Tag Archives: படம்

ரேடியோபெட்டி – Radiopetti: Tamil Cinema

திரைப்படத்தை முன் வைத்து சில குறிப்புகள்:

1. நெட்ஃப்ளிக்ஸ்: இந்தப் படம் நெட்ஃப்ளிக்ஸ் மூலமாகப் பார்க்கக் கிடைக்கிறது. அரிதான தென்னிந்தியப் படங்கள் வரிசையில் இதை வைத்திருக்கிறார்கள். திதி, நிலா, ஒத்தாள், Revelations, விசாரணை என்று இந்தப் பட்டியலில் வித்தியாசமான கொத்துகளை சேர்த்திருக்கிறார்கள்.

2. சிங்கம்: இயக்குனர் ஹரி எடுத்த சிங்கம் படம் இப்படித்தான் போகும், நல்லதுதான் நடக்கும் என்று தெரியும். இருந்தாலும் பார்ப்போம். இந்தப் படத்திலும் இறுதியில் இப்படித்தான் முடியும் என்பது ஊகிக்க முடிகிறது.

3. குடும்பமா? சுயவிருப்பமா? : ’ரேடியோபெட்டி’ திரைப்படம் அருணாசலம் என்ற முதியவரை பற்றிய கதையாகும். அருணாசலம் தனது கடந்தகாலம் பற்றிய நினைவுகளில் மூழ்கி இருப்பவர். குறிப்பாக தனது அப்பா அளித்த ரேடியோவில் இளமைக்கால மெல்லிசை பாடல்களை கேட்பதில் மகிழ்பவர். தனது குடும்பம், மெல்லிசை ஆகிய இரண்டில் ஒன்றை அவர் தேர்வு செய்ய வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படுகிறது. இரண்டில் ஒன்றை வாழ்நாள் முழுக்க இழக்க வேண்டும். அவர் எதை தேர்வு செய்வார் என்ற கதை களத்தை அடிப்படையாக கொண்ட திரைப்படமே ’ரேடியோ பெட்டி’.

4. பியூட்டி அண்ட் தி பீஸ்ட்: இந்தியக் குடும்பங்களில் ஆண் என்பவன் என்ன சிரமங்கள் கொடுத்தாலும் பொறுத்துக் கொண்டு போவது மனைவிகளின் கடமை. இதுதான் டிஸ்னியின் கதை. ஒரு ராட்சஸன் இருப்பான்; அவன் இருக்கும் இடமோ அடர்ந்த காடு; மக்களற்ற தீவாந்தரத்தில் வசித்தாலும் அவனின் இல்லத்தரசி அவனுக்கு சமைத்துப் போடுவாள்; சிசுருஷை செய்வாள்; அவளுக்கும் வயதாகி இருந்தாலும் அவனுக்கான தேவைகள் அனைத்தையும் நிறைவேற்றுவாள். ரேடியோபொட்டியும் அருணாச்சலம் என்னும் பீஸ்ட் ஒருவரின் கதைதான்.

4. விருது: தென் கொரிய பூஸான் திரைப்பட விழா போட்டி பிரிவிலும், ஸ்பெயின் திரைப்பட விழாவில் சிறந்த இசைக்கான விருதும் வென்ற படம். ரோமானியா திரைப்பட விழா உள்பட பல்வேறு விழாக்களில் பங்கேற்ற படம். பல காலமாக விருதுக்காகவே எடுக்கப்படும் ஹிந்திப் படங்கள், காஞ்சிபுரம், குட்டி போன்ற சமீபத்திய தமிழ்ப் படங்கள் பார்த்து வருகிறேன். இருந்தாலும் இது தமிழகத்தின் அசல் கதை, இந்தியாவில் மட்டுமே எடுக்கக் கூடிய படம் என்று எதுவும் பளிச்சிடவில்லை. இந்த மாதிரி முதியவர்கள் எங்கும் எப்போதும் காணப்படுகிறார்கள். ஒரு ஐம்பதாண்டுகளாக இந்த சப்ஜெக்ட் — பரிதாபமான அனாதரவான பெற்றோர் என்னும் தேய்வழக்கு உலாவருகிறது.

5. சூது கவ்வும்: விஜய் சேதுபதி நடித்து நலன் குமரசாமி எடுத்த இந்தப் படத்தைப் பார்த்திருப்பீர்கள். அதில் ”தாஸ்’ கதாபாத்திரம் தன்னுடன் அழகி ஒருத்தி உரையாடுவதாகக் கற்பனை செய்து உடன் வைத்திருக்கும். அந்த “ஷாலு”வுடன் பேசுவது பைத்தியம் என்று அழைக்க வைத்தாலும் தாஸ் என்பவன் அதை சகஜமாக எடுத்துக் கொள்வான். இங்கே “ரேடியோ பெட்டி”யிலும் அந்த மாதிரி மனச்சிக்கலை மையமாக வைத்து எடுக்கிறார்கள். ஆனால், ”சூது கவ்வும்” இதே போன்ற உளச்சிக்கலை இன்னும் நுட்பமாக ஆழமாகப் பதியுமாறு சர்வ சாதாரணமாகத் திரையில் காட்டிச் சென்றார்கள். ரேடியோபெட்டியில் அதை போட்டுடைத்துச் சொல்கிறார்கள். முன்னது திரைப்படத்திற்கு உகந்த அணுகல். இரண்டாமவது எழுத்திற்கு சாலச் சிறந்தது.

6. பழைய நினைப்புதான் பேராண்டி: நொஸ்டால்ஜியா என்பது சொர்க்கமா அல்லது மீள வேண்டிய நரகமா என்பது உங்களின் அனுபவத்தைப் பொருத்தது. இதில் தன் அப்பா, அவர் உபயோகித்த சின்னச் சின்ன விஷயங்கள், பழைய வேலை, பால்ய காலம், முதலில் பார்த்த வேலை, அந்த வேலையில் நெடுங்காலமாக கூட பயணிக்கும் சக ஊழியன் என்று ‘அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே நண்பனே! நண்பனே! நண்பனே! இந்த நாள் அன்று போல் இன்பமாய் இல்லையே அது ஏன்? ஏன்? ஏன்?

7. பொருள் என்பது பொருளல்ல? : இன்றைய ஐஃபோன், அல்லது செல்பேசியை எடுத்துக் கொள்வோம். இந்தக் கருவியை எங்கும் எடுத்துச் செல்லலாம்; எப்பொழுது வேண்டுமானாலும் நமக்கு என்ன பாட்டு வேண்டுமோ கேட்டுக் கொள்ளலாம். அது ஒரு இருப்பு சார்ந்த பொருள்.

நான் நிரலி எழுதுபவன். அதே செல்பேசியில் உங்களுக்கு இந்தப் பாட்டு பிடித்து இருந்தால், இன்னொரு பாட்டும் பிடிக்கும் என்று பரிந்துரை சொல்லும் மென்கலன் எழுதுவேன். அந்த ஐ-பாட் என்பது பாட்டு கேட்க என்பதில் இருந்து வேறு பல பயன்பாடுகளுக்குத் தகுந்தவாறு மாற்றுவேன். வெறும் பாட்டுப் பெட்டிக்கான கருவி என்றில்லாமல், புகைப்படங்கள் பார்ப்பதற்கோ மற்றொன்றிற்கோ கூட உருமாற்றி உபயோகமாகுமாறு வடிவம் தரவைக்கக் கூடிய பொருள்.

கடைசியாக பொருள் என்பது நம் அபிலாஷைகளுக்கு உருவம் தருகிறது. வினாயகரின் குட்டி விக்கிரகமாக இருக்கலாம், சிலுவையாக இருக்கலாம்; அது உங்களின் நம்பிக்கை சார்ந்தது. இந்தச் சிலுவையை இடியும் மின்னலும் கூடிய சமயத்தில் பிடித்துக் கொண்டால், அறிவியல்பூர்வமாக ஆபத்தாகக் கூட இருக்கலாம். ஆனாலும், ஆழ்மனம் சொன்னால் கெட்டியாகப் பிடித்துக் கொண்டு மழையில் இருந்து தப்பிக்க வைத்ததாகச் சொல்வோம். அருணாசலத்திற்கு ரேடியோபெட்டி அந்த மாதிரி உள்விருப்பம் சார்ந்த பொருள்.

ஓநாயும் ஆட்டுக்குட்டியும்

கடைசியாக இந்தப் படத்தை டெண்ட்கொட்டாய் உபயத்தில் பார்த்து முடித்தேன். இப்போது இது புத்தகமாக வந்திருக்கிறது.

%e0%ae%93%e0%ae%a8%e0%ae%be%e0%ae%af%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%86%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%af%e0%af%81

புத்தகம் குறித்து தெரியவில்லை. படத்தை தயவுசெய்து பார்த்துவிடாதீர்கள். ஏன்?

1. ஓநாயும் ஆட்டுக்குட்டியும் (2013) – கருந்தேள் ராஜேஷ் | Karundhel.com

படத்தில் நடித்திருக்கும் மிஷ்கினின் கதாபாத்திரத்தின்மீதும் சரி, ஸ்ரீயின் கதாபாத்திரத்தின் மேலும் சரி, முதல் பாதி முடியும்வரை எந்த அட்டாச்மெண்ட்டும் வரவில்லை. படத்தின் துவக்கத்திலேயே மிஷ்கினின் பாத்திரத்தைப்பற்றி போலீஸ் மூலமாக நமக்குத் தெரிந்துவிடுகிறது. கதையில் ஒரு சிறிய துணுக்காக, ஒரு சமூக விரோதிக்கு சிகிச்சை செய்து போலீஸில் மாட்டிக்கொள்ளும் ஸ்ரீயின் கதை இருந்தாலும், அதனால்கூட அவர் பாத்திரத்தின் மேல் எந்தவித உணர்ச்சிகளும் வரவில்லை.

2. காட்சியாக சொல்லப்பட வேண்டிய கதை எல்லாம், கடைசி ஐந்து நிமிடத்தில் டெலி ப்ராம்ப்டரைப் பார்த்து படிக்கும் மிஷ்கினால் ஓவர் ஆக்ட் செய்யப்படுகிறது. கொடுமைடா சாமீ.

3. ‘முகமூடி’ எடுத்தவரின் அடுத்தகட்ட வீழ்ச்சியாக இந்தப் படத்தைப் பார்க்கலாம்.

4. ஒரு இயக்குனருக்கு தன் போதாமைகளும், அடுத்தவரின் திறமையை சிறப்பாக வெளிக்கொணரும் ஆளுமையும் இருக்கவேண்டும். இத்தனை திறமையான பட்டாளத்தை வைத்துக் கொண்டிருக்கும் மிஷ்கின் தான் மட்டுமே போதும் என்னும் அகங்காரத்தில் இந்தப் படத்தில் சறுக்கியிருக்கிறார்.

5. ரேப் சீன் வைத்தால் அதில் காமம் தலைதூக்கக் கூடாது. எண்பதுகள் வரை வந்த பெரும்பாலான தமிழ்ப்படங்களில் வல்லுறவு காட்சிகள் காதல் காட்சிகள் போல் படமாக்கப் பட்டிருக்கும். அந்த மாதிரி அந்த பிச்சைக்காரியின் லட்சணமான முகம் கூட இந்தப் படத்தில் பாவப்பட வைக்காமல், ‘குழந்தை விவாகம் செய்து கொண்டாளோ?’ என பிற எண்ணங்களில் பார்வையாளரை மூழ்கடிக்கிறது.

6. தயவுசெய்து இதை திரைப்பட விழாக்களிலோ, வெளிநாட்டினருக்கு தமிழ்ப்பட அறிமுகமாகவோ சொல்லிவிட வேண்டாம். டாகேஷி கிட்டானோ, டாரன்டினோ என்றெல்லாம் டகால்டி விட்டு என்ரான் போல் மோசடியாக சீட்டுக்கட்டு ராஜாக்களைக் கொண்ட கோலிவுட் என்று தப்பாகக் கருதி, மொத்த தமிழ் சினிமாவையும் எள்ளி நகையாடிவிடுவார்கள்

7. அரிதான விஷயங்களைப் பாராட்டினால் மட்டுமே நாம் நினைவில் நிற்போம். பலரும் தூற்றும் விஷயங்களை, நாமும் கிண்டலடித்து கீழே தள்ளினால், இலக்கிய விமர்சகராக மாட்டோம். ஜாய்ஸ் குறித்தும் எலியட் குறித்தும் ஹெமிங்வே குறித்தும் அறிய நாம் எட்மண்ட் வில்சனை நாடுகிறோம்; காஃப்காவைக் குறித்து ஆராயவேண்டுமானால் வில்சனைத் தொட மாட்டோம். என்றாலும், நாம் அனுபவித்த நரகத்தை இன்னொருவரும் அனுபவிக்கக்கூடாது என்பதால், இந்தப் படத்தைப் பாராட்டாதீர்கள் என்கிறேன்.

8. போரடிக்கும் படம் என்பதால் மட்டும் விமர்சிக்கவில்லை. வித்தியாசமான காட்சியமைப்புகள் என்பதால் மட்டும் நிலைக்கூடிய படமில்லை. மேஜிக் நிகழவேண்டும். ராஜா இருக்கிறார். பூடகமான சங்கதி இருக்கிறது. ஒளிப்பதிவாளர் அசத்துகிறார். ஆனால், அவியலில் அவியல் சுவைக்க வேண்டும். இது லட்டுவும் பாகற்காயும் பீட்சாவும் போட்ட அவியல். சகிக்கவில்லை.

9. பாடல்கள் இல்லை. ஐட்டம் சாங் இல்லை. பஞ்ச் வசனங்கள் இல்லை. கூடவே படமும் படமாகவில்லை.

10. திரைப்படங்களில் லாஜிக் பார்ப்பவன் நானில்லை. ஆனால், அந்தந்தப் படங்களில் நம்பவியலாத விஷயங்கள் நம்பக்கூடிய முறையில் உருவாக்கப்பட வேண்டும். ’ஜோக்கர்’ படம் தலைப்பில் ஜோக்கடித்தாலும் படு சீரியசாக செல்லும்; ஆனால், இந்தப் படம் முழுக்க காமெடியாக எடுக்கப்பட்டிருக்கிறது. படத்தின் ஆதார முடிச்சான — மிஷ்கின்-ஸ்ரீ சந்திப்பு ஏன் தேவை?

ஓநாயும் ஆட்டுக்குட்டியும்
பதிப்பாளர்: பேசாமொழி பதிப்பகம்
எழுதியவர்: திரைப்படத்தின் இயக்குநர் மிஷ்கின்
விலை: ரூ.600.00

சவரக்கத்தி படமாவது திருப்தி செய்ய வேண்டுகிறேன்.

%e0%ae%9a%e0%ae%b5%e0%ae%b0%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf_chavara_kathi_savara_kathy

இவர்தாண்டா இயக்குநர்

cafe-society-woody-allen-kristen-stewart-jesse-eisenberg

சின்ன வயதில் பாக்யராஜை ரொம்பப் பிடிக்கும். சின்ன வீடு திரைப்படத்தில் தவறு செய்தாலும் தர்மசங்கடத்தில் தவிக்கும் கதாபாத்திரத்தை அரங்கேற்றுவார். முந்தானை முடிச்சு படத்தில் துரத்தி துரத்தி காதலிக்கும் இரண்டாம் மனைவியைக் காண்பித்து ஆண் வக்கிரத்திற்கு நன்றாகவேத் தீனி போட்டார். இன்று போய் நாளை வா போன்ற படங்களில் சாமர்த்தியமான பெண்களையும் அசட்டு ஜொள்ளர்களையும் செமையாக சிரிக்க வைத்தார்.

அமெரிக்கா வந்த பிறகு இரண்டு இயக்குனர்கள் அந்த மாதிரி என்னை நம்பிக்கையாகக் கட்டிப் போட்டு வைத்திருக்கிறார்கள். முதலாமவர் கோயன் சகோதரர். இரண்டாமவர் இங்கே கவனிக்கப்போகும் வுடி ஆலன்.

ஒவ்வொரு படத்திலும் ஏமாற்றாமல் எதையோ ஒன்றை எனக்காக வைத்திருக்கிறார். வசனம் ஆகட்டும்; கதாபாத்திர சித்தரிப்பு ஆகட்டும்; சமூக எள்ளல் ஆகட்டும்; திரைப்படம் நடக்கும் நகரம் ஆகட்டும்… எல்லாமே ரம்மியம்.

என்னுடைய கனவுக்கன்னிகள் எக்கச்சக்கம். ஒரு பட்டியல் போட்டு பார்க்கலாம்…

  1. ஜெகன்மோஹினி ஜெயமாலினி
  2. அழகன் பானுப்ரியா
  3. மின்சாரக் கனவுகள் கஜோல் (டி டி எல் ஜே அசல் என்றாலும்…)
  4. Forget Paris டெப்ரா விங்கர்
  5. Pretty Woman ஜூலியா ராபர்ட்ஸ்
  6. When Harry Met Sally மெக் ரயன்
  7. கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் தபு
  8. பிரேமம் சாய் பல்லவி
  9. நல்லவனுக்கு நல்லவன் ராதிகா

பத்தாவதாக க்ரிஸ்டன் ஸ்டூவார்ட் சேர்கிறார்.

இன்றைய தேதிய கிரிஸ்டன் மிக மிகப் பெரிய நட்சத்திரம். அதாவது தமிழ்நாட்டில் நயன் எவ்வளவு பெரிய நாயகியோ, அதை விட பத்து மடங்கு சூப்பர் ஸ்டார். அவரை அழைத்து, இந்த கதாபத்திரத்துக்குப் பொருந்துவாரா என்று மேக்கப் போட்டு, வசனம் பேசச் சொல்லி, அதைப் படம் பிடித்து, பார்த்த பிறகே வுடி ஆலன் கிரிஸ்டனை நாயகியாக்குகிறார்.

கிரிஸ்டனுக்கும் பேர் சொல்லும் படம் கிடைக்க வேண்டுமானால் டைரக்டர் சொல்லும்படி ஆடித்தான் ஆகவேண்டும்.

இந்தப் படம் என்னுடைய விருப்பமான நகரம் – நகரேஷு நியு யார்க்

படத்தைப் பார்த்தால் நாவல் போல் இருப்பது அதிசயத்திலும் அதிசயம். இந்தத் திரைப்படம் மிகவும் தேர்ந்த புதினம் போல் நெடுங்கதையாக விரிகிறது. மனதில் எங்கோ ரீங்கரீத்துக் கொண்டே இருக்கிறது.

படத்தில் மிகவும் யோசிக்க வைத்த வசனம்:

சாக்ரடீஸ் ஒரு தபா சொன்னார்: “ஆராயப்படாத வாழ்க்கையை வாழ்வதில் அர்த்தம் எதுவுமில்லை”.  ஆராய்ச்சிக்குள்ளாக்கப்படும் வாழ்விலும் எந்த பெரிய அர்த்தமும் இருப்பதாக எனக்குத் தோணல!

keyart-single-cafe-society-vertical

படத்தில் யூதர்களைக் குறித்த கிண்டல்கள் உண்டு. பணக்கார வர்க்கத்தைக் குறித்த கேலிகள் உண்டு. எல்லாமே உன்னதமான நகைச்சுவை. மீண்டும் மீண்டும் பார்த்தாலும் சிந்தித்து பிறகு வெடித்துச் சிரிக்க வைப்பவை.

மீண்டும் பாக்யராஜிற்கே வருவோம். ஏன் அவரை பிடித்து இருந்தது? ஆணாதிக்கம் இருக்கட்டும். அந்த அப்பாவி ஆண் இமேஜ் பிடித்திருந்தது. அவரின் ஏமாளித்தனம் ரசித்தது. ‘கொட்டும் மழைக்காலம் உப்பு விற்கப்போகும்’ ஏமாளித்தனம் ருசித்தது.

இந்தப் படத்தின் தலைவனும் இதே மாதிரி கோமாளி. விட்டில் பூச்சியாய் விளக்கில் வீழ்க்கிறான்.

கொலையை நியாயப்படுத்துவது ஆகட்டும்; அராஜகத்தைத் தட்டிக் கேட்கும் போது அடங்கிப் போகும் பக்கத்து வீட்டு தத்துவவியலாளர் ஆகட்டும்; பதின்ம வயதுப் பெண்ணை ஆசைப்படும் கிழ போல்ட்டு ஆகட்டும்; கிடைக்காத உச்சாணிக்கொம்பை நோக்கி ஆசைப்படும் நாயகன் ஆகட்டும் – எல்லாவற்றையும் நம்பகமாகக் காண்பித்து நிராசையையும் உளவியலையும் காதலையும் கலந்து கட்டி அடிப்பதில் வுடி ஆலன், ‘விடு ரைட்டு’ என்று தப்பையும் சரியாக மனதில் பதிய வைக்கிறார்.

நான் பார்க்கும் பெண்கள் எல்லாம் சுவலட்சுமிகள் மாதிரி ஆலோசனை மழை பொழிவதிலும், தேவயானி மாதிரி சின்சியர் சிகாமணிகளாகவும் இருக்கையில், திரையில் மட்டும் கனவுக்கன்னியர் வந்து போவர். இங்கேதான் கிரிஸ்டன் ஸ்டூவர்ட் நாயகி கதாபத்திரம் பளிச்சிடுகிறது. கிரிஸ்டன் தெளிவானவர். வாழ்க்கையில் பணம் முக்கியம். ஹாலிவுட்டில் அந்தஸ்து முக்கியம். பருத்தி வீரன் ப்ரியாமணி போல் காதல் மட்டும் கருத்தில் கொள்ளாமல் நிதர்சனத்தை உணர்ந்து முடிவெடுக்கும் சாமர்த்தியவாதிகள்.

இளமைக் காதலை இப்படி காட்சியாக்கியவர்கள் வெகு வெகு சிலரே. தங்கர்பச்சானின் அழகி இப்படியொரு உச்சத்தைத் தொட்டு இருக்க வேண்டும். ஆனால், அலைக்கழித்து, சுமுகமாக க்ளைமாக்ஸ் சொதப்பலில் முடிந்து, சின்னாபின்னமாகி இருக்கும். முதல் மரியாதை காதல் கூட சௌஜன்யமாக இல்லாமல், கொலயெல்லாம் செய்யவைத்து பரிதாபப் பட வைக்கும்.

வுடி ஆலன் உண்மையைச் சொல்பவர். கனவுகள் என்றும் கனவுகளாக இருப்பதால்தான் மெய் மெய்யாகப் பொய்க்கிறது.

kristen_stewart_cafe_society

எண்பது வயசானாலும் ஏமாற்றாத என் டைரக்டர்டா!!

1. Movie Review: ‘Café Society’ and the Twilight of Woody Allen – The Atlantic

2. Review: ‘Café Society’ Isn’t Woody Allen’s Worst Movie – The New York Times

3. ‘Cafe Society’ Movie Review – Rolling Stone

என்ன கண்ணுடா இது

ஶ்ரீவித்யா: துயர விழிகளின் தேவதை

சின்ன வயதில் தூர்தர்ஷனில் மட்டும்தான் இந்தப் படங்களைப் பார்த்து இருக்கிறேன்.

  • சாவித்ரி – எனக்குத் தோன்றிய பிம்பம்: எப்போது பார்த்தாலும் அழுகை; மூக்கு சிந்தல்; ஜோடியாக பொருந்தா கதாபாத்திரங்கள் (miscast)
  • சாரதா – அய்யஹோ… துலாபாரம்… இப்பொழுது என் பெண்ணிடம் தனுஷ் நடித்த ‘தங்கமகன்’ பார்க்கச் சொன்னாலே, அரண்டு ஓடுகிறாள்.
  • பானுமதி – bearable; அதுவும் ‘தொட்டு நடிக்கக் கூடாது’ என்னும் பிரஸ்தாபம், பிராண்ட் நன்கு முன் வைக்கப்பட்டதால், கொஞ்சம் போல் intrigue

இந்த சமயத்தில் ஸ்ரீவித்யாவும் அபூர்வ ராகங்களும் நிஜமாகவே கொஞ்சம் ஆசுவாசம் கொடுத்தது. மற்றவர்கள் எல்லாம் சோக சாகரத்தில் மூழ்கடித்து வாழ்க்கையையே எதிர்மறையாக, ஏமாற்றமாக, தோல்விகளாக உணர்த்திய போது, இவரைப் பார்த்தால் புத்துணர்ச்சியும் நம்பிக்கையும் வந்தது. அந்தத் தலைமுறையின் குறியீட்டின் எச்சமாக இந்தக் கட்டுரையைப் பார்க்கிறேன்.

srividya-early-years

விக்கிப்பிடியாவின் பட்டியலை பார்ப்போம்:

  1. அறுபதுகள் – ஜெயலலிதா (சரி… திமுக ஆட்சியில் இருந்தால், யாருக்கு விருது கொடுப்பார்கள்)
  2. எழுபதுகள் – சுஜாதா, லஷ்மி
  3. எண்பதுகள்ஷோபா, சரிதா
  4. 90கள்அர்ச்சனா, ரேவதி

நிறைய பேரை விட்டிருக்கிறேன். இருந்தாலும், டக்கென்று பார்த்தால், இவர்கள் எல்லோருமே மெரில் ஸ்ட்ரீப் போல் உருகி நடிப்பவர்கள். அதாவது, சிரமதசையில் இருக்கும் கதாபாத்திரங்களுக்கு மட்டுமே மதிப்பு. விக்ரம் கண் தெரியாதவராக, சிவாஜி கால் முடியாதவராக நடிப்பது போன்று ஏழை பிச்சைக்காரராக திரையில் தோன்றினால் விருது கிடைக்கும், நல்ல நடிகர் என்று மதிப்பு உயரும். இவர்களுக்கு நடுவில் அச்சுபிச்சுத்தனமாக நடிக்கும் மோகன், துள்ளலாக வந்துபோகும் நதியா போன்றோர செல்லுபடியாவதில்லை.

ஸ்ரீவித்யாவும் அப்படிப்பட்ட ஒருவரோ?

இதையெல்லாம் இந்தக் கட்டுரை சொல்வதில்லை என்றாலும், குறிப்பால் உணர்த்துகிறதோ!

Sri_Vidya_Actress_Tamil_Malayalam

 

செம்புலம்

http://www.youtube.com/watch?v=6qFNhKSO9XE

  1. துவக்கத்தில் அர்ப்பணிப்பு, அஞ்சலி எல்லாமே பிரும்மாண்டத்தை முழக்கமாக தெரிவிக்கின்றன. (அவை தமிழிலும் இருக்கலாமோ?)
  2. புத்தம் புதியதாக கட்டப்பட்ட நூறடுக்கு மாடி உலக வர்த்தக மையம் ஒரு ஷாட்; உடனடியாக இலையுதிர்ந்த காடு போன்ற பெருஞ்சோலையை பருந்து போல் ஆயிரம் அடியில் இருந்து பார்க்கும் தூரயியங்கி கோணம்; இருட்டில் முகம் மட்டுமே தெரியுமாறு ஒளிப்பதிவு என ஒவ்வொரு ஃப்ரேமும் செதுக்கி இருக்கிறார்கள்.
  3. பையை அப்படியே பின் தொடரும் பட அமைப்பு; கார் புறப்பட்டுச் செல்வதை வித்தியாசமாக மனதில் பதியுமாறு அமைத்திருக்கும் கோணம் – எல்லாமே உறுத்தாமல் உள்ளத்தில் பதியும் திரைச்சிந்தனை.
  4. பொண்டாட்டீஸ் ஆர் அஸ் போல் இதிலும் அனாதைப் பையில்தான் கதை ஆரம்பிக்கிறது. இரண்டும் சத்யராஜ்குமார் திரைக்கதை என்பதாலா? அல்லது ஒளிப்பதிவாளர் தினேஷ் ஜெயபாலனின் கைங்கர்யமா?
  5. ஐ.எஸ்.ஐ போலி அடையாள அட்டை எல்லாம் தயார் செய்திருக்கிறார்கள். (எனக்கு ஒண்ணு  பார்சல் பண்ணுங்க)
  6. சோபாவில் துப்பாக்கி ஒளித்து வைத்திருக்கும் இடம் தூள். (நிஜமாச் சொல்லுங்க… எந்த சினிமாவில் இதைப் பார்த்தீங்க?)
  7. நான்காண்டுகள் முன்பும் மோகன்ராம் அதேத் தோற்றத்தில் இல்லாமல் இருந்திருக்கலாம். தலைக்கு கறுப்பு மசி, தாடி இல்லாத முகம் என்று இல்லாவிட்டாலும், மழுவோ மச்சமோ, ஒட்டி விட்டிருக்கலாம்.
  8. ‘முஸ்தபா… முஸ்தபா’ போல் அந்த நட்புக் காட்சிகள் வலுவின்றி க்ளிஷேவாக, தற்பால் உறவின் விளிம்புக்கு அழைத்துச் செல்கின்றன.
  9. எங்கே நிஜம், எங்கே கிராஃபிக்ஸ், எங்கே ஸ்டாக், எங்கே வெட்டி ஒட்டல் என தெரியாதவாறு ஏர் இந்தியா பறக்கிறது; குண்டுகள் வெடிக்கிறது; துப்பாக்கிகளும் தோட்டக்களும் பின்னணியில் படச்சுருள்களும் சுவாரசியம் கூட்டுகின்றன.
  10. கண்ணாடியில் பிரதிபலிப்பு தெரிவது பழைய வாழ்க்கையை ஜீப்ராவை நினைத்துப் பார்க்க வைக்கிறதா… காதில் ஏதோ கர்ஜனை ஆணை வாங்கி கறுப்புக் கண்ணாடியுடன் அவருடனேயே நடக்க வைப்பதன் மூலம் வெளிச்சத்தில் வாழ்ந்தாலும் இருட்டில் இருப்பதைக் குறிக்கிறதா! யோசிக்க வைக்கிறார்கள்

Sembulam_Shorts_Films_Movies_Ila_Tractor_Satyaraj_Kumar

பொண்டாட்டீஸ் ஆர் அஸ்

http://www.youtube.com/watch?v=DLQO1Jru0mU

  1. குறும்படத்தின் துவக்கத்தில் வரும் அறிவிப்புகள், இந்தப் படம் முழு நீள நகைச்சுவைப் படம் என கபர்தார் செய்கிறது.
  2. வேட்டையாடு விளையாடு, சி.எஸ்.ஐ மியாமி போல் பதினாறு, முப்பத்திரண்டு என்று நொடிக்கு நொடி பல் அடுக்கு பிரிவாக விரிந்து மாறும் குட்டித்திரைகள், விலை உயர்ந்த மருத்துவ சாதனங்கள், என காட்சியமைப்பிலும் அரங்கப் பொருள்களிலும் நல்ல கவனம் செலுத்திய தயாரிப்பு.
  3. கொலாஜ் போல் ஒவ்வொரு காட்சிக்கும் ஒவ்வொரு துணுக்கு காட்சி, அதன் மேல் நாலைந்து சம்பவங்கள் என்று வசனங்கள் குறைவாக இருப்பது பலே!
  4. ஒரே சமயத்தில் அஷ்டலஷ்மியாக நாலைந்து நபர்கள் வெவ்வேறு சட்டகங்களில் வெவ்வேறு லஷ்மிகளாக தோன்றியிருப்பது சிரத்தை.
  5. உயிர்ப்போலி (க்ளோனிங் டிராக்கர்) உருவாக்கும் கணித்திரையாகட்டும்; அலுவல் திட்டத்தில் வரும் உளுத்தம் பருப்பு, தயிர் ஆகட்டும்; கோப்புகளையும் கணினி இடைமுகத்தையும் பாவ்லா காட்டாமல், உண்மையாகவே தயாரித்திருக்கிறார்கள்.
  6. பெண்ணுக்கு ஆண் குரல் மாற்றம் எல்லாம் கச்சிதமாக இருந்தாலும், ஹேமா ஏன் அவ்வளவு மோதிரம் அணிந்திருக்கிறார் என்பதும், லஷ்மி ஏன் சீமந்தம் போல் அத்தனை வளையல் அணிந்திருக்கிறார் என்பதும் அவிழாத முடிச்சு.
  7. உணர்ச்சிகரமான தருணங்களில் ஆங்கிலத்தில்தான் வசனம் அமைந்திருக்கிறது என்பது நெருடல்

 

Clone_Pondaatis R Us

Product Positioning and PRO: Nayanthara

Nayan_Thara_Actress

நடிகையில் ஒரெழுத்தை எடுத்துவிட்டால் நகை கிடைத்துவிடும். விளம்பரம் என்னும் வார்த்தைக்கு வியாபாரம் என்னும் வார்த்தை மோனை சந்தத்துடன் அமைந்திருக்கும். நயந்தாரா என்றால் அட்டைப்படம் என்று சென்ற வாரம் காணப்பட்டது. கீழே கல்கி அட்டை கட்டுரை:

Kalki_Magazines_Nayan_Thara_Actress

அடுத்து 03/12/2015 ஆனந்தவிகடன் அட்டைப்பட கட்டுரை: நயன் நம்பர் 1 – ம.கா.செந்தில்குமார்

தமிழ் சினிமாவின் கோடி லேடி, சிங்கிள் பெண் சிங்கம், ட்ரெண்டிங் பியூட்டி, மாயாவன தேவதை, தனி ஒருத்தி… அவ்வளவும் நயன்தாராதான்!

ஒரு ஹீரோயினாக 10 வருடங்கள் கடந்தும் படபடக்கிறது நயன்தாரா கிராஃப். அடுத்தடுத்து ‘மாயா’, ‘தனி ஒருவன்’, ‘நானும் ரௌடிதான்’ என ஹாட்ரிக் ஹிட்ஸ் தட்டியவர். காதல் தோல்விகள், வீண் வம்புகள், உள்ளடி வேலைகள் கடந்தும் ஒரு படத்தின் வெற்றிதோல்வியை நிர்ணயிக்கும் அளவுக்கு உயர்ந்து நிற்கிறார் நயன். மாஸ் நடிகர்களே நயன் கால்ஷீட்டுக்காக மல்லுக்கட்டுகையில், ‘ரெஜினா’, ‘மாயா’, ‘மஹிமா’, ‘காதம்பரி’… என

சினிக்கூத்து, வண்ணத்திரை, சினிமா எக்ஸ்பிரெஸ் எல்லாம் பார்க்கவில்லை. அங்கும் அவர்தான் இருப்பார் என்பது சம்சயம். ஏன்?

GRT_Jewelers_Nayan_Dhara_Heroines

எல்லாப் புகழும் ஜி.ஆர்.டி. தங்க மாளிகைக்கே!

GRT_Nayanthara_Tamil_Films

மாநகராட்சி இடத்தையெல்லாம் பல கோடி கமிசன் பெற்று ஜி. ஆர்.டி வாங்கும் போது இந்த மாதிரி, தங்களுடைய பிராண்ட் அம்பாஸ்டரை முன்னிறுத்துவது ஜுஜுபி:

ஜூலை 2012 செய்தி: சென்னை மாநகர மேயருக்கு தொடர்புண்டா? சென்னை பழைய வண்ணாரப்பேட்டை ராபின்சன் பூங்கா அருகில் சுமார் பத்து கிரௌண்ட் நிலம் உள்ளது. அந்த நிலத்தில் திமுகவினர் ஆக்கிரமித்து தங்களது கட்சி அலுவலகத்தை நடத்தி வருகின்றனர். இப்போது மீதம் உள்ள இடத்தில எம்சி சாலையை ஆக்கிரமித்து இருந்த நடைபாதை வியாபாரிகளுக்கு ஒதுக்கீடு செயபட்டிருந்தது. இப்போது அந்த இடத்தை ஜி. ஆர். டி தங்க மாளிகை நிறுவனத்திற்கு லீஸ்கு விட சுமார் ஐந்து கோடிக்கு கமிசன் பெற்று கை மாற்றி விட வேலைகள் நடந்து முடிந்து விட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. நடைபாதை வியாபாரிகளுக்கு தலைக்கு ஒரு லட்சம் கொடுத்து விரட்டபடுவதாக தகவல். மேலும் முக்கிய புள்ளி ஒருவருக்கு பதினைந்து கோடி கைமாறப் போவதாக கூறப்படுகிறது. நீதித் துறையின் உத்தரவு மீறப்பட்டுள்ளதாக தெரிகிறது. இரண்டு கவுன்சிலர்கள் அம்மாவின் உத்தரவையும் மீறி தலா ஐந்து லட்சம் பெற்றுள்ளனர். இதனால் சென்னை மேயரும் பலன் பெற்றிருப்பார என்ற சந்தேகம் வலுத்துள்ளது

இவ்வளவு கோர்த்துவிட்டு, சமீபத்திய நயன் தாரா செய்தியை சொல்லாவிட்டால்… எப்படி?

சமீபத்தில் நயன் – விக்னேஷ் ஒன்றாக எடுத்துக்கொண்ட செல்பி வெளியாகியது. மேலும், விக்னேஷுக்கு நயன் அன்பளிப்பாக பி.எம்.டபிள்யூ கார் மற்றும் வீடு ஒன்றை வாங்கி கொடுத்ததாகவும் தகவல் வெளியானது.

தனது பிறந்தநாளை (18 நவம்பர்) முன்னிட்டு, ரோம் நகருக்கு சென்ற நயந்தாரா, அங்கு போப்பிடம் ஆசிர்வாதம் பெற்றார். அவருடன் ‘நானும் ரவுடி தான்’ படத்தின் இயக்குநர் விக்னேஷ் சிவனும் சென்றிருந்தார். அப்படியே நயந்தாராவுக்காக கிறிஸ்துவ மதத்திற்கு மாறிய இயக்குநர் விக்னேஷ், தனது பெயரை விக்டர் என்று மாற்றிக்கொண்டாராம். இந்த பெயர் தேவு நயந்தராவின் சாய்ஸாம்.

பிரபு தேவாவுக்காக இந்து மதத்திற்கு மாறிய நயந்தாரா, காதல் முறிவுக்கு பிறகு மீண்டும் தனது தாய் மதமான கிறிஸ்துவ மதத்திற்கு மாறினார்

ஜியார்டி தங்கத்தையெல்லாம் போப்பரசர்தான் விற்கிறாரோ?

கமலின் தூங்காவனம்: விமர்சனம்

நந்தவனம் x பாலைவனம்

  • அஜீத் நடிப்பில் ‘வேதாளம்’ வெளியான தீபாவளி அன்றே கமலின் ‘தூங்காவன’மும் வெளியாகி இருப்பது, காக்டெயில் விற்கும் இடத்தில் மாக்டெயில் அருந்துவது போல் அமைந்திருக்கிறது. விசைப்பலகை இடுக்குகளில் ஒளிந்திருக்க வேண்டிய துகள்கள், விஸ்வரூபமெடுத்து தமிழ் சினிமாவை ’வேதாளம்’ மாதிரி நிரப்பினால், அந்த பாலவனத்தில், கொஞ்சம் போல் துளிர்க்கும் சோலைவனமாக தூங்காவனம் இருக்கிறது.
  • சந்தானபாரதி இயக்கிய ‘கடமை… கண்ணியம்… கட்டுப்பாடு’ படத்தில் பாடல்கள் கிடையாது. தூங்காவனத்திலும் பாடல்கள் இல்லை. எனினும், இரண்டுமே பாடல்கள் நிறைந்த படங்களை விட நந்தவனம்.

Posters_Thoongavanam_Kamal_Trisha_Tamil_Films_Movies_Cinema

தீவனம்

  • நிரலியை சி ஷார்ப்பில் எழுதிக் கொடுத்தால், அதே நிரலியை பைத்தான், ரூபி, ஜாவா போன்ற கணிமொழிகளில் எவ்வாறு எழுதுவது என்று செய்து பார்ப்பது கணி நிரலாளர்களுக்கு உவப்பான விஷயம். கொஞ்சம் சவாலான விஷயமும் கூட. கமல் இந்த மாதிரி உருமாற்றி, அதை தமிழ் மசாலா சேர்த்து நமக்கு தீவனம் ஆக்குகிறார்.
  • பார்வையாளர்களுக்கு விஷயம் வைக்க வேண்டும் என்று குவிமையம் இல்லாமல், சகல இடங்களுக்கும் பயணித்து குழப்பிக் கொள்ளாமல், எளிமையான பயணத்தில், சுருக்கமான நேரத்தில், பல இடங்களுக்கும் பாய்ந்து பறந்து திக்கின்றி திணறாமல், தீவனம் போடுகிற படம்

சஞ்சீவனம்

  • சோலையில் சஞ்சீவனம் என்பது உணவகம். இங்கே சாப்பாட்டுக் கடையில் பாதி படம் அரங்கேறுகிறது. சமையல் பொருள்களைக் கொண்டு சண்டைக்காட்சி நடக்கிறது.
  • சஞ்சீவியாக கமல் இந்தப் படத்திலும் உலாவுகிறார். அசல் படமான ஃபிரெஞ்சு படத்தில் இருந்து சற்றே விலகி, பெண்கள் கமலை மொய்க்கிறார்கள். வயிற்றில் குத்துப்பட்டாலும், சாவடி வாங்கினாலும் நிமிர்ந்து மீண்டெழுகிறார்.

சீவனம்

  • வேலையில் இருப்பது சம்பாத்தியத்திற்கா? பணியில் அமிழ்ந்து கிடப்பது மணவாழ்வை முறிக்குமா? குடும்பத்தை விட அலுவலில் பெயரெடுப்பது முக்கியமா? போன்ற ஜீவனம் சார்ந்த கேள்விகளை எழுப்பும் படம்.
  • இன்றைய இளைய தலைமுறை போதைக்கும் மதுவிற்கும் கொண்டாட்டத்திற்கும் அடிமையாகி இருப்பதை அமைதியாக சொல்லிச் செல்கிறது.

Thungavanam_Thoongavanam_Kamal_Trisha_Tamil_Films_Movies_Cinema

வனம்

  • கூகுள் கொண்டு சகல தகவல்களையும் அறியும் காலத்தில், முன்னாள் மனைவிக்கு தொலைபேசி போட்டு, மருந்துகளையும் ஊசிகளையும் கேட்டறியும் நாயகன் சி.கே.டி, என்ன சி.ஐ.டி.?
  • மகனின் திறன்பேசியில், எங்கே இருக்கிறான் என்று கண்டறியும் எளிய ஜி.பி.எஸ். கூட இல்லாமல், என்ன ஐஃபோன்?

பிருந்தாவனம்

  • பூஜாகுமாரும் ஆண்ட்ரியாவும் இல்லாமல் இருப்பதே பிருந்தாவனம். மது ஷாலினி அளவாக நடிக்கிறார். வெள்ளித்திரைக்கு புத்துணர்ச்சி கொடுக்கிறார். மிடுக்கான த்ரிஷா அதனினும் சிறப்பு.
  • ஃப்ரெஞ்சு அசலில் கொஞ்சம் போல் உங்கள் ஊகத்திற்கு விட்டுச் சென்றிருப்பார்கள். தமிழில் தெள்ளத் தெளிவாக போட்டுடைப்பது, திரையரங்கு வருகையாளரை மட்டம் தட்டும் புவனம்.

யெளவனம்

  • நேற்று ஓய்வுபெற்ற 61 வயது காவல்துறை அதிகாரி மாதிரி கமல் இல்லாத யெளவனம். முன்னாள் மனைவி ஆஷா ஷரத்தைப் பார்த்தாலும் நாற்பதுகள் போல் தெரியும் யெளவனம். இந்த மாதிரி உடம்பை வைத்துக் கொள்வது தனி உஜ்ஜீவனம்
  • பாரதியை இன்று படித்தாலும் புத்துயிர் பெறுகிறோம்; மலைக்கள்ளனையும் தூக்கு தூக்கியையும் இன்று பார்த்தாலும் ரசிக்கிறோம். அது போல் பிறமொழிக்காரர்களிடம் போட்டுக் காண்பித்தாலும் காலா காலத்திற்கும் சுவாரசியமாக்கும் சொரூபம் கொண்டிருக்கும் படம்.

தாருகாவனம்

தாருகாவனத்தில் பல முனிவர்கள் வேள்வி செய்து கொண்டும் தவமியற்றியபடியும் வாழ்ந்தார்கள். தங்களது தவத்தின் வலிமையால் முக்தியினை நாடினார்கள். முனிசிரேஷ்டர்களுடைய மோனத்தையும், குருபத்தினிகளது கற்பையும் குலைக்க நாராயணரின் துணையோடு சங்கரன் சதி செய்கிறான். மும்மூர்த்திகளில் இருவரையும் ஒழித்துக் கட்ட அபிசார வேள்வியை நிகழ்த்தினார்கள். திடீரென்று வேள்வியின் அக்னி குண்டத்திலிருந்து மகா பயங்கரமான உருவத்தோடு ஒரு புலி உருமியபடி வெளியே வந்தது. அக்னியிலிருந்து அடுத்தடுத்துத் யானை, மான், பூதங்கள், மழு, முயலகன், கொடிய நாகங்கள் என்று ஏவினார்கள். ஏவப்பட்ட பூதங்கள் சிவனின் பூதகணங்கள் ஆகின. மழு அவருக்கே படைக்கலனாகி விட்டது. முயலகன் சிவனின் காலடியில் சிக்கி நகரவே முடியாதவனானான். நாகங்களுக்கு காளி, காளாங்திரி, யமன், யமதூதன் என்று நான்கு விதமான நச்சுப்பற்கள். அவற்றிலிருந்து விஷத்தைப் பீய்ச்சி அடித்தபடி அவை ஆக்ரோஷமாக சிவன் மீது பாய்ந்தன. ஏற்கெனவே, கருடனுக்கு அஞ்சித் தன்னிடம் சரண் புகுந்த பாம்புகள் அவருக்கு ஆபரணமாக விளங்கி வந்தன. இப்போது வந்த கொடிய நாகங்களையும் தம் கையில் பற்றி ”உம் குலத்தவர் ஏற்கெனவே இங்கே என்னுடன் இருக்கிறார்கள். நீங்களும் அவர்களுடன் கூடி வாழுங்கள்!” என்று கூறி அந்த நாகங்களைத் தமது கரம், திருவடி, திருவரை, திருமார்பு முதலிய இடங்களில் கங்கணம், காலணி, அரைஞாண் போன்ற ஆபரணங்களாக அணிந்து கொண்டார்.

Insomnia என்னும் கேளிக்கை மையமே தாருகாவனம். அங்கே இளைஞர்களும் இளைஞிகளும் களிவெறிப் பொருள் கொண்டு கூத்தாடி போதையின் துணையோடு முக்தியினை நாடினார்கள். அங்கே நிலவும் மயக்கத்தைப் போக்க காவல்துறை உயரதிகாரியான திவாகர் களமிறங்குகிறார். அவரை எதிர்க்க போதைத்தடுப்பு அதிகாரியான த்ரிஷா தோன்றுகிறார். திரிஷாவின் மேலிடமான கிஷோர் வருகிறார். அவர்களை ஆபரணமாகக் கொண்டு எவ்வாறு வில்லன்களை எதிர்கொள்கிறார் என்பதே திரைக்கதை.

Thoongavanam_Kamal_Trisha_Tamil_Films_Movies_Cinema

உபசீவனம்

  • சௌந்தர்யலஹிரியையும் விஷ்ணு சஹஸ்ரநாமத்தையும் எம்.எஸ். சுப்புலஷ்மியின் குரலுக்காகவும் அதன் மந்திர உச்சாடனத்திற்காகவும் கேட்பவர்கள் உண்டு. அட்சரம் பிசகாமல் சொல்பவர்களும் உண்டு. ஆனால், அர்த்தம் உணர்ந்து, பொருள் புரிந்து, அனுபவித்து வாழ்க்கையில் கடைபிடிப்பவர்கள் எவ்வளவு பேருண்டு? அதே போல், சுவாரசியமான படங்களை பார்ப்போர் நிறைய உண்டு. அதனை தமிழ் நாயகர் கொண்டு, மொழிமாற்றுவோர் கூட நிறைய உணடு. ஆனால், பொருத்தமான சினிமாவாகத் தேர்ந்தெடுத்து, அதன் கடுமையான வழிமுறைகளை தமதாக்கி, தமிழுக்குக் கொணர்வோர் மிகச் சிலரே உண்டு. அதற்கு, கமலின் தூங்காவனம் ஒரு சான்று.
  • கிரேசி மோகனின் கத்தி வசனமும் கிடைக்கிறது. காவல்துறையின் தகிடுதத்தங்களும் சத்தமின்றி பூடகமாக வெளிப்படுகிறது. விவாகரத்தான வாழ்க்கையில் மகனின் மேல் செலுத்தும் நேசமும் காணக்கிடைக்கிறது.
  • தான் மட்டும் தனியே எல்லா சட்டகத்திலும் காணக் கிடைத்தால் செல்ஃபி காலத்தில் புளித்துப் போகும் என்றறிந்த கமல், உமா, ஜெகன், பிரகாஷ்ராஜ், கிஷோர் என எல்லோருக்கும் கதாபாத்திரமும் அவர்களுடைய குணச்சித்திரமும் தனித்துவமாகத் தெரியுமாறு அமைத்திருக்கிறார். தானும் வந்துபோகிறார்.

தூங்காவனம் – ஸ்லீப்லெஸ் நைட்

கமல் படத்திற்கு விமர்சனம் எழுதுவதற்கு நிறைய பிரயத்தனம் வேண்டும். 1980ல் ஸ்டான்லி க்யூப்ரிக் ‘தி ஷைனிங்’ என்ற படம் எடுத்தார். அந்தப் படத்தில் என்னவெல்லாம் குறியீடுகள் இருந்தன, அந்தக் காட்சியமைப்பின் உள்ளே பொதிந்திருக்கும் விஷயங்கள் என்னவென்று சொல்வதற்காகவே ரூம் 237 என்ற ஆவணப்படத்தை சிரத்தையாக வெளியிட்டு இருக்கிறார்கள்.
Thoonga_VanamTelugu_-Kamal-Cheekati-Rajyam

உத்தம வில்லனுக்குக் கூட இந்த மாதிரி நிறைய கதை கட்டி விட்டிருக்கிறார்கள். வருடத்திற்கு மூன்று படம் என்றானபின், ஜெயமோகன் எழுதும் மஹாபாரதம் போல் கமலின் ஒவ்வொரு திரைப்படத்திற்கும் விலாவாரியான அலசல் தேவையிருக்காது.

பாபநாசம் போல் உன்னைப் போல் ஒருவன் போல் ஃப்ரெஞ்சுப் படமான ‘Nuit blanche’ம் அவ்வாறே ஒரு மறு-பதிப்பு. இந்தப் படத்தில் கமலைப் பார்ப்பதற்கு பதில் ஃபிரெஞ்ச் அசலை பார்ப்பது மேல் என்பது போன்ற விமர்சனங்கள் நாளைய தினங்களில் ஃபேஸ்புக்கில் உலாவுவதற்கு முன், அசல் படம் குறித்து பார்த்து விடுவோம்.

வேட்டையாடு விளையாடு‘ போன்ற துள்ளல் போலீஸிற்கும், தூங்காவனம் படத்தின் காவல்துறைக்கும் நிறைய வித்தியாசங்கள் உண்டு. முன்னது நம்பவியலா சாகசங்கள் புரியும் கூரையேறி கோழி பிடிக்கும் இராமாயணம். ‘ஸ்லீப்லெஸ் நைட்’ உள்ளே அழுகிக்கிடப்பதை மெதுவாக அரங்கேற்றும் சண்டைப்படம்.

மிகையுந்துரத்தவெம்பிணியுந் துரத்த
வெகுளியான துந்துரத்த
மிடியுந்துரத்த நரை திரையும் துரத்தமிகு
வேதனைகளுந் துரத்த
பகையுந்துரத்த வஞ்சனையுந் துரத்த
பசியென் பதுந்துரத்த
பாவந்துரத்த பதிமோகந்துரத்த
பலகாரியமுந் துரத்த
நகையுந் துரத்த ஊழ் வினையுந் துரத்த
நாளும் துரத்த வெகுவாய்
நாவரண் டோடிகால் தளர்ந்திடும் என்னை
நமனுந் துரத்து வானோ ?
அகில உலகங்கட்கும் ஆதார தெய்வமே !
ஆதிகடவூரின் வாழ்வே !
அமுதசீர் ஒருபாகம் அகலாத சுகபாணி !
அருள்வாமி அபிராமியே !

திருக்கடையூர் அபிராமி பட்டர் (இயற்பெயர்: சுப்ரமணிய ஐயர்) நினைவிற்கு வருகிறார். அவருக்கு இன்னல் வரும்போது அந்தாதி இயற்றினார். இன்றைய காலத்துப் பசங்களை அடுத்த மாதத்திற்குள் இந்த வேலையை முடிக்க வேண்டும் என்று குளிரூட்டப்பட்ட அறையில் உட்கார்த்தினால் கூட அந்தாதியை ‘கிட்-ஹப்’பில் தேடி, திருடத் தெரியாத அசமஞ்சங்கள் ஆக இருக்கிறார்கள். அவரோ, கீழே குழி, சுட்டெரிக்கும் நெருப்பு ஜ்வாலைகளைக் கக்க, அம்பிகை வருவாளோ என்னும் பயமும் துரத்த, அவர் பாட்டுக்கு தன் வேலையை, பாடல் புனைவதை செய்து முடிக்கிறார்.

ஸ்லீபெலெஸ் நைட் நாயகன் வின்செண்ட்டும் அம்பிகை பட்டர் போல், கடும் பிரச்சினைகளுக்கு நடுவில் சாந்தமாக செயல்படுகிறான். ஆனால், அபிராமி பட்டரைப் போல் உத்தமன் அல்லன். கொஞ்சம் கெட்டவன்; போதை மருந்து தடுப்புப் பிரிவில் இருந்தாலும், அதற்கு மாறாக, சொந்த ஆதாயத்திற்காக செயல்படுபவன். கள்ளக்கடத்தல் நடப்பதாக கிடைத்த துப்பை வைத்து, அந்த பரிமாற்றத்தைத் தடுத்து, போதைப் பொருள் அனைத்தையும் தனதாக்கிக் கொள்ளப் பார்க்கிறான்.

போதைப் பொருளின் அசல் உரிமையாளர் வெகுண்டு எழுகிறார். கதாநாயகன் வின்சென்ட்டின் மகனைக் கடத்துகிறார். தனக்குச் சொந்தமான போதைப் பொருளை தன்னிடமே ஒப்படத்துவிட்டால், வின்சென்ட் – தன்னுடைய மகனை மீட்டெடுக்கலாம்.

வின்சென்ட் மீது நம்பிக்கையில்லாமல், அவனுடைய காவல்துறையின் உயரதிகாரிகள், வின்செண்ட்டை பின் தொடர்கிறார்கள். ஆனால், அந்த உயரதிகாரியும் அத்தனை உத்தமரில்லை. அவரும் இன்னொரு வில்லன். வின்செண்ட் விற்பதாக இருந்த போதைப் பொருளை, வின்சென்ட்டின் காவல்துறை உயரதிகாரியே, திருடி, தனதாக்கப் பார்க்கிறார். அதற்கு, அப்பாவி த்ரிஷா போல் ஒரு அழகியை நியமிக்கிறார்.

த்ரிஷாவும் காவல்துறை உயரதிகாரியும் கமலை… அல்ல… வின்செண்ட்டை துரத்துகிறார்கள்.

தன்னுடைய மகனைத் தேடி, மதுபான சாலையெங்கும் வின்சென்ட் தேடியலைகிறான்.

வின்சென்ட் பதுக்கி வைத்திருக்கும் போதை சரக்கை, கள்ளக்கடத்தல்காரர்கள் தேடியலைகிறார்கள்.

மூவரும் ஒருவரை ஒருவர், மூர்க்கமாகத் தாக்குவது, உண்மையை அறிவது, கொஞ்சம் பாசத்தைக் கூட அவ்வப்போது பொழிவது எல்லாம் நடக்கிறது. தந்தை என்னும் பாசத்தைச் சொல்வதும் செயலில் காட்டி நிரூபிப்பதும் வின்சென்ட்டிற்கு அவசியம். புதியவளாக, பெண்ணாக, இளையவளாக இருந்தாலும் நேர்மையான கொம்பராக இருப்பது த்ரிஷாவிற்கு அவசியம். போதைப் பொருளைக் கடத்தி பணம் குவிப்பது அதன் உரிமையாளருக்கு அவசியம். மதுசாலை நடத்துபவருக்கு தன் உணவகத்தின் கெத்து அவசியம். சகுனியாக எட்டப்பனாக இருக்கும் காவல்துறை அதிகாரிகளுக்கு பதவி அவசியம். தாய்க்கு தன் மகனின் உயிர் அவசியம்.

இவர்களுக்குள் நடக்கும் போராட்டத்தை அன்றாட வாழ்வின் உபகரணங்களைக் கொண்டு அவர்கள் வெட்டிக் கொண்டு சாவதை கத்திக் குத்துக்களோடும், சுவாரசியமான சண்டைக்காட்சிகளுடனும் ஸ்லீப்லெஸ் நைட் காண்பிக்கிறது.
Sleepless_Night_French_Movies_Films_Thoongavanam_nuit-blanche-2
குழப்பமான சினிமா என்பது கவர்ச்சிகரமான மிக்சர் போல் மாதுளை காக்டெயில் போல் மயக்குறச் செய்யும். கோயன் சகோதரர்களின் ‘பர்ன் ஆஃப்டர் ரீடிங்’ கூட இதே வகையிலான ‘குழப்ப சினிமா’க்கள்தான். ஆனால், கோயன் சகோதரர்கள் மெதுவாக ஆற அமரச் செல்வார்கள். அவர்களுக்கு அவசரம் கிடையாது.

ஆனால், ஸ்லீப்லெஸ் நைட் போன்ற படங்கள் வேறு வகையான குழப்பங்களில் திளைப்பவை. எது நிஜம்… எது பொய்… எது சாத்தியம்… எது நடக்கவியலாது… யார் எங்கே இருக்கிறார்கள்… எவர் எங்கே வருவார்கள்… என்ன நடக்கும்… எப்பொழுது ஒழுங்கு பிறக்கும்? எல்லோரும் எல்லாவிடங்களிலும் பார்த்தாலும் யாருக்கும் எவரும் தெரிவதில்லை. இந்த உலகம் என்பது சந்து பொந்துகள் நிறைந்த ஹோட்டல் போல் அறைகளும் பாதைகளும் நிறைந்த கேளிக்கை மண்டபம். அங்கே ஒரு வாயிலில் நுழைந்தால் பார்; மற்றொரு வாயிலில் வெளியேறினால் சமையலறை. அவையிரண்டிற்கும் நடுவே ஓராயிரக்கணக்கானோர் கூத்தாடுகிறோம். சத்தத்தில் சுற்றிவர என்ன நடக்கிறது என்றறியாமல் திளைக்கிறோம். புறத்தோற்றத்தில் ஆடையின் நிறத்தில் மயங்குகிறோம். கேட்பதற்கு ஜென் தத்துவம் போல் ஜேகே சொற்பொழிவு போல் குழப்பம் ஏற்படலாம். படம் பார்த்தால் தெளிவு பிறக்கும்.

Sleepless_Night_Thoonga_Vanam_Kamal_nuit_blanche

செல்பேசிக்காக பாடலா? கருவிக்காக திரைப்படமா?

பெருந்தலைகளை விளம்பரத்திற்கு பயன்படுத்துவது தொன்றுதொட்ட வழக்கம்.

இந்தியாவில் லக்ஸ் சோப் விளம்பரங்களுக்கும், விலையுயர்ந்த ஆடை வகைகளுக்கும் வந்து கொண்டிருந்தார்கள். இப்பொழுது வலி நிவாரணி முதல் வீடு விற்பனை வரை செலபிரிட்டி மயம். நைக்கி, ரீபாக் என்றாலே விளையாட்டு நட்சத்திரங்கள் நினைவிற்கு வருவார்கள். ‘யெஹி ஹை ரைட் சாய்ஸ் பேபி’ போன்ற இனிப்பு பானங்களுக்கு புகழ்பெற்றவர்கள் தேவை. ஆனால், செல்பேசி வாங்கும்போது “இன்னார் சொன்னார்… நல்லா இருக்கும்” என்று நினைத்து வாங்குவதில்லை.

கணினியின் தரம் என்ன? ஆண்டிராய்ட் இருக்கிறதா? நமக்கு தோதுப்படுமா? சி.பி.யூ எப்படி? புத்தம்புதியதாக என்ன தருகிறார்கள்? இப்படி எல்லாம் ஆராய்ந்து பார்த்தது ‘ஒலியும் ஒளியும்’ காலம். இன்றைய எம்.டி.வி. நிஜ நாடகங்களைக் கொண்டு இளைய தலைமுறையினரைக் கவர்வது போல், சாம்சங் நிறுவனம் பாடகரைக் கொண்டு புதிய செல்பேசியை விற்கிறது.

ஜே-சீ வெளியிடும் அடுத்த ஆல்பம் சாம்சங் கேலக்ஸி எஸ்4 வாடிக்கையாளர்களுக்கு முன்கூட்டியே கிடைக்கும். அவர்களின் செல்பேசி மூலமாக மட்டுமே கிடைக்கும். இளையராஜா ரசிகராக இருப்பது போல் ஜே-ஸீ வெறியர்களுக்கு சாம்சங் தூண்டில் போட்டு இருக்கிறது.

விண்டோஸ்8 வாங்கினால் டெம்பிள் ரன் கிடைக்காது. ஐஃபோன் வாங்கினால் வரைபடம் சரியாக வராது. கூகிள் ஆண்டிராய்ட் செல்பேசிகளில் ஆப்பிள் ஐபாடில் இருப்பது போல் கலை நுணுக்கமும் ஆக்க மிளிர்வும் கொண்ட ’ஆப்ஸ்’ இருக்காது. இதையெல்லாம் மறைக்க, நம் குரல்மொழியை கண்டுபிடிக்க இயலாத செயலியின் செயலற்ற ஆற்றலை அமுக்க ஜெஸிகா ஆல்பா, சாமுவேல் ஜாக்ஸன் வகையறாக்கள் தேவைப்படுகிறது.

இசை என்றால் ஆப்பிள் ஐ-ட்யூன்ஸ் என்னும் மனப்பதிவை உடைக்கவும் இந்த ஜே-ஸீ உடன்படிக்கை உதவுகிறது. வெறுமனே வந்து மைக்ரோசாஃப்ட் உபயோகியுங்கள் என்று சொல்வதற்கு பதில் எக்ஸ் பாக்ஸ் வைத்திருந்தால் மட்டுமே நம்முடைய அபிமான சீரியலைப் பார்க்க முடியும் என்பதன் அடுத்த கட்டம் ஆரம்பித்துவிட்டது.