Tag Archives: எஸ்.ரா

StoryJudge: TamilOsai on Air with Siva Durai: இந்த வார இலக்கியம்

லிட்ஃபெஸ்ட் செல்லும் முன் நடந்தது:
இந்தியாவின் பிரபலமான இலக்கிய முகவர்: “இந்த மாதிரியான கதை இந்தியாவில் வேலை செய்யாது.”
ஆனால் என் முகவர்: “உங்களிடம் திறன் இருக்கிறது. இதை நான் வெற்றி பெறச் செய்கிறேன்.”
என்ன நடந்தது… அது இறுதியில்

நான்கு வாரமாக “சென்ற வார இலக்கியம்” குறித்த அறிமுகப் பதிவு இடவில்லை.

டாக்-ஜட்ஜ் தினேஷ் என்றால் பாஸ்டன் வந்து வட்டியும் முதலுமாக வசூலித்திருப்பார்.
ஸ்டோரி-ஜட்ஜ் சிவா சாந்த சொரூபி.

அதனால் தான் இந்த வாரம் பெருமாள், தேசாந்திரி, ஆசான் என எல்லோருக்கும் 33.33%.

அவர் உன்னதம்.
நான் என்றும் ஞானபீடம்.

அவர் இலக்கிய கோளாறு.
நான் அசல் கோலார்.

அதிருக்கட்டும்.

5 இல் பேசியது:

1. நல்லக்கண்ணு x சோ.தர்மன்: த.மு.க.எ.ச x இயக்கம் சாரா எழுத்து - இலக்கியத்திற்குள் இருக்கும் இடது/மார்க்சிஸ்ட் அரசியல்
2. அகழ் & வல்லினம் இதழ்
3. வண்ணநிலவன், போகன் சங்கர், சுரேஷ் வெங்கடாத்ரி இன்ன பிறர் விவாதத்தில்: ஜெயகாந்தன் வெகுசனமும் x தி. ஜானகிராமனின் காமத்துப்பாலும்

6 இல் பேசியது:

1. வரலாற்றாய்வாளர் மயிலை சீனி. வேங்கடசாமி எழுதிய களப்பிரர் ஆட்சியில் தமிழகம் நூலை : களப்பிரர் காலத்து இலங்கை - பாலா கருப்பசாமி
2. வாசகசாலை : ஆலிவ் விதைகளைச் சுமந்த அகதி – ஷாராஜ் குறுநாவல்
3. ஞானபீடம் : ஜெயமோகன் ஏன் பொங்கினார்? - வைரமுத்து, கங்கை அமரன், பஞ்சு அருணாச்சலம் என நீளும் பாடல் நோபல்

7 இல் பேசியது:

1. எஸ். ராமகிருஷ்ணன் - அமைதிப் புயல்: அட்சரம் முதல் அகிலம்!
2. ஆனந்த சந்திரிகை & இயல் | சிறார் மின்னிதழ்
3. 2026 - எழுத்தாளர் பி.ச. குப்புசாமி இலக்கிய விருது - க. மோகனரங்கன்.

8 இல் பேசியது:

1. விபரீத ராஜயோகமும் அகத்திக்கீரை தண்ணிச்சாறும் - சாரு நிவேதிதா கதை
2. விமலாதித்த மாமல்லனின் சிபிஐ கதைகள் தொகுப்பு - நியாயங்களின் திரிசங்கு: காளிப்பிரசாத்
3. இலக்கியம் பற்றிய தவறான புரிதல்கள் : சுரேஷ் ப்ரதீப்

மேலும்:
வல்லினம்
அ) டோன் கனவில் கண்ட இல்லறம் by ஷஃபிக் கசாலி : தமிழில்: சல்மா தினேசுவரி
‘Bahagia di Dalam Balang Kaca’ சிறுகதை தொகுப்பில் வெளியிடப்பட்டது. (மலேசிய புத்தக மற்றும் மொழிபெயர்ப்பு நிறுவனம், 2016); ‘Cerpen Syafiq Ghazali’ (Buku Fixi, 2024) இல் மறுபதிப்பு செய்யப்பட்டு வெளியிடப்பட்டது.

ஆ) பனிக்குடில் by ரோஸ்லான் ஜொமெல் : தமிழில்: பிருத்விராஜூ
‘செரங்கா டீ டாலாம் கெப்பாலா’ (Serangga di Dalam Kepala) எனும் சிறுகதை தொகுப்பில் இடம்பெற்றது.

இ) அப்பா தற்கொலை செய்து இறந்தார் by நூர் அடிலா : தமிழில்: ஆசிர் லாவண்யா
ஸ்வரா இதழ் 5இல் (ஜனவரி-மார்ச் 2021) இல் வெளியிடப்பட்டது. தும்பொ மென்ஜாடி போஹோன் சகுரா (Tumbuh Menjadi Pohon Sakura) (கவா புத்தகம், 2024) என்ற சிறுகதைத் தொகுப்பில் சேர்க்கப்பட்டது.

ஈ) பெண்களின் நாட்டியம் by ஃபஸ்லீனா ஹிஷாமுடின் : தமிழில்: கி. இளம்பூரணன்
‘வனித்தா’ இதழில் (செப்.2017) வெளியிடப்பட்டது. ‘தாரி பசார் பெரெம்புவான்’ சிறுகதை தொகுப்பில் (Roman Buku, 2018) இடம்பெற்றது

உ) மூன்று பெண்களின் உரையாடல் by ரெஜினா இப்ராஹிம் : தமிழில்: விஜயலட்சுமி
சிறுகதைத் தொகுப்பில் (புக்கு ஃபிக்ஸி, 2015) வெளியிடப்பட்டது. இந்தச் சிறுகதை, புக்கு ஃபிக்ஸி மற்றும் புத்ரஜெயா சர்வதேச புத்தகக் கண்காட்சியின் ஏற்பாட்டில், 2015ஆம் ஆண்டின் சிறந்த இருபது சிறுகதைகளுள் (புக்கு ஃபிக்ஸி, 2016) ஒன்றாகத் தேர்ந்தெடுக்கப்பட்டது.

ஊ) சிறுகதை → பேங்கோ → by சுனில் கிருஷ்ணன்
எ) சிறுகதை → சுழலும் ஆழி → by கமலதேவி
ஏ) சிறுகதை → நச்சுப்புன்னகை → by கெளதம் நாராயணன்
ஐ) சிறுகதை → பெருமுலை → by பிரபு முருகானந்தம்
ஒ) கட்டுரை → மொழியும் சொல்லும் → by அ.பாண்டியன்
ஓ) மலாய் சிறுகதைகளை தமிழுக்கு மொழிபெயர்க்கும் பணி
ஔ) கட்டுரை → கலை பண்பாடு ஆவணமாக்கல் → by ரம்யா
ஃ) புத்தகப்பார்வை → நாடு விட்டு நாடு: தனிமனிதக் கதையில் சமூக ஆவணம் → by இன்பா
க) பதிவு → முன்னோடிகளின் வரிசையில் → by அரவின் குமார்

வாசகசாலை

  1. எழுத்தாளர் சுபியின் யாறு, பன்னிரண்டு சிறுகதைகளைக் கொண்ட யாறு – சிறுகதைத் தொகுப்பை முன்வைத்து : —> ஆழ்மனத் திசைகள் – ராஜேஷ் வைரபாண்டியன்
  2. செங்காட்டுப் பூ :: சிறுகதைத் தொகுப்பு ::முகிலன் பாரதி ::தமிழ் வெளி வெளியீடு —> தடமற்ற வாழ்வில் தடயமற்ற வாக்குறுதிகளின் நகரதலில்… – இளையவன் சிவா
  3. கவிஞர் நரனின் கவிதைத் தொகுப்பின் தலைப்பு ‘மிளகு-பருத்தி- மற்றும் யானைகள்’. சால்ட் பதிப்பகம் வெளியிட்டுள்ளார்கள். 2020ஆம் ஆண்டில் வெளிவந்த புத்தகம். :: -தயாஜி, மலேசியா
  4. பழைய கணக்கு (வாத்தியார்)…..! – கே.ரவிஷங்கர் சிறுகதை
  5. முத்தத்தின் வாசனை! – ராம் சங்கர் சிறுகதை
  6. வேரல் புக்ஸ் வெளியிட்டுள்ள எழுத்தாளர், கவிஞர் கண்ணன் விஸ்வகாந்தி அவர்களின் தாழ்வரை நாவல் பற்றிய கண்ணோட்டம் – கமலா முரளி
  7. குணுக்கம் – சுதர்சன் சிறுகதை
  8. எடுபிடி – கனகா பாலன் சிறுகதை
  9. அந்த இரண்டாயிரம் ரூபாய் சிறுகதை —> ந. அருண் பிரகாஷ் ராஜ்

அகழ்
அ) நேர்காணல் · மம்மர் அறுக்கும் மருந்து (1) – “நமது பல்கலைக்கழகங்கள் வெறும் வகுப்பறைகளாகச் சுருங்கிவிட்டன!” : பெருமாள்முருகன் – விஜயகுமார்
ஆ) ஈழ இலக்கியம்·சிறுகதைகள் · கட்டுச் சோறு : சு. தவச்செல்வன்
இ) நகுலனின் “நினைவுப் பாதை” நாவல் குறித்த “அஹம் மந்திராஸ்மி” கட்டுரை : விஷால் ராஜா

கனலி

  1. நீலவியாபகம் By சு. வெங்கட்
  2. சுருட்டை By கிரிசாந்
  3. நூல் விமர்சனம் : ராஜம் கிருஷ்ணன் கட்டியெழுப்பியமணலூர் மணியம்மையின் வரலாற்றுச் சித்திரம் By சுப்பிரமணி இரமேஷ்

எஸ்.ரா

https://www.sramakrishnan.com/category/cat-60/

அ) தங்கள் பொறுப்பு
ஆ) நிழலானை
இ) நீரறியா அன்னங்கள்
ஈ) காற்றில் மிதக்கிறோம்
உ) கிளி சொல்லாதது
ஊ) தொடுவிரல்
எ) மன்னிப்பு : EMI வசதி உண்டு
ஏ) ஐந்தாவது எம்.ஏ.
ஐ) பறக்கத் தெரிந்த யானை

நிற்க…
துவக்கத்தில் சொன்ன சம்பவம்?

இரு வழிகள்:

  1. என்ன நடந்தது என்றால்…
    கதை இந்தியாவில் வேலை செய்யவில்லை.
    ஆனால் கொரியாவில் நூறாயிரம் பிரதிகள் விற்றது.
    “இந்திய ஆன்மா, யுனிவர்சல் வலி” என்று அவர்கள் சொன்னார்கள்.
  2. கதை published ஆனது.
    Reviews வந்தது — “derivative, over-written, tries too hard.”
    வெளிநாட்டிற்காக இன்னொரு பிரத்தியேக பார்சல் தயார்.