Tag Archives: பத்திரிகை

'அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் களம்' – செய்தித் தொகுப்பு

1. ஒபாமா அமெரிக்க ஜனாதிபதியாவதே உலகெங்கிலுமுள்ள மக்களின் விருப்பம்-பி.பி.சி :: தமிழ்செய்தி

ஒபாமாவின் தந்தையின் பிறப்பிடமான கென்யாவில் ஒபாமாவுக்கு 82 சதவீதமான ஆதரவும் இந்தியாவில் 9 வீதமான ஆதரவும் கிடைத்துள்ளது.

2. ஹெச்.2-பி விசா நடைமுறைகளை ஒழுங்குபடுத்த ஒபாமா ஆதரவு! :: வெப்துனியா

அமெரிக்காவில் வேளாண் துறை அல்லாத மற்ற துறைகளில், குறிப்பாக தகவல் தொழில்நுட்பம், மென்பொருள் துறைகளில் ஏற்படும் பணியாளர் பற்றாக்குறையை சமாளிக்க, வெளிநாடுகளில் இருந்து ஹெச்.2-பி விசா மூலம் குறிப்பிட்ட காலத்துக்கு தற்காலிகமாக ஊழியர்கள் நியமிக்கப்படுகின்றனர்.

3. அமெ‌‌ரி‌க்க ‌நி‌தியை பா‌கி‌ஸ்தா‌ன் இ‌ந்‌தியாவு‌க்கு எ‌திராக பய‌ன்படு‌த்து‌‌கிறது: ஒபாமா கு‌ற்ற‌ச்சா‌‌ற்று! :: வெப்துனியா

தீ‌விரவா‌த‌த்து‌க்கு எ‌திரான போரு‌க்காக அமெ‌ரி‌க்கா, பா‌கி‌ஸ்தா‌னு‌க்கு 10 ‌பி‌‌ல்‌லிய‌ன் டால‌ர் நி‌தி அ‌ளி‌‌த்து‌ள்ளது. ஆனா‌ல் பா‌கி‌ஸ்தா‌ன் அரசு அ‌ந்த ‌நி‌தியை பய‌ன்படு‌த்‌தி இ‌ந்‌தியாவு‌க்கு எ‌திராக போரு‌க்கு த‌ன்னை தயா‌ர் படு‌த்‌தி வரு‌கிறது எ‌ன்று கு‌ற்ற‌ம் சா‌‌ற்‌றியு‌ள்ளா‌ர்.

4. இந்தியாவுடன் நிரந்தர உறவு: அமெரிக்க குடியரசு கட்சி விருப்பம்! :: வெப்துனியா

இந்தியா-அமெரிக்கா இடையிலான அணுசக்தி ஒத்துழைப்பு ஒப்பந்தத்திலும் குடியரசுக் கட்சியின் பங்களிப்பு குறித்து எடுத்துரைக்கப்பட்டது

5. தட்பவெப்ப நிலை : ஒபாமா, மெக்கைனுக்கு ஐ.நா. வலியுறுத்தல் :: யாஹூ

புவி வெப்பமடைவதற்கு காரணமான பசுமைக்குடில் வாயுக்களை (கரியமில வாயு உள்ளிட்டவை) வெளியிடுவதில் முன்னிலை வகிக்கும் நாடுகளில் அமெரிக்காவும் முக்கியத்துவம் பெறுகிறது என்ற அவர், உலக அளவில் பொருளாதாரத்தில் மேம்பட்டு இருக்கும் அந்நாடு, புவி வெப்பமடைதலை தடுப்பதற்கு குறிப்பிடத்தக்க வகையில் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறியுள்ளார்.

அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ்சுக்குப் பிறகு, அப்பதவியை வகிக்கவுள்ள பராக் ஒபமா அல்லது ஜான் மெக்கைன், தற்போதையை நிலையைக் காட்டிலும் மிகச் சிறப்பான வகையில் தட்பவெப்ப நிலை மாற்றத்தைச் சமாளிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் பான் கி-மூன் வலியுறுத்தியுள்ளார்.

6. ஒபாமாவின் காணாமல் போன சகோதரர் கண்டுபிடிப்பு :: கூடல்

பராக் ஒபாமாவிற்கு ஜார்ஜ் ஹூசைன் ஓனியான்கோ ஒபாமா என்ற தம்பி இருக்கிறார். இவருக்கு இப்போது 26 வயது ஆகிறது. இவர் இப்போது ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான கென்யா நாட்டின் தலைநகர் நைரோபியின் புற நகர் பகுதி ஒன்றில் வசித்து வருவதாக தகவல் கிடைத்துள்ளது. இவர் ஒரு குடிசை வீட்டில் வாழ்ந்து வருகிறார். ஜார்ஜ் ஒபாமா வேறு ஒரு மனைவிக்கு பிறந்தவர் என்று இத்தாலியின் வேனிட்டி பேர் பத்திரிக்கை செய்தி வெளியிட்டுள்ளது.

தான் இரண்டே முறை தான் பராக் ஒபாமாவை பார்த்ததாகவும், 5 வயதாக இருக்கும் போது ஒருமுறையும், கடந்த 2006 ம் ஆண்டு பராக் ஒபாமா நைரோபிக்கு வந்திருந்த போது ஒருமுறையும் மட்டுமே பார்த்ததாக ஜார்ஜ் ஒபாமா கூறியதாக அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தகவல்கள் லண்டனில் இருந்து வெளிவரும் டெய்லி டெலிகிராப் என்ற செய்தி தாளிலும் வெளியிடப்பட்டுள்ளது.

7. சர்வதேச தலைவர்களுக்கான கூட்டத்தில் கார்த்தி ப.சிதம்பரம் :: மாலைச்சுடர்

அமெரிக்க முன்னாள் வெளியுறவுத் துறை அமைச்சர் மேடாலின் கே.ஆல்பிரைட் அழைப்பினை ஏற்று அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் கார்த்தி ப.சிதம்பரம் அமெரிக்கா பயணமானார்.

8. யுஎஸ் மீது புதின் தாக்கு :: மாலைச்சுடர்

அமெரிக்க அதிபர் தேர்தலில் பலனடையும் நோக்குடன் அமெரிக்க அதிபர் வேட்பாளர் ஒருவர் ஜார்ஜியா பிரச்சனையை கிளப்பி இருப்பதாக ரஷ்ய பிரதமர் விளாடிமிர் புதின் குற்றம் சாட்டியுள்ளார். அவர் குடியரசு கட்சி வேட்பாளர் ஜான் மெக்கைனை குறி வைத்து இவ்வாறு கூறியிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.

9. ஒபாமாவை கொல்ல சதி :: மாலைச்சுடர்

கைது செய்யப்பட்டவர்களில் ஒருவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் 750 அடி தொலைவில் இருந்து ஒபாமாவை துப்பாக்கியால் சுட்டு கொலை செய்ய திட்டமிட்டிருந்ததாக தெரிய வந்துள்ளது என்று அமெரிக்க தொலைக்காட்சி ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

கருத்துப் படங்கள்: அமெரிக்க ஜனாதிபதி & தேர்தல் – MAD Mag

மேட் இதழில் வெளியாகும் ஆறு வித்தியாசங்களை உல்டா அடித்து குமுதம் இதழ் வெளியிடுவதில்தான், MAD பத்திரிகையினை ஆரம்பத்தில் அறிந்தேன். சமீபத்திய இதழில் வெளியான அட்டைப்பட கார்ட்டூன் மற்றும் சினிமா விளம்பரங்களின் நக்கல் மறுபதிப்பு:

வார்த்தை – எனி இந்தியன் இதழ் (ஏப்ரல்)

வேகமாக வாசிக்கிறபோதும் சரி. நிதானமாக வாசிக்கிறபோதும் சரி, எதையும் உள்வாங்கிக் கொள்ளும் வழக்கம் நமக்கில்லை. – பஸ்க்கால்

இணையத்திற்கு அறிமுகமானவர்களிடமிருந்து வரும் இதழ் என்பதாலோ என்னவோ, எனி இந்தியனின் ‘வார்த்தை’ குறித்து நிறைய விமர்சனம்/அறிமுகம்/அனுபவம் எல்லாம் புழங்குகிறது.

முதலில் + கள்:

1. வலையகத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கும் விதமாக http://www.vaarththai.com/ அட்டைப்படத்தில் பிரதானமாகக் காட்சியளிக்கிறது.

2. ஒவ்வொரு பக்கமாக புரட்டி என்ன இருக்கு என்று தேடாமல் உள்ளடக்கம் உடனே கிடைக்கிறது.

ஒரேயொரு இடர்ப்பாடு: கட்டுரை/கதைகளின் முடிவில் ஏதாவது விநோத சின்னம் இட்டு (§ ♦) ‘முடிஞ்சுடுத்துப்பா’ என்று பாமரர்களுக்கு உணர்த்தியிருக்கலாம்.

பொருளடக்கம்:

1. கேள்வி – பதில்: ஜெயகாந்தன் – 8/10

கேள்விகள் தூள் ரகம். பதில்கள் மாட்டிக் கொள்ளாத பப்படம்.

2. தலாய் லாமா நோபல் பரிசு பேச்சு: துகாராம் – வாசிக்கவில்லை

ஆங்கிலத்தில் கிடைக்கிறதை, அணுகக்கூடிய ஆங்கில நடையில் கிடைத்தால், அசல் மொழிபெயர்ப்பையே வாசித்துவிடுவது பிடித்திருக்கிறது.

3. ஐயம் இட்டு உண்: நாஞ்சில் நாடன் – வாசிக்கவில்லை

படித்துவிட்டு வருகிறேன்

4. சினிமா: செழியன் – வாசிக்க இயலவில்லை (0/10)

நிழல்‘ என்னும் சுவாரசியமான பத்திரிகையில் கூட இந்த மாதிரி ‘well left’ என்னும் டெஸ்ட் மேட்ச் ரம்பங்கள் வந்துவிடுவதுண்டு.

5. மன்மதன்: அ முத்துலிங்கம் – 10/10

நீங்கள் காசு கொடுத்து இதழ் வாங்குவதற்கான காரணம் #1

6. Pygmies – சேதுபதி அருணாசலம் – 10/10

அடைப்புக்குறிக்குள் ஆங்கிலம் தவழுகிறதே… இன்னொரு செழியனோ என்னும் பயத்துடன் அணுகினாலும், சொந்த அனுபவத்தை வைத்து இயல்பான மொழியில் அச்சுறுத்தாத அறிமுகம்.

7. சிறுகதை: எஸ் ராமகிருஷ்ணன் – 10/10

என்னாமா எழுதறாரு… (இணையத்தில்) புனைவு எழுதறவங்க எல்லாரும் ஒரு தபா இந்த மாதிரி கதைங்களப் படிச்சுட்டு கற்பனை குதிரையத் தட்டணும். இவரோடதுக்கு மட்டும் படமெல்லாம் படா ஜோரு. மத்ததுக்கெல்லாமும் இப்படி வரஞ்சிருந்தா தூக்கியிருக்கும்!

8. மலேசியா: ரெ கார்த்திகேசு – 6/10

மலேசியாவின் வரலாறு முழுமையாகக் கிடைக்கிறது. கட்டுரையில் துளி அவசரம் எட்டிப் பார்த்து, சமீபத்திய தேர்தல் முடிவு அலசலுக்கு முழுமையான தெளிவு கிடைக்காமல் பறக்கிறது. நூறு, நூற்றைம்பது ஆண்டு சரித்திரப் பின்னணி தேவைதான் என்றாலும், அதற்குரிய விலாவாரியான சித்தரிப்பு கொடுத்திருக்கலாம்; அல்லது இரண்டு/மூன்று மாதமாக தொடராக முழுமையாக்கி இருக்கலாம்.

9. பாவண்ணன் சிறுகதை – என்னுடைய ஆதர்ச எழுத்தாளர்; ஏமாற்றி இருக்க மாட்டார். இனிமேல்தான் படிக்க வேண்டும்.

10. வ ஸ்ரீநிவாசன் கட்டுரை – 10/10

மிக மிக எதார்த்தமான பேச்சுவழக்கு நடை அள்ளிக் கொண்டு போகிறது. தி ஹிந்துவில் ஆரம்பித்து, புது தில்லி வாசத்தைத் நினைவலையாக்கி, சுஜாதாவையும் பேருக்கு தொட்டுக் கொண்டு, புத்தக முன்னுரைகளை காலை வாரி, கத்தாழக் கண்ணால என்று பாப் கல்ச்சரையும் விடவில்லை.

11. Pascal – நாகரத்தினம் கிருஷ்ணா: 8/10

விக்கிப்பிடியா போன்ற பற்றற்ற நடைக்கும் ப்ராடிஜி போன்ற தகவல் சார்ந்த புத்தக வாசத்திற்கும் இடையிலேயான மணம்.

12. (அ) கவிதை – தமிழச்சி தங்கபாண்டியன்: 5/10

செட் தோசை

ஆ) சல்மா: 5/10

கொத்து பரோட்டா

இ) நிர்மலா: 7/10

டாப்பிங் இல்லாத ஊத்தப்பம்

ஈ) பி கே சிவகுமார்: 5/10

Appetizer Platter

உ) வ ஐ ச ஜெயபாலன்: வாசிக்கவில்லை

ஊ) ஹரன் பிரசன்னா: 10/10

கதை நேரம் & நாம் இரண்டுமே தூள் ரகம்

13. புலம்பல்/விண்ணப்பம்: லதா ராமகிருஷ்ணன் – 10/10

நியாயமான கோரிக்கை. ஆனால், சீனாவிற்கெதிராக போராட்டம் நடத்துவது போல் பயனில ஆகாமல் இருக்க வேண்டும்.

14. ‘மெல்லக் கனவாய் பழங்கதையாய்: பா விசாலம்‘ – புத்தக விமர்சனம்: வே சபாநாயகம் – 9/10

காசா… பணமா? 10/10 கொடுக்கலாம்தான்! வேறு பதிப்பக வெளியீடு எதுவும் கிடைக்காமல், எனி இந்தியன் புத்தகத்துக்கே விமர்சனம் என்பதால்…

15. இசை அனுபவங்கள்: சுகா – 10/10

நீங்கள் காசு கொடுத்து இதழ் வாங்குவதற்கான காரணம் #2

16. வெ. இறையன்பு: சிறுகதை – 1/10

சிறுபத்திரிகை என்று ஏன் வந்தது? சிறுவர்களையும் கவரும் கதை.

17. ஜெயமோகன் சினிமாவில் பணிபுரிய தடா: சட்டம் – கே எம் விஜயன் – 10/10

To the point. அம்புட்டுதான்.

18. இரா. முருகன் – 5/10

டெட்லைன் அவசரத்தில் எழுதியதோ 😦 அல்லது என் எதிர்பார்ப்பு எக்கச்சக்கமோ?

19. சுஜாதா: கோபால் ராஜாராம் – அஞ்சலைக் கிழித்து அவசர அவசரமாக புரட்டிய சமயத்தில் உடனடியாக வாசித்தது; அஞ்சலி செலுத்தப்பட்டவருக்கு மரியாதையும்; வாசகருக்கு விஷயதானமும்.

20.சிங்கப்பூர் – தமிழ்: எம் கே குமார் – 7/10

கேள்விகள் ஒவ்வொன்றும் நறுக்கென்று நிமிர வைக்கிறது; ஆனால் சட்டென்று சாதாரணமான சம்பவங்களுடன் சப்பென்று முடிந்து விடுகிறது.

21. மார்க்சியம் – தமிழாக்கம்: மணி வேலுப்பிள்ளை – 5/10

பனியில்லாத பாஸ்டனா? கம்யூனியக் கட்டுரை இல்லாத தமிழ் இதழா?

22. அனுபவம் – பி ச குப்புசாமி: 9/10

சிறுகதைக்குரிய வேகம், விவரிப்பு, சம்பாஷணை; ஆனால், நிறைவில்லாத தன்மை தரும் ஏதோவொன்று இருந்தாலும் மிக சுவாரசியமான இதழாசிரியரின் பகிர்வு.

மொத்தத்தில்: 73%

அமெரிக்கா இல்லை; அரசியல் இல்லை; வித்தியாசம் உண்டு; புதுமுகங்களின் பரிமளிப்பு உண்டு.

வாழ்த்துகள்!

Feedback: Closed group vs Wider societies – Bane of Tamil Blogodom

உரிமை துறப்பு: வெங்கட் பதிவோடு உடன்படுகிறேன்.

மறுமொழி மட்டுறுத்தல், ட்ராக்பேக் தடுத்தல், பூங்கா எடிட்டோரியல் எல்லாமே மச்சியவெல்லித்தனமாக இருக்கிறது என்பது வெளிப்படை. எனினும், அதற்கும் (Garrett Mattingly: The Prince: Political Science or Political Satire?) மாற்றுக்கருத்து இருக்கிறது. அது போல், பின்னூட்டங்களுக்கான கேள்வி…

1. —எனக்கென்னமோ ஞாநி திரைப்படம் என்று எழுதும் இடங்களில் எல்லாம் சிவப்புமசியால் குமுதம் ஆசிரியர் அடிக்கோடிட்டு சினிமா என்று எழுதுவார் என்று நம்பமுடியவில்லை.—

ஏன்? ஆங்கிலத்தில் சிந்தித்து தமிழில் எழுதுபவர், இப்படித்தானே மாற்றிப்போட்டு பதிவெழுதுகிறார்? தமிழ்ச்சொல்லின் அர்த்தம் நேரடியாக (எளிமையாக) விளங்கிக் கொள்ள முடியாமல் போவதினால், அடைப்புக்குறிக்குள் ஆங்கில வார்த்தை சொல்லப்படுகிறது.

குமுதம் ஆசிரியர் சாட்சி சொல்ல வரப்போவதில்லை. Inductive logic படி, இது வரை ஞாநி எப்படி எழுதியிருக்கிறார்? தீம்தரிகிட (Dheemtharikida | Gnani) இதழ்களில் ஸ்டைல், லேட்டஸ்ட் போன்றவை தென்பட்டாலும் குமுதத்தில் வெளியான அளவு நெருடவில்லை.

ஆசிரியர் கைங்கர்யமா, ஞாநியின் விருப்பமா என்பதை எப்படி உறுதிப்படுத்துவது?

2. —வருகின்ற எல்லா பின்னூட்டங்களுக்கும் பதில் எழுதவேண்டும் என்று யாரும் எதிர்பார்ப்பதில்லை.—

நிச்சயம் நான் எதிர்பார்க்கிறேன் 🙂

அதாவது, பொதுமைப்படுத்திவிடமுடியாது.

அதுவும், இன்னொருத்தர் எழுதியதை அனுமதித்தால்

  • ‘இந்தக் கருத்துக்கு மட்டுறுத்தியவர்தான் பொறுப்பேற்க வேண்டும்’ என்னும் குற்றச்சாட்டு;
  • ‘அவதூறாக இருக்குமோ?’ என்று நிறுத்தி வைத்தால், ‘கருத்து சுதந்திரம் பறிபோகிறது!”

இந்தப் பதிவுடன் எப்படியோ சம்பந்தப்படுத்தி, இங்கே என்னைப் பற்றி அவதூறாக அனானியாக ஒருவர் எழுதினால்,

  1. அ) தணிக்கை செய்து வெளியிடுவீர்கள்
  2. ஆ) முழுமையாக நிராகரித்துவிட்டு, ‘மன்னிக்கவும்… உங்கள் மறுமொழி சரியில்லை’ என்று பொதுவில் சொல்வீர்கள்.
  3. இ) முழுமையாக நிராகரித்துவிட்டு, எதுவும் சொல்லமாட்டீர்கள்
  4. ஈ) அப்படியே வெளியிடுவீர்கள்
  5. உ) அதன் பிறகு நான் அதை கண்டித்தால், குறிப்பிட்ட அநாகரிகமான பதிலை நீக்குவீர்கள்
  6. ஊ) மீண்டும் ஒரு மறுமொழி (இது வேறு ஐ.பி.; இன்னொரு தாக்குதல்; மீண்டும் (அ) விற்கு செல்லவும்; ஒவ்வொரு பதிவிலும் இந்த சுழற்சி தொடர்ந்தால்?)

என்னைப் போன்ற அதிகம் அறியப்படாத பதிவர் என்றால், இந்த மாதிரி எங்காவது பேர் வந்தாலே பெருமிதம் அடைந்து மகிழ்வார்.

ஆனால், ரஜினி, அண்ணா, சானியா மிர்சா போன்ற பொருத்தமான புகழ் பெற்றவர்களை நோக்கிய வசவுகளையும் இணையப் பெருசுகளையும் பொருத்திக் கொள்ளலாம்.

சுருக்கமாக… தாவு தீர்ந்துரும்.

இந்த மாதிரி செய்து கொண்டே அலுவலிலும் நாட்டம் பயில இயலுமா?

3. —என், அருள்செல்வன், சன்னாசி, இன்னும் பலரின் வலைப்பதிவுகளில் எத்தனை முறை மட்டுறுத்தி பின்னூட்டங்கள் நீக்கப்படுகின்றன?—

இந்தப் பதிவுகளை எத்தனை பேர் படிக்கிறார்கள் / எவ்வளவு பேருக்கு புரிகிறது?

அருள்செல்வன் கருத்துப்படங்கள் விளங்குவதில்லை; சன்னாசி கவிதைகள் புரியவில்லை. அறிவியல் குறித்து லாஜிக் (தமிழில் என்ன சொல்லோ? விக்சனரி ‘அறிவுப்பூர்வமான’ என்கிறது – எனக்கு இது பொருத்தமாக தெரியவில்லை) உடன் எழுதினால் ஆக்ரோசமாக விவாதம் செய்ய என்ன இருக்கிறது?

ஈழம், பார்ப்பனீயம் போன்றவற்றில் உத்தம நிலையை (பொலிடிகலி கரெக்ட்) முன்வைத்து எழுதினாலோ, முகமிலியாக எழுதினாலோ நீங்கள் சொல்வது பொருத்தம். கலகக்குரலுக்கு எதிர்க்குரல் எழுப்பினால் கல்லடி கிடைப்பது சகஜம்தான் என்று வைத்தியசாலைக்கு பக்கத்தில் வலையகத்தை நடத்துவது சாத்தியமா?


சன்னாசிக்கு—டைம், நியூஸ்வீக் பத்திரிகையாளர்கள் எழுதும் வலைப்பதிவுகளில்கூட மறுமொழிகள் அனுமதிக்கப்பட்டே இருக்கின்றன, என்ன – ஒவ்வொரு பின்னூட்டத்துக்கும் யாரும் உட்கார்ந்து பொறுமையாக பதில் சொல்லிக்கொண்டிருப்பதில்லை.—

தட்ஸ்தமிழில் கூட மறுமொழி வசதி இருக்கிறது. சினிமா கிசுகிசுவாகட்டும்; அரசியல் செய்தியாகட்டும்; இந்த மறுமொழி ஒவ்வொன்றுமே, Platonic பண்புகளை வலியுறுத்தி சகலவிதமான NC-17 தரச்சான்றிதழுடன் உலா வருகின்றன.

இங்கேல்லாம் பிரச்சினையே இல்லை.

ஆனால், சில நூறு பதிவர்கள். அனைவரின் இடுகைகளும் படிக்காவிட்டாலும் ‘சூடான பதிவு’ படிக்கப்பெறுகிறது; பதில்கள் கண்காணிக்கப்படுகின்றன. (மின்னஞ்சலிலேயே பதிலுக்கு வந்த பதில்கள் வந்துசேருமாறு வோர்ட்பிரெஸ் முதல் ப்ளாக்ஸ்பாட் வரை வசதி இருக்கிறது!)

ஆங்கிலப் பதிவுலகிலும் தட்ஸ்தமிழ் களத்திலும் பாவிக்கும் ‘Stoicism by proxy’ இங்கே சாத்தியமில்லையா? அல்லது அதற்காக ஜென் தத்துவம் பயில வேண்டுமா?


—-டைம், நியூஸ்வீக் பத்திரிகையாளர்கள் எழுதும் வலைப்பதிவுகளில்கூட மறுமொழிகள் அனுமதிக்கப்பட்டே இருக்கின்றன, —-தொழிலுக்கொரு வேலையை வைத்துக் கொண்டு இயங்கும் தமிழ்ப்பதிவுகளையும் லாப நோக்கில் இயங்கும் ஆங்கில இதழ்களையும் எப்படி ஒப்பிடலாம்?

—-என்ன – ஒவ்வொரு பின்னூட்டத்துக்கும் யாரும் உட்கார்ந்து பொறுமையாக பதில் சொல்லிக்கொண்டிருப்பதில்லை. —-

ஆங்கிலம் போன்ற பரவலாக வலைப்பதிவுகள் இயங்கும் இடங்களில் லட்சக்கணக்கில் வாசகர்கள் இருக்கிறார்கள். ஆயிரக்கணக்கில் மறுமொழிகள்.

கருக்கலைப்பு குறித்த பதிவு என்றால் தீவிர சார்புடைய ஒரு அணியில் இருந்து சில நூறு பேரும், எதிர்த்தரப்பில் இருந்து இன்னொரு நூறு பதில்களும் பதிவுகளும் விழுகிறது. விவாதம் அமைகிறது.

ஜெயமோகன், பாரா போன்றவர்களுக்கும் இந்த மாதிரி பரந்துபட்ட களம் அமைய தற்போதைய சூழல் உகந்ததாக இருக்கிறதா?

இவரின் பதிவின் கருத்தை வலியுறுத்தி பேசினால், ‘அடிப்பொடி’ என்று பட்டமிடும் நிலையும், குறுகிய குழு (எல்லா விவாதத்திலும் பங்குபெறும் நாலைந்து பேர் கொண்ட சபையில் — நூறு பேர் வாசகர்) என்னும் சூழலும் உள்ள இடத்தில் உருப்படியான எழுத்தையும் என்னைப் போன்ற சிலரே திசை திருப்புமாறு அமைந்து விடாதா?

ஆங்கிலப் பதிவுலகிலும் தட்ஸ்தமிழ் களத்திலும் பாவிக்கும் ‘Stoicism by proxy’ இங்கே சாத்தியமில்லையா?

—-நேரடி மனிதத் தொடர்புகளைத் தாண்டிய கருத்து விவாதங்களுக்கு பழம்பெருச்சாளிகள் தயாரில்லை என்பதுதான் இங்கே முக்கியமான விஷயம் —-

இந்த முடிவுக்கு எப்படி வந்தீர்கள்?

—-ஆற்றில் மணல் எடுக்க வரும் லாரிகள் மாதிரி ஒரு பெரிய லாரி ஊர்வலமே வருகிறது!!—-

எப்படி இவ்வாறு ஒப்புமை செய்கிறீர்கள்?

எஸ் ராமகிருஷ்ணன், பா ராகவன் ஏற்கனவே பதிவு வைத்திருந்தார். ‘எதிர்த்த வீட்டுக்காரர் E550 வாங்கியிருக்கார்…’ என்னும் தொற்றுவியாதியாகவோ ஒரு சிலர் வந்திருக்கிறார்கள்.

ஆங்கிலத்தில் வேண்டுமானால், நீங்கள் சொல்வது சரி!

டைம், எகானமிஸ்ட் என்று கண்டங்கள் தோறும்; டைம்ஸ், ப்ராஸ்பெக்ட் என்று தினசரி/வார/மாதாந்தரிகள் தோறும்; முன்னாள் பத்திரிகையாசிரியர், இன்னாள் தொலைக்காட்சி நடத்துனர் என்று எல்லாரும் மொய்க்கிறார்கள்.

தமிழில் உங்கள் லாரி ஊர்வலத்தில் யார் யார் இருக்கிறார்கள்?

—-கோமாளிகளால் எந்த இடத்திலாவது கையெழுத்துப் போடாமல் விட முடிகிறதா?—-

இதைக் கூட விளக்கினால் பயன்பெறுவேன். முகமிலியாக எழுதுவது மட்டும்தான் உயர்ந்ததா? இருபது இடுகைகள் இட்டவுடன் அந்தப் பதிவை மூடிவிட்டு புதியதாக வேறொரு பெயரில் இன்னொன்று துவக்க வேண்டும் என்று இந்தக் கருத்தை புரிந்து கொண்டிருக்கிறேன்.

—-ஹிப்போக்ரஸி தான் பிரச்னையே. பின்னூட்டப் பொட்டியை மூடிவிட்டு எழுதுங்கள் என்று ஒரு அறிவுரை.—-

“A sadist is a masochist who follows the Golden Rule.” என்பது போல் இருக்கிறது.

தன்னைத்தானே அடித்துக் கொள்வது தனக்கு சுவாரசியமாக இருக்கிறது என்பதற்காக அனைவரையும் சவுக்கால் அடிக்க சொன்ன மசாக்கிஸ்ட் கதை போல் இருக்கிறது.


உதவிய புத்தகம்: Joculor, Ergo Sum (May-June 2007)


—பின்னூட்டப் பெட்டி என்றாலே குப்பைக் கூடை என்று எல்லோரும் மீண்டும் மீண்டும் வலியுறுத்துவதை—நாலைந்து தடவை எழுதிய பிறகு சொன்னதையே திருப்பிச் சொல்லுதல், பொருத்தமற்ற அல்லது அதிர்ச்சியடைய வைக்கும் ஒப்புமைப்படுத்தல் (சாடிஸம் மஸோக்கிஸம்), தடாலடி முடிவுரை (முழுவிதண்டாவதம் என்னும் கணிப்பு) போடுதல், தீர்ப்பு விதித்தல் (ப்ராக்ஸியாகப் பெற) என்று ஆகுவதால் இப்படிப்பட்ட எண்ணம் எழுந்திருக்கலாம் 😉


தேடுபொறிகளில் பக்கத்திற்கான மதிப்பெண் உயர, ‘சுட்டும் உரல்கள்’ மிக மிக அவசியம்.உதாரணத்திற்கு கூகிளின் வரிசைப்பட்டியலில் (PageRank – Wikipedia, the free encyclopedia) சில வலையகங்கள் ஆறு மதிப்பெண் பெற்றிருக்கும். அதே மாதிரி விஷயகனம் கொண்ட இன்னொரு வலையகத்திற்கு, ஐந்துதான் கொடுத்திருப்பார்கள்.SEO சூட்சுமமாகக் கூட இந்த மாதிரி பின்னூட்ட பெட்டி மூடுதலை நோக்கலாம்!

சன் டிவியில் மீண்டும் பார்த்த ‘சபாஷ் மீனா’ இரண்டு தடவை தேய்ந்து போன பேழையாக திரும்ப திரும்ப சொற்றொடர்களை சொல்லிப் படுத்தியது… அந்த மாதிரி ஆகும் ஆபாயம் உணர்ந்தாலும், நான் அறிந்தவரை தொகுப்பு.

—இந்த மாதிரி அவதூறுகளை முன்னே பின்னே பார்த்திராதவர்கள் இங்கே வந்து ஏதோ பச்சைப்பிள்ளை மாதிரி சிரமப்படப்போகிறார்கள் என்று ஏன் முன்னேற்பாடாகச் செய்யவேண்டும்? அதைப் படித்துப் பார்க்காமலே நிராகரித்துவிடமுடிகிறதென்றால், அதற்கும் பின்னூட்டங்களுக்கும் என்ன வித்தியாசம்? —

1. எனக்கு அவசியம் சொல்லவேண்டுமானால், சொல் (தனிமடல்).

உலகத்திற்கு அவசியம் உன்னுடைய கண்டனங்களையும் கருத்துகளையும் சொல்ல வேண்டுமானால், எழுது (தனிப்பதிவு). [என்னுடைய முதுகின் மேல் ஓசி சவாரி கேட்காதே!]

2. ஜெயமோகனுக்கு சிவாஜியும் பத்மினியும் எம்ஜியாரும் அகப்பட்டார் என்றால், வெங்கட்டுக்கு ஜெயமோகனும், பிரபுவிற்கு ஞாநியும் அகப்பட்டார்கள். [வல்லவனுக்கு வில்லி 🙂 ]

நன்றி!


சன்னாசி…
—மேலே சொன்னது உங்கள் கருத்தா? ஆமெனில், உங்கள் பதிவுகளின் பின்னூட்டங்களை முதலில் மூடுங்கள்.—இது எனக்காக சொல்லிக் கொண்டது அல்ல.

இங்கேயே கூட சின்ன வித்தியாசத்தை நீங்கள் பார்த்திருக்கலாம்…

ஜமாலன் – வலையாடலை முன்னெடுத்துச் செல்வதற்கு நன்றிகள்!

என்று ‘பெரிய’ ஆளுக்கு பதில் சொல்லி சுருக்கமாக நன்றியோடு முடித்து கொள்ளும் வெங்கட்

நீங்கள் மேலே எழுதியிருப்பதெல்லாமே முழுவிதண்டாவதம்

என்று எனக்கு மாறிவிடுகிறார்.

மனித இயல்புதான். வெங்கட் தவிர நேற்று புதிதாக ஆரம்பித்த அனானி ‘ஜெமோவும் பாராவும் எஸ்ராவும் இன்ன பிறரும் பிறருக்கு பயந்து பின்னூட்டத்தை மூடியிருக்கிறார்கள்’ என்று அனுமானித்திருந்தால் எனக்கு இவ்வளவு ஆர்வமாக கேள்வி எழுந்திருக்காது.

வெங்கட்டின் பதிவில் கவர்ந்த கருத்துகளில் சில…

  • மின்வடிவத் தகவல்கள் உயிரூட்டமானவை.
  • துரதிருஷ்டவசமாக இன்றைய நிலையில் அப்படி உதாரணம் காட்ட தமிழில் எழுத்தாளர்கள் மிகவும் குறைவு.

அலகிலா விளையாட்டு: “அவரவர் நியாயங்களின் உட்புறச் சுவரைக் குடைந்துபார்க்க எல்லாருக்கும் சாத்தியமில்லை.”

என்பதுதான் என் கட்சி

அமெரிக்க தேர்தல்களும் இந்திய ஊடகங்களும்

US Elections - Media Importance