சன்ன சவுக்கின பேசுவது


எலுமிச்சம் பழம் புளிக்கும்னு தமிழ் எழுத்தாளனுக்கும் தெரியும். ஆனால், புளிக்குன்னு எழுத்தில் ‘கமிட்’ பண்ண இவன் ஏழு நாட்கள் யோசிக்கிறான். அதனால எதாவது பாதிப்பு, கெடுதல் வருமா? ஒருவேளை எலுமிச்சம் பழம் இனிப்பா இருந்துட்டா; நாம சொல்றது தப்பா போயிடுமோன்னு இவனுக்கே உறுதி இல்லை. எல்லோரையும் மாதிரி பாதுகாப்பா, சௌகரியமா இருந்துட்டுப் போயிருவோம்னு நினைக்கிறான். ஆனால், இப்படி பாதுகாப்பை நினைச்சு கவலைப்படுபவன் எப்படி சுதந்திரமான எழுத்தாளனா இருக்க முடியும்?

– விகடனில் வந்த நாஞ்சில் நாடனின் சிறப்புப் பேட்டி.

கிசுகிசு, வதந்தி, புறம் பேசுவது என்று பல விதங்களில் விளிக்கப்படுவதை, இணையத்தில் கண்ணுறும் இடங்களில் சேமித்து வைக்கும் முயற்சி:

1. அக்டோபர் 2005-ல் தமிழ் வலைப்பதிவர்கள் என்ற பெயரில் இயங்கிய சிலர் (ஏம்ப்பா, ஒரு தொழில்நுட்பப் பிரச்னையால சில பதிவுகளை தற்காலிகமான நீக்குனதுக்கு என்னமோ வலைப்பதிவுலகமே இருண்டு போனாமாரி கூவுனீங்களே, அந்தச் சிலரில் ஒரு டிக்கிட்டுங்கூட இன்னிக்கு பதிவுலகிலேயே காணமே, அட தமிழ்மணத்தை வுடு, தமிழ் வலைப்பதிவு உலகிலேயே காணமே, அதைக் கேக்குறேன். இதில் வேற நடுவுநிலை வியாக்கியானம் பேசிட்டு ரெண்டு நல்லவங்க வேற வீரப்பா இருந்துட்டாங்க, இன்னிக்கும் அவங்க வீம்பே அவங்களை நீரோட்டத்தில் சேரவிடாமத் தடுக்குது, ம், நல்லவங்க, வாழ்க
புனித பிம்ப தமாஷ்: காசி

2. வலைப்பதிவுலக புனிதப்பிம்பங்கள் பற்றி – ஒருவரல்ல (as per your words). இன்னும் நிறைய்ய்ய்ய்ய்ய்யவேஏஏஏஏஏஏஏ இருக்கிறார்கள். சிலரது உடனே கிழிக்கப்படலாம். சிலரது கிழிய சில நாளெடுக்கலாம். சிலரது கிழிபடாமலே போகலாம்!!! இதில் சித்தாந்தங்களின் இரண்டு பக்கங்களிலும் தூண் போல இருப்பவர்கள்தான் முக்கியமான ஆட்கள் என்பது சுவாரசியமானது.
மதி கந்தசாமி

3. பலர் அவர்கள் பதிவை தவிர வேறு பதிவை படிக்கும் குணங்களே இல்லாதவர்கள். ஒரு சிலர் தவிர, பலரிடம் கேட்டால் நான் படிப்பேன் பின்னூட்டம் போட மாட்டேன் என்று மொக்கையா சொல்வார்கள்.

இன்னும் இதில் உள்ள சிலர் அவர்கள் பதிவில் ஒருவர் பின்னூட்டம் போட்டால் அவர்களுக்கு பிடித்தால் மட்டுமே வெளியிடுவர்கள், அப்படியே வெளியிட்டாலும் அதுகுறித்து கண்டுக்கொள்ள கூட மாட்டார்கள். அதாவது ஒரு பதிலும் கூற மாட்டார்கள். குறைந்த பட்சம் நன்றி தெரிவிக்கும் நாகரீகம் கூட இல்லாதவர்கள்.

என்னை ரொம்ப அழுத்தி கேட்டால் பெயர்களை சொல்லவும் தயங்க மாட்டேன்.
வவ்வால்

4. இன்னொரு நடுவர் பற்றிய பிரச்சனையா என்றால் சொல்லத் தெரியலை,
‘நச்’ போட்டி: மோகன்தாஸ்

பின்னூட்டமொன்றை இடுக

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.