வித்யாசாகரின் இசையில் ‘அன்பு‘ திரைப்படத்தில் வரும் பாடல்
பாடகர்கள்: ஹரிஹரன் & சாதனா சர்கம்
தவமின்றி கிடைத்த வரமே…
இனி வாழ்வில் எல்லாம் சுகமே…
நீ சூரியன்…
நான் வெண்ணிலா உன் ஒளியால் தானே வாழ்கிறேன்
நீ சூரியன்
நான் தாமரை நீ வந்தால் தானே மலர்கிறேன்
நீ சூரியன்
நான் வான்முகில் நீ நடந்திடும் பாதை ஆகிறேன்
நீ சூரியன்
நான் ஆழ்கடல் என் மடியில் உன்னை ஏந்தினேன்!










