Category Archives: Uncategorized

Four Stuff

நான் அஞ்ஞாதவாசம் இருந்தப்ப துபாய்வாசி அழைத்தார். இப்ப கேவியாரும் கூவுகிறார்.

தலை பத்து கணக்கா, தலை நாலு சொல்லச் சொல்றாங்க…

நான்கு வசிப்பிடம்:
முதன் முதலாக இந்தக் கேள்விக்கு அமெரிக்கன் விசாவை நிரப்பும்போதுதான் யோசித்தேன். இவ்வளவு நாடோடியா இருக்கிறேனே என்று சந்தோஷமாக இருந்தது.

1. +2 முடிகிற வரைக்கும் வீடு/பள்ளிக்கூடம் இருந்த சென்னை மைலாப்பூர். +1 சேர்ந்த பிறகுதான் மைலாப்பூரைத் தவிர சென்னையில் வேறு சில இடங்களும் இருக்கிறது என்று அறியப்பெற்றேன். அப்போதைய திமுக மந்திரிகள் சாதிக் பாட்சா மற்றும் பொன். முத்துராமலிங்கத்தின் மகன்கள் பள்ளியில் சேர்ந்ததும் இரு வருடங்களை கொஞ்சம் வேகமாக நகர்த்தியது.

2. டெல்லி: கொஞ்ச காலம்தான் இருக்கப் போகிறோம் என்று தெரிந்தே ரசித்த ஊர். சென்னைக்கு மாற்றாக உயர்தர சாலைகள், பொழுதுபோக்கு அம்சங்கள், இயல்பாக நட்பு பாராட்டும் எதிர்பாலார் கொண்டவை. சென்னையைப் போலவே மோசமான பேருந்து வசதி. சென்னையில் இருக்கும் பத்து மணி நைட் ஷோ சுதந்திரம், இளைப்பாற கடற்கரை, பயமற்ற நகர்வலம் போன்றவை மிஸ்ஸிங்.

3. பெங்களூர்: துள்ளலான நகரம். டெல்லியின் நுகர்வோர் முகத்தையும் சென்னையின் தளர்ச்சியான போக்கையும் தன்னுடைய ஸ்டைலில் கலந்துகட்டி best of both worlds கொண்டது.

4. பாஸ்டன்: ரொம்ப காலம் வசித்ததால் கொஞ்சம் போரடித்து நிறையப் பழகிப் போயிருக்கிறது.

நான்கு அரசியல்வாதி:
1. விஜயகாந்த்: இறந்து போனவர்களை நான் நினைவு கூர்வதை விட இருந்து சாதிப்பேன் என்று நம்பிக்கையாகப் பேசும் இவரை நம்புகிறேன். வரப் போகும் கூட்டணி ஆட்சிகளுக்கு ஏற்றவர். பெண்களை வேட்பாளராக்குவதில் முக்கியத்துவம்; வித்தியாசமாக செய்யவேண்டும் என்னும் துடிப்பு; நடித்து சம்பாதித்ததை அரசியலில் விட்ட முன்னோடிகள் இருந்தும், தைரியமாக களத்தில் குதிப்பு; ரஜினி மாதிரி பொதுமகனாக இல்லாமல் தலைமகனாக வேண்டும்.

2. ஸ்டாலின்: திட்டம் தீட்டுறேன்; அடிப்படை வசதியைப் பெருக்குகிறேன் என்று ஜல்லியடிக்காமல், திறம்பட சென்னை மேயராக செயல்பட்டவர். கலைஞருக்கு மகனாக இருப்பதினாலேயே கிடைக்கும் எதிர்மறை விமர்சனங்களை நேர்த்தியாக எதிர் கொள்பவர்.

3. தயாநிதி மாறன்: வாரிசு என்பதால்தான் இந்த இடத்தில் இருக்கிறேன் என்பதைத் தயங்காமல் ஒத்துக் கொண்டு, அதை மீறி, தன்னுடைய தொலைநோக்கு திட்டங்களினாலும் ஆர்வத்தினாலும் வீரியமாய் முக்கியமான மந்திரியாக விளங்குகிறார். சன் டிவி பேட்டியில் இயல்பான பேச்சு; அரசியல்தனமற்ற உரையாடல்; போலிகளற்ற வெளிப்பாடுகள் மூலம் பெரிதும் கவர்ந்தார்.

4. சோ: மார்க்ஸிஸம், பெரியாரியம், காந்தீயம் என்பது போல் இணையத்தில் சோத்தனம் என்று சொல்லுமளவு தனக்கென நடை, எவரையும் உரசிப் பார்க்கும், உறுத்தும் விமர்சனங்கள் வைப்பவர். நக்கீரன், நெற்றிக்கண் என்று புதிய தலைமுறை பத்திரிகைகள் வந்தாலும் துக்ளக்கை இன்னும் தாக்குப்பிடிக்க வைப்பது. Provocative & incisive.

நான்கு படம்:
1. ஜோ ஜீதா வஹி சிக்கந்தர்: பதின்மப் பருவத்தில் பார்த்த காதல் படம். ‘வள்ளி’ பாணியில் சொல்வதானால் ‘உன்னை யாரைக் காதலிக்கிறாங்களோ, அவளைக் காதலி!’ இதன் உல்டாவாக வந்த ‘பத்ரி’ ரசிக்கவில்லை. இந்தப் படத்துக்காகவே இன்றளவும் ஆயிஷா ஜூல்காவின் விசிறி.

2. பொய்க்கால் குதிரை: பாலச்சந்தரின் நிறையப் படங்கள் அழுது வடிய கிரேசியாய் சிரிக்க வைத்த படம். அதன்பிறகு இதே பாணியில் வந்த ‘அரிச்சந்திரா’வும் நல்ல உல்டா.

3. இன்று போய் நாளை வா: ‘இதயம் பேசுகிறது’வில் பாக்கியராஜ் தன்னுடைய கதையை எழுதும்போது இதில் நடந்த பல சம்பவங்களை சொல்லியிருப்பார். படத்தைப் பாராட்டினால் ‘ஈவ் டீஸிங்’ என்று ப்ளாங்க் நாய்ஸ் ப்ராஜெக்டில் ப்ராக்கெட் போடப்படும் அபாயம் இருக்கிறது.

4. திருவிளையாடல்: தருமியின் கேள்வி பதில்; பாடல் போட்டிக்கு பயம்; சிதறலான சம்பவங்களைக் கோர்த்து படத்தின் பகுதிகளைப் பார்த்தாலும் சேனல் மாற்றாமல் தொடர வைக்கும். ஷார்ப் வசனங்கள். இன்று இந்த மாதிரி மூட நம்பிக்கைகளைப் பாராட்டாமல் ஆனால் தத்துவ விசாரத்தைக் கோரும் ஆன்மிகப் படங்கள் வராதது இன்னொரு காரணம்.

நான்கு உணவு:
1. கோபி/சிக்கன் மன்சூரியன்: அமெரிக்காவின் சீன உணவகங்களில் கிடைக்காத பதார்த்தம். சில தென்னிந்திய இடங்களில் மட்டுமே நாவில் நிற்கும் தனிச்சுவையுடன் கொறிக்க விடுகிறார்கள்.

2. ஸ்பினாஷ் க்ரொய்ஸாண்ட்: கிட்டத்தட்ட கீரை வடை போல் டேஸ்ட். ஆனால், நடுநடுவே வெண்ணெய் நீக்கமற நிறைந்திருக்கும். எண்ணெயில் பொரிக்காமால் bake செய்யப்படுவதால் ‘சத்து’ என்னும் பிம்பம் உண்டு.

3. மோர்க்குழம்பு: காரமும் உண்டு; தயிர்ச்சுவையும் உண்டு; பூசணிக்காய், வறுத்த வெண்டை, சுண்டக்காய் என்று விதவிதமான காய்கறிகள்.

4. ஹாஷ் ப்ரௌன்ஸ்: உருளை போண்டா மாதிரியான பதார்த்தம்தான். காலைப்பசியில் மெக்டோனால்ட்/பர்கர் கிங் சென்று வாங்கி விண்டு வயிற்றுக்கு செல்லும்போது ‘கொண்டா… கொண்டா…’ சொல்லும்.

நான்கு தொலைக்காட்சி நிகழ்ச்சி:
1. பாஸ்டன் லீகல்: நிறைய சட்டநுட்பங்களை சாமானியனும் அறியுமாறு எளிமையாகத் தரும்விதம். பார்வையாளனை புத்திசாலியாகக் கருதி காட்சிகளை நகர்த்தும் வேகம். இவற்றுடன் துளி காதல்; துளி பாசம்; துளி செண்டிமெண்ட்.

2. முதல் பயணம் (கே டிவி): அதிகம் பிரபலமில்லாதவர்களை அறிய முடிகிறது. திரைக்குப் பின் பணிபரியும் டப்பிங் கலைஞர்கள், ஒளி ஓவியர்கள், பாடகிகள், துண்டு கதாபாத்திரங்கள் எடுப்பவர்களைப் பேட்டி காண்கிறார்கள். கிட்டத்தட்ட ‘நூற்றுக்கு நூறு’ என்னும் நிகழ்ச்சியும் இதே காரணங்களுக்காக விருப்பமானது. (பேட்டி எடுக்கும்போது தேவதர்ஷினி இடையூறாக தடைப்படுத்துவதுதான் ஒரே படுத்தல்.)

3. நினைவுகள் (சன் டிவி): அம்மு. (நடுநடுவே ஏதோவொரு திரைப்படத்தையும் காட்டுவார்கள் என்று ஞாபகம்.)

4. வெஸ்ட் விங்: அமெரிக்க அரசியலை தடாலடியாகப் புரிய உதவுகிறது. ஜிவ்வென்று சீட் நுனிக்குத் தள்ளும் உலகப் போராட்டங்கள்; ஆள்பவர்களின் மனக் குமுறல்கள்; மேலிடத்து பதவி விளையாட்டுக்கள்.

நான்கு வலையகம்:
1. ஜஸ்ட் சமாச்சார்: நோ நான்சென்ஸ்; ஒன்லி நியூஸ்

2. இன்றைய சிறந்தக் கருத்துப்படங்கள்:மாரடைப்பு கொடுக்கவைக்கும் அன்றாட நிகழ்வுகளை நகைச்சுவையாகப் பகிடி செய்கிறார்கள்.

3. தேன்கூடு: வரிசைக்கிரமமாக படிக்கமுடிகிறது. எங்கு வரைக்கும் படித்தோம் என்பதை அறிந்து விட்ட பதிவில் இருந்து மேய முடிகிறது. அதிகம் பார்வையிட்ட பதிவுகளைத் தவறவிடாமல் காட்டுகிறது. பின் எப்பொழுதோ நிதானமாகப் போக வேண்டிய பதிவுகளை சேமிக்க முடிகிறது.

4. டெக்னோரட்டி: இணையத்தில் என்ன நடக்கிறது? என்ன பேசிக் கொள்கிறார்கள்?

அடுத்து அழைக்க விரும்பும் நால்வர்:
இதைப் படிக்கும் முதல் நான்கு பேரை அழைக்கிறேன். எனக்கொரு லிங்க் கொடுத்தால் தன்யனாவேன். முன்கூட்டிய நன்றி 🙂


| |

Pre/Post Election Thought

கல்கியில் வெளிவந்தது…
தினகரனில் இறக்குமதியானது…
இங்கும் ஏற்றுமதியாகிறது.

Kalki Joke in Dinakaran

Bits & Pieces – Tamil Magazines

1. சாகசமாயிரம் : விஞ்ஞானத் தொடர்சுஜாதா (கல்கி)

Saagasam Aayiram - Science Series by Sujatha in Kalki

2. டிகாசன் போடும் கலைபாக்கியம் ராமசாமி (தமிழ் சிஃபி)

3. அந்தக் கால அரசியல் நினைவுகளும் தேர்தல் களங்களும்: ஒன்று | இரண்டு (ஆனந்த விகடன்)

4. மிஸ்டர் மியாவ்: ஜூனியர் விகடன்

நீ வேணுண்டா செல்லம்‘ படத்தில் ‘கள்ளத்தோணி கள்ளத்தோணி… என்னை அக்கரைக்குக் கொண்டு போக வாடா…‘ என்ற பாடலை எழுதி இருக்கிறாராம் கவிஞர் யுகபாரதி. ஒரு தடவைக்கு நூறு தடவை யோசித்து யோசித்து எழுதிய பாடலாம் இது. அதுசரி… இன்றைய அரசியலை வைத்து யோசித்தால் இந்தப் பாடல் எங்கேயோ இடிக்கிற மாதிரி இருக்கே, மிஸ்டர் யுகபாரதி?

5. அம்ஷன்குமார் நேர்காணல் – நிழல் ப திருநாவுக்கரசு (அமுதசுரபி)

6. சோ தர்மனின் கூகைஅ ராமசாமி (காலச்சுவடு)


|

‘Ghaana’ Ulaganaathan

‘கல்யாணமாம் கல்யாணம்’ பாடல் பாடிய ‘கானா’ உலகநாதனுக்கு அறிமுகம்:

Ilamai-Puthumai Intro to Sithiram Pesuthadi Music :: an audio post - click to play


சன் டிவியின் ‘இளமை புதுமை‘ நிகழ்ச்சியில் கலந்து கொண்டவரின் திறமை வெளிப்பாடு:

Talent Display by a Musician in Sun TV's Ilamai Pudumai : audio post - click to play


கானா உலகநாதனின் மற்றுமொரு கலக்கல் கானா:

Gaana Ulakanadhan's Khana Song in TV : this is an audio post - click to play

கறுப்புதான் எனக்குப் பிடிச்ச கலரு‘ என்னும் பாடலுக்கு புகழ்சேர்த்த மாளவிகாவின் ஆடலுடன் இடம்பெறும் ‘சித்திரம் பேசுதடி‘ பாடல் வரிகளுக்கு: கல்யாணமாம் கல்யாணம்


| |

தேர்தல் செய்திகள்

INTUC – அதிமுக கூட்டணி செல்லாது

INTUC தமிழ்நாடு, அதிமுகவுடன் அமைத்துக்கொண்ட கூட்டணி செல்லாது என்று அவர்களது அகில இந்திய தலைமை கூறியுள்ளது. இரண்டு சீட்கள் ஒப்பந்தம் செய்த தமிழ்நாடு தலைவர்கள் இருவரும் பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர்.

பார்வர்ட் பிளாக் தனித்துப் போட்டியிடும்

நடிகர் கார்த்திக் தலைமையிலான ஆல் இந்தியா ஃபார்வர்ட் பிளாக்கின் தமிழகக் கிளை தனித்தே போட்டியிடுவதாக முடிவெடுத்துள்ளது. கார்த்திக் அதிமுகவுடன் கூட்டுசேர்வதை விரும்பினாலும் அம்மா விரும்பவில்லை போல…

விஜயகாந்த் நடிக்கும் படம் சுதேசி

விஜயகாந்த் நடித்து வெளியாகும் ‘சுதேசி’ படம் அவரது கட்சியின் (அவருடைய) கொள்கை விளக்கமாக இருக்கும் என்று சொல்கிறார்கள்.

பிற கட்சியின் தலைவர்களும் இப்படிப் படமாக எடுத்து வெளியிட்டால் மக்கள் நிலைமை என்னாகும்?

மற்றபடி தேர்தல் களத்தில் வேறு ஏதும் அதிரடியாக நடக்கவில்லை.

Women Vote Power <> Women Representation in Assembly

தினமணி நாளிதழில் இருந்து:

1. தேர்தலில் வெளிப்படுமா மகளிர் சக்திவீர.ஜீவா பிரபாகரன்

தமிழகத்தில் தேர்தலுக்குத் தேர்தல் மகளிர் வாக்காளர்களின் எண்ணிக்கை அதிகரித்த போதிலும், சட்டப்பேரவையில் மகளிர் எண்ணிக்கை இதுவரை 14 சதவீதத்தைத் தாண்டவில்லை.

நமது நாட்டில் நாடாளுமன்றத்தில் மகளிர் பங்கேற்பு பத்து சதவீதத்துக்கும் குறைவாகவே இருந்து வருகிறது.

தமிழகத்தில் 1991-ம் ஆண்டு தேர்தலில் மட்டுமே, சட்டப்பேரவை உறுப்பினர்களின் எண்ணிக்கை 31 ஆக உயர்ந்தது. அதிலும் பிற்பட்ட, ஆதிதிராவிட வகுப்புப் பெண்களின் அரசியல் பங்கேற்பு மிக, மிகக் குறைவாக உள்ளது.

பெண் உறுப்பினர்களையே தேர்வு செய்யாத மாவட்டங்கள்: நீலகிரி, பெரம்பலூர், நாகப்பட்டினம், ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்கள் கடந்த 5 சட்டப்பேரவைத் தேர்தல்களில் ஒரு பெண் உறுப்பினரைக் கூட தேர்வு செய்யவில்லை.

சட்டமன்ற, நாடாளுமன்றத் தேர்தல்களில் போட்டியிடும் அரசியல் கட்சிகள் போதிய பெண் உறுப்பினர்களை வேட்பாளர்களாக அறிவிக்காததும் மிக முக்கியமான காரணம்.

இம்முறை நடிகர் விஜயகாந்தின் தேசிய முற்போக்கு திராவிட கழகம் மட்டுமே தேர்தலில் மகளிருக்கு 33 சத இட ஒதுக்கீடு அளிப்போம் என அறிவித்துள்ளது. இதர அரசியல் கட்சிகள் அனைத்தும் இவ்விஷயத்தில் மௌனமாக உள்ளன.

2. இதுவரை….10% கூட பெண்களுக்கு வாய்ப்பில்லை

தேர்தகளில் மொத்த வேட்பாளர்களில் பெண்கள் 10 சதவீதத்துக்கும் குறைவாக இருந்துள்ளனர். மொத்த உள்ள 234 இடங்களில் ஒரே ஒரு தேர்தலில்தான் 10 சதவீதம் பெண்கள் வெற்றி பெற்றுள்ளனர்.

கடந்த 1996-ம் ஆண்டில் மொத்தம் போட்டியிட்ட 5 ஆயிரத்து 17 வேட்பாளர்களில் 156 பேர் மட்டுமே பெண்கள். பெண்களுக்கு 10 சதவீதம் வாய்ப்புக் கொடுத்திருந்தால் கூட 500 பெண் வேட்பாளர்கள் இருந்திருக்க வேண்டும்.

Election Posters – Dinamani

சுவரொட்டி #1: வைகோ மண்ணின் குரல் (கலிங்கத்துப்பட்டியில் இருந்து)

சுவரொட்டி #2: சின்ன கலைஞர் (சைதாப்பேட்டையில் இருந்து)

TN Assembly Alliance History

இன்றைய தினமலரில் இருந்து…

Dinamalar E-Paper March 13, 2006

21 Grams

Tamiloviam:

திரைப்படத்தில் இருந்து சில வசனங்கள்:

  • உண்மையைத் தேடி கண்டுபிடிப்பவன், அதற்கான தண்டனையைப் பெறத்தக்கவன் தான்! (Whoever looks for the truth deserves punishment for finding it.)
  • உன்னையும் என்னையும் இணைக்க உலகம் உருண்டது :: Eugenio Montejo

    உன்னையும் என்னையும் இணைக்க உலகம் உருண்டது
    தனக்குள்ளும் நமக்குள்ளும் சுழல்வது
    மன்றத்தில் செதுக்கியுள்ளது போல்
    கனவாக இறுதியில் நம்முடன் இணைகிறது

    The Earth Turned to Bring Us Closer ::
    Peter Boyle (Trans.)

    The earth turned to bring us closer,
    it spun on itself and within us,
    and finally joined us together in this dream
    as written in the Symposium.
    Nights passed by, snowfalls and solstices;
    time passed in minutes and millennia.
    An ox cart that was on its way to Nineveh
    arrived in Nebraska.
    A rooster was singing some distance from the world,
    in one of the thousand pre–lives of our fathers.
    The earth was spinning with its music
    carrying us on board;
    it didn’t stop turning a single moment
    as if so much love, so much that’s miraculous
    was only an adagio written long ago
    in the Symposium’s score.


    அமோரஸ் பெரோஸை (Amores Perros) இயக்கிய அலெக்ஸாண்ட்ரோ கொன்ஸாலஸின் (Alejandro Gonzநூlez Iண்நூrritu) படம் என்பதால் முறுக்குப்பிழி நடைக்கும் சிதறலானத் திரைக்கதைக்கும் தயாராகவேப் பார்க்க ஆரம்பிக்கிறேன். ‘மெமண்டோ’ கொடுத்த கிறிஸ்டோபர் நோலனையும், க்வெண்டின் டாரண்டினோவையும் நினைத்துக் கொள்கிறேன்.

    முந்தையப் படத்தைப் போலவே திரைப்படத்தில் விபத்து உண்டு. விபத்தினால் மூன்று பேர்களின் வாழ்வு பாதிக்கிறது. மூவருக்கும் விதவிதமான வண்ணக்கலவைகள் குறியீடு கண்ணை உறுத்தாமல் கிடைக்கிறது. ஒற்றுமைகள் அவ்வளவே.

    சாலை விபத்து ஒன்றில் கணவனையும் இரு மகள்களையும் இழக்கிறாள். சாகும் தருவாயில் மாற்று இதயத்துக்காக நாட்களை எண்ணிக் கொண்டிருப்பவன் இரண்டாவது கதாபாத்திரம். விபத்தை செய்து குற்றவுணர்ச்சியில் துடிப்பவர் மூன்றாமவர்.

    மூன்று பேரின் குணாதிசயங்களையும் அவர்களின் உறவுகளையும் நட்புகளையும் அன்றாட சிக்கல்களையும் நேர்க்கோட்டில் சொல்லாவிட்டாலும், கோர்வையாக நிரப்பிக் கொண்டு வருகிறார்கள். எடிட்டிங், ஒளிப்பதிவு, திரைக்கதை மூன்றுமே, நம்மை இயல்பாக படத்தில் உள்ளிழுத்து ஆட்கொள்ள, இயக்குநருக்கு வாகாக அமைந்திருக்கிறது.

    எல்லாமே விதிப்படிதான் நடக்கும் என்னும் முகாரியான ஆரம்பம்.

    உயிருக்கு ஊசலாடும் சான் பென் (Sean Penn). திருந்தி நேர்வழியில் செல்ல நினைக்கும் முன்னாள் சிறைவாசி பெனிசியோ டெல் டோரோ (Benicio Del Toro). குடும்பமே விபத்தில் இழந்தபிறகு, கணவனின் கடைசி நிமிடங்களில் இதயத்தை தானமாக அளிக்கும் நவோமி வாட்ஸ் (Naomi Watts).

    சஸ்பென்ஸ் த்ரில்லரை பார்ப்பது போல் படம் முன்னேறுகிறது. யார் இறந்தார்கள்? எவரைக் கொலை செய்ய சான் பென் திட்டமிடுகிறான்? தனிமையில் வாடி, போதை உட்கொள்ளும் நவோமி எப்படி மகிழ்ச்சியாக இருந்தாள்?

    துப்பறியும் கதையில், உளவியல் ஆராய்ச்சி நடத்தும், முடிச்சுகளை உங்களுக்குள்ளேயே அவிழ்க்க சொல்லும் திரைக்கதை.

    கதாநாயகர்கள் மூவருமே பழக்கத்திற்கு அடிமையானவர்கள். சிகரெட் பிடித்தால் கொஞ்சநஞ்ச இதயத்துடிப்பும் நின்றுவிடும் என்னும்போதும் நிறுத்த முடியாதவன் சான் பென். போதை மருந்தை விட்டு விலகி வந்திருந்தாலும், குழந்தைகளின் பிரிவுத்துயரினால், மீண்டும் பழைய சிநேகங்களை அழைத்து, போதைக்குள்ளாகும் நவோமி வாட்ஸ். குடியை விட்டு கடவுளைக் கண்டெடுத்து, மீண்டும் குடிக்க ஆரம்பிக்கும் பெனிசியோ டெல்டோரோ.

    தெய்வம் என்பதும், மழலைகளின் அன்பு என்பதும், வாழ்க்கை என்பதும் போதைதானோ என்று மனதிடம் கேட்டுப் பார்க்கிறேன்.

    கதாபாத்திரங்கள் அனைத்துமே நம்பக்கூடியதாக உலாவுகிறார்கள். விபத்து நடத்திய கணவனிடம் ‘ஒப்புக் கொள்ளாதே’ என்று கதறி, மீறி போலீஸிடம் சரணடைந்தவனை சாதுரியமான வக்கீல் கொண்டு மீட்டெடுக்கும் பெனிசியோ டெல் டோரோவின் மனைவி; முன்னாள் காதலன் சான் பென், உயிருக்குப் போராடுகிறான் என்பதை அறிந்ததும் அவனுக்கு சேவை செய்யத் திரும்பும் பிரிட்டிஷ் காதலி; மகளின் எல்லா உறவுகளும் விபத்தில் காணாமல் போன பின், விட்டேத்தியாக நடந்ததையே எண்ணிப் புழுங்காமல், வாழ்க்கையின் அடுத்த அடிகளை நோக்குமாறு சொல்லும் அப்பா; விபத்தை நிகழ்த்தியவனைக் கொல்லத் துடிக்கும் நவோமி வாட்ஸ்; இதயம் கொடுத்தவளைக் கண்டு கொள்ளத் துடிக்கும் சான் பென்…

    கழிவிறக்கமா, பச்சாதபமா, ஆதுரமா, இயலாமையா, விதி வசமா, சுய மீட்பா, கடமையா, இறை நம்பிக்கையா… பல தேடல்களை முன்னிறுத்துகிறார்.

    மரணிக்கும் ஒவ்வொருவரின் எடையும் 21 கிராம் குறைவதாக டங்கன் மெக்டூகல் (Dr. Duncan MacDougall) ஆராய்ச்சியின் முடிவில் கண்டுபிடித்திருக்கிறார். எத்தனை முறை நம்முடைய ஆன்மா இறக்கிறது என்பதை நீங்கள் மட்டுமே கணிக்க முடியும்.

    நமக்கு எத்தனை உயிர்கள் இருக்கிறது? எத்தனை முறை இறக்கிறோம்? நாம் இறக்கும் தருணத்தில் இருப்பத்தியொன்று கிராம்களை, நம் உடம்பு இழப்பதாக சொல்கிறார்கள். துல்லியமாக 21 கிராம்கள். அந்த 21 கிராம்களுக்குள் எதை அடைக்க முடியும்? அந்த எடை நம்மை விட்டு செல்வதால், எதனை இழக்கிறோம்? அதனால் என்ன கெட்டுப் போகிறது? எதை அடைகிறோம்?


    | |

  • Vote Percentage Calculations

    சின்னக்குத்தூசி பக்கம் :: 2006ல் யாருக்கு வெற்றி? – விகடன்.காம்

    2006 தேர்தல் நடைபெற பத்து மாதங்கள் இருக்கும்போது எழுதப்பட்ட கட்டுரை. இன்றைய நிலையில்:

    திமுக கூட்டணி: 51.6 – விஜயகாந்த் பாசக்கிளிகள்
    அதிமுக கூட்டணி: 35.6 + விடுதலை சிறுத்தைகள்

    1. 2004 மக்களவைத் தேர்தலில் அ.தி.மு.க.வும், பி.ஜே.பி.யும் சேர்ந்து வாங்கிய வாக்குகளின் மொத்த சதவீதம் 34.91 % ஆகும்

    2. இதில் அ.தி.மு.க. மட்டுமே வாங்கிய வாக்குகள் 29.8 %

    3. தி.மு.க. கூட்டணியில்

    தி.மு.க. 24.6 %,
    காங்கிரஸ் 14.4 %
    பா.ம.க. 6.7% ,

    ம.தி.மு.க. 5.8 %

    சி.பி.ஐ. 3 %
    சி.பி.எம். 2.9%

    பா.ம.க. தவிர்த்த தி.மு.க. கூட்டணியின் பலம் 50.7 சதவிகிதமாக இருக்கும்.

    தனித்தே போட்டியிடுவோம் என்று ஓங்கியடித்து சொல்லிக் கொண்டிருக்கிற பி.ஜே.பி. கடைசி நேரத்தில் அ.தி.மு.க. கூட்டணியில் சேர்ந்துவிட்டாலும்.

    அ.தி.மு.க. 29.8%
    பி.ஜே.பி. 5.1%

    ஆக மொத்தம் 41.6 சதவீதம்.

    விஜயகாந்த் தொடங்கும் புதிய கட்சியால் அ.தி.மு.க.வுக்கு லாபமா? தி.மு.க.வுக்கு லாபமா? யூகங்களும், கணிப்புகளும் அவரவர் ஆசைப்படி வந்து கொண்டேதானிருக்கும். அதனை யாரால் தடுக்க இயலும்?

    எனது யூகம்: மூன்றாவது அணி ஆட்சி. ஆறு மாதம் வைக்கோ; ஆறு மாதம் பா.ம.க. காங்கிரஸ் ஆதரவு. (தமிழக காங்கிரஸின் தலைவர் கிருஷ்ணசாமியின் மருமகன் அன்புமணி ராமதாஸ். மத்தியில் மாறன் மந்திரியாக தொடரும் வரை திமுக-வும் இந்த ஏற்பாடைக் கண்டு கொள்ளாது.) வெளியில் இருந்து திமுக ஆதரவு.

    பா.ம.க. – 25
    ம.தி.மு.க. – 25
    காங்கிரஸ் – 35
    வி.சி. + கம்யூ. + இதர கட்சிகள் – 30
    மைனாரிட்டி ஆட்சி – 115

    அதிமுக – 85~90
    திமுக – 30~35

    மூன்றாவது அணி மாதிரி… இது ஒரு கனவு.