“If you want to know how I know about every book here, I can tell you! Because I never read any of them.” – நியு யார்க் டைம்ஸ் விமர்சனம்
மாக்கியவெல்லியைக் கூட மாச்சியவெல்லி என்று விளிப்பவன் நான். மெத்த புத்தகம் பல படித்த பாச்சா வேகுவதில்லை.
ரொம்ப நாள் கழித்து மாதுவை பார்த்தவுடன் விசாரித்தான். ‘நீ நிறைய படிப்பாயே? என்ன புத்தகம் சமீபத்தில் படித்தாய்?’ திரைப்படமாக பார்த்த ‘நேம்சேக்’கில் துவங்கி, பார்பரா காஸ்டெல்லோ தொட்டு, திஸாரஸ் கொடுத்த ரோஜெட் சுயசரிதம் என்று ஜாலியாக ஒரு மணி நேரம் ஓடியேப் போனது.
இந்த மாதிரி பேச (அல்லது வலைக்குறிப்பெழுத) என்ன செய்ய வேண்டும்?
சினிமாவிற்கு ஐஎம்டிபி என்றால், நூல்களுக்கு கம்ப்ளீட் ரிவ்யூ.
அவர்கள் மூலமாகக் கிடைத்த பரிந்துரைதான் இன்றைய பதிவுக்கான மேட்டர்: How to Talk About Books You Haven’t Read – Pierre Bayard
நல்ல நிரலி எழுதுவதற்கான சாமுத்ரிகா லட்சணங்கள், பட்டியல் எதற்கெல்லாம் போடலாம், என்று கேட்டால் நீட்டமாக பேச முடியும். படித்த புனைவுகளை ஆராய்ந்து குதறி ‘ஜஸ்ட் எ மினிட்’ ஆக கூகிள் அரட்டையில் மாட்டிக் கொண்டால்? (சமீபத்தில் கப்பி இப்படித்தான் கேட்டு வைத்தார். இந்த மாதிரி அவஸ்தை படுகிறேன் என்று அறிந்த அலுவல்பிராட்டி, என்னுடைய அரட்டை வசதியையே அனைவருக்கும் நீக்குமாறு உத்தரவிட்டு மானத்தைக் காப்பாற்றியுள்ளார்).
புத்தகங்களை நான்காக பிரிக்க சொல்கிறார்: கேள்விப்பட்டது; கேள்வி கூடப் படாதது; மேலோட்டப் பார்வை இட்டது; மறக்கப்பட்டது.
இது அவரின் கணக்கு வழக்கு:
Books he has started but not finished
- The Man Without Qualities, Robert Musil
- Ulysses, James Joyce
Books he has only heard others talk about
- The Aeneid, Virgil
- Oliver Twist, Charles Dickens
Books he has read but forgotten
- The Interpretation of Dreams, Sigmund Freud
- Steppenwolf, Hermann Hesse
Books about which he admits he knows nothing
- Rhetoric, Aristotle
- Mémoires, Joachim du Bellay
நானும் போட்டுப் பார்த்தால்…
கேள்விப்பட்டது
கேள்வி கூடப் படாதது
- விஷ்ணுபுரம் – ஜெயமோகன்
- கடல்புறா – சாண்டில்யன்
- பாழி – கோணங்கி
மேலோட்டப் பார்வை இட்டது
- குருதிப்புனல் – இந்திரா பார்த்தசாரதி
- பதினெட்டாவது அட்சக்கோடு – அசோகமித்திரன்
- ஜே.ஜே. சில குறிப்புகள் – சுந்தர ராமசாமி
மறக்கப்பட்டது
- கனவுத் தொழிற்சாலை – சுஜாதா
- பொன்னியின் செல்வன் – கல்கி
- காதலெனும் தீவினிலே – எஸ்.ஏ.பி.
- முகமது பின் துக்ளக் – சோ
இந்தக் குறிப்பில் இருக்கும் புத்தகத்தை நான் இன்னும் வாசிக்கவில்லை. நூலகத்தில் எடுத்து இப்போதுதான் ஆரம்பித்திருக்கிறேன். சுருக்கமான அத்தியாயங்கள்; விறுவிறு நடை.
வாசிப்பதே சுகம்; படம் பார்ப்பதே பரமபதம் என்று ஓய்ந்துவிடாமல், ‘எத்துணை காலம்தான் வாசித்து மட்டுமே காலந்தள்ளுவது’ என்று வலைப்பதிவர் போல் துள்ளியெழுந்து சிந்தனைகளை திக்கெட்டும் பரப்ப — எழுதுகோலெடுக்க பணிக்கிறார். எனினும் ரவி ஸ்ரீனிவாசின் நேற்றைய பதிவைப் பார்த்தவுடன் உந்துதல் எழுந்தது… இன்று பதிவிட்டாகிவிட்டது.
முடிப்பதற்கு முன் இன்னொரு மேற்கோள்:
இப்புத்தகத்தைப் பற்றிக் கேள்விப்பட்டவுடன் இதைப் படிக்க வேண்டாம் என்று எனக்குத் தோன்றிய உள்ளுணர்வு? Pop psychology புத்தகங்களைப் பற்றிய எனது நெகட்டிவ் சாய்மானமே அதற்குக் காரணம் என்று நினைக்கிறேன். ‘Don’t judge a book by its cover’ என்பது போல், ‘Don’t judge a book’s content by its topic’ – ‘Blink’: உள்ளுணர்வுகளை நம்பலாமா?
நீதி
நல்லாப் படிங்க. படிக்க வைங்க. படிச்சதைப் பயன்படுத்துங்க.












பிங்குபாக்: படிக்காத மேதை - புத்தக வாசமில்லாத விமர்சகர் « Snap Judgment
Pl.read a wonderful review about books and life by an young blogger at http://amazwi.blogspot.com