மகளின் சமீபத்திய கேள்விகள்:
1. இந்திய உணவகத்தில்: ‘ஏன் எப்ப பார்த்தாலும் “என்ன சாப்பிடறீங்க”ன்னு உன்கிட்டத்தான் கேக்கறாங்க? அம்மாவிடம் ஒருவாட்டி கூட கேக்கலியே?’
2. பாஸ்டன் லஷ்மி கோவில் கருட சேவை பிரம்மோற்சவத்தில்: ‘ஏன் ஆம்பளைங்க மட்டும்தான் சாமி தூக்கறாங்க? பெண்கள் பெருமாளத் தூக்கக் கூடாதா?’
3. அதே கோவில். திருக்கல்யாண உத்சவம்: ‘லஷ்மிக்கு ஏன் பட்டர் தாலி கட்டறார்? பெருமாளுக்கு தாலி கிடையாதா?’











நானும் ஒரு நண்பரும் அவரது 3வயது மகனும் கடைக்குக் கிளம்பினோம். நான் என் கைப்பையை எடுத்துக் கொண்டேன்.
“அப்பா, நீ ஏன் பை எடுத்துக்கலை? உன் பை எங்கே”?!!!
🙂
politically correctஆ பதில் சொல்ல முடியல.
!