வலைஞர் நாக.இளங்கோவன் தமிழகத் தேர்தலுக்கான முதல்கருத்துக் கணிப்பை வெளியிட்டுள்ளார்.
2006-தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முன்கணிப்பு-1: DMK-191, ADMK-43
வலைஞர் நாக.இளங்கோவன் தமிழகத் தேர்தலுக்கான முதல்கருத்துக் கணிப்பை வெளியிட்டுள்ளார்.
2006-தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முன்கணிப்பு-1: DMK-191, ADMK-43
Posted in Uncategorized
கூட்டணி பட்டியல் முழு விவரம்: அ.தி.மு.க. 182 தொகுதியில் போட்டி; ஜெயலலிதா அறிவிப்பு
அ.தி.மு.க. தலைமையிலான ஜனநாயக மக்கள் கூட்டணியில் ம.தி.மு.க., விடுதலை சிறுத்தைகள், முஸ்லிம் லீக், தேசிய லீக், பார்வர்டு பிளாக் கட்சிகள் இடம் பெற்றுள்ளன.
தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணிக்கட்சிகள் போட்டியிடும் 234 தொகுதிகள் பட்டியலை முதல்-அமைச்சர் ஜெயலலிதா இன்று காலை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டார்.
அ.தி.மு.க. 182 தொகுதிகளிலும், ம.தி.மு.க.- 35 தொகுதிகளிலும், விடுதலை சிறுத்தைகள்-9 தொகுதிகளிலும், தேசிய லீக், ஐ.என்.டி.ï.சி. தலா 2 தொகுதிகளிலும், ஸ்ரீதர் வாண்டையாரின் மூவேந்தர் முன்னேற்றக் கழகம், சந்தானத்தின் பார்வர்டு பிளாக், முஸ்லிம் லீக் கட்சியினர் தலா ஒரு தொகுதியிலும் போட்டியிடுகின்றனர்.
அ.தி.மு.க. போட்டியிடும் 182 தொகுதிகள் விவரம் வருமாறு:-
1. ராயபுரம் 2. டாக்டர் ராதாகிருஷ்ணன் நகர் 3. பூங்காநகர் 4. புரசைவாக்கம்5. தியாகராய நகர் 6. ஆயிரம்விளக்கு7. திருவல்லிக்கேணி 8. மயிலாப்பூர் 9. சைதாப்பேட்டை10. கும்மிடிப்பூண்டி 11. பொன்னேரி (தனி )12. திருவொற்றிïர் 13. ஆலந்தூர் 14. திருப்போரூர் (தனி) 15. செங்கல்பட்டு16. மதுராந்தகம் 17. அச்சரப்பாக்கம் (தனி) 18. உத்திரமேரூர் 19. காஞ்சிபுரம் 20. திருவள்ளூர் 21. திருத்தணி 22. பள்ளிப்பட்டு 23. அரக்கோணம் (தனி )24. சோளிங்கர் 25. ராணிப்பேட்டை
26. ஆற்காடு 27. காட்பாடி 28. குடியாத்தம் 29. பேரணாம்பட்டு (தனி) 30. நாட்ராம்பள்ளி 31. தண்டராம்பட்டு32. திருவண்ணாமலை33. கலசப்பாக்கம் 34. போளூர் 35. அணைக்கட்டு 36. ஆரணி 37. செய்யார் 38. வந்தவாசி (தனி) 39. பெரணமல்லூர் 40. மேல்மலையனூர் 41. திண்டிவனம் 42. வானூர் (தனி)43. கண்டமங்கலம் (தனி) 44. விழுப்புரம் 45. திருநாவலூர் 46. கடலூர் 47. பண்ருட்டி 48. புவனகிரி 49. சிதம்பரம் 50 விருத்தாசலம்
51. ரிஷிவந்தியம் 52. சின்னசேலம் 53. சங்கராபுரம் 54. ஓசூர் 55. தளி 56. காவேரிப்பட்டினம் 57. கிருஷ்ணகிரி 58. பர்கூர் 59. மொரப்பூர்60. பாலக்கோடு61. மேட்டூர்62. ஓமலூர்63. ஏற்காடு (தனி)64. சேலம்-165. சேலம்-266. வீரபாண்டி 67 பனமரத்துப்பட்டி 68. ஆத்தூர் 69. தலைவாசல் (தனி) 70. ராசிபுரம் 71. சேந்தமங்கலம் (தனி) 72. நாமக்கல் (தனி ) 73. திருச்செங்கோடு 74. சங்ககிரி (தனி) 75. எடப்பாடி
76. மேட்டுப்பாளையம் 77. அவினாசி (தனி) 78. கோயம்புத்தூர் மேற்கு 79. கோயம்புத்தூர் கிழக்கு 80. பேரூர் 81. கிணத்துக்கடவு 82. பொள்ளாச்சி 83. உடுமலைப்பேட்டை 84. தாராபுரம் (தனி) 85. பொங்கலூர் 86. பல்லடம் 87. காங்கேயம் 88. மொடக்குறிச்சி 89. பெருந்துறை 90. ஈரோடு 91. பவானி 92. அந்திïர் (தனி) 93. கோபிசெட்டிப் பாளையம் 94. பவானிசாகர் 95. குன்னூர் (தனி) 96. உதகமண்டலம் 97. கூடலூர் 98. பழனி (தனி) 99. ஒட்டன்சத்திரம் 100. பெரியகுளம்
101. தேனி 102. போடிநாயக்கனூர் 103. ஆண்டிப்பட்டி 104. சேடபட்டி 105. உசிலம்பட்டி 106. நிலக்கோட்டை (தனி) 107. சோழவந்தான் 108. திருப்பரங்குன்றம் 109. மதுரை மேற்கு110. சமயநல்லூர் (தனி)111. மேலூர்112. நத்தம்113. ஆத்தூர் 114. வேடசந்தூர் 115. கரூர் 116. கிருஷ்ணராயபுரம் (தனி) 117. மருங்காபுரி 118. குளித்தலை 119. உப்பிலியாபுரம் (எஸ்.டி.) 120. முசிறி 121. லால்குடி 122. பெரம்பலூர் (தனி) 123. வரகூர் (தனி) 124. அரியலூர் 125. ஆண்டிமடம்
126. ஜெயங்கொண்டம் 127. ஸ்ரீரங்கம் 128. திருச்சிராப்பள்ளி-2129. பூம்புகார் 130. குத்தாலம் 131. நன்னிலம் (தனி) 132. திருவாரூர் (தனி) 133. நாகப்பட்டினம் 134. வேதாரண்யம் 135. திருத்துறைப்பூண்டி (தனி) 136. மன்னார்குடி 137. பேராவூரணி 138. ஒரத்தநாடு 139. திருவோணம் 140. தஞ்சாவூர் 141. திருவையாறு 142. பாபநாசம் 143. வலங்கைமான் (தனி) 144. கும்பகோணம் 145. திருவிடைமருதூர் 146. திருமயம் 147. கொளத்தூர் (தனி) 148. புதுக்கோட்டை 149. ஆலங்குடி 150. அறந்தாங்கி
151. திருப்பத்தூர் 152. காரைக்குடி 153. திருவாடானை154. இளையான்குடி155. மானாமதுரை (தனி) 156. பரமக்குடி (தனி) 157. கடலாடி 158. முதுகுளத்தூர்159. அருப்புக்கோட்டை160. சாத்தூர்161. ஸ்ரீவில்லிபுத்தூர்162. ராஜபாளையம் (தனி) 163. விளாத்திகுளம்164. ஒட்டப்பிடாரம் (தனி)165. கோவில்பட்டி166. சங்கரநயினார் கோவில் (தனி) 167. கடையநல்லூர் 168. ஆலங்குளம் 169. திருநெல்வேலி 170. சேரன்மகாதேவி171. அம்பாசமுத்திரம்172. நாங்குநேரி 173. ராதாபுரம் 174. திருச்செந்தூர் 175. ஸ்ரீவைகுண்டம்
176. தூத்துக்குடி 177. கன்னியாகுமரி 178. குளச்சல் 179. பத்மநாபபுரம் 180. திருவட்டார் 181. விளவங்கோடு 182. கிள்ளிïர்.
ம.தி.மு.க. போட்டியிடும் தொகுதிகள் பட்டியல்
அதன் விபரம் வருமாறு:-
1. துறைமுகம் 2. பெரம்பூர் (தனி) 3. எழும்பூர் (தனி) 4. அண்ணாநகர் 5. தாம்பரம் 6. பூந்தமல்லி 7. திருப்பத்தூர் (வேலூர் மாவட்டம்) 8. வேலூர் 9. செஞ்சி 10. நெல்லிக்குப்பம் 11. குறிஞ்சிப்பாடி 12. தருமபுரி 13. தாரமங்கலம் 14. கபிலர்மலை 15. தொண்டாமுத்தூர் 16. வெள்ளக்கோவில் 17. திருப்பூர் 18. சத்தியமங்கலம் 19. கம்பம் 20. திருமங்கலம்21. மதுரை கிழக்கு 22. திண்டுக்கல் 23. அரவக்குறிச்சி 24. தொட்டியம்
25. திருச்சிராப்பள்ளி-1 26. மயிலாடுதறை 27. பட்டுக்கோட்டை 28. சிவகங்கை 29. ராமநாதபுரம் 30. விருதுநகர் 31. சிவகாசி 32. வாசுதேவநல்லூர் (தனி) 33. தென்காசி 34. சாத்தான்குளம் 35. நாகர்கோவில்
விடுதலை சிறுத்தைகள்
1. ஸ்ரீபெரும்புதூர் (தனி) 2. செங்கம் (தனி) 3. முகைïர் (பொது) 4. உளுந்தூர்பேட்டை (தனி) 5. காட்டு மன்னார்கோயில் (தனி) 6. மங்களூர் (தனி) 7. அரூர் (தனி) 8. வால்பாறை (தனி) 9. சீர்காழி (தனி
ஐ.என்.டி.ï.சி. (தமிழ்நாடு
1. வில்லிவாக்கம் 2. சிங்காநல்லூர்
இந்திய தேசிய லீக்
1. வாணியம்பாடி 2. பாளையங்கோட்டை
இந்திய ïனியன் முஸ்லிம் லீக் (தமிழ்நாடு)
1. சேப்பாக்கம்
மூவேந்தர் முன்னேற்ற கழகம்
1. திருவெறும்பூர்
அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சி
1. மதுரை மத்திய தொகுதி
மதச்சார்பற்ற ஜனதா தளம்
1. பெண்ணாகரம்.
Courtest: Maalaimalar
Posted in Uncategorized
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்
1. பெரம்பூர்
2. குடியாத்தம்
3. நாகப்பட்டினம்
4. திண்டுக்கல்
5. சிங்காநல்லூர்
6. திருப்பூர்
7. திருப்பரங்குன்றம்
8. வாசுதேவநல்லூர்
9. விளவங்கோடு
10. திருவட்டாறு
11. மதுரை கிழக்கு
12. அரூர்
13. சிதம்பரம்
இந்திய கம்யூனிஸ்ட்
1. திருத்துறைப்பூண்டி
2. மன்னார்குடி
3. நன்னிலம்
4. கோவில்பட்டி
5. சிவகங்கை
6. அவினாசி
7. ஆலங்குடி
8. தளி
9. பெருந்துறை
10. திருவில்லிபுத்தூர்
(மீதமுள்ள தொகுதிகளில், முஸ்லிம் லீக் 1. அரவக்குறிச்சி 2. பாளையங்கோட்டை 3. வாணியம்பாடி ஆகிய இடங்களில் திமுக சின்னத்தில் போட்டியிடும். மீதியிடங்கள் திமுகவுக்கு.)
Posted in Uncategorized
பாட்டாளி மக்கள் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ள இடங்கள்
1. செங்கல்பட்டு 2. காஞ்சிபுரம் 3. திருப்பத்தூர் (வேலூர்) 4. அணைக்கட்டு 5. கும்மிடிப்பூண்டி 6. திருத்தணி 7. மேல்மலையனூர் 8. வானூர் 9. தாரமங்கலம் 10. ஓமலூர் 11. பெரணமல்லூர் 12. கலசப்பாக்கம் 13. விருத்தாசலம் 14. பண்ருட்டி 15. பெண்ணாகரம் 16. கபிலர்மலை 17. பாலக்கோடு 18. பவானி 19. ஜெயங்கொண்டம் 20. பூம்புகார் 21. முகையூர் 22. ஆர்க்காடு 23. திருவிடைமருதூர் 24. புவனகிரி 25. திருப்போரூர் 26. எடப்பாடி 27. காவேரிப்பட்டினம் 28. வரகூர் 29. மேட்டூர் 30. திண்டிவனம் 31. சைதாப்பேட்டை
Posted in Uncategorized
வரும் சட்டசபை தேர்தலில் திமுக கூட்டணி வெற்றி பெற்றால் ஆட்சியில் பங்கு கேட்க மாட்டோம் என்று பாமக தனது தேர்தல் அறிக்கையில் கூறியுள்ளது. குறைந்தபட்ச செயல் திட்டம், மாநில அரசை கண்காணிக்க நிழல் அரசாங்கத்தை அமைப்போம் என்பது உட்பட 67 அம்சங்களை பாமக தனது தேர்தல் அறிக்கையில் வலியுறுத்தி யுள்ளது. திமுகவுக்கு பெரும்பான்மை கிடைக்காவிட்டால் ஆட்சி அமைப்பதற்கு பாமக நிபந்தனையற்ற ஆதரவு அளிக்கும் என்று டாக்டர் ராமதாஸ் கூறினார். தமது குடும்பத்தை சேர்ந்த யாரும் இந்த தேர்தலில் போட்டியிட மாட்டார்கள் என்றும் அவர் தெரிவித்தார்.
பாமகவின் தேர்தல் அறிக்கையை அதன் தலைவர் ராமதாஸ் இன்று வெளியிட்டார்.
2006ம் ஆண்டு சட்டசபை தேர்தலுக்கான தேர்தல் அறிக்கையை பாமக இன்று வெளியிட்டது. இதன் விழா சென்னை தியாகராயநகரில் உள்ள மீனாட்சி பவன் ஓட்டலில் நடைபெற்றது. தேர்தல் அறிக்கையை டாக்டர் ராமதாஸ் வெளியிட, முன்னாள் அமைச்சர் ஏ.கே.மூர்த்தி, புதுவை ராமதாஸ் எம்.பி., ஜி.கே.மணி, திருக்கச்சூர் ஆறுமுகம் எம்எல்ஏ ஆகியோர் தேர்தல் அறிக்கையை பெற்றுக் கொண்டார்கள். தேர்தல் அறிக்கையில் இடம் பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் குறித்து ராமதாஸ் கூறியதாவது:
இந்த தேர்தல் அறிக்கை 41 பக்கங்களை கொண்டுள்ளது. 67 தலைப்புகளில் தேர்தல் அறிக்கையை வெளியிடுவதில் மகிழ்ச்சி அடைகிறேன். மத்தியில் உள்ளது போல குறைந்தபட்ச செயல் திட்டத்தை இங்கும் செயல்படுத்த வேண்டும். தேர்தலுக்கு பிறகு தமிழகத்தில் அமையும் ஆட்சியில் கூட்டணி கட்சிகள் விரும்பினால் இந்த குறைந்தபட்ச செயல் திட்டத்தின் செயல்பாட்டை கண்காணிக்கவும், ஆலோசனைகள் கூறவும் குழு ஒன்றை அமைக்கலாம்.
ஏற்கனவே தெரிவித்தபடி திமுக ஆட்சியில் பங்கு பெறுவதில்லை என்ற முடிவில் உறுதியாக இருக் கிறோம். புதிதாக அமையும் ஆட்சிக்கு உறுதுணையாக இருப்போம். மேலை நாடுகளில் ஆட்சியில் இடம் பெறாத கட்சிகள் ஒன்று சேர்ந்து நிழல் அரசாங்கத்தை அமைத்து திட்டங்களையும், சட்டங்களையும் எடுத்துக் கூறுகிறார்கள்.
அது போல பாமக நிழல் அரசாங்கத்தை ஏற்படுத்தி திமுக அரசு முன்மாதிரி அரசாக விளங்க உதவிகரமாக இருப்போம். தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் கீழ் இந்த திட்டம் மக்களுக்கு உதவிகரமாக இருக்கும்.
கட்டாய கல்வி தற்போது 6 வயது முதல் 14 வயது என்று இருப்பதை 3 வயது முதல் என்று திருத்தி கட்டாய கல்வியை வழங்க வேண்டும். கல்விக்கு ஒதுக்கும் நிதியை 50 சதவீதத்தை ஆரம்ப கல்விக்கு செலவிட வேண்டும்.
பாட்டாளி மக்கள் கட்சியை பொறுத்தவரை கல்வி, வறுமை ஒழிப்பு, வேலைவாய்ப்பு ஆகிய வற்றுக்கு முக்கியத்துவம் அளிக்கிறது. இதற்காக தமிழகத்தில் வேலைவாய்ப்பு மற்றும் வறுமை ஒழிப்புத்துறை என்ற புதிய துறையை உருவாக்க வேண்டும். பெண்கள் வளர்ச்சி மற்றும் முன்னேற்றத்திற்கு தனி நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும். தற்போது 30 மாவட்டங்கள் தமிழகத்தில் உள்ளன. ஒவ்வொரு நாடாளுமன்ற தொகுதிக்கும் ஒரு மாவட்டம் என்ற வகையில் 39 மாவட்டமாக பிரிக்க வேண்டும்.
பத்திரிகையாளர் நலனை பேணும் வகையில் நல வாரியம் ஒன்றை அமைக்க வேண்டும். ஒவ்வொரு ஆண்டும் பட்ஜெட் தாக்கல் செய்யும்போது மத்திய அரசு போல பொருளாதார சர்வே அறிக்கையை பட்ஜெட்டுக்கு முன்னதாக தாக்கல் செய்ய வேண்டும்.
ஆண்டு திட்டங்கள் செயல்படுத்தப் பட்ட விதத்தை கண்டறிந்து அது குறித்து அறிக்கையை சட்டசபையில் தாக்கல் செய்ய வேண்டும். சட்டமன்றத்தில் முழுமையாக சுதந்திரம் பாதுகாக்கப்பட வேண்டும். தற்போது மத்திய அரசு செயல் படுத்தும் பணிகள், மாநில அரசு செயல்படுத்தும் பணிகள், மத்திய, மாநில அரசுகள் இணைந்து செயல்படுத்தும் பணிகள் என்று மூன்று பட்டியல்கள் உள்ளன.
தற்போது புதிதாக ஒரு பட்டியலை உருவாக்கி உள்ளாட்சித்துறை அமைப்புகளுக்கென்று தனி பட்டியலை தயாரிக்க வேண்டும். நகர்ப்புறங்களில் மட்டுமே வீட்டு வசதி வாரியம் உள்ளது. கிராமப்புறங்களிலும் வீட்டு வசதி வாரிய திட்டங்களை செயல்படுத்த வேண்டும். கூட்டுறவு சங்கங்களுக்கு தேர்தல் நடத்த தனி தேர்தல் ஆணையம் உருவாக்க வேண்டும். இது போன்ற முக்கிய அம்சங்கள் இந்த தேர்தல் அறிக்கையில் இடம் பெற்றுள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.
ராமதாஸ் பேட்டி
பின்னர் நிருபர்களின் பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளித்து டாக்டர் ராமதாஸ் கூறியதாவது:
கிராமப் பஞ்சாயத்துகளுக்கு மாநில அரசு போதிய நிதி ஒதுக்கவில்லை. கிராம சபையும் சுதந்திரமாக செயல்பட அனுமதிப்பதில்லை. இதுபோன்ற குறைகளை முழுமையாக களைந்து, உள்ளாட்சி அமைப்புகள் சுதந்திரமாக செயல்படுவதற்கு உரிய சட்டம் கொண்டு வரப்பட வேண்டும். அவர்களுக்கு வழங்கப்படும் நிதிகளும் நேரடியாக உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கே சென்றடைய வேண்டும்.
வரும் சட்டசபை தேர்தலில் 234 தொகுதிகளிலும் எங்கள் கூட்டணி வெற்றி பெறும். அதிமுக சார்பாக ஒருவர் கூட இந்த முறை சட்டமன்றத்திற்கு வரமுடியாது; வரவும் மாட்டார்கள். சட்டமன்ற தேர்தலில் திமுகவுக்கு தனிப்பெரும்பான்மை கிடைக்காது என்ற நிலை உருவாகாது. ஒருவேளை அப்படி ஒரு நிலை வந்தாலும், திமுக ஆட்சி அமைக்க நாங்கள் நிபந்தனையற்ற ஆதரவு தருவோம்.
தொகுதி ஒதுக்கீடு தொடர்பாக திமுகவுடன் பேச்சுவார்த்தை நல்ல முறையில் சுமூகமாக நடைபெற்று வருகிறது. அநேகமாக இன்று மாலை அல்லது நாளை காலை எங்களிடையே ஒப்பந்தம் கையெழுத்தாகலாம். கூட்டணி கட்சிகள் ஒருவருக்கு ஒருவர் விட்டுக் கொடுத்து போவது தான் நல்லது.
திமுக இப்போது வெற்றி பெற்றுள்ள ஒரு சட்டமன்றத் தொகுதியை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு விட்டுக் கொடுத்துள்ளது. அதேபோல, நாங்களும் வெற்றி பெற்ற ஒரு தொகுதியை காங்கிரசுக்கு விட்டுக் கொடுத்துள்ளோம். ஆனால், திமுக மற்றும் காங்கிரஸ் வெற்றி பெற்ற தொகுதி எதையும் எங்களுக்கு தரவில்லை.
வன்னியர் சங்க நிர்வாகிகள் என்ற பெயரில் அறிக்கை விடும் சிலரை பற்றி வன்னிய சமுதாய மக்கள், “கூலிக்கு மாரடிப்பவர்கள், கைக் கூலிகள், பதர்கள், செல்லாக்காசுகள்’ என்று அடையாளம் கண்டு புறக்கணித்திருக்கிறார்கள். இது போன்ற பலரை எனது 25 ஆண்டு கால பொதுவாழ்வில் பார்த்திருக்கிறேன். இதன் மூலம் எனக்கு எந்த தோல்வியும் வராது.
பாமக தொகுதி பட்டியல் வெளியானதும், அந்த தொகுதிகளில் போட்டியிட விரும்புபவர்களுடன் நேர்காணல் நடத்தி முடித்த பின்னர், வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்படும். 2 அல்லது 2க்கு மேற்பட்ட தனித்தொகுதிகளில் பாமக இம்முறை போட்டியிடும்.
தமிழகத் தேர்தலுக்கான கூட்டணி பட்டியல் வெளியான பிறகு, பாண்டிச்சேரி கூட்டணி பற்றி கருணாநிதி முடிவு செய்வார். தேர்தல் முடிந்த பிறகு, விடுதலைச் சிறுத்தைகளுடன் இணைந்து தமிழ் பாது காப்பு இயக்கப் பணிகளை மேற்கொள்வோம். நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களை கட்டுப்படுத்திட மாநில அரசு தகுந்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
முதலமைச்சர் ஜெயலலிதாவை எதிர்த்து நடிகர் கார்த்திக்கை பொது வேட்பாளராக நிறுத்த வேண்டும் என்று பார்வர்டு பிளாக் தீர்மானம் நிறைவேற்றிருப்பது குறித்து கேட்கப்பட்ட போது, வாக்குகளை சிதறடிக்கத்தான் இது உதவும் என்றும் டாக்டர் ராமதாஸ் தெரிவித்தார்.
குடும்பத்தினர் போட்டி இல்லை
வரும் சட்டசபை தேர்தலில் தமது குடும்பத்தை சேர்ந்த எவரும் போட்டியிட மாட்டார்கள் என்று டாக்டர் ராமதாஸ் தெரிவித்தார். இன்று தமது கட்சியின் தேர்தல் அறிக்கையை அவர் வெளியிட்டு நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். சட்டசபை தேர்தலில் உங்கள் குடும்பத்தைச் சேர்ந்த யாரும் போட்டியிடுவார்களா என்று நிருபர்கள் கேட்டனர். இந்த கேள்வி எந்த வகையில் பொருத்தம் என்று தெரியவில்லை. இருந்தாலும் சொல்கிறேன். வரும் சட்டசபை தேர்தலில் என் குடும்பத் தைச் சேர்ந்த எவரும் நிச்சயமாக போட்டியிட மாட்டார்கள் என்பதை தெரிவித்து கொள்கிறேன் என்றார்.
முக்கிய அம்சங்கள்
தமிழ்நாட்டில் டாஸ்மாக் மதுக்கடை களை மூட நடவடிக்கை எடுக்கப்படும் என்று பாமக அறிவித்துள்ளது.
சென்னையில் இன்று வெளி யிடப்பட்ட பாமக தேர்தல் அறிக்கை யில் குறிப்பிடப்பட்டுள்ள முக்கிய அம்சங்கள் வருமாறு:
* கள்ளச்சாராயத்தை ஒழிக்க பாமக கடும் நடவடிக்கை எடுக்கும். டாஸ்மாக் மதுக்கடைகள் மூடப்படும்.
* கஞ்சா, பான்பராக் போன்ற புகையிலை மற்றும் போதைப் பொருட்கள் பொது இடங்களில் விற்கப்படுவதை தடுக்க சட்டம் கடுமையாக அமல்படுத்தப்பட்டு ஆயிரம் ரூபாய் அபராதமும், சிறை தண்டனையும் வழங்கப்படும்.
*மரம் வளர்ப்பு ஊக்குவிக்கப்படும். சுற்றுச்சூழல் மேம்பட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
*தெலுங்கு கங்கை திட்டத்தின் மூலம் சென்னை குடிநீர் தேவைகளை சமாளிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
* ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டம் முனைப்புடன் செயல்படுத்தப்படும்.
* குழந்தை தொழிலாளர் முறையை ஒழிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
* காவல்துறையின் பணி நேரத்தை 8 மணி நேரம் என நிர்ணயிப்போம்.
* சத்துணவு ஊழியர்கள் பணி நிரந்தரம் செய்யப்பட்டு, காலமுறை ஊதியம் வழங்கப்படும்.
* சலவை தொழிலாளர்களுக்கு தனி வாரியம் அமைக்கப்படும்.
*வறுமை ஒழிப்புக்கு முன்னுரிமை அளிக்கப்படும். அனைவருக்கும் வேலை, அனைவருக்கும் வருமானம் என்பது பாமகவின் தலையாய நோக்கம். அதன் அடிப்படையில் ஒரு குடும்பத்திற்கு ஒருவருக்கு வேலை வாய்ப்பை உருவாக்க குறைந்தபட்ச வேலைவாய்ப்பு திட்டத்தை பாமக அமல்படுத்தும்.
* அனைத்து சாதியினரும் அர்ச்சகராக தேவையான சட்டம் கொண்டுவர பாமக வலியுறுத்தும்.
* திருக்குறளை தேசிய நூலாக அறிவிக்க பாமக குரல் கொடுக்கும்.
Courtesy: Maalaisudar
Posted in Uncategorized
காங்கிரசுக்கு ஒதுக்கப்பட்ட 48 தொகுதிகளும் இப்பொழுது முடிவு செய்யப்பட்டுவிட்டதாகத் தெரிகிறது.
என்னென்ன தொகுதிகள் என்று ஒரு பட்டியலை தினமலர் வெளியிட்டுள்ளது. ஆனால் திமுக, காங்கிரஸ், பாமக வட்டாரங்களின்படி யார் யாருக்கு என்னென்ன தொகுதிகள் என்னும் விவரம் அனைவருக்கும் தொகுதிகளை ஒதுக்கியபின்னரே வெளியிடப்படும் என்று தெரிகிறது. அதனால் தினமலர் வேண்டுமென்றே குட்டையைக் குழப்ப முடிவு செய்திருக்கலாம்.
தினமலர் தகவலின்படி காங்கிரசுக்கு ஒதுக்கப்பட்ட தொகுதிகள்:
1. ஆர்.கே.நகர் 2. திருப்பெரும்புதூர் 3. பூந்தமல்லி 4. மதுராந்தகம் 5. பள்ளிப்பட்டு 6. சோளிங்கர் 7. செய்யாறு 8. பேரணாம்பட்டு 9. வேலூர் 10. செங்கம் 11. வானூர் 12. ரிஷிவந்தியம் 13. காட்டுமன்னார்கோவில் 14. தர்மபுரி 15. ஓசூர் 16. ஆத்தூர் 17. நாமக்கல் 18. சேலம்-1 19. தொண்டாமுத்தூர் 20. ஊட்டி 21. வால்பாறை 22. கோவை மேற்கு 23. வேடசந்தூர் 24. நிலக்க்கோட்டை 25. மேலூர் 26. தேனி 27. தொட்டியம் 28. திருவரங்கம் 29. அரியலூர் 30. மயிலாடுதுறை 31. பேராவூரணி 32. பாபநாசம் 33. பட்டுக்கோட்டை 34. திருமயம் 35. காரைக்குடி 36. திருவாடானை 37. பரமக்குடி 38. கடலாடி 39. சிவகாசி 40. விருதுநகர் 41. திருவைகுண்டம் 42. கடையநல்லூர் 43. நாங்குநேரி 44. ராதாபுரம் 45. சாத்தான்குளம் 46. கிள்ளியூர் 47. குளச்சல் 48. மதுரை மேற்கு
Update: (24 மார்ச் 2006) காங்கிரஸ் அதிகாரபூர்வ இடங்கள்
நேற்று தினமலரில் unofficial-ஆக வெளியான 48 இடங்களையும், பின்னர் official-ஆக வெளியான இடங்களையும் ஒப்பிட்டுப் பார்த்ததில் 6 இடங்கள் மாறியுள்ளன.
நேற்றைய பட்டியலில் இருந்து நீக்கவேண்டிய தொகுதிகள்:
1. கடலாடி 2. சிவகாசி 3. செங்கம் 4. தர்மபுரி 5. நாங்குநேரி 6. பேரணாம்பட்டு
அதற்கு பதிலாகச் சேர்க்க வேண்டிய தொகுதிகள்:
1. காங்கேயம் 2. சேரன்மாதேவி 3. மானாமதுரை 4. போளூர் 5. மொடக்குறிச்சி 6. ராமநாதபுரம்
Posted in Uncategorized
* தமிழகத்தில் உள்ள இரண்டு தலித் கட்சிகளில் ஒன்றான புதிய தமிழகம் (தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி), தனியாகத் தேர்தலில் நிற்பதாக முடிவு செய்துள்ளது. 150 தொகுதிகளில் போட்டியிடப்போவதாக அறிவித்துள்ளனர்.
* ஆல் இந்தியா ஃபார்வர்ட் பிளாக், தமிழ்நாடு கிளை (தலைவர்: நடிகர் கார்த்திக்) 111 இடங்களில் போட்டியிடுவதாக அறிவித்துள்ளது. ஃபார்வர்ட் பிளாக் (சந்தானம்) கட்சிக்கு ஓர் இடம் தருவதாக ஜெயலலிதா அறிவித்திருந்தார்.
* இன்னமும் பாஜக, விஜயகாந்தின் தேசிய முற்போக்குத் திராவிடர் கழகம் இரண்டும் எந்தெந்தத் தொகுதிகளில் போட்டியிடுவது என்று முடிவு செய்யவில்லை. முடிந்தால் 234 தொகுதிகளிலும் போட்டியிடலாம்.
Posted in Uncategorized
பாண்டிச்சேரியில் 30 தொகுதிகளுக்கு நடக்க இருக்கும் சட்டமன்றத் தேர்தலில் அஇஅதிமுக, கண்ணனின் புதுச்சேரி முன்னேற்ற காங்கிரஸ், மதிமுக, விடுதலைச் சிறுத்தைகள் ஆகியவை சேர்ந்து போட்டியிடுகின்றன.
அ.இ.அ.தி.மு.க – 16 இடங்கள்
பு.மு.கா – 10 இடங்கள்
வி.சி – 2 இடங்கள்
ம.தி.மு.க – 2 இடங்கள்
யாருக்கு என்னென்ன தொகுதிகள் என்று ஏற்கெனவே பிரித்துக்கொண்டுள்ளார்கள்.
கண்ணன் தலைமையில் புதுச்சேரி மக்கள் காங்கிரஸ் என்று ஒரு கட்சி உருவாக்கப்பட்டு பின்னர் அது காங்கிரஸுடன் இணைக்கப்பட்டது. சில மாதங்களுக்கு முன்னர் மீண்டும் பிளவு ஏற்பட்டது.
ஆனால் மறுபக்கம் திமுக கூட்டணியில் இதுவரையில் எந்த உடன்பாடும் எட்டப்படவில்லை. காங்கிரஸ், திமுக, பாமக ஆகிய மூன்றுமே பாண்டிச்சேரியில் ஆட்சி அமைக்கும் திட்டத்தில் உள்ளனர். இதில் யார் விட்டுக்கொடுப்பார்கள் என்று தெரியவில்லை. முக்கியமாக இப்பொழுதைய ஆளும் கட்சி காங்கிரஸ். சொந்தமாகவே தேர்தலில் நின்று ஜெயிக்கக்கூடிய திறன் தமக்கு இருப்பதாக நினைக்கிறார்கள். அதே சமயம் மத்தியில் கூட்டணி, தமிழகத்தில் கூட்டணி என்ற நிலையில் சோனியா காந்தி பாண்டிச்சேரியிலும் கூட்டணியை விரும்பலாம். சென்ற முறை பாமகவுக்கு பாண்டிச்சேரி நாடாளுமன்றத் தொகுதி சென்றதில் பாண்டிச்சேரி காங்கிரஸ் கடும் கோபம் கொண்டது.
மேற்படிக் காரணங்களால் பாண்டிச்சேரியைப் பொருத்தமட்டிலும் அதிமுக கூட்டணி ஆரம்பத்திலிருந்தே நல்ல வலுவான நிலையில் இருப்பதாகத் தோன்றுகிறது.
Posted in Uncategorized
தினமணி செய்திப்படி: அதிமுகவுடன் கூட்டணி என்பது வெறும் வதந்தியே. தேர்தலில் எக் கட்சியுடனும் கூட்டணியில்லை. எங்களின் கொள்கைகளை ஏற்றுக்கொள்ளும் கட்சிகளுடன் “ஆட்சியில் கூட்டணி” வைத்துக் கொள்வோம் என, தேசிய முற்போக்கு திராவிடர் கழகத் தலைவர் விஜயகாந்த் மதுரையில் தெரிவித்தார்.
மதுரை அவனியாபுரத்தில் வியாழக்கிழமை வேனில் இருந்தவாறு பிரசாரம் செய்தபோது அவர் பேசியதாவது:
அதிமுகவுடன் தேசிய முற்போக்கு திராவிடர் கழகம் கூட்டணி வைத்துக்கொள்ள பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது என அதிமுகவும், உளவுப் பிரிவு போலீஸாரும் வதந்தி பரப்பி வருகின்றனர். அரசியலுக்காக நான் சினிமா துறையைத் தூக்கியெறிந்துவிட்டு வந்திருக்கிறேன். நான் நினைத்திருந்தால் தொடர்ந்து சினிமாவில் நடித்து, கோடிக்கணக்கில் பணம் சம்பாதித்திருக்க முடியும்.
மக்களுக்குச் சேவை செய்ய வேண்டும் என்பதற்காகவே, எம்.ஜி.ஆரைப் போலவே என்னுடைய உழைப்பில் சம்பாதித்த பணத்தைச் செலவழித்து அரசியல் கட்சி ஆரம்பித்துள்ளேன். அதிமுகவும் திமுகவும் கூட்டணியில்லாமல் தேர்தலில் தனித்துப் போட்டியிட முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளன என்றால், அக் கட்சிகள் தங்களின் தனித்தன்மையை இழந்துள்ளன என்பதுதானே அர்த்தம்.
நான் ஆட்சிக்கு வந்தால், ஊழலை ஒழிக்கவும் பேப்பர், காஸ், பால் உள்ளிட்டவை வீடுகளுக்கு வருவதுபோல் ரேஷன் பொருள்களையும் மக்களின் வீடுகளுக்கே வழங்க நடவடிக்கை எடுப்பேன்.
மாவட்டங்கள் தோறும் தொழிற்சாலைகள் அமைக்கவும், படித்த வேலையில்லா பட்டதாரிகளுக்கு வங்கிக் கடன்பெற்று சுயதொழில் தொடங்கவும், கல்வித் துறையில் சீர்திருத்தத்தையும், நகரங்களுக்கு ஈடாகக் கிராமப் புறங்களில் சுகாதார வசதியும், மருத்துவ வசதிகளும் பெறுவது உள்ளிட்ட பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்துவேன்.
இத் திட்டங்களைச் செயல்படுத்தவில்லையென்றால், அடுத்த முறை எனக்கு யாரும் வாக்களிக்க வேண்டாம். எங்கள் கட்சியின் இக் கொள்கைகளை ஏற்றுக்கொள்ளும் கட்சிகளுடன் ஆட்சியில் வேண்டுமானால் கூட்டணி வைத்துக்கொள்ளத் தயாராக உள்ளேன் என்றார்.
கடைசியாகக் கிடைத்த (அதிகாரப்பூர்வமற்ற) தகவல்களின் படி விஜய்காந்த் தரப்பு 40 தொகுதிகள் கோரியதாகவும், அதிமுக தரப்பில் 32க்கு பேசி வருவதாகவும் சொல்கிறார்கள். தேசிய முற்போக்கு திராவிடர் கழகத்த்தின் கொள்கைகளை அதிமுக ஏற்றுக் கொண்டதாக கூடிய சீக்கிரமே அஃபிஷியலாக விஜய்காந்த் அறிக்கை விடலாம்?
Posted in Uncategorized