Ilaiyaraja’s Neengal Kettavai – Kanavu Kaanum vaazhkkai yaavum


தேன் கிண்ணம்: 53. கனவு காணும் வாழ்க்கை யாவும்

கனவு காணும் வாழ்க்கை யாவும்
கலைந்து போகும் கோலங்கள்

துடுப்பு கூட பாரம் என்று கரையை தேடும் ஓடங்கள்

ிறக்கின்ற போதே இறக்கின்ற தேதி
இருகின்றதென்பது மெய் தானே

ஆசைகள் என்ன
ஆணவம் என்ன
உறவுகள் என்பதும் பொய் தானே

உடம்பு என்பது உண்மையில் என்ன
கனவுகள் வாங்கும் பை தானே

காலங்கள் மாறும்
கோலங்கள் மாறும்
வாலிபம் என்பது பொய் வேஷம்

தூக்கத்தில் பாதி
ஏக்கத்தில் பாதி
போனது போக எது மீதம்

பேதை மனிதனே கடமை இன்றே
செய்வதில் தானே ஆனந்தம்..

படம் : நீங்கள் கேட்டவை
குரல் : யேசுதாஸ்
இசை : இளையராஜா

பின்னூட்டமொன்றை இடுக

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.