பொருள்கள் விலை: ஜெ. ஒப்பீடு
சேலத்தில் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் பேசிய ஜெயலலிதா, அதிமுக ஆட்சியில் பல்வேறு அத்தியாவசியப் பொருள்களின் விலை குறைவாக இருந்தது; தற்போது அவற்றின் விலை அதிகரித்து விட்டது என்று புள்ளி விவரங்களுடன் விளக்கினார்.
அவர் குறிப்பிட்ட விலை விவரம்: (அடைப்புக்குறிக்குள் அதிமுக ஆட்சியில் நிலவிய விலை)
மஞ்சள் ஒரு கிலோ ரூ.50 (ரூ.28)
புளி கிலோ ரூ.50 (ரூ.25)
வெள்ளைப்பூண்டு ரூ.75 (ரூ.50)
துவரம்பருப்பு ரூ.52 (ரூ.28)
உளுத்தம்பருப்பு ரூ.65 (ரூ.25)
கடலைப்பருப்பு ரூ.45 (ரூ.18)
பாசிப்பருப்பு ரூ.55 (ரூ.26)
மைதா ரூ.21 (ரூ.12)
கோதுமை மாவு ரூ.20 (ரூ.12)
ரவை ரூ.22 (ரூ.14)
மொச்சைப்பயறு ரூ.60 (ரூ.25)
காராமணி ரூ.50 (ரூ.25)
தனியா ரூ.45 (ரூ.28)
மிளகாய்வத்தல் ரூ.45 (ரூ.30)
சுண்டல்கடலை ரூ.50 (ரூ.30)
சீரகம் ரூ.125 (ரூ.90)
கடுகு ரூ.30 (ரூ.15)
வெல்லம் ரூ.12 (ரூ.6)
சர்க்கரை ரூ.18 (ரூ.15)
மிளகாய்த்தூள் ரூ.105 (ரூ.55)
பாமாயில் ரூ.50 (ரூ.30)
நல்லெண்ணெய் ரூ.50 (ரூ.38)
தேங்காய் எண்ணெய் ரூ.75 (ரூ.50)
ரீபைண்டு ஆயில் ரூ.55 (ரூ.28)
இதுதான் திமுக ஆட்சியின் லட்சணம் என்றார் ஜெயலலிதா.










