Category Archives: Uncategorized

Net Observer on Elections

தேர்தல் பத்து

தமிழகத்தில் நடந்து முடிந்து, முடிவுகளும் அறிவிக்கப்பட்டு, அமைச்சரவை ஆருடங்களும் தொடங்கிவிட்ட தேர்தல் குறித்து எனக்கு மனதில் உதித்து எழுத்தில் வெளியான பத்து பிட்ஸ்.

  1. கடைசி நாளன்று இட்லி-வடை இன்னும் சிறப்பாக செய்திகளைத் தொகுத்திருக்கலாம். காலையில் எழுந்தவுடன் முடிவுகளை அறிய ‘வலைப்பதிவுகளை மட்டுமே நம்புவது’ என்று மேய்ந்ததில் தமிழ்மணம் தேர்தல் 2006 சிறப்பு பக்கம் மட்டுமே மேலோட்டமாய் அம்சமாகப் பட்டது.
  2. வழக்கமான ஊடகங்களை சாம்பார் மாஃபியா மூலம் சென்று, அலுவல் கிளம்பும் அவசரத்திலும் விடைகளைப் பெற முடிந்தது. மிகத் தெளிவான இடைமுகமாக ஐ.பி.என்.னும், அரிதான செய்திகளை சிஃபி.காமும் கொடுத்தது.
  3. கட்சி நிலைப்பாடுள்ளவர்கள் தங்கள் வேட்பாளர் நிலவரம் குறித்து தொடர்ந்து இற்றைப்படுத்தி இருக்கலாம். உடனடி அரட்டையாக ‘கேள்வி-பதில்’ போன்ற வசதியும் வலைப்பதிவுகளில் நிகழ்ந்திருந்தால் இணையத்துக்கே உரிய அன்னியோன்யம் கைவசமாகியிருக்கும். (நான் கேட்க நினைத்த கேள்வி: மயிலாடுதுறையில் விஜய டி ராஜேந்தர் எத்தனை ஓட்டுகள்? தளி (அல்லது) இந்தியன் எக்ஸ்பிரசில் தவறாய் சொன்னது போல் அவினாசியில் வென்ற சுயேச்சை யார்… எப்படி வென்றார்?)
  4. பொறுமையாக குளம்பி அருந்திக் கொண்டு, காலை சந்திப்புக் கடன்களை முடித்துவிட்டு மேய்ந்ததில், பரவலான கவரேஜுக்கு மாலை மலரும், லே-அவுட் மற்றும் புள்ளி விவரங்களுக்கு சிஃபியும், தமிழ் முரசு-ம், வரைபடங்களுடன் துல்லியமான தகவலுக்கு தேர்தல் ஆணையமும் பயன்பட்டது.
  5. சாதி, இன அரசியல் செய்யாமல் வெல்ல முடியும் என்று நிரூபித்த விஜய்காந்த்தை நினத்தால் சந்தோஷமாக இருக்கிறது, திராவிட கலாசாரத்தில் ஊறித்தான் திராவிட நாட்டில் வெல்ல முடியும் என்பது போல், பெரிய கட்சிகளைப் போலவே நடந்து கொண்டாலும் கருணாநிதிக்குப் பிறகு தோன்றப்போகும் வெற்றிடத்திற்கு துண்டு போட்டு வைத்திருக்கிறார். வைகோ மாதிரி ஆகி விடுவாரா அல்லது இன்னொரு பாக்யராஜா/டி. ராஜேந்தரா என்பது காலத்திற்கே வெளிச்சம்.
  6. இலவசம், பந்தா பொதுக்கூட்டம், சுடு மொழி, மகிழுந்து பவனி என்று திராவிட அரசியலின் சின்னங்களைக் கடைபிடிக்காமலும் லோக் பரித்ராண் மயிலாப்பூர் போன்ற தொகுதிகளில் வெல்லக்கூடிய வாய்ப்பு இருப்பது மேலும் மகிழ்ச்சியை அளித்த நிகழ்வு.
  7. சன் டிவி பங்குகளை வாங்கி வைக்க வேண்டும். டாடாவை மிரட்டினால் என்ன… விகடனை வாங்கினால் என்ன… அரட்டை அரங்கத்திற்கு பாக்யராஜ் மாறினால் என்ன… நிச்சயம் லாபகரமாக செயல்படும்.
  8. கேரளா, அஸ்ஸாம், மேற்கு வங்காளத்தில் கூட தேர்தல் நடந்திருக்கு போல 😉
  9. ஜெயலலிதா இரண்டு தொகுதியில் போட்டியிடாதது போல சோனியா போன்ற தியாகிகள் மீண்டும் மீண்டும் ராஜினாமா செய்து… மீண்டும் மீண்டும் தேர்தல்களில் நின்று… மீண்டும் மீண்டும் ப்ரியங்காவும் ராகுலும் பறந்து பறந்து பிரச்சாரம் செய்து… மீண்டும் மீண்டும் தேர்ந்தெடுக்கப்படாமல் இருக்கும் காலம் என்று விடியுமோ?
  10. 10 ஸ்போர்ட்ஸ் பார்க்க கிடைக்காத அதிருப்தி வாக்குகளில் நிறைய சதவீதம் லோக் பரித்ரானுக்கும், Anti-incumbency வாக்கு மட்டுமே தேசிய முற்போக்கு திராவிடர் கழகத்துக்கும் கிடைத்திருக்காது என்று நம்புகிறேன்!


| |

ADMK Ministers, Anandraj & Puthucheri

அமைச்சர் நிலவரம்: மாலைமலர்

வெற்றி பெற்றவர்கள்:

  • பெரியகுளம் தொகுதி – அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் – 12,862 ஓட்டுகள் வித்தியாசம்
  • நத்தம் – அமைச்சர் விசுவநாதன் – 3,927 ஓட்டுகள் கூடுதல்
  • பல்லடம் – அமைச்சர் செ.ம.வேலுச்சாமி – 5,517 ஓட்டுகள் வித்தியாசம்
  • கோபி – முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் – 4,019 ஓட்டு வித்தியாசம்

    தோல்விப் பட்டியல்:
    தமிழக சட்டசபை தேர்தலில் தோல்வி அடைந்த அமைச்சர்கள் வருமாறு:-

  • திருமயம் – அமைச்சர் ராதாகிருஷ்ணனை x காங். வேட்பாளர் சுப்புராம் : 315 ஓட்டு வித்தியாசம்
  • ஆலந்தூர் – அமைச்சர் வளர்மதி x தி.மு.க. அன்பரசனிடம் தோல்வி
  • நெல்லை – அமைச்சர் நயினார்நாகேந்திரன் x தி.மு.க. மாலைராஜா : 317 ஓட்டுகள்
  • கன்னியாகுமரி – அமைச்சர் தளவாய் சுந்தரம் x தி.மு.க. சுரேஷ்ராஜன் : 10,687 வாக்குகள் வித்தியாசம்

    புதுவை சட்டசபை தேர்தலில் உருளையன் பேட்டை தொகுதியில் ஜனநாயக மக்கள் கூட்டணியின் அ.தி.மு.க. வேட்பாளராக முதலில் நேரு அறிவிக்கப்பட்டார். பின்னர் வேட்பாளர் மாற்றப்பட்டு நடிகர் ஆனந்தராஜ் அறிவிக்கப்பட்டார். இது உருளையன்பேட்டை தொகுதி அ.தி.மு.க.வினரிடையே அதிருப்தியை ஏற்படுத்தியது. இதைத்தொடர்ந்து நேரு சுயேட்சையாக போட்டியிட்டார்.

    அ.தி.மு.க. வேட்பாளர் நடிகர் ஆனந்தராஜ் 710 ஓட்டுகள் மட்டுமே பெற்று டெபாசிட் இழந்தார்.


    புதுச்சேரி மாநிலத்தில் மொத்தம் 30 சட்டமன்ற தொகுதிகள். காங்கிரஸ் – தி.மு.க. ஒரு அணியாகவும், அ.தி.மு.க. கண்ணன் கட்சி ஆகியவை தனி அணியாகவும் நின்றன.

    காங்கிரஸ் – 10
    தி.மு.க. – 7
    பா.ம.க. – 2
    இந்திய கம்யூனிஸ்டு – 1
    காங்கிரஸ் கூட்டணி – 20

    அ.தி.மு.க. – 3
    கண்ணணின் புதுவை முன்னேற்ற காங்கிரஸ் – 3
    ம.தி.மு.க. – 1
    அ.தி.மு.க. கூட்டணி – 7

    நெல்லித்தோப்பு தொகுதியில் தி.மு.க. சார்பில் போட்டியிட்ட முன்னாள் முதலமைச்சரும் மாநில தி.மு.க. அமைப்பாளருமான ஜானகிராமன் தோல்வி அடைந்தார்.

  • தேர்தல் முடிவுகள் டிரெண்ட்

    5.45 PM:

    கிட்டத்தட்ட இறுதி நிலவரம் (அணைக்கட்டு தொகுதி முடிவு தேர்தல் இயந்திரக் கோளாறினால் வெளியாகவில்லை)

    திமுக கூட்டணி: 163
    அஇஅதிமுக கூட்டணி: 68 + (அணைக்கட்டில் முன்னணி) = 69
    தேமுதிக (விஜயகாந்த்): 1
    சுயேச்சை (தல்லி தொகுதியில்): 1

    கட்சி வெற்றி
    திமுக 96
    காங்கிரஸ் 34
    பாமக 18
    சிபிஐ 6
    சிபிஎம் 9
    திமுக கூட்டணி 163
    அஇஅதிமுக 60
    மதிமுக 6
    வி.சிறுத்தைகள் 2
    அஇஅதிமுக கூட்டணி 68
    தேமுதிக 1
    சுயேச்சை 1
    பிற 2

    1.00 PM:

    திமுக கூட்டணி: 124 (வெற்றி) + 35 (முன்னணி) = 159
    அஇஅதிமுக கூட்டணி: 43 (வெற்றி) + 30 (முன்னணி) = 73
    பிற: 2

    12.00 AM:

    திமுக கூட்டணி: 72 (வெற்றி) + 87 (முன்னணி) = 159
    அஇஅதிமுக கூட்டணி: 23 (வெற்றி) + 50 (முன்னணி) = 73
    தேமுதிக: 2

    11.30 AM:

    திமுக கூட்டணி: 160
    அஇஅதிமுக கூட்டணி: 71
    தேமுதிக: 2

    10.40 AM:

    திமுக கூட்டணி: 144
    அஇஅதிமுக கூட்டணி: 84
    பிற: 6

    ஒரு மணி நேரத்துக்கு முந்தைய டிரெண்டில் மாற்றங்கள் இல்லை. காங்கிரஸ் (ஐ), திமுகவிடனான கூட்டணியில் சேர்ந்து ஆட்சி அமைக்க விரும்பும் என்கிறார் காங்கிரஸ் பிரமுகர் விஷ்வ பந்து குப்தா.

    கட்சி வெற்றி முன்னணி
    திமுக 8 77
    காங்கிரஸ் 4 25
    பாமக 1 17
    சிபிஐ 1 7
    சிபிஎம் 1 3
    திமுக கூட்டணி 15 129
    அஇஅதிமுக 5 68
    மதிமுக 0 9
    வி.சி 0 2
    அஇஅதிமுக கூட்டணி 5 79
    தேமுதிக 0 1
    பாஜக 0 2
    சுயேச்சை 0 3
    பிற 0 6

    9.40 AM:

    திமுக கூட்டணி: 140+
    அஇஅதிமுக கூட்டணி: 80+
    பிற: 2?

    எதிர்பார்த்தது போலவே சன் நியூஸ், ஜெயா டிவி சானல்கள் பொய் தகவலைத் தந்துகொண்டிருந்தனர். சிஎன்என் ஐபிஎன், என்.டி.டி.வி, ரீடிஃப் என்று யார் எதைச் சொன்னாலும் தமக்குப் பிடித்தமான செய்தியை தம்மிஷ்டத்துக்கு வாரி வழங்குவது இவர்கள் செயல். ஜெயா டிவிக்கு மட்டும்தான் அஇஅதிமுக ஜெயிக்கும் தகவல் வந்துள்ளது போலும்.

    பாண்டிச்சேரி நிலவரம்

    3.00 PM

    காங்கிரஸ் (ஐ) – 10
    திமுக – 7
    பாமக – 2
    சிபிஐ – 1
    மொத்தம் – 20

    அஇஅதிமுக – 3
    புமகா – 3
    மதிமுக – 1
    மொத்தம் – 7

    சுயேச்சை – 3

    காங்கிரஸ் (ஐ) + திமுக கூட்டணி மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றுகிறது.

    1.10 PM

    காங்கிரஸ் (ஐ) கூட்டணி: 14 (வெற்றி) + 6 (முன்னணி) = 20
    அஇஅதிமுக கூட்டணி: 6 (வெற்றி) + 1 (முன்னணி) = 7
    பிற: 3

    11.05 AM

    முடிவுகள் வெளியானவை – 19

    காங்கிரஸ் (ஐ) – 10
    திமுக – 2
    பாமக – 1

    புதுச்சேரி மக்கள் காங்கிரஸ் – 3
    அஇஅதிமுக – 3

    காங்கிரஸ் (ஐ) மீண்டும் ஆட்சி அமைக்கும். ஆனால் அதற்கு திமுகவின் ஆதரவு தேவையாக இருக்கும் என நினைக்கிறேன்.

    இதைப்படிங்க முதல்ல

    கழக ரத்தத்தின் ரத்தங்கள் யாராவது திரிசங்கு சொர்க்கத்தில் காலையில் உலாவி கொண்டிருந்த ஜெயா டிவி முன்னணி நிலவரத்தை சொல்லமுடியுமா?

    ஆறுதல் செய்தி:

    மீண்டும் விஜயகாந்த் வென்றதாக தகவல்கள் வருகின்றன.

    ஆப்பு

    அடிப்பது அம்மா அலை..எதிர்ப்பவர் யாரும் இல்லை – ஜெ முழக்கம்

    அவசர ஆப்பு

    வாக்குப்பதிவு சதவீதம் அதிகரிப்பு – விஜயகாந்த் பத்து சீட்டாவது பிடிப்பார்- சிலர் கணிப்பு

    ஆசை ஆப்பு

    (இங்கு ஆப்புக்கள் அப்டேட் செய்யப்படும்)

    Nilavum Malarum & Ethilum Vallavanda

    இரண்டு பாடல்கள்

    அம்பிகாவும் கமல்ஹாஸனும் துள்ளி ஓடும் பாடல். மறந்து விட வேண்டிய படத்துக்கும் இளையராஜா, முக்கியமான பாடல்களைக் கொடுத்த காலம்.

    திரைப்படம்: நானும் ஒரு தொழிலாளி
    இயக்கம்: ஸ்ரீதர்
    தயாரிப்பு: சித்ராலயா (ஸ்ரீதர்)
    இசை: இளையராஜா

    படத்தொகுப்பு: எம் உமாநாத்
    ஒளிப்பதிவு: பி பாஸ்கர் ராவ்
    கலை: ஏ ராமசாமி
    வெளியீடு: மே 1 1986

    பாடலாசிரியர்: வாலி
    பின்னணிக் குரல்: எஸ்.பி.பி & எஸ் ஜானகி

    ஒரு நிலவும் மலரும்
    நடனம் புரியும் கவியரங்கம்
    இரு விழிகள் எழுதும்
    கவிதை முழுதும் மந்திரம்

    பெண் வண்ணம்
    பக்கம் நிற்கும் சிற்பம்
    கண் வண்ணம்
    தென்றல் கொஞ்சும் சிற்பம்

    ராகங்கள்…
    பாடுங்கள்…

    புது ராகங்கள் பாடுங்கள்
    தாளங்கள் போடுங்களேன்

    படிச்சேனே நான் கூட பாட்டு
    இது பாட்டல்ல நான் போடும் வேட்டு

    மாமா…

    கண் துடிக்குது
    பெண் துடிக்குது
    கை அணைச்சிடவா…

    புது ரோஜா…

    பூத்திருக்குது
    காத்திருக்குது
    நான் பறிச்சிடவா…

    அட நீதான் சேர்ந்திருக்கணும்
    நான் தான் தேன் கொடுக்கணும்

    நெனச்சா முடிப்பே
    இதில் நீ ஜெயிப்பே

    குலுங்கக் குலுங்க
    நடக்கும் கொடிய
    வளச்சு வளச்சுப் பந்தாடுவேன்

    மற்ற பாடல்கள்: Naanum oru thozhilali – Music by Maestro Ilaiyaraaja


    அடுத்த பாடல்

    திரைப்படம்: நம்மவர்
    இயக்கம்: சேது மாதவன்
    வருடம்: 1994
    இசை: மஹேஷ்
    பின்னணிக் குரல்: (அனேகமாக) எஸ்.பி.பி

    எதிலும் வல்லவன்டா‘ என்று ஆரம்பிக்கும் பாடல். இசைக்கருவிகள் ஏதும் கிடையாது. பஞ்சாபி பாங்ரா இசை (+ நடனம்), கேரளத்து கதகளி, தெலுங்கு என்று பல மொழிகள் இயல்பாக உருமாறி ஆட்டமாட வைக்கிறது.

    கல்லூரிப் பேராசிரியர் (அல்லது ஆசிரியர்) கமல் மேடையில் பாடுகிறார். வில்லன் கரண் இசைக்கருவிகளைத் திருடி மறைத்திருக்க வேண்டும். செந்தில் விடும் ஏப்பம், விக்கல் போன்றவையும் கலந்து வரும் அருமையான பாடல்.

    துளியூண்டு சாம்பிள் கேட்க: Welcome to BrasianBeats.com – Nammavar

    இசையமைப்பாளர் மஹேஷ் குறித்த பதிவு: அஞ்சலி |

    ‘நம்மவர்’ படத்திற்காக தேசிய விருதும் அறிமுக இசையமைப்பளருக்கான ‘ஸ்க்ரீன் – பானசோனிக்’ விருதும் கிடைத்த செய்தி: Songs of Mahesh


    | |

    படித்த பருப்புகள் காரணமா?

    எந்த தேர்தலிலும் இல்லாத அளவிற்கு மாபெரும் ஓட்டுப்பதிவு சதவீதம் தமிழகத்தில் நடந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.இது அனைத்து தரப்பினரின் ஆவலையும் அதிகரித்துள்ளது.

    திடீரென்று வந்து ஓட்டளித்துள்ள இந்த பத்து சதவீதம் ஆட்கள் யார்? என்பதை அலசுவதே இந்த பதிவின் நோக்கம்.

    1. இவர்கள் அனைவரும் விஜயகாந்துக்கு ஓட்டளித்த நடுநிலை(?) வாக்காளர்கள் என்று சில தகவல்களும் பல பெண்கள் விஜயகாந்திற்கு வாக்களித்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.( மதுரையில் உள்ள என் மேலிடமும் முரசுக்கு குத்தியதாக கடைசி தகவல்கள் தெரிவிக்கின்றன. என் கருத்தை வீட்டில் செலாவணி செய்யமுடியாத இரண்டாவது சம்பவமாக இது பார்க்கப்படுகிறது.பெண்ணுரிமைங்க.)

    2. இவ்விதம் முரசுக்கு குத்தப்பட்ட ஓட்டுக்கள் அதிமுக கட்சியை அதிகம் பாதிக்கும் என்பது என் கருத்து. திமுகவிற்கும் ஓரளவு பாதிப்பு இருக்கலாம். இனி தினமலர் போன்ற பத்திரிக்கைகள் விஜயகாந்த் அடிவருடியாக மாறலாம். சொந்தமாக எந்த அடிப்படை கொள்கையும் இல்லாத தினமலருக்கு இது சுலபம்.அதிமுகவிற்கு இது பிரச்சினைதான்.

    3.இதுவரை வெட்டி வியாக்கியானம் பேசிதிரிந்த படித்த பருப்புகள் இந்த முறை வந்து ஓட்டு போட்டிருக்கலாம் என்று ஒரு கருத்து நிலவுகிறது. அரசு ஊழியர் மற்றும் அவர்கள் குடும்பம். இது சரியானால் அது திமுக மற்றும் கூட்டணிக்கு சாதகம்.

    4.மற்றபடி ஆளுங்கட்சிக்கு ஆதரவாகத்தான் இத்தனை அதிக அளவு ஓட்டுப் பதிவு என்பது சரியா என்று தெரியவில்லை.எனக்கு தெரிந்தவரை எதிர்கட்சிகளுக்கு ஆதரவு என்றால்தான் ஓட்டுப்பதிவு அதிகரிக்கும்.எதிர்கட்சி என்பது இங்கு தமிளன் விஜயகாந்தையும் குறிக்கும்.

    நாளை நல்ல காமெடி உண்டு. DAY OF THE YEAR என்று சொன்னால் அது மிகையாகுமா?

    My Allergy to Rising Sun & Two Leaves

    யாக்கை நிலையாமை

    வளத்திடை முற்றத்தோர் மாநிலம் முற்றுங்
    குளத்தின் மண்கொண்டு குயவன் வனைந்தான்
    குடமுடைந் தால் அவை ஓடென்று வைப்பர்
    உடலுடைந் தால்இறைப் போதும் வையாரே.
    – திருமூலர்


    நான் வலைப்பதிவு ஆரம்பித்ததே இப்பொழுது எழுதும் இந்த மாதிரி டைரி குறிப்புகளுக்காகத்தான். கொஞ்ச மாதம் போன பின் வலைப்பதிவிற்காக வாசகர்களா, படித்து பாராட்டுபவர்களுக்காக பதிவா என்னும் தெளிவு பிறந்ததில் பின்னவரைத் தேர்ந்தெடுத்தேன். வேலையில் ஒரு கால், பதிவெழுதுவதில் ஒரு கால் என்று இரண்டும் குழம்பி குட்டையாகிப் போனது வேறு விஷயம்.

    தொடக்கத்தில் சொல்ல நினைத்த மேட்டருக்கே மீண்டும் செல்கிறேன்.

    எனக்கு உதயசூரியனையும் பிடிக்கவில்லை. இரட்டை இலைகளையும் பிடிக்கவில்லை. நான் கட்சி சின்னங்களை சொல்லவில்லை. வசந்தகால வருகையை சொல்கிறேன். இரண்டு வருடம் முன்பு வரை நானும் பெரும்பாலானவர்களைப் போல்தான் இயற்கையை ரசித்திருந்தேன்.

    இலையுதிர் காலத்தில் ஷூ கால் சரசரக்க மிதிப்பதும், பனிக்காலத்தில் கார் சறுக்கலில் இடிபட்டும், வெயில் காலத்தில் பீச் தோறும் பிகினி தரிசித்தும், பூப்பூக்கும் காலத்தில் நிழற்படம் எடுத்துக் கொண்டும் துள்ளித் திரிந்த காலம் அது.

    ஆடாத ஆட்டமெல்லாம் போட்டவன் தான் மண்ணுக்குள்ள போன கதை உனக்குத் தெரியுமா‘ என்று மற்றவர் பொறாமையுடன் என்னைப் பார்த்து பாடினாலும் ‘இருபது வயதில் ஆடாமல் அறுபதில் ஆடி என்ன பயன்‘ என்று முப்பதுகளிலும் சதிராட்டம் போட்டுக் கொண்டிருந்த நேரங்கள் அது.

    எரிமலைக் கண்களுடன் எவராவது தென்பட்டால் ‘Why are your eyes bloodshot?’ என்று தெனாவட்டாகக் கேள்விக்கணை விடுத்து, நக்கலாக ‘காலங்கார்த்தால தண்ணிய ஆரம்பிச்சாச்சா?’ என்று எகத்தாளமாக வினாத் தொடுப்பேன்.

    அவர்களும் சின்சியராக ‘இதற்குப் பெயர் ஒவ்வாமை. மகரந்தச் சேர்க்கையை என் உடம்பு எதிர்ப்பதால் இது நிகழ்கிறது. இதைத் தவிர்க்க தினசரி மாத்திரைகள் உண்கிறேன். இருந்தாலும் காலையில் எழுந்தவுடன் மூன்று தும்மல், பல் தேய்த்தவுடன் நாலரை தும்மல், ஆடைகளுக்குள் புகுந்தவுடன் இரண்டு தும்மல் விழும். நாள் நெடுக மூக்கொழுகும். கண் சிவந்திருந்தால் பூப்பூக்கும் காலம் என்று அர்த்தம்’ என்று விளக்கிக் கொண்டு செல்வார்கள்.

    ‘உங்களைப் பார்த்தால் பாவமாக இருக்கிறது. பச்சை பசேல் புல்லில் குப்புறத் தாச்சிக் கொண்டு புத்தகம் படிப்பதும், மரத்தில் மேல் ஏறி குரங்குகளுடன் ஓடிப் பிடித்து விளையாடவும், காடுகள் மலைகள் தேவன் கலைகளில் புரண்டு உருளவும் கொடுத்து வைக்காத வாழ்வும் வாழ வேண்டுமா?’ என்று சிவந்த கண்களை மேலும் கொதிக்க விட்டு இருக்கைக்குத் திரும்பி, வாரயிறுதிக்கு எங்கு சுற்றுலா கிளம்பலாம் என்று நான் திட்டமிட்டிருப்பதை அவனுக்கு CC மின் மடலிட்டு மகிழ்வேன்.

    All good things were previously wicked things; every original sin has become an original virtue.‘ என்று நீட்சே சொன்னது பூமராங்காகத் திரும்பி, சென்ற வருடம் எனக்கும் மலர்சிதர் (pollen) ஒவ்வாமை (allergy) வந்து சேர்ந்தது. ‘பூங்காற்றுப் புதிரானது… புது வாழ்வு சதிராடுது‘ என்று வாழ்க்கையேத் திருப்பிப் போடப்பட்டது.

    இரவினில் ஆட்டம்; பகலிலே நாற்சுவருக்குள் அடக்கம். இதுவே என் வாழ்வின் முறையாகிப் போனது. அமெரிக்காவின் கிழக்குக் கடற்கரையில் வசிப்பதால் எந்த கடற்கரைக்கு சென்று சூரியோதயத்தை ரசிக்கலாம் என்பது போய், சூரிய டிவி மட்டுமே வாடிக்கையாகப் போகியிருக்கிறது.

    எந்த சினிமாப் பாட்டை கேட்டாலும் கண்ணெரிச்சல் நிழலாடுகிறது.

    கண்ணுக்குள் நூறு நிலவா? கைகுட்டை காதல் கடிதம் எழுதிய உறவா?‘ என்றவுடன் ‘கண்ணுக்குள் நூறு சூரியனா? கைகுட்டை கிளர் கண்ணீர் எழுப்பிய கதிரா?’ என்று வைரமுத்துவாக்கிறது.

    ஏப்ரல், மேயிலே பசுமையே இல்ல‘ என்னும் பாடலின் முழு அர்த்தமும் இப்பொழுதுதான் புத்திக்கு உறைக்கிறது. ‘ஜூலை மாதம் வந்தால் ஜோடி சேரும் வயது; மாலை நேரம் வந்தால் பாட்டும் பாடும்…‘ என்னும் வரிகளில் உள்பொதிந்த கருத்துக்கள் வெண்குழல் விளக்காக ஒளிர்கிறது.

    கொடி சுருட்டுப்பொதியை முதுகில் மாட்டிக் கொள்ளாத குறையாக இருந்த எனக்கு இன்று புல், பூண்டு, புன்னை மரம், புன்னாகவராளியால் ஒவ்வாமை குடியேறி பால் காய்ச்சி காலையில் இரு மாத்திரையும் இரவில் இரு மாத்திரையும் வசூலிக்கிறது. தமிழ்ப்பட வில்லனின் கே பாலச்சந்தர் ஸ்டைல் வசனம் போல் ‘மலர் விட்டு மலர் தாவும் வண்டு நான்’ என்று சொல்லிக் கொண்டிருந்தது போயே போயாச்சு.

    ஆனால், எல்லாம் நன்மைக்கே என்பது போல், இதிலும் சில நன்மைகள் இல்லாமல் இல்லை. புல் வெட்டும்போது மீந்து போன மற்றும் தவறி விழுந்த வெடிகுண்டுகள், கொல்லைப்புறத்தில் கிடைப்பதில்லை.

    க்ளோபல் வார்மிங், சுற்றுச்சூழல் மாசு எல்லாம் கப்ஸா என்று நினைத்த மனம் விநோத நிகழ்வுகளை முடிச்சுப் போட்டுப் பார்க்க துள்ளுகிறது.

    உருப்படாத விஷயத்துக்கெல்லாம் கண்டுபிடிப்புகள் வெளியாகின்றதே… இந்த ஒவ்வா-மாயை நான் சுவாசிக்கும் காற்றின் அருகாமையில் இருந்து சமச்சீர் செய்ய கருவி வரும் காலம் எக்காலமோ!?

    அக்காலம் வரை நான்கு சுவருக்குள் அடைந்து கிடக்க பணிக்கப்பட்ட, பின்தூங்கி முன் எழும், கண்களைக் கசக்கிக் கொண்டு நிற்கும்,
    இவண்

    சில செய்திகளுக்கு சுட்டி காட்டியவர்: டேவ் பாரி.


    | |

    கொஞ்சம் கொஞ்சமாய்…

    இந்த தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகள் ஒரு காமெடி படங்களே. கடந்த முறை இந்த கூத்துத்தான் நடந்தது.ஆகவே எனதருமை ரத்தத்தின் ரத்தங்களே. கவலை வேண்டாம்.யார் யார் எந்த கட்சி ஆதரவாளர்களின் என்பது அனைவருக்கும் தெரிந்துதான் இருக்கிறது.

    ஆகவே இப்போது வந்திருக்கும் இந்த எக்ஸி்ட் போல் எனப்படுவதை பார்த்து பம்மி கருத்தே லேசாக மாற்றி நான் அன்னைக்கே நினைத்தேன்,இருந்தாலும் பரவாயில்லை, எவன் எக்கேடு கெட்டா எனக்கென்ன, அராஜகம் பண்ணி ஜெயிச்சானுங்க போன்ற கருத்துக்களை கழக கண்மணிக்ள அள்ளிவிட வேண்டாம்.சில ரத்தத்தின் ரத்தங்கள் நம்பிக்கை இழப்பதாக தகவல்கள் வருகின்றன.

    அதிமுக அவ்வளவு சுலபமாக தோற்கும் அணி அல்ல. கிராமப்புறங்களில் கணிசமாக ஆதரவு கொண்ட அந்த இயக்கம் எக்ஸிட் போல்கள், கருத்து கணிப்புகள் ஆகியவற்றை ஏற்கனவே சிலமுறை தவிடு பொடியாக்கி உள்ளது.

    தேர்தல் நேரங்களில் சின்ன சின்ன வெட்டுகுத்துக்கள் நடந்ததை எல்லாம் வைத்து முழு தீர்ப்பை யாரும் எழுதமுடியாது.அது நியாயமும் அல்ல.ரவுடிகள் இரு கட்சிகளிலும் இருப்பது உலக உண்மை.

    விஜயகாந்த் என்பவருக்கும் இது முதல் சோதனை. கருத்து கணிப்புகளில் பத்து சதவீதம்வரை ஓட்டு வாங்கியிருப்பது முக்கியத்துவம் வாய்ந்தது. இது காமெடியன் வைகோவை விட அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.இது அதிகம் ஆகலாம்.ஆனால் எதிர்காலத்தில் யாருடனாவது கூட்டணி சேர்ந்தால் இது நீர்த்து போகலாம்.

    ஒருவேளை திமுக ஜெயித்தாலும் தயாநிதி மாறன் டாடா விஷயத்தில் தவறு செய்திருந்தால் இந்த வெற்றியை காண்பித்து அவர் செய்ததை நியாயம் என்று சொல்ல மக்கள் அனுமதிக்கக்கூடாது.