மன்னிக்க வேண்டுகிறேன். ஆர்வக் கோளாறில் புதிய பதிவில் (E-Tamil Archives) பழைய விஷயங்களை சேர்க்கலாம் என்று நினைத்து செயல்பட்டதில் பத்தி பிரித்தல்களையும் வரிகளுக்கு நடுவே விழுந்த இடைவெளிகளும் காணாமல் போயிருக்கிறது.
கற்றது: ப்ளாகர் இடுகைகளை வோர்ட்பிரெஸுக்கு எளிதாக ஏற்றுமதி செய்யமுடியும். ஆனால், முழுக்க செய்து முடிப்பதற்கு முன் அரை வேக்காடாக அவசரப்பட்டால், சொதப்பலாக முடியும். பொறுத்தார் ப்ளாக் படிப்பார்.
ஏதாவது மாற்று வழிமுறையில் நிவர்த்தி இருந்தால் மின் மடலோ, மறுமொழியோ தரவும். நன்றி!










