Category Archives: Today

Eelam Today

1. ஆயுதக் கடத்தல்: போராளிகளுக்காகக் கடத்தப்படவிருந்த 5,000 கிலோ இரும்பு குண்டுகள் & பலகோடி மதிப்புள்ள ஹெராயின் போதைப் பொருள்

அம்பாறை, மட்டக்களப்பு, மன்னார், வவுனியா, யாழ்ப்பாண மாவட்டங்களுக்குச் சென்று வந்த பிரிட்டன், கனடா, ஆஸ்திரேலியா, சுவீடன், அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய கமிஷன் பிரதிநிதிகள் இதைத் தெரிவித்துள்ளனர். சண்டையில் ஈடுபடுபவர்கள் சாதாரண மக்களைக் கேடயமாகப் பயன்படுத்தி, தாக்குதல் நடத்துகின்றனர்.

2. விடுதலைப்புலிகள் கஞ்சா வளர்த்ததாகக் காண்பிக்கும் காட்சிகள் காட்டப்பட்டன

அம்பாறை மாவட்டத்தில் கஞ்சிக்குடிச்சாறில் உள்ள விடுதலைப்புலிகளின் முகாமில் கஞ்சாச் செடிகள் வளர்க்கப்பட்டிருந்ததாகக் கூறப்படும் வீடியோ படங்களை, இலங்கை பாதுகாப்புத் துறையினர் செய்தியாளர்களுக்குக் காண்பித்திருக்கிறார்கள்.

3. ஜனாதிபதிக்கு மாலை அணிவித்த அர்ச்சகர் கொலை

விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்து இலங்கை இராணுவத்தினரால் மீட்கப்பட்ட வாகரைப் பகுதிக்கு கடந்த வெள்ளிகிழமை இலங்கை ஜனாதிபதி விஜயம் செய்திருந்தார். அப்போது அங்கு அவரை வரவேற்றவர்களில் சந்திவெளிப் பிள்ளையார் கோயிலின் அர்ச்சகர் செல்லையா பரமேஸ்வரக் குருக்களும் அடங்குவார்.

முழுமையான ஈழ செய்திகளுக்கு: Puthinam.com

இந்திய தினசரிகளில் ஈழம் குறித்த செய்திகளின் தொகுப்பு: LTTE :: Tamil News

முந்தைய டுடே பதிவு: Hinduism Today

Hinduism Today

கண்ணில் பட்ட இரு செய்திகள்:

1. ஏற்காட்டில் இன்று பெண்கள் மட்டுமே பங்கேற்கும் பூஜை: வழக்கமாக இக்கிராமத்தில் நிர்வாண பூஜை நடக்குமென பரபரப்பாக தகவல்கள் வெளியாகும். இதற்கு மாறாக இந்த ஆண்டு பெண்கள் மட்டுமே பங்கேற்கும் பூஜை என குறிப்பிடப்படுகிறது. மகளிர் போலீசார் மட்டும் அக்கிராமத்துக்குள் செல்ல அனுமதிக்கப்படுகின்றனர்.

‘கிழக்கே போகும் ரயில்’ ஞாபகம் வந்துச்சே!

2. மதுராவில் அனுமன் கண்ணீர் வடிப்பதாக பரபரப்பு: நேற்று காலை சாமி கும்பிட வந்த பக்தர் ஒருவர் அனுமன் சிலையில் இருந்து கண்ணீர் வடியும் காட்சியை பார்த்தார். உடனேஅவர் ஒடிச் சென்று பூசாரி மற்றும் அர்ச்சகரிடம் கூறினார். அவர்கள் வந்து பார்த்த போது அனுமன் கண்களில் இருந்து முத்து முத்தாக நீர் வடிந்தது.

இந்த தகவல் அருகில் உள்ள கான்பூர் நகருக்கும் பரவி யது. உடனே பக்தர்கள் உள்ளூரில் உள்ள அனுமன் கோவிலுக்கு சென்று பார்த்தனர். அங்குள்ள அனுமன் சிலையில் இருந்தும் கண்ணீர் வடிவதாக பக்தர்கள் தெரிவித்தனர்.

‘பெரியார்’ திரைப்படத்தின் பாடல் வரிகளை கேட்டு விட்டு கண்ணீர் சொரிவதாக இன்னும் யாரும் அறிக்கை விடவில்லையா?


| | |