விரைவு நகரம்: அவசர உணவும் தனிமை வாழ்க்கையும்


மலிவு விலை சிற்றுண்டி கடைகள் சிலப்பதிகார காலத்திலேயே கோலோச்சியதை சாலமன் பாப்பையா முதல் சாரு நிவேதிதா வரை பதவுரை கொடுப்பார்கள். மாநகராட்சி சார்பில் ஒரு ரூபாய்க்கு ஒரு இட்லி வழங்கும் சாப்பாட்டு கடைகளை ஜெயலலிதா இன்று திறந்திருக்கிறார்.

அமெரிக்காவில் ஃபாஸ்ட் ஃபுட் மிகவும் பிரபலம் ஏன்?

* தினக்கூலிக்கு ஓடும் மக்கள் அவசர அவசரமாக வேலைக்கு ஓடுவார்கள். ஒரு நிமிடம் தாமதமாக வந்தால் கூட சம்பளப் பிடிப்பு நிறைந்த வாழ்க்கை. அவதி அவதியென ஏதாவது உண்டு கொண்டே உழைப்பதற்கு ஏற்ற உணவு

* அன்றாடங்காய்ச்சி வீட்டில் அரிசி ஸ்டாக் இருக்காது. காய்கறி, பருப்பு எல்லாம் தினந்தோறும் வாங்கி அறுசுவையாக சமைக்க முடியாது. எனவே, சம்பளம் வந்தால் சோறு

* உடைந்த குடும்பங்கள் நிறைந்த அமெரிக்காவில், இல்லத்தரசி இல்லாத சூழலில், மெக்டொனால்ட்சும் சிபோட்லேவும் சுடச்சுட பரிமாறும்.

* சுவையை விட வயிறு ரொம்புதல் முக்கியம். கொஞ்சமாய் சாப்பிட்டாலும், அடுத்த வேளை வரை பசி எடுக்கக் கூடாது. நடு நடுவே நொறுக்குத் தீனிக்கு எல்லாம் பிரேக் கிடைக்காது. ஃபிரென்சு ஃப்ரைசும் கோழிக்காலும் கொழுப்பு நிறைந்த திருப்தி தரும்.

இந்தியாவில் கே.எஃப்.சி. என்பது நண்பர்கள் கூடும் தலமாகவும், சப்வே என்பது பத்தியக் கட்டுப்பாட்டுக்காரர்களின் விருப்ப உணவகமாகவும் இருப்பதுதான் பாரதீய கலாச்சாரமோ?

பின்னூட்டமொன்றை இடுக

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.