தமிழக முதல்வர் கருணாநிதி: (Hindu Religious and Charitable Endowments Dept)
தி.மு.க., ஆட்சிக்கு வந்த ஒன்றரை ஆண்டில்,
- ஆயிரத்து 493 கோவில்களுக்கு திருப்பணி முடித்து குடமுழுக்கு விழா நடந்துள்ளது.
- 106 கோடி ரூபாய் செலவில்,
- 253 கோவில்களில் திருப் பணி நடந்து வருகிறது.
- 20 கோவில்களில் தேர் செய்யும் பணி நடந்து வருகிறது.
நாம் பகுத்தறிவுக் கொள்கையை கொண்டிருந்தாலும், ஆட்சிப் பொறுப் பில் கடைப்பிடிக்கப்பட வேண்டிய பாரபட்சமற்ற பொது நிலையை என்றும் மறந்ததில்லை.











விடுபட்டவை » ஒரு நிமிடம் ஞாநி..
தேர்தல்களில் ஓட்டு போடும்போது,
1) இவருக்கு என் வாக்கு
2) இவருக்கு என் வாக்கு கிடையாது என்கிறோம்.
அது போலத்தான் இதுவும்.
—அதற்கான காரணம் இப்போ ஏன் வந்தது?—
சூடாக எதைக் குறித்து பேசுகிறார்களோ, அதைக் குறித்து வாக்கெடுப்பு நடத்துவது இயல்பு.
சந்திரமுகி படம் வெற்றி
1) பெறுமா?
2) பெறாதா?
3) ரஜினி படத்தின் எதிர்பார்ப்பிற்கேற்ப ஓடாது
என்று இட்டால் ஆறின கஞ்சி
Kalainjar Karunanidhi on HR & CE: Quotable Quotes: Dinamalar என்னும் செய்தியை பின் தொடர்ந்து:
ஆட்சிப் பொறுப்பில் அமர்ந்தால்
1) கொள்கையைத் தளர்த்திக் கொள்ள வேண்டும்
2) கட்சியின் அடிப்படையான கோட்பாடுகளை பினபற்ற வேண்டும்
என்று மட்டும் கருத்து கேட்கலாம்.
மேற்சென்று…
3) சில நம்பிக்கைகளுக்கு விதிவிலக்கு தரலாம்
4) தனிப்பட்ட அமைச்சரவை மந்திரியின் முடிவுக்கு விட வேண்டும்
5) நீதிமன்றத்தின் ஆலோசனையை கருத்தில் கொள்ள வேண்டும்
6) சட்டசபையில் வாக்கெடுப்பு விடலாம்
7) மக்களிடம் ஒப்புதல் பெற வேண்டும்
8) உலக அரங்கில் ஆராய்ந்து, பிற நாடுகளை சீர்தூக்கி முடிவெடுக்கலாம்
என்று கேட்டால், கட்டுரை போல் ஆகிவிடும்.