Category Archives: Uncategorized

உலகத் தமிழிலக்கியக் கருத்தரங்கு – காலச்சுவடு

பாரதி 125
புதுமைப்பித்தன் 100
சுந்தர ராமசாமி 75
Kalachuvadu: a magazine for arts and ideas

இடம்: கோயம்புத்தூர்
தேதி: 18-20 டிசம்பர் 2006

sundararamaswamy.com

பார்வையாளர்களுக்கு அனுமதிக் கட்டணம் கிடையாது


| | | | |

Happy Birthday to Super Star Rajnikanth

சக பதிவர்களில் சில வாழ்த்துக்கள்:

வசதிக்கேற்ப வாகான சித்தரிப்பு முகம்:

நிஜ முகம்:


| |

2005-06 Reminiscences

சென்ற வருட இறுதியில் விக்கி (தண்டோரா – இது கண்டதை சொல்லும்) வாக்குறுதி கொடுத்திருப்பது போல், 2005 நினைவுகளை அசை போட்டேன்.

அந்தப் பதிவுகள்:

  1. தமிழ் சினிமா – 2005
  2. டாப்டென் – 2005 :: நத்திங் சீரியஸ், ஒன்லி ·ப்ரிவலஸ்
  3. புத்தகங்கள் – 2005
  4. திரைப்பாடல்கள் – 2005
  5. பிரச்சினைகள் – 2005
  6. பட்டியல்கள் – 2005
  7. திரைப்படங்கள் – 2005
  8. வலைப்பதிவுகள் – 2005

2006 :: வலைப்பதிவுகளில், தமிழ்ச்சூழலில், வலையகங்களில், 2006-இல் என்ன நடக்கலாம்? என்ற என் கணிப்புகள் (நடந்த நிகழ்வுகளுடன் மீள்பதிவு):

  1. விகடன் கவர்-ஸ்டோரியாக வலைப்பதிவாளர் ஆகலாம். குறைந்தபட்சம், பதிவுகளில் வருபவைகளில் சிலதாவது பத்திரிகை column-ஆக மறுபதிப்பாகலாம்.

    குங்குமத்தில் செந்தழல் ரவி, மதுமிதா, லிவிங் ஸ்மைல் வித்யா போன்ற வலைப்பதிவர்கள் இடம்பிடித்தார்கள்.

  2. பதிவுகளை விட பின்னூட்டங்கள் சுவாரசியமாகும் காலம் இது. மறுமொழிகளை சேகரித்து தருவதற்கென்றே தமிழ்மணம், தேன்கூடு, கூகிள் ரீடர் போல் ஒரு திரட்டி உருவாகலாம்.

    ஆங்கிலத்தில் இது போன்று பல வெப் 2.0க்கள் உருவாகி இருந்தாலும், தமிழுக்கென்று தனியாக எதுவும் வரவில்லை.

  3. கிரிக்கெட்டைத் தொடர்ந்து தமிழ் சினிமா, செய்தி, கிண்டல் போன்றவற்றுக்கு கூட்டு வலைப்பதிவு வரலாம்.

    சென்னைக் கச்சேரி: தமிழ் பதிவுலகம் 2006 – நம்ம வியூ பாயிண்ட் என்று இந்த வருடம் உருவான குழுப்பதிவுகளைத் தொகுத்துள்ளார். விக்கிப்பசங்க இன்னும் புதுக்கருக்கு அழியாதவர்கள். அவர்கள் தவிர்த்து பார்த்தால், சென்னபட்டிணம் தவிர எதுவுமே கவரவில்லை.

  4. கூகிள் விளம்பரங்களை விட, விற்பனையாளர்களே வலைப்பதிவர்களை நேரடியாக அணுகுவார்கள். விமர்சனங்களும், அறிமுகங்களும் product positioning செய்யப்படும்.

    ஊசி aka pin சொல்வதைப் பார்த்தால் பொய்த்து விட்டது. தற்போதைக்கு புதிய இசையை வெளியிடுபவர்கள், புத்தகங்களை பிரசுரிப்பவர்கள் போன்றோருக்கு வலைப்பதிவுகளின் மூலம் இலகுவான மையமான கேந்திரம் எதுவும் இல்லை.

  5. விகடனைப் போல் குமுதமும் சந்தா கட்டி படிக்கும் தளமானாலும், வெற்றிகரமாக வாசகர்களைத் தக்கவைத்து கொள்ளும்.

    குமுதம் இன்றளவும் இலவசமாகவேத் தொடர்கிறது. துக்ளக் வலையகத்தைத் தொடங்கியவுடன் சந்தாவைக் கோரியது. (சைட் பார்: ஜூலை ’06 தொடங்கிய Tamil Newsக்கு எதையாவது தேடித் தடுக்கி வந்து பார்வையிட்டவர்களின் எண்ணிக்கை ஐந்து மாதத்தில் 70,000-ஐ தொடப் போகிறது. இதில் எத்தனை பேர் ரிப்பீட்டு, எத்தனை பேர் அப்பீட்டு என்பது தெரியவில்லை).

  6. வலைப்பதிவர்களின் குறிப்புகள் புத்தகங்களாகத் தொகுக்கப்பட்டு அச்சேறலாம்.

    பூங்கா, கில்லி, Snap Judgement என்றுதான் மீள்குறிக்கப்பட்டதேத் தவிர, அச்சில் வரக் காணோம்.

  7. வலைப்பதிவுகளில் ஏற்கனவே எழுதிவிட்டதாகவோ அல்லது திருடி விட்டதாகவோ, ஏதாவதொரு பிரபலமான எழுத்தாளருக்கு தர்ம அடி கொடுக்கப்படும்.

    நாடு கட்டிய நாயகன் :: எம்.கே.குமார் | பத்ரி | ஓகை நடராஜன் |

  8. அனுமதியின்றி வலையேற்றியதாகவோ, தரக்குறைவாக எழுதியதாகவோ பதிவர் மீது வழக்குத் தொடரப் படலாம்.

    பல குற்றச்சாட்டுக்கள் எழுந்தாலும், வழக்கம் போல் புறக்கணித்து கவனியாமல் தவிர்ப்பதே நிரந்தரமாகத் தொடரப்பட்டது.

  9. தமிழ்மணம், தேன்கூடு, போன்ற தமிழ் வலைதிரட்டிகளில் இணைத்துக் கொள்ளாமல் தனிபட்ட சுற்றில் வலைப்பதிபவர்கள் அதிகம் ஆவார்கள்.

    தானாக விருப்பப்பட்டு ஒதுங்கி நின்று, பதிவையும் தொடர்பவர்கள் எண்ணிக்கை: 1

  10. தேர்தலுக்கு பின் ‘ஏன் ஜெயித்தார்கள்? எப்படி தோற்றார்கள்’ அலசல்களும், ‘சிவாஜி’ வெளிவந்து ஒரு மண்டலம் முடிந்தவுடன் போஸ்ட மார்ட்டங்களும், உலகக் கோப்பை விமர்சனங்களும், அமெரிக்காவிற்கான வசவுகளும் நிறையும்.

    கால் பந்து உலகக் கோப்பையை விட ஜிதான் நிறைய அடிபட்டார். தமிழ் நாடு தேர்தல் தொடர்கதையாக உள்ளாட்சி இன்றும் முடிந்தபாடில்லை. அமெரிக்கா மேலான தாபங்களும் வடியவில்லை.


| |

Hussain immortalizes Amrita Rao on canvas

NDTV செய்தி: அம்ருதா ராவின் ஓவியத்தை எம்.எஃப். ஹுசேன் வரைகிறார்.

எப்படி இருக்கீங்க…?
அடுத்த மாதுரி நான்தான்!

இப்படி துண்டு துண்டா படம் போடறது திப்பு சுல்தான் காலத்து மணியம் செல்வன் பழக்கம்.
புதுசு புதுசா கதாநாயகிகளை ஓவியம் தீட்டறது எம்.எஃப்.ஹூஸேன் நவநாகரிகம்.

எனக்கு கமிஷன் எவ்வளவு கிடைக்கும்?

படம் போட்டு விற்ற பிறகு எம்.எஃப். ஹூசேனை காலி செஞ்சிடுவேன் என்பதைன் உருவகக் காட்சி.

விவா‘ (VIVAH) தலைக்குப் போட்டால் இப்படி முடி வளருமா?

அசப்பில் ‘ஜெமினி’ கிரண் மாதிரி இருக்கேனா? அல்லது திவ்யபாரதியை நினைவுக்குக் கொண்டுவருகிறேனா??


| |

Boston Bloggers Meet – Dec 16th: Invite

அமெரிக்காவின் வடகிழக்கில் வலைப்பதிவர் சந்திப்பு போடலாம் என்று எண்ணம்.

தேன் துளி பத்மா அரவிந்த், பாஸ்டன் பக்கம் வருகிறார்.

மாதவிப் பந்தல் கண்ணபிரான் ரவி ஷங்கர் நியூ ஜெர்சியில் இருந்து வரப்போகிறார்.

அக்கம்பக்கத்தில் இருக்கும் வெயிலில் மழை ஜி, வெட்டிப்பயல் பாலாஜி, பாடும் நிலா பாலு! சுந்தர் போன்ற பல பதிவர்களும் உறுதி செய்திருக்கிறார்கள்.

பாஸ்டன் சந்திப்பு என்றாலே தங்கள் கருத்துக்கள் மூலம் சுவையும் காத்திரமும் மகிழ்வையும் கூட்டும் Navan’s weblog நவன், பார்வை மெய்யப்பன், வேல்முருகன் போன்ற நண்பர்களும் கலந்து கொள்கிறார்கள்.

நீங்கள் அமெரிக்காவின் கிழக்குக் கடற்கரைப் பக்கம் வசிப்பவரா?

வாஷிங்டன் டிசி-யில் இருந்து எட்டு மணி நேரம்தான்.
நியு யார்க்கில் இருந்து நான்கு மணி நேரம்.
மாஸசூஸட்ஸ் மற்றும் நியு ஹாம்ப்ஷைர் வாசிகளுக்கு எட்டிப் பிடிக்கும் தூரம்.

இடம்: பாஸ்டன்
நாள்: டிசம்பர் 16, சனிக்கிழமை
நேரம்: மதியம் ஆரம்பித்து…

தொடர்புக்கு: bsubra@yahoo.com அல்லது bsubra@gmail.com

வாக்குறுதிகள்:
1. புகைப்படங்கள் எடுக்கப்படாது.
2. எடுத்தாலும் இட்லி-வடைக்கு அனுப்பப்பட மாட்டாது.
3. தாங்கள் வாசகராக இருந்தாலும், அவ்வண்ணமே கலந்து கொள்ளலாம். வலைப்பதிவு தொடங்குமாறு நிர்ப்பந்திக்க மாட்டோம்.
4. என் பதிவில் நான் நடந்து கொள்ளும் விதத்தை விட, நேரில் நல்ல மாதிரியாகப் பழகுவேன் ; )

வேண்டுகோள்:
1. தனி மடலிடவும். எனது முகவரி மற்றும் தொலைபேசி எண் போன்ற பிற தகவல்களைப் பகிர்கிறேன்.
2. அவசியம் கலந்து கொள்ளவும்.

Tamiloviam – Luckylook

அக்டோபர் மாதத்தின் தேன்கூடு-தமிழோவியம் போட்டியில் முதலிடம் வென்ற லக்கிலுக்கை சிறப்பாசிரியராகக் கொண்ட தமிழோயவியத்தில் இருந்து…


| |

National Repeal Day – Lets Celebrate


இன்றைய தினம் அமெரிக்கவாசிகளுக்கு மிக முக்கியமான தினம்.

டிசம்பர் 6-ஐ சொல்லவில்லை. டிசம்பர் ஐந்து.

1933-ஆம் ஆண்டு. எஃப்.டி.ஆர் என்று செல்லமாக அழைத்து, பெரிய நினைவுச்சின்னத்தையும் இரண்டாம் உலகப் போருக்காகவுமே அறியப்பட்ட ஃப்ரான்க்ளின் டெலானோ ரூஸ்வெல்ட்டின் முனைப்பினால் இன்றுதான் மதுவிலக்கு நீங்கி, ஆல் காப்போன் மட்டுமே காய்ச்சிய சாராயம் அதிகாரபூர்வமாகப் பெருக்கெடுத்தோடியது.

அன்று முதல் பரவலான சில அறிகுறிகளும் அதற்கான தீர்வுகளும்:

1. உபாதை: குளிர்பாதங்கள்

காரணம்: பாட்டிலை சரியாகப் பிடிக்கவில்லை (காலில் பியர் கொட்டுகிறது).

நிவர்த்தி: கையில் இருக்கும் கிளாஸை நேர் செய்யவும். புட்டியின் திறந்த பாகம் மேலே பார்த்தபடியும், மூடிய பாகம், தரையை நோக்கியும் அமைந்திருத்தல் அவசியம்.

2. உபாதை: உங்கள் முகத்துக்கு நேராக ஒளிவெள்ளம் பாய்கிறது.

காரணம்: கீழே விழுந்துவிட்டீர்கள்.

நிவர்த்தி: தரைக்கும் உங்களுக்கும் உள்ள கோணம் 90 டிகிரியாக இருத்தல் அவசியம்.

EXTRA EXTRA!!!3. உபாதை: தரை மசமசவென்று இருக்கிறது.

காரணம்: காலியான கிளாஸ் வழியாக பார்க்கிறீர்கள்.

நிவர்த்தி: சரக்கை கடகடவென்று நிரப்பவும்.

4. உபாதை: தரை நடந்து, உங்களைக் கடந்து செல்கிறது.

காரணம்: நீங்கள் தரதரவென்று இழுத்து செல்லப்படுகிறீர்கள்.

நிவர்த்தி: எங்கே அழைத்துப் போகிறார்கள் என்று கேட்டு வைத்துக் கொள்ளவும்.

5. உபாதை: அருகாமையில் அமர்ந்திருப்பவர் அளவளாவினாலும், எதிரொலியாக ஒசைக் கேட்கிறது.

காரணம்: காதில் கோப்பையை வைத்திருக்கிறீர்கள்.

நிவர்த்தி: பைத்தியக்காரி போல் நடந்துகொள்வதை நிறுத்துங்கள்.

Repeal of Prohibition6. உபாதை: அறை எக்குத்தப்பாக ஆடுகிறது. அனைவரும் வெள்ளுடை தரித்திருக்கிறார்கள். பழுதுபட்ட எம்பி3-ஆக இசை மீண்டும் மீண்டும் ரிபீட் ஆகிறது.

காரணம்: நீங்கள் ஆம்புலன்ஸில் இருக்கிறீர்கள்.

நிவர்த்தி: அசைய வேண்டாம். படாத இடத்தில் பட்டுவிடப் போகிறது.

7. உபாதை: உங்கள் குடும்பத்தினர் அனைவரும் அன்னியர் போல் புதிதாக தோன்றுகிறார்கள்.

காரணம்: வீடு மாறி வந்துவிட்டீர்கள்.

நிவர்த்தி: தங்கள் உறைவிடத்துக்கு அழைத்துச் செல்ல வேண்டுகோள் வைக்கவும்.


| |

Audio Blog – Testing (Future of Islam)

தொலைபேசி மூலம் ஒலிபேசுவது எப்படி என்பதற்கான முயற்சி.

புத்தகத்தைப் படிப்பது: நான்
புத்தகம்: The Shia Revival – Vali Nasr

Subscribe Free
Add to my Page

கேட்க இயலாவிட்டாலோ, வேறு ஏதாவது பிரச்சினை இருந்தாலோ, குரலில் இருக்கும் அவசரம், பதட்டம் (:-) குறித்த பிற கருத்து இருந்தாலோ, பின்னூட்டமிடவும்.


| |

பிண அரசியல்

  • பஹல்பூர் ரயில்வே நிலையத்தில், ரயில் ஒன்றின் பெட்டியின் மீது மேம்பாலம் விழுந்ததில் அந்தப் பெட்டி முழுமையாக இடிபாடுகளால் மூடப்பட்டது.
  • அதிகாலை வேளையில் இந்த விபத்து நிகழ்ந்த போது அந்தப் பெட்டியில் நூற்றுக்கும் அதிகமான பயணிகள் இருந்ததார்கள்.
  • 140 ஆண்டுகள் பழமை வாய்ந்த பாலத்தில் கீறல் விழுந்ததால் பயணிகள் செல்வதில்லை. எனவே அதை இடித்து அகற்ற ரெயில்வே உயர் அதிகாரிகள் முடிவு செய்தனர். அதற்கு முன்னதாக அதன் அருகில் புதிய மேம்பாலம் கட்டப்பட்டது. சமீபத்தில் புதிய நடை மேம்பாலம் திறக்கப்பட்டது. இதையடுத்து பழைய நடைமேம்பாலம் கடந்த 4 நாட்களாக இடிக்கப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதி நேற்று இடிக்கப்பட்ட நிலையில் அப்படியே விடப்பட்டு இருந்தது. அந்தமீதி பகுதி வலு இல்லாமல் இருந்ததை ஊழியர்கள் யாரும் கவனிக்கவில்லை.
  • சனிக்கிழமை இந்த பாலத்தின் ஒரு பகுதியையும் மேம்பாலத்தை தாங்கியிருந்த மூன்றாவது தூணையும் அகற்றும் நடவடிக்கையில் ரயில்வே துறையினர் ஈடுபட்டிருந்தபோது இச்சம்பவம் நேரிட்டது. ரெயிலின் S-8 (நடுத்தர வர்க்கம் முன்பதிவு செய்து பயணிக்கும்) பெட்டி அப்பளம் போல நொறுங்கியது.
  • சுமார் 2 மணி நேரமாக மீட்புபடைவீரர்கள் வரவில்லை. ஆம்புலன்சும் வரவில்லை. இதையடுத்து பகல்பூர் ரெயில் நிலையத்தில் இருந்த பயணிகளே மீட்பு பணியில் ஈடுபட்டனர். 14 பேரை அவர்கள் மீட்டனர். இடிபாடுகளில் சிக்கித் தவித்த பயணிகளை உபகரணங்கள் ஏதுமின்றி வெறுங்கைகளாலேயே பலரும் மீட்டனர்.
  • விபத்து நடந்த இடத்தை இடைத்தேர்தலுக்காக பிரச்சாரம் செய்ய வந்த ரெயில்வே மந்திரி லல்லு பிரசாத்யாதவ் பார்வையிட்டார். பலியானர்களின் குடும்பத்தினருக்கு ரூ. 1 லட்சம் உதவியும், அவர்களது குடும்பத்தின் தகுதியானவர்களுக்கு ரெயில்வேதுறையில் வேலையும் வழங்கப்படும் என்று அறிவித்தார்.
  • பாலத்தின் அருகே ஓடிக்கொண்டிருந்த ரயிலால் ஏற்பட்ட அதிர்ச்சி காரணமாக பாலம் இடிந்து விழுந்ததாக கூறப்படுகிறது. எனினும் தகுந்த பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்காததாலேயே மோசமான இச் சம்பவம் நடந்திருக்கிறது.
  • “மேம்பாலம் இடிந்து விழுந்த சம்பவம் தொடர்பாக 2 பொறியாளர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். மேம்பாலத்தை இடிக்கும் பணியைப் பார்வையிடும் பொறுப்பு இவ்விரு பொறியாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தது. அவர்கள் தங்கள் கடமையை சரிவர செய்யாததால் இத்தகைய துரதிருஷ்ட சம்பவம் நேரிட்டுவிட்டது,” என்றார் ரயில்வே அமைச்சர் லாலு பிரசாத்.
  • ‘விபத்து நடந்த போதெல்லாம், என்னுடைய ராஜினாமாவை லாலு பிரசாத் கோரினார். நான் அவரை மாதிரி லாலுவின் பதவி விலகலைக் கோரப் போவதில்லை‘ என்று பெருந்தன்மையாக விட்டுக் கொடுத்துப் பேசியுள்ளார் முன்னாள் இரயில்வே அமைச்சர் நிதீஷ் குமார்.
  • Bhagalpur train mishap kills 47 – NDTV.com: Chief Minister Nitish Kumar’s response was to blame his archrival Union Railway Minister Lalu Yadav for the accident. “Such an incident has never happened before and should never happen again. The whole railway department seems to lack leadership,” said Nitish Kumar.
  • இரயில்வே அமைச்சகம் பயணிகள் பாதுகாப்புக்காக ஒதுக்கிய நிதி: ரூபாய் 17,000 கோடி.
  • டீசல் விலை குறைப்பால் ரயில்வே துறைக்கு ரூ.220 கோடி லாபம் கிடைக்கும் என மத்திய ரயில்வே இணை அமைச்சர் ஆர்.வேலு தெரிவித்தார்.
  • In Bihar, goons take care of Gods : Bihar, temples, auction : IBNLive.com : CNN-IBN – இரயில்வேயை பொறுப்பற்ற அதிகாரிகளின் அசமஞ்சமான நிர்வாகத்தில் இருந்து, தாதாக்களிடம் ஒப்படைத்தால் கூட, மனித நேயத்தோடும் நேர்மையாகவும் நடத்துவார்கள்.
  • Train rams into auto, 18 killed – Railway Ministry will not construct Underpass or Flyover « Tamil News: தரம் உயர்த்த தகுதி இல்லாததால் 17 பேர் பலியான புதுப்பாக்கத்தில் ரெயில் கேட் அமைக்க இயலாது: ரெயில்வே அதிகாரி விளக்கம்.
  • தன்னுடைய உல்லாசப் பண்ணை வீட்டுக்கு செல்லும் வழியில் ‘லெவல் க்ராஸிங்’ இருந்ததால், சிறப்பாக துரிதகதியில் ஃப்ளை-ஓவர் கட்டிக் கொண்டவர், அன்றைய இரயில்வே துறை அமைச்சர் ஜாஃபர் ஷரீஃப்.

    அதே மாதிரி இந்தியாவெங்கும் அவருக்கும் மற்ற ரயில்வே மந்திரிகளுக்கும் தோட்டத்து வீடுகளைக் கட்டிக் கொடுப்பதன் மூலமே, இந்த மாதிரி பொதுமக்கள் பிணமாகும் விபத்துகளை தவிர்க்க இயலும்.

    செய்தி ஆதாரம்: தினமணி.காம், மாலைமலர்.காம் மற்றும் தி ஹிந்து


    | |

  • Why Software developers are similar to Bloggers?

    இன்று மைக்ரோசாஃப்ட் நுட்பங்களைக் கற்றுக் கொடுக்கும் சந்திப்புக்கு செல்லும் வாய்ப்பு. கொஞ்சம் தெரிந்த விஷயங்களை நீட்டி முழக்கியதிலும், தெரியாத விஷயங்களை அவசரகதியில் ஓட்டியதிலும் போர் அடித்ததில் கிடைத்த ஞானோதய வெளிப்பாடுகள்:

    1. காபி/பேஸ்ட் செய்வதில் சூரர்.
    2. மேனேஜர் வசைபாடினால், இந்தக் காதில் வாங்கி அந்தக் காதில் விட்டு விடுபவர்.
    3. தான் எழுதியது அனைத்தும் குறையொன்றுமில்லாத குணக்குன்று என்று தீவிரமான நம்பிக்கை கொண்டவர்.
    4. தன்னுடைய code-ஐ, பத்து மாதம் கழித்து படித்துப் பார்த்தால், தனக்கே context புரியாதபடி, design செய்பவர்.
    5. தன் இஷ்டப்படி user-interface வடிவமைப்பவர். பயன்படுத்தப் போகிறவரின் வேண்டுகோளுக்கு செவிமடுப்பது போல் தோன்றினாலும், தான்தோன்றித்தனமாக அமைத்து, அதுதான் அவர்களின் விருப்பம் என்று வாதாடுபவர்.
    6. முந்தா நேற்று சி; நேற்று ஜாவா; இன்று சி#; நாளை ?? என்று பச்சோந்தியாய் ஜெயிக்கிற கட்சிப்பக்கம் சாய்பவர்.
    7. இவரின் பேச்சும் எழுத்தும் சாதாரணர்களுக்கு ஒரு எழவும் விளங்காது. மொழிபெயர்க்க tech writer அவசியம்.
    8. Object oriented, W3C validation, pattern, BCNF, என்றெல்லாம் வக்கணையாக வாய்கிழித்தாலும், செயலில் ஒன்றும் காட்டாமல் குழப்பமாக சமரசங்களை செய்து கொள்பவர்.
    9. தங்களுடைய நிரலிகளைப் பயன்படுத்துபவர், குற்றங்குறை கண்டுபிடித்து முறையிட்டால், அவர்களை விநோத ஜந்து போல் உதாசீனப்படுத்துபவர்.
    10. தனக்குப் பிடித்தமான மென்கலனைக் கொண்டு எழுதத் தெரியாதவரை வேற்று கிரகத்து ஆசாமி போல் அசூயை கொண்டு ஒதுக்குபவர்.
    11. Code-இல் பிழை சொன்னால், தனி மனிதத் தாக்குதலாக ஃபீலிங் ஆகி சுருங்கிப் போகிறவர்.
    12. பக்கம் பக்கமாக code எழுதினாலும், அதை பலருக்கும் கொண்டு செல்லும் விதமாக, பக்கபலமான டாகுமெண்ட் எழுத சோம்பித் திரிபவர்.
    13. இவர்கள் பேசும் பரிபாஷை வெளியாட்களுக்கு விளங்காது.

    மீட்டிங் முடிந்து போய் விட்டது.


    | | | |