கேள்வி:- தமிழர்க்கும், தமிழ்நாட்டுக்கும் தாங்கள் துரோகம் செய்து விட்டதாக பழ. நெடுமாறன் சொல்லுகிறாரே?
கலைஞர்:- நெடுமாறன் போன்றவர்களுக்கு ஜெயலலிதாவின் பொடா பாணி அரசி யல்தான் துரோகமற்றதாகத் தெரியும்!
அண்ணாவுக்கும் – அடுத்து காமராஜருக்கும் – பின்னர் குமரி அனந்தனுக்கும் – பிறகு மூப்பனார் அவர்களுக்கும் துரோகம் செய்தது யார்? என்று கேட்டால் உண்மையான துரோகத்தின் மொத்த உருவத்தை அடையாளம் காணலாம். பாவம்; புலிகள் பெயர் சொல்லி பல வழிகளில் பொருளீட்டும் காகிதப் புலிகள்!
தொடர்புள்ள செய்தி & கட்டுரை: Pazha Nedumaran on POTA Detainees – Supporting the LTTE; Freedom of Expression « தினமணி: “நீதி நெறியை மதிக்காத முதல்வர்கள்”











கலைஞரை மாதிரி பழுத்த அரசியல் வாதி யாரும் இல்லை! எந்த இடத்தில் எப்படி உல்ட்டா விட வேண்டும் என்று தெரிந்தவர்!
உண்மைதான் மயூரேசன். சாணக்கியராக இல்லாவிட்டால், இத்தனை காலம் #1 ஆக இருக்க முடியாது. இந்த வயதிலும் (அலுக்காமல்) பதிலடி கொடுப்பது பொறாமைப்படவைக்கும் சமாச்சாரம்.