Daily Archives: திசெம்பர் 10, 2007

Parzival myth – The Holy Grail story

Host unlimited photos at slide.com for FREE!
நவீன புராணங்களில் முதன்முதலில் தோன்றியதாக பார்சிவல் கதையை சொல்லலாம். பன்னிரெண்டாம் நூற்றாண்டில் நடந்ததாக நம்புகிறார்கள்.

தேடலில் உள்ள பலரும் தங்கள் தேடல் எது, விசாரணையின் எந்த கட்டத்தில் எப்படி இருக்கிறோம் என்று அறியாமல் தேடலை மட்டும் படு சிரத்தையாக தொடர்பவர்கள்.

பார்சிவல் வாழ்க்கையை விவரிக்கிறார்கள். அந்தக் கால அரசர்களுக்கேயுரிய எதிர்பார்க்கக் கூடிய திடீர் திருப்பங்களும் சுவாரசியங்களும் நிறைந்த கர்ணபரம்பரைக் கதை. இளைய தளபதி படம் போல் சண்டை, காதல், குடும்பம், மீண்டும் மோதல், காமம் என்று வாழ்க்கை ஓடுகிறது. வில்லன் யார், எந்த குறிக்கோளுக்காக வில்லனை துவம்சம் செய்ய நினைக்கிறான் என்று மசாலாப் பட நாயகன் மறந்து போவது போல் புறப்பட்டபோது இருந்த இலட்சியம் மறந்தே போச்சு.

தமிழ்ப்படங்களில் சேர வேண்டிய தாயும் சேயும் என்று நமக்குத் தெரிந்தவர், கதாபாத்திரங்களுக்கு புலப்படமாட்டார்கள். அப்பொழுதே உணர்ந்து கொண்டு விட்டால், எல்லாம் சுபமாக அப்பொழுதே முடிந்துபோகும். பார்சிவல் நிலையும் இப்படித்தான்.

குருட்டாம்போக்கில் சென்றாலும் ராஜாதி ராஜாவை சந்திக்க நேரிடும் முக்கிய தருணத்தில் கூட ‘கேட்கவேண்டிய கேள்வி’யை கேட்கவில்லை. கேட்டிருந்தால் மன்னனுக்கு மோட்சமும், மக்களுக்கு சுதந்திரமும், பார்சிவலுக்கு இராஜாங்கமும் உடனடியாக வாய்த்திருக்கும்.

அதை விட்டு விட்டு, இடைவெளிக்குப் பின் சுழன்று திரியும் திரைக்கதை போல் எங்கெங்கோ போகிறான். விக்கிரமாதித்தன் கதை மாதிரி வேதாளமாய் பல சுவையான நிகழ்ச்சிகள். இத்தனை அனுபவங்களுக்கும் மனித அறிமுகங்களுக்கும் முத்தாய்ப்பாக கட்டாங்கடைசியில் அந்த சக்தி வந்து சேர்கிறது. அடுத்தவர் மனதில் என்ன உணர்கிறார்கள் என்பதை அறிந்து கொள்ளும் நெஞ்சம் வாய்க்கப் பெறுகிறான்.

மீண்டும் கோட்டைக்கு வந்து, ‘தங்களை வாட்டுவது யாதோ’ என்று இராஜாவை வினவ, இராச்சியம் அவனை சேர்ந்தடைகிறது.

நீதி என்ன? எப்படி இது சாத்தியமாகிறது என்கிறது கதை? உறவுகளினால் சாத்தியக்கூறுகள் தென்படுகிறது. மற்றவர்களின் பரிச்சயங்களால் பாலம் அமைக்கிறான்.

அனுபவம் + திரைகடலோடும் உழைப்பு + ஏதில் தாவடி பயணங்கள்.

மேல் விவரங்களுக்கு:

1. Parzival – Wikipedia | 2. Wolfram von Eschenbach: Parzival

Food for Thought

இது நத்தார் விழாக்காலம். வாரந்தோறும் விருந்து. அளவளாவும்போது வழக்கமான குசலங்கள் முடிந்தவுடன் பேசுவதற்கு அவல் வேண்டுமா? உணர்ச்சிகரமான பேச்சைத் துவக்கி வைக்க உணவைக் குறித்தே உரையாட ஆரம்பிக்கலாம்.

உலகத்திற்கு எது உகந்தது?

பிரேசில் இருந்து வரும் அங்கக (ஆர்கானிக்) தக்காளி உட்கொள்வதா அல்லது பக்கத்து தெருமுக்கில் செயற்கை உரம் போட்டு வளர்த்ததா?

சுதந்திரமாக புல்வெளியில் உணவருந்தி கன்றுகளுக்கும் வயிறு முட்ட கொடுத்தபின் தரும் கறவைமாட்டுப்பாலா அல்லது பார்த்து பார்த்து உணவூட்டப்பட்ட, தானியத்தைத் தவிர்த்து பிறிதொன்றும் தவிர்க்கப்பட்ட அங்கக பசும்பாலா?

கோடி கணக்கில் ஏக்கரா வைத்திருக்கும் அங்கக நிலச்சுவாந்தாரிடம் தயாரான காய்கறிகளை வாங்குவதா அல்லது உள்ளூரில் சிரம் ஜீவனம் நடத்தும் ஏழை விவாசாயிடம் சென்று ‘உரம் போட்டியா; அங்கக வழிமுறை பின்பற்றினாயா’ என்று தொணதொணக்காமல் வாங்குவது மேலான விஷயமா?

நிறுவனங்களுக்கும் கூட்டுறவு சங்ககளுக்கும் நடுவில் – உடல்நலம், உணவு, சமூகப் பொருளாதாரம், சுற்றுச்சூழல் எல்லாவற்றையும் கருத்தில் கொண்டு முடிவுகளை எடுக்க வாடிக்கையாளர்களுக்குண்டான கேள்விகள் இது.

இன்னொரு கேள்வி. ஏன் அரிசி விலை ஏறுகிறது? இந்தியா போன்ற நாடுகளில் அது எப்படி நிலச்சுவாந்தார்களிடம் மட்டுமே லாபமாகிப் போகிறது?

பெட்ரோல் போட்டு குடா நாட்டு சண்டைகளை வளர்ப்பதை விட எத்தனால் போட்டு சுற்றுச்சூழல் ஆர்வலராகக் காட்டிக் கொள்வது மேலா?

According to the World Bank, the grain needed to fill up an SUV would feed a person for a year.

முழு அலசல் இங்கே: Food prices | Cheap no more | Economist.com

தொடர்புடைய கருத்துப் பதிவு: Dedicated to all Organic Nutheads « Snap Judgment

விழியிழந்தோருக்கு பார்வை

According to ScienCentral.com (March 15, 2007), the device uses an ocular implant to essentially bypass damaged retinas, which can no longer translate light into the electrical impulses the brain interprets as visual images. Here’s how it works: The camera sends images to a microprocessor (also on the glasses) that converts them into electrical impulses and wirelessly beams the impulses to the implant, which in turn sends them to the optic nerve–the highway to the brain.

An earlier version of the device, tested in 2002, helped patients perceive light and motion.

It will help patients see the outlines of obstacles like curbs and doorways. But it probably won’t restore a person’s ability to recognize faces or to read.

முழுவதும் படிக்க (& நன்றி): Mindful Living Short Takes: September/October 2007