Category Archives: Uncategorized

DMK Govt.’s Whimsy Decisions

Kalki Weekly Magazine’s Thalayangam

சின்ன விஷயங்களும் பெரிய தலைவர்களும்…

‘‘சின்ன விஷயங்களைப் பெரிதாக்க வேண்டாம்; பெரிய விஷயங்களில் ஆழ்ந்த கவனம் செலுத்துங்கள்’’

என்று முதல்வர் கருணாநிதி தமது சக அரசியல்வாதிகளை நோக்கிப் பேசியிருக்கிறார். மிக உயர்ந்த அறிவுரை இது. நாட்டில் கல்வியின்மை, வறுமை, வேலை வாய்ப்பின்மை, அடிப்படை வசதிகளின்மை, பயங்கரவாதம், வன்முறை… என பெரிய பெரிய பிரச்னைகள் காத்திருக்க, அவற்றைப் புறக்கணித்துவிட்டு உப்பு பெறாத விஷயங்களை ஊதிப் பெரிதாக்கி, அரசியல் ஆதாயம் தேடுவதென்பது நமது அரசியல் கலாசாரமாகவே மாறிவிட்டது.

துரதிர்ஷ்டவசமாக, அறிவுரை சொல்லும் முதல்வரும் இந்தக் கலாசாரத்தில் சிக்கியிருக்கிறார். தமது அறிவுரையைத் தாமே கடைபிடிப்பதில் அவர் முனைப்புக் காட்டாததால்தான் இன்று சிவாஜி கணேசன் சிலை நிர்மாணம் சர்ச்சையில் சிக்கி, நீதிமன்றத்தில் அல்லாடிக் கொண்டிருக்கிறது.

சென்னையில் நடிகர் திலகத்துக்குச் சிலை வைக்கத் தகுதியான இடங்கள் ஏராளமாக இருக்கின்றன. அவற்றை விடுத்து, சாலைப் போக்குவரத்துக்கு இடைஞ்சலாகவும் ஏற்கெனவே நிறுவியுள்ள காந்தி சிலையின் தோற்றத்தைப் பாதிக்கும் விதமாகவும் சிவாஜி சிலைக்கு இடம் தேர்வாக, இதனை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்கு போடப்பட்டிருக்கிறது. ‘வழக்கு விவகாரமெல்லாம் எதற்கு, இது சிறிய விஷயம்; சென்னையில் எத்தனையோ மாற்றிடங்கள் உண்டு’ என்று தமிழக அரசு உடனடியாக வேறு இடம் பார்த்திருக்கலாம். வழக்கு ரத்தாகியிருக்கும்; சர்ச்சை ஓய்ந்திருக்கும். ஆனால், அதற்குப் பதில் நீதிமன்றத்தில் மோதலுக்கு வழிவகை செய்துள்ளது தமிழக அரசு!

கோயில்களில் பூர்ண கும்ப மரியாதை செய்வது, பரிவட்டம் கட்டுவது போன்றவை கர்ண பரம்பரையாக விளங்கி வரும் சின்னச் சின்ன பழக்க வழக்கங்கள். உபயதாரர் அல்லது கட்டளைதாரர், நன்கொடையாளர் போன்றவர்களுக்குச் செய்யப்படும் இந்தப் பாரம்பரிய மரியாதையை வர்க்க பேதத்தின் அடையாளமாகக் கருதி, அதனைத் தடை செய்தது அரசு. இந்தச் சின்ன விஷயத்தில் அரசு தலையிட்டதால்தான் இதுவும் பெரிய விவகாரமாகி அனைவர் கவனத்தையும் கவர்ந்தது. சில தினங்களில், முதல்வர் பின்வாங்கி,

‘‘மடாதிபதிகள், ஆதீனங்களுக்குப் பூர்ணகும்ப விஷயத்தில் விதி விலக்கு’’

என்றும் அறிவிக்கச் செய்திருக்கிறார். இதுபோன்ற மதம் சார்ந்த, வழிபாடு சார்ந்த விஷயங்களில் அரசாங்கத்தின் தலையீடு அவசியமற்றது என்பதுடன் நேர விரயமும்கூட. ஆனால், இங்கே அரசியல் ஆதாயம் கருதி சின்ன விஷயத்துக்குப் ‘பெரிய’ மாயத் தோற்றம் பூசப்படுகிறது.

உண்மையிலேயே கவனம் பெற வேண்டிய மிகப்பெரிய விஷயமோ, மிக அற்பமான விஷயம் போல அலட்சியத்துக்கு உள்ளாகி மோசமான பின்விளைவுகளை ஏற்படுத்துகிறது. என்.எல்.ஸி. பங்குகள் விற்பனை குறித்த அமைச்சரவைக் கூட்டத்தில் தி.மு.க. அமைச்சர்கள் யாருமே கலந்து கொள்ளவில்லை. இதனை ஒப்புக்கொண்ட டி.ஆர்.பாலு, ‘‘கூட்டத்தின் முடிவை ஏற்பது தவிர எங்களுக்கு வேறு வழியில்லை’’ என்று பேசியுள்ளார். இந்தப் பெரிய விஷயத்தில் தி.மு.க. தலைவரும் அக்கட்சியின் மத்திய அமைச்சர்களும் கவனம் செலுத்தத் தவறியதால் ஏகப்பட்ட கிளர்ச்சி, குழப்பம். இறுதியில் தி.மு.க. தலைவர் மத்திய அரசை அச்சுறுத்த, பிரதமர்தான் அவமானத்தையும் தலைகுனிவையும் சந்திக்க வேண்டி வந்தது.

‘சின்ன விஷயங்களைப் பெரிதுபடுத்த வேண்டாம்’ என்று முதல்வர் கூறியதன் பின்னணியையே எடுத்துக் கொண்டாலும், சட்டசபையில் ஆளுங்கட்சி முதல்வரும் எதிர்கட்சித் தலைவரும் எதிரெதிராக அமர்வது மரபு. அவ்வாறே எதிர்கட்சித் தலைவர்களும் ஆளுங்கட்சி அமைச்சர்களும். திடீரென்று இருக்கைகள் இடம் மாற்றப்படுகின்றன. எதிர்கட்சியினர் பலர் முதல்வரைப் பார்க்க முடியாது. ஆளுங்கட்சியினர் பலர் எதிர்கட்சித் தலைவரைக் காண முடியாது. ‘‘இதில் உள் நோக்கம் இல்லை; சின்ன விஷயம். அவைத் தலைவரின் கட்டுப்பாட்டில் உள்ள விஷயம்’’ என்று முதல்வர் வாதாடுகிறார். முதல்வர் கூறுவதுபோல் சின்ன விஷயமாயின்

‘மரபுகளை மீறி இடமாற்றம் செய்வானேன்…? அம்மாற்றத்துக்கு உள்நோக்கம் கற்பிக்கப்பட இடமளிப்பானேன்?’

என்ற கேள்வியும் எழத்தானே செய்கிறது!

Ullatchi Therthalum, Avasara Sattamum!

Aaraamthinai.com

உள்ளாட்சி தேர்தலும் அவசர சட்டமும்! :: கேடிஸ்ரீ

மறுபடியும் ஒரு தேர்தலை சந்திக்கவிருக்கிறது தமிழகம். வரும் அக்டோபர் மாதத்துடன் தற்போதைய உள்ளாட்சி அமைப்புகளின் பதவிக்காலம் முடிவடைவதையொட்டி தமிழக அரசுக்கு உள்ளாட்சி தேர்தலை அக்டோபர் மாதத்திற்குள் முடித்துவிடுவதற்கான கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

இத்தேர்தலை மனதில் கொண்டு தமிழக முக்கியக் கட்சிகள், பல்வேறு மட்டங்களில் அதிரடியான மாற்றங்களை தங்கள் கட்சிக்குள் செய்து வருகின்றன. அதுமட்டுமல்லாமல் உள்ளாட்சி தேர்தலில் கணிசமான இடங்களை கைப்பற்றும் விதத்தில் தங்களுக்கான வியூகங்களையும் வகுத்து வருகிறது.

முன்னதாக முக்கிய எதிர்க்கட்சியான அ.தி.மு.க நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தலுக்குப் பின் கட்சியின் பல்வேறு மாவட்ட நிர்வாகிகளையும், செயலர்களையும் அதிரடியாக மாற்றியமைத்து வர எண்ணியது. இதன் விளைவாக அ.தி.மு.க பொதுச்செயலர் ஜெயலலிதா கட்சியில் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை தற்போது செய்து வருகிறார். ஒருபுறம் இதுவரை ஒதுங்கியிருந்த பலருக்கு முக்கிய பொறுப்புகளை வழங்கி அதிர்ச்சி அளித்திருக்கிறார் என்றால் மறுபுறம் முந்தைய அ.தி.மு.க அரசின் அமைச்சராக இருந்த பாண்டுரங்கன், தென் செனனை மாவட்டத் தலைவராக இருந்த ஆதிராஜாராம் போன்றவர்களை அப்பதவியிலிருந்து நீக்கி அதிர்ச்சி அளித்திருக்கிறார். முன்னாள் அமைச்சர் செம்மலைக்கு முக்கிய பொறுப்பு அளித்து அவரை திகைப்பில் ஆழ்த்தியிருக்கிறார். அதிரடி நடவடிக்கைகளும், களையெடுப்பும் தொடர்ந்து நடைப்பெற்று வருகின்றன.

கடந்த ஐந்தாண்டுகளுக்கு முன்பு நடைப்பெற்ற உள்ளாட்சி தேர்தலில் விஜயகாந்த் ரசிகர் மன்றத்தினர் கணிசமான அளவிற்கு இடங்களை கைப்பற்றிய நிலையில் தற்போது விஜயகாந்த் அரசியல் கட்சி தொடங்கியப் பிறகு நடைபெறவிருக்கும் முதல் உள்ளாட்சி தேர்தல் இது. இத்தேர்தலில் எப்படியாவது அதிகளவில் இடங்களை கைப்பற்ற வேண்டும் என்பதில் தீவிரமான கவனம் செலுத்தி வருகிறார். சுமார் 30 வருடங்களுக்குப் பிறகு நடைபெற்ற பாண்டிச்சேரி உள்ளாட்சி தேர்தலில் விஜயகாந்த்தின் தேசிய முற்போக்கு திராவிட கழகம் காரைக்கால் நகராட்சியை கைப்பற்றியது அக்கட்சியினரிடையே மிகுந்த உற்சாகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

தி.மு.க தலைமையிலான கூட்டணி கட்சிகள் வருகிற உள்ளாட்சி தேர்தலிலும் தங்கள் கூட்டணியை அப்படியே தொடர முடிவு செய்துள்ளன. ம.தி.மு.க, விடுதலை சிறுத்தை போன்ற அ.தி.மு.க. கூட்டணி கட்சிகளும் அ.திமு.கவுடனான தங்களது கூட்டணி உள்ளாட்சி தேர்தலிலும் தொடரும் என்று அறிவித்துள்ளன.

இந்நிலையில் கடந்த வாரம் தமிழக அரசு உள்ளாட்சி அமைப்புகளுக்கான அவசர சட்டம் ஒன்றை பிறப்பித்துள்ளது. இந்த அவசர சட்டத்திற்கு ஆளுநர் பர்னாலாவும் ஒப்புதல் அளித்துள்ளார். மேயர் மற்றும் துணை மேயரை கவுன்சிலர்களே தேந்தெடுக்கும் விதத்தில் இச்சட்டம் வழிவகைச் செய்கிறது. அதுமட்டுமல்லாமல்

மேயர் அல்லது துணை மேயர்களின் செயல்பாடுகள் திருப்தியில்லாதபட்சத்தில் அவர்கள் மீது கவுன்சிலர்கள் நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டுவருவதற்கும் இச்சட்டம் வழிவகைச் செய்கிறது.

இதுவரை மேயர் மற்றும் துணைமேயர்களை மக்களே தேர்ந்தெடுத்து வந்தனர். இந்த அவசர சட்டம் மூலம் அந்த முறை மாற்றப்பட்டுள்ளது. மக்களால் நேரடியாக தேர்ந்தெடுக்கப்படும் மேயரோ அல்லது நகராட்சித் தலைவரோ வீற்றிருக்கும் மன்றத்தில் அவரது கட்சியை சேராத அதிக மன்ற உறுப்பினர்கள் இடம் பெற்றிருந்தால் அந்த மேயரோ அல்லது தலைவரோ அந்த கூட்டத்தை சுமூகமாக நடத்தி செல்வதில் மிகவும் சிரமத்திற்குள்ளாவது தவிர்க்க முடியாததாகிவிடுகிறது.மேலும் அங்கு எந்த ஒரு திட்டத்தையும் செயல்படுத்த முடியாத சூழல் உருவாகிறது. இதனைக் கருத்தில் கொண்டு பார்க்கிற போது இந்த அவசர சட்டம் வரவேற்கபடுகிற ஒன்று.

ஆனால் கட்சி சார்பில்லாமல் அந்தந்த ஊர்களில் – அந்தந்த இடங்களில் இருக்கும் செல்வாக்கு மிக்கவர்கள் நேரிடையாக தலைவராக இனி வருவதை இந்த வகையான சட்டம் தடுக்கும் என்பது இதில் உள்ள பாதகமான அம்சம் எனலாம். இதனால் எல்லா இடங்களிலும் கட்சிகளின் ஆதிக்கம் வளர்வதற்கு ஏதுவாக இருக்கும்.

தமிழகத்தில் 500க்கும் குறைவான மக்கள் தொகை கொண்ட சிறப்பு நிலை பஞ்சாயத்துக்கள் 561ஐ தற்போது பேரூராட்சிகளாக மாற்றவும் அவசர சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கிராப் பஞ்சாயத்து, பஞ்சாயத்து யூனியன், மாவட்ட பஞ்சாயத்து, பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சி என்ற அடிப்படையில் உள்ளாட்சி அமைப்புகள் இதுவரை செயல்பட்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழக அரசு பிறப்பித்துள்ள அவசர சட்டத்தை பாட்டாளிகட்சி தலைவர் ராமராஸ் வரவேற்றாலும், ஒரு கட்சியின் சார்பில் தேந்தெடுக்கப்படும் மன்ற உறுப்பினர்கள் பல்வேறு காரணங்களுக்காக வேறு கட்சியைச் சேர்ந்தவர்களுக்கு வாக்களித்து விடும் அபாயம் இருக்கிறது. அதைத் தடுக்க அப்படி வாக்களிக்கும் மன்ற உறுப்பினரின் பதவியைப் பறிக்க வகை செய்ய வேண்டும் என்றும் யோசனை ஒன்றை அரசுக்கு தெரிவித்துள்ளார். மேலும் அவர் நாடாளுமன்ற, சட்டப்பேரவை உறுப்பினர்கள் கட்சிமாற தடைச் சட்டம் உள்ளதுபோல் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் கட்சி மாறுவதைத் தடுக்கவும் வகை செய்ய வேண்டும் என்றும், மற்றும் தலைவர் தேர்தல் ரகசிய வாக்கெடுப்பு மூலம் இல்லாமல் வெளிப்படையாக நடைபெற வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

இந்நிலையில் இந்த அவசர சட்டத்தை அ.தி.மு.க பொதுசெயலரும், எதிர்க்கட்சி தலைவருமான ஜெயலலிதா கடுமையாக விமரிசித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

அவசர அவசரமாக இந்த சட்டத்தை கொண்டு வருவதற்கான காரணம் என்ள என்றும், சட்டசபை கூட்டத்தொடருக்கு முன்பே இச்சட்டம் கொண்டு வருவதன் நோக்கம் என்ன? என்றும் வினா எழுப்பிய அவர், மக்கள் நலனைக் கருத்தில் கொண்டு இச்சட்டம் கொண்டு வரவில்ல என்று ஆளும் தி.மு.க மீது குற்றம் சாட்டியுள்ளார். அதுமட்டுமல்லாமல் இச்சட்டம் உள்ளாட்சி அமைப்புகளை மேம்படுத்தும் விதத்தில் உருவாக்கப்படவில்லை என்றும் குறை கூறியுள்ளார்.

எது எப்படியிருந்தாலும் இந்த அவசர சட்டத்தின் மூலம் பலன் அடையக்கூடிய கட்சிகள் தி.மு.கவும், அ.தி.மு.கவும்தான் என்று சொல்லலாம். ஏனென்றால் இந்த இரு கட்சிகள் தான் அதிக எண்ணிக்கையில் போட்டியிடும் நிலையில் உள்ளது. மற்ற கட்சிகள் எல்லாம் குறைந்த எண்ணிக்கையில்தான் போட்டியிட முடியும்.

Sheepy Fox Intelligence

ஆடும் நரியும் – ஊன்விலைஞருடன்

PBF - The Perry Bible Fellowship - a comic strip by Nicholas Gurewitch

எனக்குத் தோன்றியவை:

  • வாக்காளர்களும் வேட்பாளரும் – அரசியல் தலைவருடன்
  • கால்பந்து ரசிகர்களும் ஜிதானே & மாடேராசியும் – சூதாட்டக்காரருடன்
  • பக்தர்களும் ஆறுமுகச்சாமிகளும் – வலைப்பதிவாளருடன்
  • செய்திகளும் நானும் – CERT-IN (Indian Computer Emergency Response Team) உடன்
  • ரசிகர்களும் கமலும் – கந்துவட்டிக்காரர்களுடன்
  • பொதுமக்களும் தீவிரவாதிகளும் – அண்டை நாடுகளுடன்

    உங்களுக்குத் தோன்றிய பொருத்தங்களும் தலைப்புகளும் கசாப்புக்கடைக்காரனுடன் வரவேற்கப்படுகின்றன

    நன்றி: PBF comic strip | PBF – The Perry Bible Fellowship – Nicholas Gurewitch


    | |

  • Six Word Stories

    ஆறு வரிகளில் கதை சொல்ல அழைக்கிறார் எர்னஸ்ட் ஹெமிங்வே. அவர் எழுதியது:

    ‘For sale: baby shoes, never used.’

    சுஜாதா 55 வார்த்தைகளில் சிறுகதை எழுத சொன்னது அந்தக் காலம். ஆறு வரி கதைகள் நிகழ்காலம்.

    என்னுடைய முயற்சிகள் சில:

  • வலைப்பதிவுக்குத் தடை. இந்தியாவில் 52.6% உற்பத்தி பெருக்கம்.
  • தெருப்பொறுக்கி என்னையே முறைக்கிறான். நான் அவளை முறைக்கிறேன்.
  • “என்ன வேண்டும்?” ‘புகழ்’ “ஏன்?” ‘அதுதான் தெரியவில்லை.’
  • கடவுள் மறுப்புக் கொள்கையை எழுதியவனை தரிசிக்க தடியடி.
  • சினிமா பார்ப்பதற்கு முன் IMDB.com படிக்கிறான் விமர்சகன்.
  • ரயிலில் குளிரூட்டு சுணங்கல். வாயிற்கதவைத் திறந்தவனுக்கு மோட்சம்.
  • குண்டுவெடிப்பு – 250 இறப்பு: தலைப்புச்செய்தி. பட்டினி சாவு?

    Shamash Says… : “The Hemingway Challenge வலைப்பதிவில் இருந்து சில ஆங்கில ஆறு வரிக் கதைகள்:

  • “Forgive me!” “What for?” “Never mind.” – John Updike
  • Eyeballed me, killed him. Slight exaggeration.– Irvine Welsh
  • Satan- Jehovah- fifteen rounds. A draw. – Norman Mailer
  • I saw. I conquered. Couldn’t come. – David Lodge
  • Oh, that? It’s nothing. Not contagious.- Augusten Burroughs
  • She gave. He took. He forgot – Tobias Wolff.

    வந்தியத்தேவன் முன்னர் எழுதிய 55 வார்த்தை கதைகள்: தொடரும் குளம்பொலி!!! வந்தியத்தேவன் :: வீட்டுக்கு வீடு | நிதர்சனம் | எங்கள் அண்ணா | தனயன்


    | |

  • Blog Imsai Arasan

    இம்சை அரசன் Web 2.0 இந்திய தகவல் தொடர்புத் துறை

    தமிழோவியத்திற்கு நன்றி.

    மத்திய விஜிலன்ஸ் துறை (சி.வி.சி.) வாயிற்காவலன்: “மன்னா, நமது ஒற்றன் வந்திருக்கிறான்.”

    இந்திய தகவல் தொடர்புத் துறை அமைச்சர் சுயாநிதிகாரன்: “உங்களின் ஒற்றன் எப்போதுமே தாமதமாகத்தான் வந்து சேர்கிறார். கூகிளை யானைக் காலில் கட்டி இழுக்க வைத்து மண்டியிட வைத்த சீனாவும், தனக்கென புது இராஜபாட்டையை உருவாக்கிய ஜெர்மானியும், இணையத்தைக் கட்டுப்படுத்திய பிறகு நெட்ஸ்கேப் ஆமை போல் 56 கேபிபிஎஸ் நடை பயின்று வந்து சேர்கிறார் !”

    இம்சை அரசன் Web 2.0 மன்னாதி மன்னர் தன்தலையாட்டி சிங்குச்சா: “அவன் மைக்ரோசா·ப்ட் போன்றவன். ஆப்பிள், சன் என்று பெரும்புள்ளிகள் எதை செய்தாலும் சிறப்பாக சுட்டு, அதை நமக்கேற்றவாறு மாற்றிக் கொள்ளும் மைரோசா·ப்ட். இவனோ, சீனா, சவூதி அரேபியா, ஜெர்மனி என்று எவர் அரண் போட்டாலும், நமக்கேற்றவாறு spyware செய்பவன்.”

    சுயாநிதி: “சி.வி.சி. காரரே, ஒற்றரை உள்ளே அனுப்பும்.”

    சி.பி.ஐ. ஒற்றன்: “பஞ்சாப் சிங்கம், சீக்கியர்களின் தங்கம், கேம்ப்ரிட்ஜ் கலங்கிய, ஆக்ஸ்·போர்ட் அரவணைத்த, ராஜ்ய சபை நாயகன், இம்சை அரசன், Web 2.0, மன்னாதி மன்னர், தன்தலையாட்டி சிங்குக்கு வணக்கங்கள்.”

    வெப் 2.0 மன்னர்: (மிரட்சியுடன்) “சென்ற முறை நான் நியமித்த சி.பி.ஐ. தலைவர் என்ன ஆனார்?”

    சுயாநிதி: “அவன் ‘ரகு’ வம்ச இணையத் தளத்திற்கு திரைப்படங்களின் உருக்கவர் பெடி அச்சுகளைத் தருவதற்கு தடை விதித்ததால், உங்களைக் கேட்காமல் நிலக்கரி அமைச்சகத்துக்கு அவனை மாற்றி விட்டேன்!”

    வெப் 2.0 மன்னர்: “என்னை மாற்றாத வரைக்கும் சரி சுயாநிதி! மூக்குப் பொடி மாதிரி என்னவோ சொல்கிறீரே? அது என்ன?”

    சி.பி.ஐ. ஒற்றன்: “மத்திய சென்னை மாணிக்கம், ரகு வலையின் இளவல், தொலைத்தொடர்பு காத்தோன், தகவல் மீட்டோன், அமைச்சருள் அதிசயம், அண்ணன் சுயாநிதி அவர்கள் – ‘கேமிரா ப்ரிண்ட்’டைத்தான் தேமதுர திராவிடத் திருநாட்டின், ‘ரகு வெப் 2.0’ மொழியில், அப்படி சொல்கிறார் மன்னவா!”

    மத்திய தகவல்துறை (சி.ஐ.சி.) வாயிற்காவலன்: “மன்னரே, தங்களை உடனடியாக அழைத்து வர அரசியார் கட்டளையிட்டார்.”

    வெப் 2.0 மன்னர்: “அச்சச்சோ! மார்க்கசீயத்து, காம்மனீசியத்து குறுநில மன்னர்களிடம் இருந்து கப்பம் கட்டுவதற்கு புதிதாக என்ன மிரட்டல்கள் வந்திருக்கிறதோ? போய் பார்த்து விட்டு வருகிறேன்”

    (மன்னர் மின்னலென மறைகிறார்.)

    சுயாநிதி: “சொல்லுமய்யா சி.பி.ஐ. என்ன புதிய விஷயம்?”

    சி.பி.ஐ. ஒற்றன்: “பாதுகாப்புத் துறைக்கு வேண்டிய தகவல்களுடன் வந்திருக்கிறேன். நமது நாட்டில் நான்கு மண்டபங்கள் இருக்கிறது.”

    (திரை மரைவில் இருந்து ‘முன்னேற்ற கழக லெனின்’, சுருக்கமாக ‘முக லெனின்’ வெளிப்படுகிறார்.)

    முக லெனின்: “சென்ற ஆட்சியில் நான் நகரத் தந்தையாக இருந்த போது கட்டியதுதான் இந்த நான்கு மண்டபங்களும். சொல்லப் போனால், இன்னொன்று, பாதி முடிந்த தருவாயில் அப்படியே இருக்கிறது. நான் மீண்டும் நகரத்…”

    சி.பி.ஐ. ஒற்றன்: “என்னது இது? ஒற்றனுக்கே ஒற்றனா? இவர் எப்படி தடாலடியாக குதித்தார்?”

    சுயாநிதி: “மண்டபம் என்றால் அவர் வந்து விடுவார். அவர் ஹார்ம்லெஸ்… நீங்க கண்டினியூ பண்ணுங்க.”

    சி.பி.ஐ.: “அந்த மண்டபங்களில், மக்கள் கூடிக் கூடி பேசிக் கொள்கிறார்கள். அவர்களில் சிலர் அரசியாரின் ஆதிக்கத்தையும் ‘ரகு வெப்2.0’ செய்யும் சென்ஸார்ஷிப்பையும் பட்டியல் இடுவதைத் தவிர வேறு வேலை இல்லாமல் அலைகிறார்கள்.”

    சுயாநிதி: “யோவ்… நான் தான் தற்காலத் தமிழில் வூடு கட்டுவேன் என்றால், நீயும் ஏன் பன்னித் தமிழுக்கு மாறி விட்டாய்! இந்த மண்டபம் மேட்டரை அர்ஜுன் சிங்கிடம் சொல்லி விடுகிறேன். மண்டபத்தில் இட ஒதுக்கீடு என்று தாக்கீது கொண்டு வந்து விடுவார். அதன் பிறகு மண்டபம் முன்பு சட்டம் ஒழுங்கு சரியில்லை என்று ஹன்ஸ்ராஜ் பரத்வாஜ் பார்த்துக் கொள்வார்.”

    சி.பி.ஐ.: “அது அவ்வளவு சுளுவான முறையில் முடிக்க முடியாது. சிலர் சொந்த வீட்டிலேயே சந்திப்புகளைத் தொடரலாம்.”

    சுயாநிதி: “நான் அன்றே சொல்லி இருக்கிறேன் எல்லாமும் ஒன்றாக ஆக்குவதுதான் நம் குறிக்கோள் என்பதால் நான்கு மண்டபத்தையும் இடித்து விட்டு ‘ரகு வெப்’-இன் அரசாணி அரட்டை அரங்கத்திலேயே இனி கூட்டங்களை நடத்த சொல்லலாம்.”

    (திரை)


    (அடுத்த நாள் அரசவை கூடுகிறது.)

    வெப் 2.0 மன்னர்: “நேற்று சி.பி.ஐ. என்ன சொன்னார்?”

    சுயாநிதி: “வழமையான பதிவுதான் மன்னவா. ஆராய்ச்சி மணி இல்லாததால் ஊரில் ஆராய்ச்சியாளர்கள் அதிகரித்து விட்டார்களாம். மீண்டும் குற்றங்குறையை நேரடியாக அறிய, நான்கு மண்டபத்திலும் மணிக்கூண்டு கட்டி, பொறியில் சிக்கும் எலிகளைப் போல் புலம்புபவர்களை அமுக்கிப் பிடிக்க வேண்டும்.”

    வெப் 2.0 மன்னர்: “என்னவோ நடக்கட்டும்.”

    சுயாநிதி: “யாரங்கே… உடனடியாகப் எலிப்பொறிகளைப் போன்ற மணி-மனிதப்பொறிகளைக் கட்ட டெண்டர் விடுக.”

    (திரை)


    (இரண்டு மாதம் கழித்து)

    சுயாநிதி: “மனிதப் பொறிகளை வைப்பதை விட எலிகளை மண்டபத்தில் உலாவ விட்டாலே போதுமானது என்று திட்ட கமிஷன் ஆய்வறிக்கை சொல்கிறது மன்னா!”

    வெப் 2.0 மன்னர்: “அப்படியா? பிறகு ஏன் சென்ற மாதம் நான்கு மண்டபங்களைக் காவல் காக்கவும், மனிதப் பொறி அமைக்கவும், கூட்டங்களை வேவு பார்க்கவும் – மூன்று புதிய துறைகள் அமைக்கப்பட்டது?”

    சுயாநிதி: “அவை இந்த அறிக்கை சமர்ப்பிக்கப் படுவதற்கு முன் நியமிக்கப் பட்டது மன்னா.”

    வெப் 2.0 மன்னர்: “இப்பொழுது அவை என்ன ஆகும்?”

    சுயாநிதி: “திட்டக் குழு அடுத்த ஆய்வறிக்கையை தயார் செய்யும் வரை ‘எப்படி செயல்படும்’ என்று திட்டம் தீட்டிக் கொண்டிருக்கிறது மன்னவா.”

    வெப் 2.0 மன்னர்: “மண்டபங்களின் உள் கட்டமைப்பை சீர்குலைக்க நிதி அமைச்சரிடம் பெற்ற நிதி எவ்விதம் செலவழிக்கப்பட்டது?”

    சுயாநிதி: “ஒற்றறிய ஆட்களை நியமித்தோம். முதல் மாத சம்பளத்துடன் மண்டபத்தில் மூளைச் சலவை செய்யப்பட்டு நம்மை வேவு பார்த்து அவர்களிடம் போட்டுக் கொடுக்க ஆரம்பித்து விட்டார்களே மன்னா”

    வெப் 2.0 மன்னர் தலை சுற்றி கீழே விழுகிறார். செய்தி எட்டியதும், அரசி கோனிகா சாந்தி பதைபதைத்து ஆசையுடன் சிம்ரன் போல் துள்ளி வருகிறார்

    கோனிகா சாந்தி: “சுயாநிதி… உம் சேவையை யாம் மெச்சினோம். பக்கத்து நாட்டு அரசன் உள்நாட்டு கலகத்தை விளைவிக்க குதிரை லாயங்களிலும் நெல் மணிக் கூடாரங்களிலும் தீ வைத்ததை மண்டபகப்படியாரிடம் இருந்து திசை திருப்ப சொன்னோம். அதன் மேல் சென்று மண்டபத்தையே காலி செய்ய வைத்த உம் தீரத்தையும் மதி நுட்பத்தையும் மெச்சினோம். அதற்கு பிரதி உபகாரமாக புதிதாக உம்மால் அமைக்கப்பட்ட மூன்று இலாகாக்களுக்கும் உம்மையே மந்திரி ஆக்குகிறோம்.”

    சுயாநிதி: “இன்னொரு வரம் வேண்டுமே அரசியாரே?”

    கோனிகா சாந்தி: “மண்டபத்தில் பேசுவதைத்தான் ஒட்டுக் கேட்க லாயக்கில்லை. இங்கு மட்டும் நன்றாகக் கேட்பீரே? கேளுங்கள்!”

    சுயாநிதி வாயசைக்க ‘பலாநிதி காரன்’ பின்னணியில் குரல் கொடுக்கிறார்: “நான்கு மண்டபத்திற்கு செல்லும் வழியில், அகலபாட்டை நிறுவி, காசு வசூலிக்க ‘ரகு வம்ச’த்திற்கு மட்டும் அனுமதி தர வேண்டும்.”

    (திரை)


    | |

    Another bad implementation of technology 

    Another bad implementation of technology Posted by Picasa

    Today’s stupid screenshot  

    Today’s stupid screenshot  Posted by Picasa

    Lets bash Thamizmanam (Again :-)

    தமிழ்மணத்தில் சூடு குறைந்து விட்டது.

    சிதம்பரத்துக்கு செல்லும் பேருந்தில் தமிழ் இடம் பெறுகிறதா என்பது முதல் வட இந்திய கங்கையைத் தலையில் சிவன் வைத்துக் கொண்டிருப்பதற்கான காரணம் வரை ஒரு பக்கம் அலசல் நடைபெறுகிறது.

    கால் மாறி ஐந்து சபைகளாக, காரைக்கால் அம்மையாராக பிகேப்ளாக்ஸ் முதல் அன்னியலோகம் வரை காலால் நடந்து, பல பதிவுகளிலும் நடனம் தரிசிக்கும் காலத்தில், நடிகர் திலகத்திற்கு சிலை வைக்கும் வாஸ்துவும் கவிதைகளும் Discovery அமைதியாய் தரையிறங்கியது போல் ஓரமாய் பயணங்களைத் தொடர்கிறது.

    நேற்றைய தினகரன் விளம்பரத்தில் கடற்கரையில் கற்புக்கு (தந்தை பெரியார்?), கவிதைக்கு (வீரமாமுனிவர்), உழைப்புக்கு (கண்ணகி), உண்மைக்கு (பாரதிதாசன்?), எளிமைக்கு (பாரதியார்?), குறளுக்கு (ஔவையார்?), ஒரு சிலை இருக்கிறது என்கிறார்கள். தமிழக கலைக் குடும்பத்தினர் (நான் சத்தியமாக உறுப்பினன் அல்ல) நடிப்புக்காக ஜெயலலிதா சிலை வைக்க சொல்லி இருக்கலாம்.

    ஒருங்குறியையும் தமிழ் எழுத்துருக்களையும் இன்ன பிற எண்ணற்ற இணையப் பயன்பாடுகளையும் அதிகரித்த உமர், திருநங்கை என்றவுடன் நினைவுக்கு வரும் icon லிவிங் ஸ்மைல் வித்யா, ‘கள்ளன் பெரிசா… காப்பான் பெருசா?‘ என்பது போல் தொடர்ந்து தமிழ்மண குறிச்சொற்களில் இடம் பிடிக்கும் ‘பார்ப்பன நாய்கள்‘ என்று சூடு தணிந்து கோடை குளிரில் வாடுபவர்களுக்காக…

    கிண்டி விட்டு சூடேற்றி குளிர் காய கேள்வி கேட்கிறான் இவண்! inblogs.netதமிழ்மணம் ஏன் பிகேப்ளாக்ஸை ஆதரிக்க வேண்டும்???

    மும்பை ரயிலில் குண்டுவெடித்த அமைப்புகளை ஆதரிக்கும், லஷ்கர் இ-தொய்பா போன்ற சக்திகளுக்கு நிதி திரட்ட உதவும், கார்கில் ஆக்கிரமிப்பு முதல் காஷ்மீரில் பேச்சுவார்த்தைக்கு சப்பைக்கட்டு போடும் பாகிஸ்தான் தளத்திற்க்குத்தான் தமிழ்மணம் ஆதரவுக் கரம் நீட்டுமா? அப்படியும் வலைப்பதிவுகளை படித்துத்தான் தீர வேண்டுமா?

    ‘ஆம்’ என்றால் சரி… படிங்க. பின்னூட்டமும் இட்டுடுங்க 🙂

    மற்றவர்களிடம் இருந்து தப்பிப்பதற்காக நல்ல விஷயம் ஒன்றை சொல்லி விட்டு ஓடிடறேன்:

    ‘உள்குத்து”, சொந்த செலவில் சூனியம் வைச்சுக்கிறது, ”போலிப் பின்னூட்டம்’ போன்றவற்றை சில நொடிகள் ஒதுக்கி வைத்துவிட்டு, வம்ஸி மூத்தாவுக்கு ஒரு ‘ஓ!’ போடக்கூடாதா? வலைவாசிகள் என்ற முறையில் அது நம் கடமை இல்லையா?


    | |

    Sundara Aavudaiyappan

    சன் தொலைக்காட்சியின் ‘வணக்கம் தமிழக’த்தில் மாற்றங்கள் நிகழ்வதற்கு முன் ‘சிறப்பு விருந்தின’ராகக் கலந்து கொண்ட பட்டிமன்ற பேச்சாளர் சுந்தர ஆவுடையப்பன்.

    அறிமுகம்

    Introduction in Sun TV's Vanakkam Thamizhagam :: this is an audio post - click to play

    பட்டிமன்றத்தில் இலக்கியமும் நகைச்சுவை கவன ஈர்ப்பும்

    this is an audio post - click to play

    குடிக்காதே தம்பீ குடிக்காதே by திருவள்ளுவர் in திருக்குறள்

    this is an audio post - click to play

    எயிட்ஸ் விழிப்புணர்வு உரை அனுபவங்கள & ஜனரஞ்சகமான பட்டிமன்ற தலைப்புகள்்

    this is an audio post - click to play

    காமத்துப்பால் ரசனை & குறளில் பாலியல் கல்வி

    this is an audio post - click to play

    | |

    Rameswaram – Vanakkam Thamizhagam

    சன் தொலைக்காட்சியின் ‘வணக்கம் தமிழக‘த்தில் பல மாற்றங்கள் இருப்பதாய் சொல்லிக் கொண்டாலும். ‘சிறப்பு விருந்தினர்‘ பகுதியைக் கடாசி விட்டு ‘அறிவியல் விளையாட்டு’, ‘ஊரும் சிறப்பும்’ என்று நாள்தோறும் வேறொரு பகுதியை கொண்டு வந்திருக்கிறார்கள்.

    இராமேஸ்வரம் சிறப்பு நிகழ்ச்சியில் இருந்து…

    Sun TV's New Vanakkam Thamizhagam Special on Cityscape :: Rameswaram - this is an audio post - click to play

  • இராமேஸ்வரத்தில் இஸ்லாமும் கிறித்துவமும்;
  • தனுஷ்கோடி சுனாமி பாதிப்பு;
  • கிணறு தீர்த்தங்கள்;
  • உலகின் முதல் மணல் சிற்பக் கலைஞன்இராமன்
  • பாம்பன் பாலம்
    Rameswaram's Culture - Hinduism, Christianity & Islam :: this is an audio post - click to play


    | |