந்த எண்ணிக்கை நிலையானதல்ல. மாநிலத்துக்கு மாநிலம் வேறுபடுவதுடன், கட்சிகளும் தங்களது விதிமுறைகளின்படி வெவ்வெறு எண்ணிக்கையிலான பிரதிநிதிகளை ஒதுக்குகின்றன. எடுத்துக்காட் டாக, 2008-ம் ஆண்டில் நாடுமுழுவதும் சேர்த்து ஜனநாயகக் கட்சிக்கு 4029 பிரதிநிதிகள் வாக்கு உண்டு. வேட்பாளர் தேர்தலில் வெற்றிபெற வேண்டுமானால் 2025 பிரதிநிதிகளின் ஆதரவைப் பெற்றாக வேண்டும்.

குடியரசுக் கட்சியைப் பொறுத்தவரை மொத்த பிரதிநிதிகள் வாக்குகள் 2380. வெற்றிபெறுவதற்கு 1191 வாக்குகள் தேவை.
வேட்பாளர் தேர்தல்கள் காகஸ் மற்றும் பிரைமரி என்ற இரு பிரிவுகளைக் கொண் டது. இவற்றுக்கும் உட்பிரிவுகள் உண்டு.
சில மாநிலங்களில் காகஸ் முறையிலிலும் சில மாநிலங்களில் பிரைமரி முறையிலும் வேட்பாளர் தேர்தலைக் கட்சிகள் நடத்துகின்றன. ஒரு மாநிலத்தில் ஒரு கட்சி காகஸ் முறையில் தேர்தலை நடத்தினா லும் மற்றொரு கட்சி பிரைமரி முறையில் தேர்தலை நடத்தக்கூடும்.

பொதுவாக வேட்பாளர் தேர்தல்கள் முதலில் நடப்பது அயோவா (காகஸ்) மற் றும் நியூஹாம்ப்ஷயர் (பிரைமரி) மாநிலங்களில்தான். இதற்கு எந்தவொரு பிரத்யேகக் காரணமும் இல்லை. ஆண்டுத் தொடக்கத்தில் அயோவாவில் தொடங்கும் வேட்பாளர் தேர்தல்கள் ஜூன் மாதம் வரை ஒவ்வொரு மாநிலமாக நடக்கும்.

இந்தத் தேர்தல்களில் கட்சியின் சார் பில் அதிபர் தேர்தலில் களமிறங்க விரும்புபவர்கள் போட்டியிடுவார்கள். வேட்பாளர் தேர்தலில் பொதுமக்கள் (அல்லது கட்சி உறுப்பினர்கள்) அளிக்கும் வாக்குகளின் அடிப்படையில் அந்தந்தப் போட்டியாளர்களுக்குப் பிரதிநிதிகள் வாக்கு கிடைக்கும். அனைத்து மாநிலங்களிலும் வேட்பாளர் தேர்தல்கள் முடிந்த தும் கட்சிகளின் தேசியக் கூட்டம் நடக்கும். இக் கூட்டத்தில் அதிபர் வேட்பாள ரைப் பிரதிநிதிகள் தேர்வு செய்வார்கள்.

வேட்பாளர்கள் விவாதம்:

இரு முக்கியக் கட்சிகளும் வேட்பாளர்களை அதிகாரப் பூர்வமாக அறிவித்ததும், அவர்கள் இருவ ரும் ஒரே மேடையில் தோன்றி விவாதம் நடத்துவார்கள். தேர்தலுக்கு முன்பாக குறைந்தது 2 முறையாவது இந்த விவாதம் நடக்கும்.

தேர்தல் நாள்:

அமெரிக்க அதிபர் தேர்தல் என்பது அதிபர் மற்றும் துணை அதி பர் ஆகிய இருவருக்குமான தேர்தலாகும்.

இது 220 ஆண்டுகால பாரம்பரியம் கொண்டது. அமெரிக்காவின் அனைத்துத் தேர்தல் நடைமுறைகளும் நாள்காட் டியின் அடிப்படையில் நடத்தப்படுவது சிறப்பம்சம். ஒவ்வொரு லீப் ஆண்டும் நவம்பர் முதல் திங்கள்கிழமைக்கு அடுத்து வரும் செவ்வாய்க்கிழமையில் (இந்த ஆண்டு நவம்பர் 4) அதிபர் தேர்தல் நடக்கிறது. அரசியல் சட்டப்படி தேர்வாளர் குழு மூலமாகவே அதிபர் தேர்ந்தெ டுக்கப்படுகிறார். எனினும் இந்தத் தேர்வாளர் குழுவினர் நேரடியாக மக்களால் தேர்ந்தெடுக்கப்படுவதால் அதிபர் வேட்பாளருக்கு மாநில வாரியாக மக்கள் செல்வாக்கு இருந்தாக வேண்டும்.

அமெரிக்காவின் 50 மாநிலங்கள் மற்றும் மத்திய அரசின் ஆளுகைக்கு உள் பட்ட தலைநகரப் பகுதியான கொலம்பியா மாவட்டம் ஆகியவற்றிலிருந்து ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையிலான தேர்வாளர்கள் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்.

இந்த எண்ணிக்கை அந்தந்த மாநிலங்களில் உள்ள நாடாளுமன்ற (செனட் மற்றும் பிரதிநிதிகள் அவை) உறுப்பினர்களின் எண்ணிக்கைக்குச் சமம். கொலம்பியா மாவட்டத்துக்கு நாடாளுமன்றத் தில் பிரதிநிதித்துவம் இல்லை என்றபோ திலும் 1964-ம் ஆண்டு கொண்டுவரப்பட்ட சட்டத் திருத்தப்படி 3 தேர்வாளர் களைத் தேர்ந்தெடுக்கலாம்.

கட்சியின் மாநிலத் தலைமை தங்களுக்குரிய தேர்வாளர்களை முன்னரே நியமித் துவிடுகின்றன (இதற்கும் மாவட்ட அளவிலான தேர்தல் மற்றும் பிரசாரம் உண்டு). வாக்காளர்கள் எந்தக் கட்சியின் வேட்பாளரைத் தேர்ந்தெடுக்க விரும்புகிறார்களோ அந்தக் கட்சி நியமித்த தேர் வாளர் குழுவுக்கு வாக்களிக்க வேண்டும்.

அதாவது வாக்குச் சீட்டில் அதிபர் வேட் பாளரின் பெயருக்குப் பதிலாக அவரது கட்சியின் தேர்வாளர் குழுவினரின் பெயர்களோ அல்லது சுருக்கமாக கட்சிக ளின் பெயர்களோ இருக்கும். வாக்காளர்கள் அவற்றில் ஒன்றைத் தேர்ந்தெடுக்க வேண்டும். பல்வேறு மாநிலங்களிலும் தேர்ந்தெடுக்கப்படும் தேர்வாளர் குழுவினர் பின்னர் கூடி அதிபரைத் தேர்ந்தெடுப்பார்கள்.

ஒரு மாநிலத்தின் அதிக வாக்குகளை (சில மாநிலங்களில் 50 சதவீதத்துக்கும் அதிகமான) வேட்பாளர் ஒருவர் பெற்று விட்டால், அந்த மாநிலத்தின் அனைத்துத் தேர்வாளர் வாக்குகளையும் அவரே பெற்றுவிடுவார். உதாரணமாக ஒரு மாநிலத்தின் தேர்வாளர்கள் குழுவின் எண் ணிக்கை 30 என வைத்துக் கொண்டால் அந்த மாநிலத்தில் நடைபெற்ற தேர்தலில் ஒரு வேட்பாளர் மற்றவர்களைவிட அதிக (அல்லது 50 சதவீதத்துக்கும் அதிக மான) வாக்குகளைப் பெற்றுவிட்டால் அவர் அந்த மாநிலத்தின் 30 தேர்வாளர்க ளையும் பெற்றுவிடுவார் (மெய்ன் மற்றும் நெப்ராஸ்கா ஆகிய மாநிலங்கள் மட்டும் வேட்பாளர்கள் பெறும் வாக்குகளின் விகிதாசார அடிப்படையில் தேர்வாளர்களை ஒதுக்கீடு செய்கின்றன).

தேர்வாளர்கள் அனைவரும் அந்த வேட்பாளரின் கட்சியால் நியமிக்கப்பட்டவர்கள் என்பதால் பின்னர் நடக்கும் அதிபரைத் தேர்ந்தெடுக்கும் கூட்டத்தில் அவருக்கு ஆதரவாகவே வாக்களிப்பார்கள். ஒரு கட்சியால் நியமிக்கப்பட்டு தேர்ந்தெடுக்கப்பட்ட தேர்வாளர்கள் மாற்றுக் கட்சி வேட்பாளருக்கு வாக்களிப்பதும் உண்டு.

இதைத் தடுப்பதற்கு சில மாநிலங்களில் சட்டம் இருக்கிறது. ஆனால் இதுவரை யாரும் தண்டனை பெற்றதில்லை.
அமெரிக்க அதிபர் தேர்தல் நடை முறையை உற்று நோக்கினால் அதிபராகத் தேர்ந்தெடுக்கப்படுபவர் நாடு முழுவதும் மக்களின் பெரும்பான்மையான வாக் கைப் பெற்றிருக்க வேண்டிய அவசியம் இல்லை என்பது தெரியவரும். அதாவது மாநில ரீதியில்தான் அதிபரின் வெற்றி கணக்கிடப்படுகிறதே தவிர, நாட்டின் ஒட் டுமொத்த வாக்குகளின் அடிப்படையில் அல்ல.

உதாரணமாக 2000-ம் ஆண்டு நடந்த அதிபர் தேர்தலில் குடியரசுக் கட்சி வேட்பாளரான புஷ், நாடு முழுவதும் பதிவான வாக்குகளில் 47 சதவீதத்தையும், அவரை எதிர்த்துப் போட்டியிட்ட ஜன நாயகக் கட்சி வேட்பாளர் அல்-கோர் 48 சதவீத வாக்குகளையும் பெற்றனர்.

ஆனால் தேர்வாளர் வாக்குகளின் அடிப்ப டையில் புஷ் வெற்றி பெற்றார்.

அதிபர் தேர்தலை மத்திய அரசு நடத்துவது இல்லை என்பது கவனிக்க வேண் டிய மற்றொரு விஷயம். ஒவ்வொரு மாநிலமும் அந்தந்த மாநில சட்டத்துக்கும் மத்திய அரசியல் சட்டத்துக்கும் உட்பட்டு வெவ்வேறு முறைகளில் ஒரே நாளில் தேர்தல்களை நடத்துகின்றன. அதிபரைத் தேர்ந்தெடுக்கும் தேர்வாளர்களைத் தேர்ந்தெடுப்பது மட்டுமே தேர்தலின் நோக்கம்.

நாடு முழுவதும் 538 தேர்வாளர்கள் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். இது நாடாளுமன்ற செனட் அவை (ஒரு மாநிலத்துக்கு 2 உறுப்பினர் வீதம் மொத்தம் 100) உறுப்பினர்களின் எண்ணிக்கை, பிரதிநிதிகள் அவை (மொத்தம் 435) உறுப்பினர்களின் எண்ணிக்கை, கொலம்பியா மாவட்டத்துக்கு ஒதுக்கப்பட்ட தேர்வாளர்களின் எண்ணிக்கை (3) ஆகியவற்றின் கூடுதலுக்குச் சமம்.

தேர்வாளர்கள் கூட்டம்:

மாநிலங்களில் நடக்கும் தேர்தல்களின் முடிவுகள் வெளியானதுமே அதிபர் யார் என்பது கிட்டத் தட்ட முடிவாகிவிடும். ஏனெனில் எந்த வேட்பாளருக்கு எத்தனை தேர்வாளர்கள் இருக்கிறார்கள் என்பது தெரிந்துவிடும்.

தேர்தல் முடிந்த பிறகு, வரும் டிசம்பர் மாதத்தின் இரண்டாவது புதன்கிழ மைக்கு அடுத்துவரும் திங்கள்கிழமையன்று அந்தந்த மாநிலத் தலைநகரங்க ளில் (கொலம்பியா மாவட்டத்துக்கு வாஷிங்டனில்) கூடுவார்கள். ஆக, 51 இடங்களில் ஒரே நேரத்தில் தேர்வாளர்கள் கூட்டங்கள் நடக்கும். வாக்குச் சீட்டு அல்லது வெற்றுத்தாள் மூலமாக அதிபருக்கான வாக்கைத் தேர்வாளர்கள் அளிப்பார்கள். நடைமுறையில் பெரும் பாலான மாநிலங்களில், அனைத்து வாக்குகளும் ஒரே வேட்பாளருக்குச் செல்லும். அதிபர் தேர்தலுக்கான முடிவு அறி விக்கப்பட்ட சிறிது நேரத்திலேயே அதே நடைமுறைப்படி துணை அதிபருக்கான தேர்தலும் நடக்கும்.

மொத்தமுள்ள 538 தேர்வாளர் வாக்குகளில், ஒரு வேட்பாளர் குறைந்தபட்சம் 270 வாக்குகளைப் பெற்றால் அவர் வெற்றிபெற்றதாக அறிவிக்கப்படும். சில நேரங் களில் எந்த வேட்பாளரும் 270 வாக்குகளைப் பெறாவிட்டால், அதிபரைத் தேர்ந் தெடுக்கும் பொறுப்பை நாடாளுமன்ற பிரதிநிதிகள் அவை ஏற்கும். நடைமுறையில் இரண்டு வேட்பாளருக்கு அதிகமானோர் தேர்தலில் போட்டியிட்டாலோ அல்லது இரு வேட்பாளர்களும் 269 வாக் குகளைப் பெற்றாலோ இந்த நிலை ஏற்படலாம். இதுவரை 1800-களில் இருமுறை மட்டுமே நாடாளுமன்ற பிரதிநிதிகள் அவை மூலம் அதிபர் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்.