நல்லாச் சொன்னாங்க நாலு வார்த்தை – உண்மை


1. அமைச்சர் மு.க. ஸ்டாலின், (திருமண நிகழ்வு ஒன்றில்)
வைதீகத் திருமணங்களை நடத்தி வைக்கும் அய்யர்களுக்கு இருந்த கிராக்கி மாறி தற்போது சீர்திருத்தத் திருமணங்களை நடத்தி வைக்க என்னைப் போன்ற தலைவர்களுக்கு அதிக கிராக்கி இருக்கிறது.

2. பூட்டாசிங் (தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத் தலைவர்)
தேர்தல் ஆணையத்திற்கு இருப்பதைப் போன்ற அதிகாரம் தாழ்த்தப்பட்டோர் தேசிய ஆணையத்திற்கும் வேண்டும். அப்போதுதான் ஆணையம் எடுக்கும் முடிவுகள் மீது சுப்ரீம் கோர்டு தலையிட முடியாது. இட ஒதுக்கீடு சட்டத்தை செயல்படுத்தும் அதிகாரம் ஆணையத்திற்கு வேண்டும்.

3. கவிஞர். இன்குலாப்.
அவருடைய (தஸ்லீமா நஸ்ரீன்) கேள்விகளுக்கு நேர்மையான பதிலைத் தர முடியாதவர்கள் அவரை பத்வாகளிலும் (இஸ்லாமிய மத அடிப்படையிலான தீர்ப்புகள்) தாக்குதல்களாலும் பயமுறுத்திக் கொண்டிருக்கிறார்கள். கருத்தை கருத்தாய் எதிர்கொள்ள வேண்டுமே தவிர தாக்குதல்களால் எதிர்கொள்வது பாசிசத்தின் வெளிப்பாடு.

4. அப்துல் நாசர் மதானி, (கேரள மக்கள் ஜனநாயக முன்னணி தலைவர்)
பாப்ரிமஸ்ஜித் பிரச்சினையிலும் எல்லை கடந்து பலபேர் மனம் புண்ணாகும் படி வார்த்தைகளை பிரயோகப்படுத்தியிருக்கேன், இனி அது மாதிரி கடுமையான வார்த்தைகளைப் பேச மாட்டேன். ஒன்பதரை ஆண்டு சிறை வாழ்க்கை என்னை அப்படி பக்குவப்படுத்தியிருக்கிறுது.

நன்றி: உண்மை

பின்னூட்டமொன்றை இடுக

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.